search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "book festival"

    • நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.
    • போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது நூலகத்துறையின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.

    ஒவ்வொரு நூலகத்திலும் காலை 11 மணிக்கு நடைபெறும் கட்டுரை போட்டியில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொதுநூலகத்துறையின் கீழ் செயல்படும் நூலகத்துக்கு சென்று கலந்து கொள்ளலாம். அதிகபட்சம் 2 மணி நேரம் வழங்கப்படும்.

    கட்டுரைப்போட்டியின் தலைப்பு புத்தக வாசிப்பு என்ன செய்யும்? என்பதாகும். இதேபோல் புத்தக வாசிப்பு பற்றிய வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது. 4 வரிகளுக்கு மிகாமல் வாசகம் எழுதி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8825790004, 9487317509 ஆகிய வாட்ஸ்-அப் எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்ப வேண்டும்.

    போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

    சேலம்:

    சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதல்- அமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதகரிகத்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்றும் இந்த ஆண்டும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தக திருவிழா வருகின்ற 22.11.2023 (புதன்கிழமை) தொடங்கி 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) வரை 12 நாட்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.

    இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சி கள் நடத்திடவும், மாணவர்க ளுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளர்களின் படைப்பு களைக் கொண்ட விற்பனை யகங்கள் அமைத்திட வும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புத்தகத் திருவிழா வருகிற 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது
    • சுமாா் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகத் திருவிழா வருகிற 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா வருகிற 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நிகழ்ச்சிகளில் கலைஞா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனா்.புத்தகத் திருவிழாவில் உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளன. மாணவா்கள், பொதுமக்களின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துக்காக இலவசமாக நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் அனைவரும் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.
    • பின்னர் உடனடியாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்ப ட்டினத்தில் நெய்தல் புத்தகத் திருவிழா இன்று தொடங்கப்பட்டது. வருகிற 9-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏராளமான மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 2 பேர் திடீரென்று மயக்கம் அடைந்தனர். அப்போது அங்கு இருந்த தோழிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி டைந்தனர். பின்னர் உடனடி யாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது.‌

    கடலூர்:

    கடலூர் 30 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நெய்தல் புத்தக திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு சிவா வரவேற்றார். மினி மாரத்தான் போட்டி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷினி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும் என அரியலூர் புத்தக திருவிழாவில் தொல். திருமாவளவன் பேசினார்
    • படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும்

    அரியலூர்:

    அரியலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவின் 6-நாம் நாளான இன்று தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,தமிழக மக்கள், இளைஞர்களிடையே படிக்கும் வேட்கை உருவாகியுள்ளன என்பதை இந்த புத்தகத்திருவிழா உணர்த்துகிறது.ஆகையால் தான் நாவல்கள், சிறுகதைகள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. அறிவியல், ஆராய்ச்சி படிப்புகளில் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும்.

    படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும். படிக்க வேண்டும் என்ற ஈடுபாடு அனைவருக்கும் வேண்டும். புத்தகங்களை படிப்பதால் வீடு மட்டுமன்றி, நாடும் வளர்ச்சி அடையும்.பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வரையறுக்கப்படுகின்றன. இதற்காக வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகின்றன. பள்ளியில் இதனை தேர்வு செய்து பயிலும் மாணவர்கள் தற்போது அதிகம் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் உள்ளது. முன்பெல்லாம் படிப்பு என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளாதது.

