search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attur"

    • ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் டி.வி.எஸ். அறக்கட்டளை மற்றும் ஆத்தூர் கால்நடை மருந்தகம் இணைந்து நடத்திய சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் கால்நடைகளை சரியான முறையில் பராமரித்ததற்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் டி.வி.எஸ். அறக்கட்டளை மற்றும் ஆத்தூர் கால்நடை மருந்தகம் இணைந்து நடத்திய சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கமால்தீன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் கேசவன், அருணாகுமாரி, சங்கரேஸ்வரி ராம்குமார் மற்றும் டி.வி.எஸ். அறக்கட்டளை ஊழியர்கள், கால்நடை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கால்நடைகளை சரியான முறையில் பராமரித்ததற்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது

    சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் ரெயில் மீண்டும் இயக்கியதற்கு வணிகர் சங்கத்தினர் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சேலத்திலிருந்து விருதாசலத்திற்கு 2 பயணிகள் ரெயில்  இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 2  ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

    இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

    வணிகர் சங்கத் தலைவர் ரவிசங்கர் கூறும்போது, சேலம்- விருத்தாச்சலம் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஆத்தூர் வழியாக எழும்பூருக்கு பகல் நேரம் சென்னை செல்ல புதிய ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். பெங்களூர் காரைக்கால் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

    ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி, சீவல்சரகு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கோடைகாலம் தொடங்கியது முதல் தண்ணீர் தேவை மேலும் அதிகரிப்பால் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. குடிநீர் குழாய்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களை வரிசையில் வைத்து தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாய கிணறுகளில் தண்ணீர் பிடித்து அதனை குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சினையால் பல்வேறு கிராமங்களில் அடிக்கடி சாலை மறியல் போராட்டங்களும் யூனியன் அலுவலக அதிகாரிகளை கண்டித்து முற்றுகையிடும் போராட்டமும் நடந்து வருகிறது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தாலும் குறைந்த அளவு தண்ணீரே மேல்நிலை தொட்டியில் சேமிக்க முடிகிறது. அந்த தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமும் தண்ணீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதால் பல கிராமங்களை கண்டு கொள்ளாமல் அரசியல் கட்சியினர் வந்து விடுகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் வாகன தணிக்கையில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    நள்ளிரவு 12.10 மணியளவில் கும்பகோணத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்ற ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல்லா (வயது 23) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.91 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.91 ஆயிரத்தை பறிமுதல் செய்து, கெங்கவல்லி உதவி தேர்தல் அலுவலர் முருகையனிடம் ஒப்படைத்தனர். #ParliamentElection

    ஆத்தூரில் இன்று தனியார் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை கிரேன் பஜார் பகுதியில் பெருமாள் அன் கோ என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை பெருமாள் என்பவர் நிர்வாகித்து வருகிறார்.

    இவர் இன்று காலை அலுவலக வேலை காரணமாக வெளியே சென்றார். அலுவலகத்தில் மேலாளர் சேக் தாவூத் என்பவர் இருந்தார்.

    இன்று காலை சுமார் 11 மணியளவில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தை துனியால் மூடியிருந்தனர். அவர்கள் சேக் தாவூத்திடம் நாங்கள் ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் இருந்து வருவதாகவும், கிழங்கு கொள்முதல் சம்பந்தமாக பேச வந்தோம் என்றும் கூறினார்கள்.

    ஆனால் அவர்கள் மேல் சேக் தாவூத்துக்கு சந்தேகம் வந்தது. திடீரென அதில் ஒருவன் சேக் தாவூத்தை பிடித்து கயிற்றால் கட்டி மேஜையின் சாவியை கேட்டு மிரட்டினர். மேலும் சாவியை கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று கூறி மிரட்டினார்கள். சேக் தாவூத் மேஜை சாவி தன்னிடம் இல்லை என்று கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் மேஜையை உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அங்கிருந்த செல்போனையும் எடுத்து சென்றனர். இதையடுத்து சேக் தாவூத் மர்ம ஆசாமி கையில் கையில் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததை பற்றி கூறினார்.

    மேலும் உரிமையாளர் பெருமாளுக்கும் தகவல் கொடுத்தார். உடனே அங்க வந்த பெருமாள் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிக்கையாளர்கள் போல் வந்து இந்த முகமூடி கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆத்தூர் அருகே பேரூராட்சி பில் கலெக்டர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியில் வசித்து வந்தவர் உதயசூரியன் (வயது 52). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். இவர் அயோத்தியாபட்டிணம் பேரூராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். உதயசூரியன் கீரிப் பட்டியில் தங்கி மொபட்டில் பணிக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் நேற்று அவர் பணி முடிந்து மொபட்டில் கீரிபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஊத்துமேடு பகுதியில் வந்த போது வண்டியில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மல்லியகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்து மல்லியக்கரை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பில் கலெக்டர் உதயசூரியனை யாராவது கொலை செய்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பில் கலெக்டர் மொபட்டில் தொங்கிய நிலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பானது.

