search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advisory meeting"

    • ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 58-வது வார்டு காமராஜ் நகரில் உள்ள பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை தி.மு.க.வினர் மக்களிடம் எடுத்து சென்று கூற வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 58-வது வார்டு காமராஜ் நகரில் உள்ள பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. செயலாளரும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனுமான ஆஸ்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தலின்படி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆலோசனையின்படி இந்த கூட்டம் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை தி.மு.க.வினர் மக்களிடம் எடுத்து சென்று கூற வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. அதிகபபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். மேலும் இதனை தீர்மானமாக நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் பகுதி அவை தலைவர் வெள்ளப்பாண்டி, தி.மு.க. வட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், கருப்பசாமி, பகுதி நிர்வாகிகள் கல்பனா ரகு, அந்தோணிராஜ், பகுதி அமைப்பாளர்கள் மாலா சின்கா (மகளிரணி), சித்திரை புஷ்பம் (மகளிர்தொண்டரணி), அருண் (இளைஞரணி), ராஜ், சக்தி (மாணவரணி), செல்வக்குமார் (வர்த்தகஅணி), ராஜ் (இளைஞரணி), சண்முகராஜ் (விவசாய அணி), மகளிர் தொண்டரணி பகுதி துணை அமைப்பாளர் பானுமதி, கவுசல்யா, வட்ட நிர்வாகிகள் பாஸ்கர், சீனிவாசகம், போஸ், செ.முருகேசன், முருகேசன், முத்துமாணிக்கம், காளிராஜ், ராதாகிருஷ்ணன், பாபுராஜ், கணேசன் மற்றும் கிருஷ்ணமணி, அற்புதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் பாசறை மகளிரணி கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர் கோமதி மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் பூத் கமிட்டி பட்டியலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய, வாக்குறுதிகளை நிறை வேற்றாத தி.மு.க. அரசு குறித்து பொதுமக்களிடம் பூத் கமிட்டி பொறுப்பா ளர்கள், நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணி பாஸ்கரன், பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், கலைப்பிரிவு செயலாளர் செந்தில்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல துணை செயலாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளர் துளாவூர் பார்த்திபன், தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சங்கர் ராமநாதன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
    • கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லில் கந்தசஷ்டி திருவிழா 13-ந் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந் தேதியும், திருக்கல்யாணம் 19-ந் தேதியும் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    ஆலோசனை கூட்டம்

    எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று கோவில் இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கோவில் அறங்காவலர் குழுத்தலை வர் அருள்முருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் வாமணன், அறங்காவலர் செந்தில்முருகன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் இணை ஆணையர்கள் கார்த்திக் வரவேற்று பேசினார்.

    பக்தர்களுக்கு குடிநீர்

    கூட்டத்தில் திருவிழாக்காலங்களில் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கி விரதமிருப்பதற்காக கோவில் வளாகத்தில் 21 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகைகளின் உள் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு கருதி சுமார் ஒரு அடி உயரத்தில் பலகைகள் மூலம் சிறிய மேடை அமைக்கப்படும். அருகில் தற்காலிக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    2,500 போலீசார்

    13 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவகுழுவும், கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். கடல் காவல் படை மற்றும் மீன்வளத்துறை மூலம் கடலில் பக்தர்கள் ஆழத்திற்கு செல்லாமல் தடுத்திடும் வகையில் மிதக்கும் வகையில் தடுப்பு கயிறுகள் போடப்பட்டு வீரர்கள் ரோந்து செல்வர்.

    தடையின்றி மின்சாரம்

    திருவிழா காலங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், பக்தர்கள் விரதமிருக்கும் கொட்டகை களில் மின் கசிவு ஏற்படாதவண்ணம் பாது காப்பான முறையில் மின் தடங்கள் அமைக்கப்படும்.

    சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து கோசா லையில் ஒப்படைக்கப்படும். தெருநாய்கள் பக்தர்களை தாக்காத வகை யில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப் படும்.

    இந்த முறை கடற்கரையில் சூரசம்ஹாரம் பார்க்கும் இடங்களில் இரும்பு குழாய்கள் மூலம் பாதைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளது. கோவிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடை பெறும் இடங்களில் யாரும் நுழையாதவாறு பாது காப்பு பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோவில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், ஆனந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சிவநாதன், செயற்பொறியாளர்கள் முருகன், சந்தானகிருஷ்ணன், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, டாக்டர் நஸ்ரின்பாத்திமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கோவில போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேச மணிகண்டன், நகராட்சி ஆணையர் கண்மணி, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி, மின் வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளுக்கான புத்தகத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    நாசரேத்:

    நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளுக்கான புத்தகத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். நகர செயலாளர் கிங்சிலி வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவா் திருபாற்கடல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் ஞானையா, ஒன்றிய மகளிரணி செயலாளா் ஜுலியட் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    இதில் நகர அவைத்தலைவா் சிவசுப்பு, இணை செயலாளா் கோமதி, ஜெயலலிதா பேரவை செயலாளா் தினகரன், துணை செயலாளா் முருகேசன், மகளிரணி கிருபா, மாணவரனி செயலாளா் அா்ஜுன், வாா்டு செயலாளா் செல்வகுமாா், செல்வின் விக்டா், பெல்வின், ராஜ்குமாா், பட்டுதங்கம், சில்வியா, தங்கராஜ், காா்த்திக், பாலா, மாயாண்டி, ஆறுமுகநயினாா் மற்றும் வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் நகர அ.தி.மு.க. செயலாளர் கிங்சிலி மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி, இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி நிர்வாகிகள் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன் கலந்து கொண் டார். கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினருக்கு செந்தில் நாதன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகரா ஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உமாதேவன், இணை செய லாளர் நாகராஜன், அம்மா பேரவை மாவட்ட செய லாளர் இளங்கோவன், மாவட்ட ஜெய லலிதா பேரவை இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். அணி துணைச் செயலாளர் துளாவூர் பார்த்திபன்,

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், செந்தில்குமார், திருவாசகம், சேவியர்தாஸ், ஜெகன், கோபி, வடிவேலு, ராஜா, புயல் செந்தில், மாவட்ட அமைப்பு சார அணி செயலாளர் சரவணன்,

    மாவட்ட தொழில் சங்க துணை செயலாளர் அந் தோணி, மாவட்ட சிறு பான்மை பிரிவு இணைச் செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மை துணை செயலாளர் ஆசிப் இக்பால், மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண் டனர். அதோடு நூற்றுக் கணக்கான கிளை நிர்வாகி களும் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் நகர செய லாளர் இப்ராம்சா நன்றி கூறினார்.

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முரு கேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதா வது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிச் சாமி வழிகாட்டுதல்படி நாம் பூத் கமிட்டி அமைத்தால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி செல்லும். கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டியில் அதிகமான பெண்கள் பணியாற்றியதால் 30,000 வாக்கு வித்தியாசத் தில் நான் வெற்றி பெற்றேன்.

    தேவர் ஜெயந்தி விழா விற்கு எடப்பாடியார் வர முடியுமா என்று கேட்டார் கள். ஆனால் அங்கு வந்தார். குறிப்பாக அ.தி.மு.க. என்பது எதிர்ப்பு அரசியலை கொண்டுதான் வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட் சித்தலைவி அம்மா ஆகி யோரை தொடர்ந்து எடப் பாடியாரும் வெற்றி பெற் றார்.

    இன்றைக்கு தலைமை கழகம் சின்னம் ஆகியவற்றை இழந்த ஓ.பி.எஸ். தூண்டுத லால் சிலர் கோஷம் போட்ட னர். அதையெல்லாம் எடப் பாடியார் முறியடித்து உள் ளார். தேவர் ஜெயந்தி விழா வில் குருபூஜையில் ஸ்டா லின் விபூதியை கூட வாங்கா மல் மரியாதை கொடுக்க வில்லை. ஆனால் எடப்பாடி யார் தேவர் காலில் விழுந்து வணங்கி உரிய மரியாதை அளித்தார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் காந்தி, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி வேல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்முருகன், பாலா, எம்.ஆர்.குமார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பூத்கமிட்டி அமைப்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர்கள் ராஜரத்தினம், பூண்டி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சண்முகபிரபு, சுவாமிநாதன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்தியராஜ், திருவையாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் மணிகண்டன், கவன்சிலர் சரவணன், கரந்தை பகுதி துணை செயலாளர் தாஸ், மாவட்ட தொழில்சங்க இணை செயலாளர் வீரராஜ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், நிர்வாகி ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    அலங்காநல்லூர்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிக்கந்தர் சாவடி தனியார் மண்ட பத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தி ருந்தார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தண்டரை மனோகரன் சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணே சன், மாவட்ட மகளிரணி லட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம் குமார், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு தலைவர் மலர் கண்ணன், பொதும்பு கிளை செய லாளர் ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. முகவர்களின் (பூத் கமிட்டி) ஆலோசனை கூட்டம் நேற்று வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தேவராஜி எ.எல்.ஏ., வாணியம்பாடி தொகுதி பார்வையாளர் டி.செங்குட்டுவன் மற்றும் திமுக நிர்வாகிகள் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஞானவேலன்(ஆலங்காயம் மேற்கு), எஸ்.தாமோதிரன் (ஆலங்காயம் கிழக்கு), கே.ஆர்.திருப்பதி(திருப்பத்தூர் கிழக்கு), டி.சாமுடி (நாட்றம்பள்ளி கிழக்கு), உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் பூ.சதாசிவம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக., 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்லடம் நகரத்திலுள்ள 18 வார்டுகளில் கொடியேற்று விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது
    • உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் காவல்துறை சார்பில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமை வகித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.எஸ்.பி லாமெக் பேசுகையில், கடையின் உரிமம், வெடி இருப்பு பதிவேடு ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.

    உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்ககூடாது.

    பட்டாசு கடை களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும்.

    பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார்.

    இதில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    • 2000 வாக்குகள் அதிகம் பெற அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
    • கூட்டத்தில் தேர்தல் பணி மேற்பார்வை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணி மேற்பார்வை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    2000 வாக்குகள் அதிகம் பெற அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இலக்கிய அணி மாவட்ட செயலார் கார்த்திக் ராஜா, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    ×