search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public money"

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் தாக்கு
    • தேர்தலில் வாக்கு பெற கடன் வாங்கிய பணத்தை வறுமை ஒழிப்பு என்ற பெயரில் அரசு வீணடிக்கிறது. உண்மையான ஏழைகளுக்கு மட்டும் உதவிகள் செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 17-ந் தேதி இந்திய அரசின் நிதி ஆயோக் இந்திய வறுமை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    புதுவையில் கிராமப்புற வறுமை 78.7 சதவீதம் ஆகவும், நகர்ப்புற வறுமை 7.14 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வறுமையை 2030-க்கு முன்பாக பாதியாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை புதுவை அடைந்து விட்டது. வறுமையை புதுவை வென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது.

    ஆனால் துரதிஷ்டவசமாக புதுவை அரசு அதிக வறுமை இருப்பதாக அனுமானம் செய்து கொண்டு தனது திட்டங்களில் அரசின் நிதியை வீணாக்குகிறது.

    புதுவையில் 54 சதவீத குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சிகப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் எல்லாம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வர்களாக தீர்மானிக்கப் பட்டுள்ளனர்.

    புதுவையில் 3 லட்சத்து 58 ஆயிரத்த 644 குடும்பங்கள் உள்ளன. அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 825 குடும்பங்கள் அரசு நேரடி பணம் அளிக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்

    யூனியன் பிரதேசத்தில் பாதி மக்கள் தொகை வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக தெரிகிறது. இந்த முரண்பாடுக்கு காரணம் இதுவரை முறைப்படி தொழில்நுட்ப ரீதியாக ஒரு ஆய்வை நடத்தி புதுவையின் வறுமை நிலையை அரசு கண்டறியவில்லை.

    தேர்தலில் வாக்கு பெற கடன் வாங்கிய பணத்தை வறுமை ஒழிப்பு என்ற பெயரில் அரசு வீணடிக்கிறது. உண்மையான ஏழைகளுக்கு மட்டும் உதவிகள் செய்ய வேண்டும்.

    வசதி படைத்தவர்களுக்கு அரசு பணத்தை வீணாக்குவது சரியல்ல. இந்த முரண்பாடை துணிச்சலாக களைய வேண்டும்.

    இதைத் தவிர்த்து தன் சொந்த நலனுக்காக ஆட்சியில் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக பொது மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து புதுவை அரசையும், அரசியலையும் பாழ்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #PublicMoney #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் டெல்லியில் நேற்று நடந்த 13 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த அவரிடம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததால் பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், “மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. இதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன். மத்திய அரசு எப்போதும் பொதுத்துறை வங்கிகளுக்கு துணை நிற்கும். பொதுத்துறை வங்கிகளை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.  #PublicMoney #PiyushGoyal #Tamilnews 
    ×