    ஆத்தூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு பெரியசாமி (வயது 15), கருப்பசாமி (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கருப்பசாமி அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கருப்பசாமி புத்தகப் பைகளை வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    நீண்ட நேரமாகியும் அவர் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கருப்பசாமி தனது தாயார் இந்திராவின் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாணவர் இறந்துவிட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து மாணவர் கருப்பசாமி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆத்தூர் அருகே மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டை சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராஜசேகர் (வயது25). தச்சு தொழிலாளி. இவருக்கும் திருப்பூரை சேர்ந்த உமாமகேஸ்வரிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு மாத்திற்குள்ளேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கடந்த சில நாட்களாக மனைவி உமாமகேஸ்வரி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக மனமுடைந்த புதுமாப்பிள்ளை ராஜசேகர் மிகுந்த வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜசேகர் மிகுந்த வேதனையுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்.

    ஆத்தூர் பைபாஸ் சாலையில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பாலம் வேலை செய்வதற்காக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியிலிருந்து ஞானசேகர், முனுசாமி, தினேஷ் குமார், தமிழ்செல்வன், மற்றொரு தமிழ்ச் செல்வன், விஜயகுமார், டேனியல், ஆசைத்தம்பி, பாரதி, பிரகாஷ், மணி, ராம்குமார், முத்துராஜ் ஆகிய 13 பேர் இன்று காலை ஒரு பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    வேன் ஆத்தூர் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த வேனை டிரைவர் கண்மணி (வயது 25) என்பவர் ஓட்டினார். அப்போது ஆத்தூர் வடக்கு பகுதியை சேர்ந்த அத்தியப்பன் கவுண்டர் என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    தென்னங்குடி பாளையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், பிக்கப் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர் கண்மணியால் வேனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேன் வேகமாக சென்று சாலை ஓரமாக உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் வந்த அத்தியப்பன் கவுண்டர் பலியானார். வேனில் பயணம் செய்த 13 பேரும் காயம் அடைந்தனர். இதில் முத்துராஜ் (வயது 30) என்பவருக்கு பலத்த அடிப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மீதமுள்ள 12 பேரும் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பலியான முத்துராஜ் பூலாம்பட்டி அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சோகத்துடன் திரண்டுள்ளனர்.

    விபத்து தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணியை சேர்ந்தவர் மலையாண்டி (வயது 52), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள மலையாண்டி அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த மலையாண்டி கடந்த 29-ந் தேதி விஷம் குடித்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன்  அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் கண்ணன் (வயது 22). இவர் பேஸ்புக் மூலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஒரு பெண்ணிடம் பழகினார். பின்னர் பேஸ்புக் மேசஞ்சர் மூலம் அவரிடம் இருந்து நைசாக செல்போன் எண்ணை வாங்கினார்.

    இதையடுத்து ராஜேஸ் கண்ணன் செல்போன் எண்ணை தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்- அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி நட்பை ஏற்படுத்தினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்தனர்.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை ராஜேஸ் கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஸ் கண்ணனிடம் வற்புறுத்தினார். ஆனால் அவர், திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து கதறினார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    தன்னை காதலித்து ஏமாற்றிய ராஜேஸ்கண்ணன் மீது அவர் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆத்தூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 45). இவருடைய மனைவி விஜயலட்சுமி(38). இவர்களது மகன் மணிகண்டன்(6)

    இவர்களும், இவர்களது உறவினர்கள் சங்கவி(21), வினோதினி(29), ஸ்ரீராம்(8), குமாரி(55), பிரியதர்ஷினி (18) ஆகியோரும் ஒரு காரில் கல்லூரி அட்மி‌ஷன் தொடர்பாக கோவைக்கு சென்று விட்டு நேற்று இரவு அவர்கள் அதே காரில் சேலம் வழியாக ஊருக்கு திரும்பினர். காரை பரணிதரன் ஓட்டினார்.

    அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் கார் வந்தபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    காரில் இருந்த பரணிதரன், சங்கவி, வினோதினி, பிரியதர்ஷினி, ஸ்ரீராம், குமாரி ஆகிய 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். தலை, கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்ட அவர்கள் வலியால் கதறி துடித்தனர். தங்களை காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு கதறி அழுதனர்.

    விபத்தை பார்த்த பொதுமக்கள் காருக்குள் இருந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விபத்து பற்றி குறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார் விரைந்து வந்து பலியான விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், விபத்து நடந்த ஏரிக்கரை பகுதியில் மின் விளக்குகள் இல்லை. வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்ததால் லாரி சாலையில் நிறுத்தி இருந்தது தெரியாமல் கார் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் மோதியது தெரியவந்தது.

    அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரிக்கரை பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 6 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு அவர்களுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 48). லாரி டிரைவர். இவரும், இவரது உறவினர் பூமாலையும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு கல்பகனூரில் இருந்து பெத்தநாயக்கன் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் செந்தமிழ் செல்வன், பூமாலை ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செந்தமிழ் செல்வன் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பூமாலை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×