என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank account"

    • வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.
    • உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும்.

    சென்னை:

    வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யவில்லையென்றால், அந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (டெப்) தானாகவே மாற்றம் செய்யப்பட்டுவிடும். இவ்வாறு கிடைக்கும் நிதியை மக்களிடம் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கல்வி வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.

    ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.58 ஆயிரத்து 330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673 கோடியும் உரிமை கோரப்படாமல் முடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்குதாரர் மரணமடைந்து, அவரால் முன்மொழியப்பட்ட வாரிசுதாரர் (நாமினி) பணத்துக்கு உரிமை கோராததுதான் இதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.

    வங்கியில் கணக்கு தொடங்குபவர்கள், லாக்கர்களில் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைப்பவர்கள் தனக்கு ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், அந்த பணத்துக்கும், லாக்கர்களில் உள்ள உடைமைகளுக்கும் பொறுப்பாக வாரிசுதாரராக ஒருவரை மட்டுமே தற்போது நியமிக்கலாம். இதில், வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.

    புதிய விதிகளின்படி வங்கியில் கணக்கு, வங்கிகளில் லாக்கர் வசதியை வைத்திருப்பவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமித்துக்கொள்ளலாம். இந்த வசதி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. உரிமை கோராமல் வங்கி கணக்குகளில் முடங்கும் பணத்தை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ''புதிய விதிகளின்படி, வங்கியில் கணக்கு பராமரிப்பவர்கள் தாங்கள் விரும்பும் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமித்து, அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டிய தொகையையும் வௌிப்படையாக அறிவிக்கலாம். இதேபோல லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களும் வாரிசுதாரர்களாக 4 பேரை நியமிக்கலாம்.

    லாக்கர் பராமரிப்பவர்கள் ஒருவேளை மரணம் அடைந்தால், அவருக்கு பின்னர் யார் அதனை கையாளவேண்டும் என்பதையும் தெரிவிக்கலாம். இதனால் உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும். புதிய விதியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறினர்.

    • தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது.

    இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69 அ-வின்படி இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற மணிகண்டன் இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக பலரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு பின்னர் அந்த பணம் விடுவிக்கப்பட்டது. அதே போன்று தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செவ்வாய்க்கிழமை முதல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
    • முன்னணி வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு சேவைகளுக்கான கட்டணங்களை திருத்தி வருகின்றன.

    வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது மற்றும் ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.

    பான் கார்டு, தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஆதார் கட்டாயம்

    மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) விதிகளின்படி, செவ்வாய்க்கிழமை முதல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். இதுவரை, ஓட்டுநர் உரிமம் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற அடையாள அட்டைகளுடன் பான் கார்டைப் பெறுவது சாத்தியமாக இருந்தது.

    ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று CBDT கூறியுள்ளது. இந்த விதியைப் பின்பற்றாதவர்கள் தங்கள் பான் கார்டுகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது.

    இதேபோல், ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் கூட ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக இருக்கும். இதனுடன், ஜூலை 15 முதல் ஆன்லைனில் அல்லது கவுண்டரில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் இரண்டு காரணி அங்கீகாரம் அறிமுகப்படுத்தப்படும்.

    இதன் ஒரு பகுதியாக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். மறுபுறம், ரயில் டிக்கெட் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி அறிக்கை 

    வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31 முதல் செப்டம்பர் 15 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. இது ஊழியர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 46 நாட்கள் அவகாசம் அளிக்கிறது.

    வங்கி மாற்றங்கள்

    முன்னணி வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு சேவைகளுக்கான கட்டணங்களை திருத்தி வருகின்றன.

    SBI வங்கி அதன் எலைட், மைல்ஸ் எலைட் மற்றும் மைல்ஸ் பிரைம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் கார்டுகளுடன் வாங்கப்பட்ட விமான டிக்கெட்டுகளில் வழங்கப்படும் விமான விபத்து காப்பீட்டு வசதியை நிறுத்துகிறது.

    மாதாந்திர பில்களில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை (MAD) கணக்கிடும் முறையிலும் இது மாற்றங்களைக் கொண்டுவரும்.

    HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் சில பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. ஜூலை 1, 2025 முதல், வாடகை, ரூ.10,000-க்கு மேல் ஆன்லைன் கேம்கள், மற்றும் ₹50,000-க்கு மேல் மாத பயன்பாட்டு பில்களுக்கு 1% பரிவர்த்தனை கட்டணம் (அதிகபட்சம் ₹4,999) வசூலிக்கப்படும். மேலும், ₹10,000-க்கு மேல் டிஜிட்டல் வாலட்டில் பணம் சேர்த்தாலும் இதே கட்டணம் பொருந்தும்.

    ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் பரிவர்த்தனைகள் சேவை கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களில் முதல் ஐந்து ஏடிஎம்களுக்கு பணம் இலவசம். அதன் பிறகு பணத்தை எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். நிதி அல்லாத பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.

    ஐசிஐசிஐ வங்கி அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தினால், மெட்ரோ நகரங்களுக்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளும், சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளும் செய்யலாம். இதற்கு மேல் நீங்கள் ஒரு பரிவர்த்தனைக்கு முறையே ரூ.23 மற்றும் ரூ.8.5 செலுத்த வேண்டும்.

    • விருதுநகரில் புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கக் கூடிய வகையிலும், அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நன்கொடை அளிப்பதற்கு ஏதுவாக புத்தகக் கண்காட்சிக்கென்று கீழ்காணும் விவரப்படி தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கு பவர்கள் கலெக்டரிடம் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவும் மற்றும் காசோலையாகவும் அளிக்கலாம்.

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கிக்கணக்கின் பெயர்: District Collector (Book Fair) வங்கிக்கணக்குஎண் - 174801000010896 MICR CODE : 626020304 IFSC CODE : IOBA0001748.

    மேலும் விவரங்களுக்கு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர். செல்போன் எண்.70108 02058, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், செல்போன் எண். 75502 46924 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
    • வங்கிகளில் ’ஜீரோ பாலன்ஸ்’ வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும்.

    அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வங்கிக்கணக்கு, ஆதார் எண் விபரங்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களில் வங்கி கணக்கு வைத்து ஆதார் எண் இணைக்கப் பெறாமையாலும் கணக்கு எண் ஒரு வேளை இல்லாமலும் இன்னும் 21704 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதாக விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

    இத்தகைய குடும்ப அட்டை தாரர்கள் விபரம் தற்போது சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடை வாரியாக பிரித்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து வங்கி கணக்கு எண்ணில் ஆதார் எண்ணை தொடர்புப்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அதற்கான நடவடிக்கையாக கணக்கு எண் உள்ள வங்கியில் படிவம் எண் 2-ஐ பெற்று விவரங்களைப்பூர்த்தி செய்து உடன் அளிக்கும் படியும் இது வரை வங்கிக்கணக்கு எண் இல்லாதவர்கள் கூடுமானவரை அருகில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் புதியதாக வங்கிக்கணக்கு எண், ஆதார் எண் விவரத்தினை இணைத்து உடன் தொடங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • முதல் கட்டமாக, இறுதியாண்டு, இரண்டாமாண்டு படித்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து கல்லூரிகளிலும், இப்பணிகளை கண்காணிக்க, நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை,

    அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

    கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில், முதல் கட்டமாக, இறுதியாண்டு, இரண்டாமாண்டு படித்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளுக்கு வழங்க ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

    அனைத்து கல்லூரிகளிலும், இப்பணிகளை கண்காணிக்க, நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இறுதியாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவிகள் பலருக்கு வங்கிக்கணக்கில் தொகை வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக நலத்துறைத்துறையினர் கூறியதாவது:-

    புதுமைப்பெண் திட்டத்தில், மாணவிகள் தங்களை பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.அதில் பல்வேறு தவறுகள் இருந்தன.

    தற்போது அந்தந்த கல்லூரி நிறுவனம் தகவல்களை பதிவேற்றும் வகையில், விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் தவறு ஏற்படுவதில்லை.

    உதவித்தொகை கிடைக்காத மாணவிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் எண் இணைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கல்லூரி நோடல் அலுவலரை அணுகி, இதற்கு முன் பதிவேற்றம் செய்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    சில மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்காமல் உள்ளனர். சிலரிடம் செல்போன் எண் இல்லாமல் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
    • தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடந்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 145 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

    பள்ளிகளில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக மாணவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஆதிதிராவிட மாணவர்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
    • தங்களது ஆதார் கைபேசி எண்களை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23ம் கல்வியாண் டில் கல்வி பயிலும் ஆதிதிரா விடர், மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையை பெறுவதற்கு மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு எண்ணை இணைப் பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்றவர்க ளில் 5 ஆயிரத்து 662 மாண வர்களின் வங்கிக்கணக்கு எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள் ளது.

    இது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2 ஆயி ரத்து 639 மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.மீதமுள்ள 3 ஆயிரத்து 423 மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை பள்ளிக ளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களது ஆதார் எண்ணு டன் வங்கி கணக்கு எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

    மேலும் மாணவர்கள் அருகில் உள்ள அஞ்சலகங் கள், கிராம அஞ்சல் ஊழி யர்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்களது ஆதார் கைபேசி எண்களை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும்.
    • இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி ஈ.கே.ஒய்.சி. (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
    • தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆனது.

    வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர்.

    இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    ×