    அப்போது, பெற்றோருக்கும் அந்த உந்துதல் இல்லை. படிக்காமல் இருக்கின்றோமே என்ற எண்ணம் ஏற்படவும் இல்லை.ஆனால், தற்போது பள்ளி செல்லவில்லை என்றால் மதிப்பு இல்லை. பாடத்திட்டங்களை தாண்டி படிக்கும் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம். பாடத்திட்டங்களை தாண்டி படித்தவர்கள் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில் கலாச்சாரம் எவ்வாறு இருந்தது என்பதை எல்லாம் உணர வரலாறு புத்தகங்களை அனைவரும் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல் -அமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், 24 மணி நேரம் தொடர் வாசிப்பு அரங்கத்தை திறந்து வைத்தார்.
    • சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் சிறப்புரையாற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சங்கராபேரி திடலில் புத்தக திருவிழா நடைபெற்று வரு கிறது. 2-ம் நாளான நேற்று புகைப்பட கண் காட்சியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகி யோர் திறந்து வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து முதல் -அமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், 24 மணி நேரம் தொடர் வாசிப்பு அரங்கத்தை திறந்து வைத்தார். சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் சிறப்புரை யாற்றினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    புத்தகம் என்பது ஒரு அனுபவ அறிவு. ஒருவர் இலங்கைக்கு சென்று இலங்கையை பற்றி எழுதிய ஒரு புத்தகத்தினை படிக்கும் போது நாம் இலங்கைக்கு செல்லாமலேயே இலங்கை பற்றிய அனுபவ அறிவை பெற்றுக் கொள்ள முடியும்.

    எனவே புத்தகம் வாசிப்பதன் மூலம் ஒரு வரின் அனுபவ அறிவினை நாம் பெற்று கொள்ள முடியும். புத்தகம் வாசிப்ப தன் மூலம் அறிவாற்றல் மற்றும் அனுபவ அறிவு வளரும். அனைத்து புத்தக அரங்கங்களுக்கும் சென்று தங்களுக்கு ஆர்வமுள்ள புத்தகங்களை அனைவரும் வாங்கி பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் பேசியதாவது:-

    பொருநை நதிக்கரையின் இரண்டு முக்கியமான கண்டெடுப்புகள் ஆதிச்ச நல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளாகும். பொருநை நதி நாகரீகம் கீழடியை விட 600 ஆண்டுகள் பழமையானது.

    பொருநை நதி நாகரீகம் 3,800 ஆண்டுகள் பழமையானது. பொருநை நதி அகழாய்வில் கிடைத்த தங்க அணிகலன்களை ஆராய்ந்து பார்த்த போது 92 சதவீதம் தங்கம் மற்றும் 8 சதவீதம் வெள்ளி கலவை யினால் உருவாக்கப் பட்டுள்ளது.

    இதன் நவீன தரக்குறியீட்டு வரிசைப்படி பார்த்தால் மிகச்சரியாக 22 காரட் என பொருந்தி வருகிறது. எனவே முத்துநகர் 22 காரட் தரம் கொண்ட நகரம் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள்.

    எனவே பொருநை நதி நாகரீகம் மிக பழமையானது என்பது குறித்து நெல்லை சீமை, முத்துநகர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    முத்துநகர் பகுதியில் தமிழரின் அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பண்டிதர்கள் எழுத்தை படைத்திருக்கலாம். அதனை பாதுகாத்த சாமானிய மனிதர்கள் தான்.

    சாமானிய மனிதர்கள் அடுத்த தலைமுறைக்கு மொழியை எடுத்து செல்கிறார்கள். தமிழ் மொழியை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு காரணம் சாமானிய மக்கள் தான்.

    பாரதி பிறந்த பின் தான் மொழியை நவீனமாக்கும் முயற்சி நடந்தது. மொழி யாக்கம் செய்வதில் பண்டிதர்களின் முயற்சியை விட சாமானியர்களின் முயற்சி காலம் கடந்து நிற்கும் என்பது வரலாறு.

    தாய் தெய்வ வழிபாடு குறித்து அதிகமாக பேசப்படு கிறது. சிந்து சமவெளி நாகரீகத்திலும் கிடைத்தது. ஆதிச்சநல்லூர் நாகரீ கத்திலும் கிடைத்துள்ளது.

    இரண்டுக்கும் இடையே உள்ள உருவ ஒற்றுமை குறித்து ஆய்வுகள் நடை பெற்று வருகிறது. இந்த பகுதியிலும் அம்மன் வழிபாடுகள் உள்ளன. இசக்கியம்மன் உள்பட ஒவ்வொரு பகுதியிலும் அம்மன் வழிபாடுகள் உள்ளன.

