search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Sector Banks"

    மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #PublicMoney #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் டெல்லியில் நேற்று நடந்த 13 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த அவரிடம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததால் பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், “மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. இதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன். மத்திய அரசு எப்போதும் பொதுத்துறை வங்கிகளுக்கு துணை நிற்கும். பொதுத்துறை வங்கிகளை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.  #PublicMoney #PiyushGoyal #Tamilnews 
    ×