search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post office"

    • அஞ்சலகங்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் கடந்து தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    சுவாமிமலை:

    காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான அய்யப்பன் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் பகுதி மக்கள் வெளியூர்களுக்கு கடிதம் அனுப்ப, சிறுசேமிப்பு பதிவு அஞ்சல்கள், பார்சல் அனுப்ப முதலிய சேவை களுக்கு அஞ்சலகங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பகோணம் கடைவீதி, மேலக்காவேரி, காந்தி பூங்கா, கம்பட்ட விசுவநாதர் கீழவீதி, சவுராஷ்ட்ரா நடுத்தெரு ஆகிய பகுதிகளில் இருந்த கிளை அஞ்சலகங்கள் திடீரென மூடப்பட்டன.

    இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தபால் அனுப்ப வேண்டும் என்றால் நீண்ட தூரம் கடந்து மகாமகக்குளம் தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, ஏழை நடுத்தர மக்களுக்கு நலன் கருதி மூடப்பட்ட கிளைஅஞ்சல கங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.
    • வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது

    திருப்பூர் : 

    அஞ்சல் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் நேரத்துக்கு கிடைக்க செய்ய தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.

    அவ்வகையில் திருப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டு விடுகிறது. இரவு 7 மணி வரை பணம் செலுத்த, பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தபால் பரிவர்த்தனைகளும் இரவு வரை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர தபால் துறை மூலம் வழங்கப்படும் சேவை மற்றும் செயல்பாடுகளை வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர் தபால் அலுவலகத்தில் ஏதேனும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு 0421 2206849 என்ற எண்ணில் தபால் அலுவலரை அழைக்கலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் எதிர்முனையில் பேசுபவர்கள் தபால் அலுவலகம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றனர். 

    • வல்லம் பஸ்நிலையம் அருகில் ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • கர்நாடக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    வல்லம்:

    காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்து வல்லம் பஸ்நிலையம் அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காலை ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் தஞ்சை ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்த சாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வ ராணி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங்.ரா.அன்பழகன், ரெளலத்நி ஷா முகம்மது ஷாஃபி,மதிமுக ஒன்றிய செயலாளர் மாணிக்க வாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அபிமன்யூ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பஷீர் அகமது உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • கட்டுமான வேலைகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டது
    • தொழில்நுட்ப ஆலோசனைகளை சென்னை ஐஐடி வழங்கியது

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் இன்று இந்தியாவின் முதல் முப்பரிமாணத்தில் (3D) அச்சிடப்பட்ட கட்டுமான தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட தபால் நிலையத்தை ரெயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் மென்பொருள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.

    இந்த தபால் நிலையம் பெங்களூரூவில் உள்ள கேம்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த தபால் நிலையம் இன்றிலிருந்தே மக்களுக்கு சேவையை தொடங்குகிறது.

    இந்த தபால் அலுவலக கட்டிடத்தின் கட்டுமானம், பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அனைத்தும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் சென்னை கிளையை சேர்ந்த வல்லுனர்களால் வழங்கப்பட்டதாகவும் அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இந்த புதிய கட்டுமான தொழில்நுட்பம், 3டி கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு முழுமையான தானியங்கி கட்டிட கட்டுமான தொழில்நுட்பம். இக்கட்டுமானத்தில் ரோபோவால் இயக்கப்படும் அச்சுப்பொறி கான்கிரீட்டை துல்லியமாக ஒன்றன் மேல் ஒன்றாக குவிக்கும்."

    "இதில் உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட் சிறப்பு வகையை சேர்ந்தது என்பதால் இது விரைவாக கடினத்தன்மையை அடைகிறது. வழக்கமான கட்டுமான முறையில் கட்டியிருந்தால் இது கட்டி முடிக்க சுமார் 6 முதல் 8 மாதங்களாகும். பழைய முறையோடு ஒப்பிடும்போது இந்த தொழில்நுட்பத்தில் முழு கட்டுமான பணிகளும் 45 நாட்களில் நிறைவடைந்தது. நேரத்தையும், செலவையும் குறைப்பதால் இந்த கட்டுமான தொழில்நுட்பம் வழக்கமான முறைக்கு ஒரு சரியான மாற்றாக அமையும். இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

    • நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
    • இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக வழங்க வேண்டும். தண்ணீர் இன்றி கருகி பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சேவையா ,விஜயலட்சுமி, பிரபாகர் , முத்துக்குமார், செல்வகுமார் ,கல்யாணி, விஜயலட்சுமி, ராமச்சந்திரன், முகில், ராமலிங்கம் ,மூத்த தலைவர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடகா அரசு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேப்போல் அம்மாபேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காவிரி நீரை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதேப்போல் மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.

    • தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.
    • விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.இப்போட்டியில் 'ஏ4' தாளில், கையால் எழுதப்படும் கடிதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தாளில் அனுப்புவது ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இன்லாந்து லெட்டரில் அனுப்பும் கடிதம் 500 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.

    கடிதங்களை தமிழ், ஆங்கிலம் இந்திய மொழிகளில் எழுதி அனுப்பலாம். போட்டியில் பங்கு பெறுபவர், பெயர், இருப்பிட முகவரியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்பதை அறிய நிச்சயம் வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை தபால் துறைத் தலைவர், சென்னை 600 002. கடிதங்கள் அக்டோபர் மாதம் 31ந் தேதிக்குள் சென்று சேர வேண்டும். அதன் பின் வரும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    தேசிய அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாவது பரிசு 25 ஆயிரம், மூன்றாவது பரிசு 10 ஆயிரம். மாநில அளவில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய்.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
    • துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவ லகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    தபால் நிலையத்தில் விற்பனை

    சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். இதையொட்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் விற்பனைக்காக குவிந்துள்ளது. அதனை பொதுமக்களும், வியாபாரி களும், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் பாளை தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதற்காக இன்று 1,,400 தேசிய கொடிகள் வந்தது. துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இ-போஸ் வசதி

    இந்த விற்பனையை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜிகணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகவரி அதிகாரி ராஜேந்திர போஸ் மற்றும் அண்ணாமலை, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தேசிய கொடியை வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று வீடுகளில் தேசிய கொடியை வழங்குவார்கள். கடந்த ஆண்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தாண்டு தேசிய கொடி விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    • பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாதாந்திர உரிமைத் தொகையை தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    தபால்காரர், கிராம தபால் ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனம் மூலம், பயனாளிகள் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும். இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

    தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களில் அல்லது, சிறப்பு சேவை மூலம் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

    இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், பிரதமரின் உதவித்தொகை பெறுவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவோர், தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெறுவோர் பயன்படுத்தி வருவோருக்கு பயன்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • பெண் குழந்தைகளுக்கான அஞ்சலக சிறு சேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழா நடந்தது.
    • 10 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 10 வயதுக்குட் பட்ட 120 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூரில் 10 கிராம ஊராட்சி பெண் குழந்தைகளுக்கான அஞ்சலக சிறு சேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழா நடந்தது.

    திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கோ.க.அண்ணா துரை, ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், உதயசந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அஞ்சல் துறை மேலாளர் சுரேஷ்பாபு திட்ட விளக்கமளித்தார்.

    அரசு தலைமை கொறடா கோவி செழியன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் பந்தநல்லூர், நெய்குப்பை, நெய்வாசல், திருமங்கைச்சேரி, ஆரலூர், கீழ்மாந்தூர், கருப்பூர், வேளூர், அத்திப்பாக்கம், மேலக்காட்டூர் ஆகிய 10 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 10 வயதுக்குட் பட்ட 120 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    • காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
    • வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர், ஆக.2-

    குமார்நகர் தபால் நிலையம், நிர்வாக காரணங்களுக்காக, காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

    தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டு, வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இன்று (2ம் தேதி) முதல் செயல்படும். புதிய முகவரியில் மக்கள் தபால் சேவையை பெறலாம்.

    என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது.
    • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது.

    ராசிபுரம்:

    சேலம் மேற்கு தபால் கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக கூடுதலாக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் ஆக பிரித்து ஊழியர்களை பணி அமர்த்தி இரவு 8 மணி வரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்பகல் 2.30- க்கு பிறகும் தபால் நிலையத்திற்கு மக்கள் வந்து சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தலாம்.இனிமேல் ராசிபுரம் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பரிவர்த்தனைகள், விரைவு தபால் பார்சல் சேவை அயல்நாட்டு தபால் சேவை, மணியாடர் சேவை ஆகிய அனைத்தும் இரவு 8 மணி வரை வழங்கப்படும்.இந்த தகவலை சப் - போஸ்ட்மாஸ்டர் ஹெலன் செல்வராணி, உட்கோட்ட ஆய்வாளர் சரவணன், உதவி சப்-போஸ்ட் மாஸ்டர் நிர்மலா, பி.எல்.ஐ. வளர்ச்சி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • இன்று அதிகாலையில் 2-வது மாடியில் இருந்து கரும்பு புகை எழுந்துள்ளது.
    • தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

    நெல்லை:

    பாளை பகுதியில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையம் 3 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது.

    தரைத்தளத்தில் தபால் நிலையமும், முதல் தளத்தில் சிக்கன நாணய சங்கம், 2-வது தளத்தில் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட வற்றுடன் இந்த அலுவலகம் செயல்படுகிறது.

    இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில் 2-வது மாடியில் இருந்து கரும்பு புகை எழுந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்புத் வீரர்கள் தபால் நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 2-வது தளத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

    சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏதேனும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சந்திப்பு பகுதியில் ஒரு மருந்து கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உடனடியாக வந்து தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×