    சமூகவியல் ஆய்வா ளர்கள், ஒவ்வொரு அம்மனுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. நல்லதங்காளுக்கு பின்னால் சொத்துரிமை மறுக்கப்பட்ட பெண்ணின் சோகம் இருக்கிறது என்று கூறு கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண், அகால மரணம் அடைந்த பெண்ணை தெய்வமாக வழிபடுவது ஒவ்வொரு சமூகத்தின் இயல்பு. அது தமிழ் சமூகத்திலும் ஆழ்ந்து கிடக்கிறது.

    அம்மன் வழிபாட்டுக்கு பின் உள்ள சமூகவியல் காரணங்கள் குறித்து வேர்களை தேட வேண்டு மென்றால் கரிசல் மண் குறித்து ஆழமான ஆய்வு முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • 4-ம் புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
    • வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழக மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் வகையிலும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை வாய்ப்பிற்காக பயிலும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா நடத்த உத்தரவிட்டு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இதன்மூலம் மாணவர்கள், இளைஞர்கள் ஒரே இடத்தில் அனைத்து வகையான புத்தகங்களையும் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதன்படி, தூத்துக்குடி-எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தின் 4-ம் புத்தகத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    அதனை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில் மேயர் ஜெகன்பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள், 10 அரசுதுறை அரங்குகள், பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் தனியாக 40 அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமையை, தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூர் ஆகியவற்றில் கிடைத்த முதுமக்கள் தாழி, மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது? என்பது குறித்து மாதிரி செயல்வடிவம் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

    புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மேயர் ஜெகன்பெரியசாமி கூறி உள்ளார்.

    • திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.
    • தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.

    இதில் சுமார் 60 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் புத்தக வெளியீட்டாளர்களின் படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு சலுகை விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது.

    மேலும், மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், இதில் மக்கள் பங்கேற்கும் விதமாக திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளரும், சமூக சேவகருமான செந்தில்குமார் கடந்த ஒரு வாரமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இவரது விழிப்புணர்வு மூலம் இதுவரை 2 ஆயிரத்து 542 இளைஞர்கள் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சுமார் ரூ.30 ஆயிரம்-க்கு புத்தகம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை சிறை துறைக்கு தானமாக வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

    இவரது இந்த பணியை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், நடைபெற்று வருகிறது.
    • 24,095 பார்வையாளர்கள் புத்தக அரங்கினை பார்வையிட்டனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா-2023 கடந்த 5-ந் தேதி தொடங்கியது. சர்வதேச கணிதவியல் தினத்தையொட்டி சிந்தனை கவிஞர் கவிதாசன் வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான ஜோ.மல்லூரி தமிழ் எங்கள் ஞானச் செருக்கு என்ற தலைப்பிலும் பேசினர். விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், தமிழ் பற்றாளர்கள் கலந்துகொண்டு பேசினர். முக்கிய நிகழ்ச்சியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். தொடந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தினமும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடந்த புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 24,095 பார்வையாளர்கள் புத்தக அரங்கினை பார்வையிட்டனர்.

    • ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
    • புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி தொடங்கியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், சொற் பொழிவுகள், பட்டி மன்றம், சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    10-ம் நாளான நேற்று சிந்தனை கவிஞர் கவிதாசன், வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான மல்லூரி தமிழ் எங்கள் ஞானச்செருக்கு என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

    புத்தக கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பார்வை யிட்டு வருகிறார்கள். மேலும் தங்களுக்கு விருப்பமான புத்த கங்களையும் தேர்வு செய்து வாங்கிச் செல்கிறார்கள்.

    கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்றுள்ளன. சுமார் 24 ஆயிரத்து 95 பார்வையாளர்கள் பார்வை யிட்டு உள்ளனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், மாவட்ட கருவூல அலுவலர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தே தொடங்கியது.
    • மாணவிகள், சுற்றுலா பயணிகள் புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் "முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி தொடங்கி வைத்தார்.

    இன்று வரை நடைபெற்று வரும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு அம்சங்களாக மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்ப டுத்தப்பட்டதை உள்ளுர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

    இந்நிலையில் இப்புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கோரிக்கை களை ஏற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழா கண்காட்சி அரங்குகள் மட்டும் வருகிற 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    ×