என் மலர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி"
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
- அப்பெண் திருடுவதற்கு திட்டம் போட்டாரா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி 'அடிப்பட்டு வந்திருக்கேன்.. ஹெல்ப் பண்ணுங்க சார்' என கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் உண்மையாக உத்தரவு கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்காக திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இரு தினங்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளிக்க உதவி எண்கள் அறிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவசர தேவைகளுக்கு 1077, 04343-234444 என்ற எண்களை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது.
- வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு பலர் வேலைக்கு சென்று வருகின்றனர்.
தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது.

வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.
அப்போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியது. விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது. இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
- ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நந்தலால். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு மூன்றரை வயது சிறுவன் சத்யா.
இவர்கள் மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராம மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமை குடிலில் அங்கேயே தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி சிறுவன் விளையாடி கொண்டிருந்த பொழுது தெருநாய் முகம், கை ஆகிய பகுதிகளில் அவனை கடித்து குதறியதால் காயங்கள் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை யில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை கழிவறைக்கு செல்லும் போது சிறுவன் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு மருத்து வமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். 21 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
- குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம்,
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1, பகுதி 2, பழையபேட்டை, கே.ஆர்.பி.டேம், அகசிப் பள்ளி, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், தானம் பட்டி, கொண்டேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். என தெரிவித்துள்ளார்.
- சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- மீனவர்கள் உதவியோடு ஜோதி, தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணையில் குதித்து 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இன்று காலை சிறிய மதகுகள் அருகில் இருந்து 4 பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சாரதாம்மாள் (வயது 75), அவரது மருமகன் லட்சுமணமூர்த்தி (50), மகள் ஜோதி (45), பேத்தி தீபிகா (20) என தெரியவந்தது.
மேலும் அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் அருகில் இருந்த மீனவர்கள் உதவியோடு ஜோதி மற்றும் தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
- வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர் பாளேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் காலை பள்ளிக்கு சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள். இவரது வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவனுக்கு போன் செய்து தெய்வானை கத்தி கதறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த ஆசிரியர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர். ஆனால் நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர்.
வீட்டில் பகல் நேரங்களில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நேற்று வீட்டில் பின்புற கேட்டின் வழியாக புகுந்துள்ளனர். அங்கு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த நகை, பணம் ஆகியவையை கொள்ளை அடித்து சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் வேண்டுமென போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பகலில் ஆளில்லாதது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குருபரப்பள்ளி பகுதியில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுடன் சிலர் மீட்கப்பட்டனர்.
- பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்த மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குருபரப்பள்ளி பகுதியில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுடன் சிலர் மீட்கப்பட்டனர்.
பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்த மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
- இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
அப்போது அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் அங்கு டிராக்டரை ஓட்டி வந்தான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமாருக்கு இடது கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் டிராக்டர் மோதி இறந்த காளியப்பன் சாவிற்கு காரணமான சிறுவனை கைது செய்ய கோரி அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் காளியப்பனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விபத்திற்கு காரணமான சிறுவன், சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தின் இணைப்பு பகுதி கடந்த 21-ந் தேதி விரிசல் ஏற்பட்டதால், பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வாகனங்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் மேம்பாலத்தில் இணைப்பு பகுதி மேலும் விலகாமல் தடுக்க பாலத்தின் தூணின் மேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி முட்டு கொடுத்தனர்.
பின்னர் பாலத்தில் சோதனைக்காக இலகு ரக வாகனங்களை இயக்க அனுமதித்து, தொடர்ந்து 2-வது நாளாக பொறியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் கூறியதாவது:-
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாலம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் பாலத்தில் வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்று வந்தன.

தற்போது வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பாலத்தின் மீது செல்வதால் பாலத்தில், பால்பேரிங்கி சேதமாகி உள்ளது.
இதுபோல வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் பேரிங் சேதம் இருக்கிறதா என்பது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும்.
ஓசூர் பாலத்தில் இணைப்பு விலகியபகுதி மேலும் விலகாமல் இருக்க மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
- போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தி.மு.க. அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே இன்று காலை 9 மணிக்கு அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி. ராஜேந்திரன், முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி, காத்தவராயன் உள்பட ஏராளமான 1000-கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் மா கொள்முதல் விலை கிலோவுக்கு 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மாங்குழுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தங்கமுத்து, கேசவன், சோக்கடிராஜன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
- தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1410 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 44.28 அடி கொள்ளளவான அணையில் 44.28 அடி நீர் இருப்பு உள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அப்படியே தண்ணீரை வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக நேராக கிருஷ்ணகிரி கே.ஆர்.எஸ். அணைக்கு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.85 அடியாக உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 4500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வினாடிக்கு 3,571 கனஅடி தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
இதன் காரணமாக தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் போலீசார், தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.






