search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thenthiruperai"

    • பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
    • நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தனிப்பிரிவு காவலர் ஹரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை 45 நாட்களுக்குள் உறுதியாக இடமாற்றம் செய்யப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செல்வகுமரன், ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன்லோபோ ஆன்மிகம் மற்றும்கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் வினோத் சுப்பையன் ஆழ்வை கிழக்கு மண்டல் துணை தலைவர் பால்வண்ணன் மற்றும் கிருஷ்ண மூர்த்தி, கல்யானகுமார், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி கலந்து கொண்டனர்.
    • ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பழைய டாட்டா ஸ்பாசியா கோல்டு 4 சக்கர வாகனம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் யூனியன் சேர்மன் ஜனகர் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

    வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இறுதியில் அதிகபட்ச தொகையாக ரூ.65,050-க்கு ஏலம் விடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், ஓன்றிய பொறியாளர் வெள்ளைபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோபாலகிருஷ்ணன் வீட்டில் சுபாஷ் என்பவர் திருட முயற்சி செய்துள்ளார்.
    • ஆத்திரமடைந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணனை அவதூறாக பேசி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மாவடிபண்ணை மேலத்தெரு சர்ச்தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது74). இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (21) என்பவர் திருட முயற்சி செய்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த கோபாலகிருஷ்ணன், வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கி ருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தார்.

    • முகாமில் சிறந்த கலப்பின பசு, சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.
    • மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு திட்ட முகாம் தென்திருப்பேரை பேரூராட்சி கல்லாம்பாறை கிராமத்தில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் சிறந்த கலப்பின பசு, கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.

    முகாமில் ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், காளைகள் மற்றும் கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம், கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை சார்பில் இசக்கி செய்திருந்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்காமல் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து மண்ணை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளியுள்ளனர்.
    • இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    தென்திருப்பேரை:

    திருச்செந்தூரில் இருந்து வி.எம்.சத்திரம் வரை தொழில் வழிச்சாலைத் திட்டப்பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    தடுப்புச்சுவர்

    இதற்காக சாலை கள் இருபுறமும் அகலப்படு த்தப்பட்டு, ஒரு புறம் திருச்செந்தூருக்கு பாதை யாத்திரையாக செல்லும் பக்தர்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் அருகில் தாமிரபரணி ஆறு செல்வதால் ஆங்காங்கே தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்காமல் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து மண்ணை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    இந்த பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், மணல் அள்ளுவதற்காக மட்டுமே இந்த பணிகள் நடந்து வருவதாக கூறி மணல் அள்ளிய ஜே.சி.பி. மற்றும் லாரிகளை சிறைபிடித்து தங்கள் ஊருக்குள் நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் நிர்மலா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இங்கிருந்து அள்ளப்பட்ட மணல் அனைத்தையும் இங்கேயே கொட்டிவிட்டு தடுப்புச்சுவர் முறையாக அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • திருக்கோளூர் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் சரண்யா ஆகியோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் திருக்கோளூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் கால் நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ் ஆலோசனையின்படி கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி இயக்குனர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை வளர்ப்பிற்கான கண்காட்சி மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்போர்களுக்கு விருது மற்றும் சிறந்த கன்று வளர்ப்புக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஆழ்வார்திரு நகரி கால்நடை மருத்துவ மனை மருத்துவர் சுரேஷ், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் சரண்யா ஆகியோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக திருக்கோளூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஈனமுத்து கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் முகாமில் வாழ்ந்து காட்டுவோம் பணியாளர்கள் கால்நடை பராமரிப்புத்துறை ராஜேஷ், செல்வம் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அருள் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
    • நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பகவா னால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரு மாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முதல் தென்திருப்பேரை வரை சுற்று வட்டாரப்பகுதியை சுற்றி நவதிருப்பதி கோவி ல்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். இந்த நவதிருப்பதி தலங்களில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது.

    தென்திருப்பேரை

    நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திரு ப்பேரை மகர நெடுங் குழை க்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரி சையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    சுவாமி நிகரில் முகில் வண்ணன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொடிமரம் கருடன் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வரிசையில் நின்று வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.

