என் மலர்
நீங்கள் தேடியது "பணம் கொள்ளை"
- பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39).
- ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39). இவர் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் ரகுவரன்-ரேவதி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ், வீடு திறந்திருந்ததை பார்த்து ரேவதிக்கு செல்போனில் தகவல் அளித்தார். அதனைத்தொடர்ந்து ரேவதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புடவைக்கு அடியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ரேவதி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
- ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவரை போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (66). இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களிடமிருந்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த டி.வி. மற்றும் மூன்று பவுன் நகை மற்றும் 7 கிராம் எடையுள்ள தோடு என மொத்தம் 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து பாக்கியம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவர் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்.
- டீக்கடைக்கு வந்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி கடை ஊழியரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
- வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினார்கள்.
போரூர்:
சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகு. அதே பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை இவரது கடைக்கு வந்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி கடை ஊழியரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது `நாங்கள் 3 பேரும் இந்த ஏரியாவில் மிகப்பெரிய ரவுடிகள், எனவே தினசரி எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்' என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் திடீரென கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.4,200 ரொக்கப்பணம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்டங்கள், குளிர்பானங்கள், சிகரெட் பாக்கெட்டுகளையும் அள்ளிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ராமாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினார்கள்.
கொள்ளையில் ஈடுபட்டு தப்பிய அதே பகுதியை சேர்ந்த குகன், அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த தங்கராஜா, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ஆதி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 26 ஆம் தேதி வீட்டைபூட்டிக்கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர்.
- ரூ68,000 ரொக்க பணம் யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் என்ற ஊர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி கவிதா. இவர்கள் கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம் .உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 கிராம் தங்க நகை மற்றும் ரூ62,000 ரொக்கம் ஆகியவைகள் திருடு போய் இருந்தது. இதேபோல் அதே ஊர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்.
அவரது மனைவி ஜோதி லட்சுமி. இவர்களும் கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு தனது தம்பியை பார்க்க திருச்சிக்கு சென்று விட்டனர் . மறுநாள் காலை அவருக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ68,000 ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அவர்கள் தனித்தனியே கஞ்சனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறா ர்கள்.
- ரமேஷ் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
- உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.
கோவை,
கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ரமேஷ் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி ரமேஷ் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர்.
- குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் கிராமத்தில் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஆவடி பாலவேடு கிராமம், கர்ணன் தெருவை சேர்ந்த தினேஷ்பாபு (வயது36) என்பவர் பந்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் அமைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் நிகிழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று விடியற்காலை அனைத்தையும் அவிழ்த்து வேனில் ஏற்றிக்கொண்டு தனது கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
குருவாயல்-காரணி கூட்ரோடு சாலையில் குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தினேஷ்பாபுவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.
இந்தச்சம்பவம் குறித்து தினேஷ்பாபு வெங்கல் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த கிஷோர்(வயது 18), செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன்பாலாஜி (வயது18), பழைய மகாபலிபுரம், நாவலூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது26), பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் (வயது18) ஆகிய நான்கு பேரையும் போலீசார் பிடித்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அந்த நான்கு வாலிபர்களும் வேனை வழிமறித்து செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின் பேரில் 4 பேரையும் போலீசார் நேற்று மாலை புழல் சிறையில் அடைத்தனர்.
- கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.
- 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி நகர் பாரதிபுரம் நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் எதிரே பிரபல டி.வி. ஷோரூம் உள்ளது. கடந்த மாதம் தான் புதிதாக திறக்கப்பட்டது. இங்கு சுமார் 35 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு ஷோரூமை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 9.45 மணியளவில் கடையை கணக்காளர் திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ஷட்டரை கடப்பாறை மூலம் நெம்பி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.63 ஆயிரத்து 700 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இந்த கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.
2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர். கடையில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் 2 இடங்களிலும் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் உபகரணங்களை திருடிச்சென்று விட்டனர். எனவே அதில் பதிவான காட்சிகளை காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நகரின் முக்கியமான இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.
- மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
திருச்சி,
திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியில் தபால் அலுவலகம் உள்ளது உள்ளது. இங்கு போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாலக்கரை காவல் நிலையத்தில் அவர் அளித்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் போஸ்ட் ஆபீஸில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவர் ஏறி குதித்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் வி.ஏ.கே நகரில் பழமை வாய்ந்த சக்தி விநாயகர் கோவில் உள்ளது.
நேற்று இரவு அங்கு பைக்கில் வந்த 3 பேர் கோவிலின் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை வழக்கும் போல் கேட்டை திறந்து உள்ளே சென்ற அர்ச்சகர் உண்டியல் உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.
நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் பைக்கில் வந்து சுவர் ஏறி குறித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கொள்ளையில் அதே நபர்கள் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.
- வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தர்ரெட்டி. இவர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் பூ, பழச்செடிகள் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜலந்தர்ரெட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஜலந்தர் ரெட்டி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வந்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி விசாரணை நடத்தி வருகிறார்.
- சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
- சங்கரலிங்கம் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார்.
விருதுநகர்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 42).
இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்துக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தார்.
சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் அருப்புக்கோட்டை அருகே சென்றபோது அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் சில்லரையை கீழே தவறி விட்டார். அருகில் அமர்ந்திருந்த சங்கரலிங்கம் அதனை எடுக்க முற்பட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இளம்பெண் சங்கரலிங்கம் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை நைசாக எடுத்து கொண்டு அடுத்த பஸ் நிறுத்தத்தில் அவசர அவசரமாக குழந்தையுடன் இளம்பெண் இறங்கி தப்பினார்.
பணம் திருட்டுபோனதை கூட அறியாத சங்கரலிங்கம் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு சென்று பையை பார்த்தபோது அதிலிருந்து பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தன் அருகில் அமர்ந்து பயணித்த இளம்பெண் திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சங்கரலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்தசெட்டியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி.
இவர் கடந்த 24-ந் (வியாழக்கிழமை) அன்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். பூட்டியிருந்த இவரது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள விஜி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் வீட்டிலும்பூட்டை உடைத்து நகை, பணத்தையும், புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து வீடுகள் மற்றும் கோவிலில் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.