search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank account"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.
    • வங்கிகளுக்கு தேவையற்ற சுமையை குறைக்கவும், ஆன்லைன் மோசடிக்கான ஆபத்தை குறைக்கவும் இத்தகைய கணக்குகள் மூடப்படுகின்றன.

    புதுடெல்லி:

    வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி இன்று (புதன்கிழமை) அமல்படுத்துகிறது. அதன்விளைவாக 3 வகையான வங்கிக்கணக்குகள் இன்று முதல் மூடப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    முதலில் வருவது செயலற்ற வங்கிக்கணக்கு. தொடர்ந்து 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காத வங்கிக்கணக்குகள், செயலற்ற வங்கிக்கணக்குகள் ஆகும். விஷமிகள் மோசடி நடவடிக்கைகளுக்கு இத்தகைய வங்கிக்கணக்குகளையே குறிவைக்கிறார்கள். எனவே, வாடிக்கையாளர்களையும், வங்கித்துறையின் நேர்மையையும் பாதுகாக்க இத்தகைய கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.



    இரண்டாவது, செயல்படாத வங்கிக்கணக்கு. கடந்த 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காதவை செயல்படாத வங்கிக்கணக்குகள் ஆகும். 12 மாதங்களாக எந்த பரிமாற்றமும் செய்யாத வாடிக்கையாளர்கள், வங்கிக்கிளையை தொடர்புகொண்டு, தங்கள் கணக்கை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வங்கிகளுக்கு தேவையற்ற சுமையை குறைக்கவும், ஆன்லைன் மோசடிக்கான ஆபத்தை குறைக்கவும் இத்தகைய கணக்குகள் மூடப்படுகின்றன.

    மூன்றாவது, பூஜ்ய பேலன்ஸ் கணக்கு. நீண்ட காலமாக பூஜ்ய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக்கணக்குகள் மூடப்படலாம். தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், மோசடி ஆபத்தை குறைக்கவும் இத்தகைய வங்கிக்கணக்குகள் மூட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.



    • வங்கி கணக்கு விபரங்களை மீண்டும் சரிபார்த்த போது அதில் ரூ.87.65 கோடி அப்படியே இருந்தது.
    • உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர்.

    நாட்டின் பல்வேறு நகரங்களில், சாதாரண நபர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத அளவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரவாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சையிப் அலி என்ற மாணவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.500 எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தனது வங்கி கணக்கில் பணம் இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதில், ரூ.87.65 கோடி இருந்ததை கண்டு திகைத்து போனார். அவர் தனது வங்கி கணக்கு விபரங்களை மீண்டும் சரிபார்த்த போது அதில் ரூ.87.65 கோடி அப்படியே இருந்தது.

    இதனால் வீட்டுக்கு ஓடிச்சென்று தனது தாயிடம் விபரத்தை கூறினார். உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகை திரும்ப பெறப்பட்டது. அதன்பிறகு அவரது வங்கி கணக்கில் வெறும் ரூ.532 மட்டுமே இருந்தது. மாணவரின் கணக்கில் ரூ.87 கோடி வரவு வைக்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

    • பிரதீபா, இந்திய பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளார்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீபா (வயது 42). இவருக்கு கடந்த மே மாதம் பல்வேறு எண்களிலிருந்து வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள் இந்திய பணத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறினர்.

    இதைத்தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணுக்கு லிங்க் அனுப்பப்பட்டது. அதில் பயணர் ஐ.டி, கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கி பிரதீபா உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட வங்கி கணக்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

    இதை நம்பிய பிரதீபா, இந்திய பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளார். அதற்கு கணிசமான லாபம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்தை பிரதீபா முதலீடு செய்துள்ளார்.

    அதற்கான லாபத்துடன் பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும் 2,500 அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை செலுத்தினால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரதீபா திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதுதொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெறலாம்.
    • தொடங்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து நியாய விலைக் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள் நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்ததான கையேடுகள் விநியோகிக்கவும், நியாய விலைக்கடை பணியாளர்களை கொண்டு, சேமிப்புக் கணக்கு துவக்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக, துவக்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நியாய விலைக் கடைகள் மூலம் துவக்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள் ஏ.டி.எம். கார்டு வசதியினையும் மற்றும் வங்கிச் சேவையினை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன் இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

    எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு துவக்கிடவும் இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முடிவில் மகாவிஷ்ணு பற்றி மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகி இருக்கும் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்துள்ள போலீசார் நேற்று இரவு 11.30 மணி அளவில் அவரை அழைத்து கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர். இன்று காலையில் திருப்பூரை சென்றடைந்த போலீசார் முதலில் மகாவிஷ்ணுவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் திருப்பூர் குளத்து பாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் 'பவுண் டேசன்' அமைப்பின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அங்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் செல்போன்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போலீசார் அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை திரட்டியுள்ளனர். மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பரம்பொருள் பவுண்டேஷனுக்குக்கு யார்-யாரெல்லாம் பணம் அனுப்பியுள்ளனர்? சட்ட விரோதமாக பண பரிமாற்றங்கள் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர்.