    இதேபோல் நவத்தி ருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயா சனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாய கூத்தப்பெருமாள், இரட்டை திருப்பதி தேவர் பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் பக்தர்கள் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • சாமக்கொடையில் ஞானக்கரை சுவாமி மற்றும் இதர பரிவார மூர்த்தி களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறு கிறது.
    • நாளை (4-ந் தேதி) பகல் 10 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை பேரூராட்சி மணல்மேடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஞானக்கரை சுவாமி கோவில் கொடை விழா நேற்று தொடங்கி நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    யாகசாலை பூஜை

    நேற்று முன்தினம் வேத ஆகம விதி முறைப்படி மகா கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜை செய்யப்பட்டு ஞானக்கரை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    நேற்று இரவு 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், அதைதொடர்ந்து ஞானக்கரை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு குடி அழைப்பு பூஜையும், அதை தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சாமக்கொடை

    இன்று மதியம் 12 மணிக்கு மதியக்கொடை நடைெபற்றது. இரவு 9 மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஞானக்கரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு நடைபெறும் சாமக்கொடையில் ஞானக்கரை சுவாமி மற்றும் இதர பரிவார மூர்த்தி களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறு கிறது.

    நேர்த்தி கடன்

    அதை தொடர்ந்து மணல்மேடு வீதிகளில் ஊர்வலமாக வலம் வரும் சுவாமியை பொதுமக்கள் தரிசனம் செய்வார்கள். நாளை 4-ந் தேதி பகல் 10 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி, அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு ஆடல், பாடல், இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    கொடைவிழாவை முன்னிட்டு நாளை காலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு களை விழா கமிட்டியினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 1796-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கடம்பாகுளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • கடம்பா குளத்தின் கீழ் அம்மன்புரம் குளம் உள்ளிட்ட 12 குளங்கள் உள்ளன.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் நெல்லை- திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தென்திருப்பேரை பேரூராட்சி உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து 1கிலோ மீட்டர் தூரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலே தாமிரபரணி ஆறு பாயும் பகுதியில் மிகப் பெரிய குளமாக கடம்பா குளம் அமைந்துள்ளது. கடலில் பாதி கடம்பா என்றும் மக்கள் அழைப்பதுண்டு.

    இக்குளம் 350 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்டுவதற்கு முன்பே கடம்பாகுளம் அமைந்துள்ளது என்பதை சென்னை மாகாண அரசின் நடவடிக்கைக் குறிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    கடம்பாகுளத்தின் நிறை நீர்மட்டம் 8.960 மீட்டர் ஆகும். குளத்தின் நீர்மட்டம் 8.030 மீட்டராக இருக்கும் போதுதான் கடம்பாகுளத்துக்கு கீழே உள்ள 12 குளங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும். 250 கனஅடி நீர் தென்காலில் வழங்கினால் கடம்பாகுளம் நிரம்புவதற்கு 16 நாட்கள் ஆகும்.

    நீர்வளத் துறை அலு வலர்களின் தகவல் படி 1796-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கடம்பாகுளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கடம்பாகுளத்தை தூர்வாரி பழுது பார்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டா லும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் அணைக் கட்டு தென்கால் வாயின் முதல் குளம் கடம்பா குளம் ஆகும். இக்குளத்தின் கீழ் அம்மன்புரம் குளம், நல்லூர் மேல குளம், கீழக்குளம், காணம் குளம், ஆறுமுக நேரி குளம், சீனிமாவடி குளம், மாதா குளம், நாலாயிர முடையார் குளம், துலுக்கன் குளம், வண்ணார்குளம், ஆவுடை யார் குளம், எல்ல ப்பநாயக்கன் குளம் ஆகிய 12 குளங்கள் உள்ளன. ஆத்தூர் குளம் மற்றும் சேதுக்குவாய்த்தான் குளம் ஆத்தூரான் கால்வாய் வழியாக தண்ணீர் பெறுகிறது.

