என் மலர்
நீங்கள் தேடியது "ஏடிஎம்"
- ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
- யாரும் பணம் எடுக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், யாகுத் புரா பகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம் .கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக 4 ஆயிரம் வந்தது.
அதேபோல் மற்றொரு நபருக்கும் ரூ. 3 ஆயிரத்திற்கு பதிலாக 4 ஆயிரம் வந்தது. ஆனால் அவர்களின் கணக்கில் ரூ.3000 மட்டும் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த தகவல் காட்டு தீ போல் அப்பகுதியில் பரவியது. இதனால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
ஒவ்வொருவரும் போட்டி போட்டு பணத்தை எடுத்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவு கூட்டம் கூடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஏடிஎம் எந்திரத்தை சோதனை செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிக அளவில் பணம் வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தை மூடினர். மேலும் யாரும் பணம் எடுக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.
- பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்" என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற வங்கிகள் இன்று தங்கள் ஏடிஎம்கள் முழுமையாக செயல்படுவதாகவும், நன்கு செயல்படுவதாகவும், டிஜிட்டல் சேவைகள் சீராக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் நாட்களில் ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏடிஎம் உள்பட அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குவதாக எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.
"எங்கள் அனைத்து ஏடிஎம்கள், சிடிஎம்கள்/ஏடிடபிள்யூஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் முழுமையாக செயல்படுகின்றன மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன" என்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா," பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்" என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.
இதே போன்ற செய்திகளை பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது எக்ஸ் தள பக்கத்தில்,"எங்கள் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உங்கள் வீட்டில் இருந்தபடியே தடையற்ற வங்கி அனுபவத்தை பெறலாம்," என்று குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும்
- காத்திருப்பு(வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும்.
நாளை மே 1 முதல் வங்கிக் கணக்கு முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள், சமையல் ஏரிவாயு வரை பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
ஏடிஎம் கட்டணங்கள்
மே 1, 2025 முதல், பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும். மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 23 மற்றும் வரி செலுத்த வேண்டும். முன்னதாக இந்தக் கட்டணம் ரூ.21 ஆக இருந்தது. இது தவிர, நீங்கள் இருப்பைச் சரிபார்த்தால், இதற்கும் ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும், முன்பு கட்டணம் ரூ.6 ஆக இருந்தது.
ரெயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றங்கள்
மே 1, 2025 முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றங்கள் இருக்கும். பயணிகள் புதிய முறையின்படி, இனிமேல், காத்திருப்பு(வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஸ்லீப்பர், ஏசி கோச் பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணிக்க முடியாது. இது தவிர, முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த முறையும், எரிவாயு சிலிண்டரின் விலை மே 1 ஆம் தேதி மறுஆய்வு செய்யப்படும். அதன்படி விலை ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கும்.
வட்டி விகிதங்களில் மாற்றங்கள்
மே 1 முதல் FD (நிலையான வைப்பு நிதி) மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 2 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டு முறை குறைத்தது. இதன் விளைவாக பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்குகள் மற்றும் FDகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
- மன்மத் ரெயில் நிலைய பணிமனையில் இதற்கான வேலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
- ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணத்தை எடுத்துக்கொள்ள ஏதுவாக ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு வந்தது. பிரதான சாலைகள், மார்க்கெட் பகுதிகள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஏ.டி.எம். எந்திரம் வாடிக்கையாளர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. வங்கிக்கு சென்று கால்கடுக்க நின்று பணம் எடுக்கும் காலத்தை ஏ.டி.எம். எந்திரங்கள் மலையேற செய்தன. சமீபகாலமாக யு.பி.ஐ. வசதி பிரபலமானாலும், ரொக்கத்தை கையில் எடுத்து செலவு செய்வதை பலரும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரம் தற்போது பயணிகளின் வசதிக்காக ரெயிலுக்கு உள்ளேயும் இடம்பிடித்து விட்டது. சோதனை முயற்சியாக மகாராஷ்டிராவில் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையம்- நாசிக் மாவட்டம் மன்மத் ரெயில் நிலையம் இடையே இயக்கப்படும் பஞ்சவட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. மன்மத் ரெயில் நிலைய பணிமனையில் இதற்கான வேலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
தனியார் வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏ.டி.எம். எந்திரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சொகுசு இருக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டியில் நிறுவப்பட்டு உள்ளது. ரெயிலில் உள்ள பெட்டிகள் அனைத்திற்கும் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் பாதைகள் இருப்பதால் பயணிகள் ஏ.டி.எம். எந்திரத்தை எளிதாக அணுக முடியும் என்று மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மற்ற ரெயில்களிலும் இதேபோன்ற வசதியை பயணிகள் எதிர்பார்க்கலாம்.
- மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர்.
- இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.
வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
இந்த முடிவை விமர்சித்து மு.க,.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்!
- மோடி அரசு ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

இந்த முடிவை விமரிசித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசால் நமது வங்கிகள் 'கலெக்ஷன் ஏஜெண்டுகளாக' மாற்றப்பட்டுள்ளன!
ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணம் அதிகமாக உள்ளது. 2018 மற்றும் 2024 க்கு இடையில் சேமிப்புக் கணக்குகள் மற்றும் ஜன் தன் கணக்குகளில் இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால், மோடி அரசு குறைந்தது ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.
மக்களை கொள்ளையடிப்பதற்கான பிற வங்கி கட்டணங்கள் :
(வங்கிக்கணக்கு) செயலற்ற கட்டணம், ஒவ்வொரு ஆண்டும் ரூ.100-200 ஆகும். வங்கிக்கணக்கு ஸ்டேட்மென்ட் கட்டணம் ரூ.50-100.
SMS எச்சரிக்கைகளுக்கு காலாண்டிற்கு ₹20-25 வசூலிக்கப்படுகிறது. வங்கிகள் கடன் செயலாக்கக் கட்டணமாக 1-3% வசூலிக்கின்றன.
கடன் சரியான நேரத்தில் செலுத்தப்பட்டால், முன்கூட்டிய கடன் அடைப்புக் கட்டணங்கள் விதிக்கப்படும். NEFT, டிமாண்ட் டிராஃப்ட் கட்டணங்கள் கூடுதல் சுமையாகும். கையொப்ப மாற்றங்கள் போன்ற KYC அப்டேட்களுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
முன்னதாக, மத்திய அரசு இந்தக் கட்டணங்களால் வசூலிக்கப்படும் தொகையின் தரவை பாராளுமன்றத்தில் வழங்கியது. ஆனால் இப்போது "ரிசர்வ் வங்கி அத்தகைய தரவைப் பராமரிக்கவில்லை" என்று சாக்கு கூறி இந்த நடைமுறையும் அரசு நிறுத்தி உள்ளது.
வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்! என்று பதிவிட்டுள்ளார்.
- கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.-ஐ 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய்ம் பிடித்தம் செய்யப்படும்.
வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. கார்டு மூலம் பணம் எடுத்தல், ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவைகளுக்கு ஏ.டி.எம். இயந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
- முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது.
- 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது.
திருமங்கலம்:
திருமங்கலத்தை அடுத்துள்ள காண்டை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி மனைவி முத்தீசுவரி(வயது 32). இவர் கடந்த அக்டோபர் 10-ந்தேதி திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். பணம் எடுக்க சென்றார்.
இவருக்கு பின்னால் நின்ற மர்மநபர் முத்தீசுவரியிடம் நைசாக பேசி தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகினார். பணம் வரவில்லை என்று கூறி தன்னிடம் இருந்த மற்றொரு கார்டை முத்தீசுவரிடம் கொடுத்து அனுப்பினார். பின்னர் அந்த மர்மநபர் முத்தீசுவரி கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
இதேபோன்று திருமங்கலத்தை சேர்ந்த செல்ல பாண்டி(52) என்பவரிடம் ரூ 35 ஆயிரம், கண்டுகுளத்தை சேர்ந்த சத்தியராஜ்(19) என்பவரிடம் ரூ.35 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக மர்மநபர் எடுத்துள்ளார். இது குறித்தும் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வங்கி ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை பெரியார் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தினை எடுக்கவரும் கிராமத்து மக்களிடம் பணம் எடுத்து தருவது போல் வேறு ஒரு கார்டை கொடுத்து பணத்தை நூதன முறையில் திருடுபவர் என்பது தெரியவந்தது.
அவரை தனிப்படை போலீசார் நேற்று திருமங்கலம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே பிடித்து டவுன்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது அவர் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பக்ரூதீன்(46) என்பதும், தென்மாவட்டங்களில் பல இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 63 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பக்ரூதினை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
- வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்டபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை.
- ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.
பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, 'டைம் முடிந்து விட்டது' என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.
பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.
கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.
இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.
அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் இயந்திரம்.
இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.
இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.
-தூத்துக்குடி போவஸ்
- சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
- டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்(58). பொன்னேரியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இவர் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அருகில் நின்று கொண்டி ருந்த டிப்-டாப் வாலிபரிடம் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கூறினார்.
அந்த வாலிபரும் உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்.கார்டை வாங்கினார். மேலும் மொய்தீனிடம் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை என்று கூறி ஏ.டி.எம்.கார்டை மொய்தீனிடம் கொடுத்து விட்டு டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். மொய்தீனும் அந்த வாலிபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டுடன் வீட்டுக்கு வந்தார்.
சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மொய்தீன் வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு காமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
- கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.
இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.
அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.
கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.