    முன்னணி தொலைக் காட்சியின் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது பேச்சு திறமையை வெளிக் காட்டிய மகாவிஷ்ணு அதனை வைத்தே பிரபலமாக முடிவு செய்தார். இதனை தொடர்ந்து பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி வெள்ளை உடைக்கு மாறி இருக்கிறார். பின்னர் குறுந்தாடியை வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்ற தொடங்கினார். இப்படித்தான் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு பயணம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணு சொற்பொழி வாளராக மாறியது எப்படி? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றிய விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவில் யார் மூலமாக கலந்து கொண்டீர்கள்? அதற்கு யார் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்? என்பது போன்ற விவரங்களையெல்லாம் கேட்டு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    இதன் முடிவில் மகாவிஷ்ணு பற்றி மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது
    • இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்பாலின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டில் உள்ள வங்கிகளில் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவோ, ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில், Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை குறிப்பிடவோ எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூறப்பட்ட கருத்துகளின்படி, LGBTQ சமூகத்தினர் பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

    • படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு.
    • பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    1-ம் வகுப்பு முதல் 12-ம் வப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த உதவித்தொகைகள் மாணவ-மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுவதால் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மென்பொருள் கோளாறால் பானுவின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டது.
    • தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ.9,900 கோடி பணம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உ.பி மாநிலத்தை சேர்ந்த பானு பிரகாஷ் பரோடா உபி வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் சமீபத்தில் ரூ.99,99,94,95,999.99 (ரூ.99 பில்லியன் 99 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 999) இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பானு பிரகாஷ், உடனே வங்கி கிளைக்கு விரைந்து இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகள் இது குறித்து ஆராய்ந்தனர்.

    அப்போது, பிரகாஷின் வங்கி கணக்கு கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன் கணக்கு என்றும், அது செயல்படாத சொத்தாக (என்பிஏ) மாறியது என்றும் தெரியவந்துள்ளது.

    மேலும், மென்பொருள் கோளாறால் பானுவின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டது என்றும் பின்னர் தெரியவந்தது.

    தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தொகையை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வங்க மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • தொலை தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து தன்னை மொபைலில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
    • என் ஆதார் அட்டையை போலியாக தயாரித்து மோசடி கும்பல் எனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன், இவரது மனைவி டாக்டர் சரோஜா. அண்ணா நகரில் வசித்து வருகின்றனர்.

    சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்று டாக்டர் சரோஜாவின் வங்கி பணத்தை மோசடி செய்ய முயன்றுள்ளது. இதனால் சரோஜாவின் வழக்கறிஞர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    தொலை தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து தன்னை மொபைலில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

    மத்தியப் பிரதேசம் இந்தூர் காவல் நிலைய போலீசார் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்து உள்ளனர். அந்த நபர் உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி உள்ளார்.

    அந்த எண்களை தொடர்பு கொண்ட போது 'உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டு வாயிலாக மும்பையில் செயல்படும் தனியார் வங்கி மேலாளர் சஞ்சய் சிங் என்பவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அது தொடர்பாக உங்களிடம் வீடியோ அழைப்பில் விசாரிக்க வேண்டும் என்று மிரட்டினார்.

    அதன் பிறகு சுனில் குமார் என்ற நபரின் எண்ணில் இருந்து எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அரசு முத்திரையுடன் கைது வாரண்ட், சொத்து முடக்கம், ரகசிய ஒப்பந்தங்கள் என போலி ஆவணங்களை அனுப்பினார்கள்.

    நீங்கள் நிரபராதி என்பதால் உங்களுக்கு உதவி செய்கிறோம் எனக் கூறி பணம் பறிக்க முயன்றனர். வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டு மிரட்டினார்கள்.

    நான் உடனே தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டேன். என் ஆதார் அட்டையை போலியாக தயாரித்து மோசடி கும்பல் எனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதன் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு மோசடி கும்பல் சென்னையில் இருந்து கொண்டு இந்தூரில் இருந்து பேசுவது போல் பேசியிருப்பதும் போலி ஆவணங்களை இந்த கும்பலே தயாரித்துள்ளதும் தெரிய வந்தது. எனவே டாக்டர் சரோஜாவிடம் பேசிய அந்த வடநாட்டு கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் அறிவித்திருந்தது.
    • இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ஜூலை 1, 2024 அன்று, அனைத்து உழைக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கிலும், ரூ. 8,500 போடப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும், இது ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்றும் இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அந்த 1 லட்ச ரூபாயை 12 பங்காக பிரித்து மாதம் 8,500 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 

    • கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் என்பவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்-ஐ ஒவ்வொன்றாக அவர் முடித்துள்ளார்.

    இதன் இறுதியில் அவர் வங்கி கணக்கில் இருந்து ₹2.50 லட்சம் வரை பணத்தை இழந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .

    இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

    • வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
    • புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப் படுகிறது.

    வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.

    இதனால் வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி. எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் கருவி இருக்கும்.

    இந்த கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

    கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.

    தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும் போது ஆதார் கார்டை புதுப்பிக்கும் போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை எடுக்கின்றனர்.

    இந்த முறையில் பணம் எடுக்கும் மோசடியை தடுக்கும் முறையை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    ×