    கடம்பாகுளத்தின் நேரடி பாசனம் மூலம் தென்திருப்பேரை கஸ்பா, குருகாட்டூர், புறையூர், ராஜபதி, அங்கமங்கலம், சுகந்தலை போன்ற கிராம விவசாய மக்கள் சுமார் 4,076 எக்டேர் விவசாய விளைநிலங்களுக்கு நீர் ஆதாயம் பெற்று விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நன்செய் விவசாய விளைநிலங்களில் 4-ல் ஒரு பகுதி கடம்பா குளம் மூலம் பயன் பெறுகின்றது. இக்குளத்தில் நீர் இருப்பு இருந்த காலங்களில் ஐரோ ப்பியன் விகான், நார்தன் பின்டெய்ல், சோவிலர் அனஸ் சிலிபிடா உள்ளிட்ட 44 இன குளிர் கால பறவைகள் டிசம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை இங்கே தங்கி இருந்ததாகவும், இதற்கான சான்றுகள் அரசிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    1954 ஜூலை 13-ந் தேதி கடம்பாகுளம் ஆயக்கட்டுதார்கள் விவசாய அபிவிருத்தி சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு தனியே ஒர் சங்கத்தை உருவாக்கி கால்வாய்களை சீரமைப்பு செய்து வந்து ள்ளனர். தற்போது அந்த சங்கம் செயல்படுவதாக தெரிய வில்லை. அந்த சங்க கட்டிடம் இன்றும் தென்திரு ப்பேரையில் உள்ளது.

    தற்போது அரசால் கடம்பாகுளத்தின் கரைகள் மற்றும் மடைகள் சீரமைப்பு பணிக்காக நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடையாத நிலையில் அந்த பணி தரமற்ற முறையில் நடைபெற்றுள்ளதாக பெரு ம்பாலான விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

    கடம்பாகுளத்தை தூர் வார வேண்டும். அந்த பணிகளை மழைகாலம் தொடங்கும் முன்பே தொடங்கி குளத்தை தூர் வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கடம்பா குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    தென்திருப்பேரை:

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். சுவாமி நிகரில் முகில்வண்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கொடிமரம் கருடன் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.

    நவதிருப்பதி கோவில்கள்

    இதேபோல் நவத்திருப்பதி களில் ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தர். இதற்காக ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • நேற்று இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திரு விளக்கு பூஜையும், திங்கட் கிழமை சுமங்கலி பூஜையும், அதைத்தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை, வருஷாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப் பட்டது.

    இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும், கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் தீபாரா தனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலையில் உற்சவர் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை, கர காட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்து அருள்பாலித்தார்.

    பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மதியம் 12 மணியளவில் மதிய கொடைவிழா நிறைவு பெற்றது. இன்று இரவு ஆடல்- பாடல் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • நான்கு திருவேங்கடமுடையான் சன்னதிகளிலும் கடந்த 10 நாட்களாக திருவோண திருவிழா நடந்து வருகிறது.
    • மாலையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திர நாளை பெருமாளுக்கு உகந்த நாளாக கொண்டு திருவோணத்திருவிழா நடைபெறுகிறது.

    ஆழ்வார்திருநகரியில் திருவேங்கடமுடையான் 4 திசை பார்த்தும் சேவை சாதிக்கிறார். ஆதிநாதர் கோவிலில் திருவேங்கடமுடையான் மேற்குப் பார்த்தும், தெற்கு மாடவீதியில் தெற்கு திருவேங்கடமுடையான் வடக்கு பார்த்தும், வடக்கு ரத வீதியில் வடக்கு திருவேங்கடமுடையான் தெற்கு பார்த்தும், ஊரின் மேற்கே சதுர்வேதி மங்கலம் ராமானுசர் கோவிலில் திருவேங்கடமுடையான் கிழக்கு பார்த்தும் சேவை சாதிக்கிறார்.

    திருவோண திருவிழா

    நான்கு திருவேங்கடமுடையான் சன்னதிகளிலும் கடந்த 10 நாட்களாக திருவோண திருவிழா நடந்து வருகிறது.சதுர்வேதி மங்கலம் ராமானுசர் கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் நேற்று காலை விஸ்வரூபம், ஏகாந்த சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11 மணிக்கு ஆச்சாரியர் வேதாந்த தேசிகர் ராமானுசர் கோவிலில் எழுந்தருளி மங்களாசாசனம் பெற்றுக் கொண்டார். மாலையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் சீனிவாசன், கோகுல் வரதராஜன், எம்பெருமானார் ஜீயர், திருவாய்மொழி பிள்ளை சுவாமி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×