search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town Panchayat President"

    • தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சியில் தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் மாநில பகிர்வு நிதியியல் இருந்து ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமி, தேவி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் கவுன்சிலர் சேக்முகமது, சந்தானம் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குட்டக்கரை பகுதியில் டி.யு.ஆர்.ஐ.பி. திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட குட்டக்கரை பகுதியில் டி.யு.ஆர்.ஐ.பி. திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அமிர்தவள்ளி, பேரூராட்சி செயல் அலுவலர், வார்டு கவுன்சி லர்கள் லட்சுமி, மாரி யம்மாள், சண்முக சுந்தரம், ஆனந்த், தி.மு.க. மத்திய ஒன்றிய அவைத் தலை வர் மகர பூசனம், மு ன்னாள் கவுன்சிலர் மேக நாதன், ஊர் பிரமுகர்கள் துரை ராஜ், பால்ராஜ், ஒப்பந்த தாரர் மாரி, பாபு மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    • தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஆன்மீக சிறப்பு வாய்ந்த தென்திருப் ேபரையில் நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைக்காதர் கோவி லும், நவகைலாயங்களில் ஒன்றான சிவன் கோவிலும் உள்ளது. தென்திருப் பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோரது உத்தரவின் பேரில், தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவதற்காக, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற அடிப்படை யில் வீடு தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தென்திருப்பேரை யில் நேற்று ஒட்டுமொத்த மெகா தூய்மை பணி நடைபெற்றது. தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம் ஆகிய 3 பேரூராட்சி அலுவல கங்களில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தென் திருப்பேரை தூய்மை பணி யாளர்களுடன் இணைந்து மெகா தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், கொடி, மாரியம்மாள், இளநிலை அலுவலர் சேக் அகமது மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மெகா தூய்மை பணியில் பொதுமக்களிடம் குப்பை இல்லா நகரை உருவாக்கி சுகாதாரத்தை பேணிக் காப்போம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ×