search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaning work"

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்;

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீப தரிசனம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் கிரிவல பாதையை இன்று காலை தூய்மை அருணை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிறுவனரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    தூய்மை அருணை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா. ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் தியாகராஜன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உட்பட 1000-க்கும் மேற்பட்ட தூய்மை அருணை உறுப்பினர்கள், அனைத்து துறை தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது.
    • ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அவிநாசி:

    அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது. தற்போது, ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

    ஆனால், தனியாா் ஒப்பந்ததாரா் குப்பைகளை மட்டுமே அகற்றுவதால், நகராட்சி முழுவதும் கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ள நிலையில், நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக 8 போ் மட்டுமே உள்ளனா். இவா்களும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தூய்மைப் பணி முற்றிலும் முடக்கியுள்ளது.

    எனவே தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத்தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கைக்கு ஏற்ப தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடா்ந்து குடிநீா் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, உயா்மின் விளக்கு, பொதுக் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகா் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

    நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஆண்டவன் தெரிவித்தாா். நிறைவாக மன்ற பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பரமக்குடி நகர் பகுதியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
    • 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

    பரமக்குடி

    பரமக்குடி நகர் தெளிச்சாத்தநல்லூர் முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்.எல்.ஏ., பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, துணைத்தலைவர் குணா, பொதுப்பணித் துறை வருவாய்த்துறை ஊராட்சித்துறை நகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

    • ஆதித்தனார் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.
    • ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குப்பைகளை தேசிய மாணவர் படை மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது. திருச்செந்தூர் ரெயில் நிலைய தலைமை அதிகாரி சத்யஜித், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை தொடங்கி வைத்தனர். ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குப்பைகளை தேசிய மாணவர் படை மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    இதில் ஆதித்தனார் கல்லூரி, ஆறுமுகநேரிகா.ஆ. மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி, உடன்குடி டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றனர். ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினர். ஏற்பாடுகளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டினன்ட் சிவமுருகன், சப்-லெப்டினன்ட் சிவ இளங்கோ, ஷேக் பீர் முகம்மது காமில், ஐசக், கிருபாகரன், சூர்யபொன்முத்து சேகரன், ரெயில்வே போலீஸ்காரர் அலெக்சாண்டர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • சம்பளம் வழங்காததை கண்டித்து நடந்தது
    • பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் தூய்மை பணியில் 500 பெண்களும், 400 ஆண்களும் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் தனி நபர் ஒருவர் ஒப்பந்தம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார்.

    தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தில் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் இ.எஸ்.ஐ, பி.எப் சேர்க்கப்படவில்லை.

    இதனை கண்டிக்கும் விதமாக மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேலையை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் செய்தனர்.

    அவர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று 12 மணிக்குள் நிலுவை சம்பளத்தை வழங்குவதாகவும், இ.எஸ்.ஐ., பி.எப். வராதவர்களுக்கு 2 நாட்களில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மாநகராட்சி பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.
    • பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

    உடுமலை:

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பாரத இயக்கம் தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் முன்னிலை வகித்தார். ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி சின்னதுரை பூச்செடிகள் மற்றும் தொட்டிகளை பள்ளிக்கு வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர்.

    அப்போது பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கோகுலப்பிரியா, முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார். 

    • சீர்காழி நகராட்சி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை பணியை தொடங்கினர்.
    • என். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 22 வது வார்டில் சீர்காழி ரோட்டரி சங்கம் சீர்காழி நகராட்சி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை சேவை பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.

    நகரமன்ற உறுப்பினர் வேல்முருகன், இன்ஜினியர் சுப்பிரமணியன் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    என். எஸ். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நகர் நல சங்கத் தலைவர் சீனிவாசன், வீரசேனன், சங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    நகர் நல சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி பொருளாளர் கண்ணன் , பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நகர் முழுவதும் தூய்மைப் பணியை என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து முடித்தார்கள். முடிவில் செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பஜாரில் இருந்து பல்க் பஜார் வரை தூய்மை பணி நடைபெற்றது.
    • சாலைகள், பஸ் நிறுத்தம், வீதிகளில் கிடந்த குப்பைகளை பா.ஜ.க.வினர் சுத்தம் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாநகர தெற்கு மண்டலம் சார்பாக முத்தையாபுரத்தில் பிரதமர் மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பஜாரில் இருந்து பல்க் பஜார் வரை தூய்மை பணி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் சின்னத்தங்கம், வர்த்தக பிரிவு தலைவர் பரமசிவம், மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து முத்தையாபுரம் சாலைகள், பஸ் நிறுத்தம், வீதிகளில் கிடந்த குப்பைகளை பா.ஜ.க.வினர் சுத்தம் செய்தனர். கோவில் உட்பட வழிபாட்டுத் தலங்களில் உள்ள குப்பைகளையும் அகற்றப்பட்டு அவை மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், மண்டல் பொருளாளர் பாலகுமார், மகளிர் அணி மண்டல் தலைவி செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி துணைது தலைவர் சிலம்பொழி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், பிரபாகர், முகேஷ், புவனேஸ்வரன், பொய்சொல்லான், முருகேசன், எம்.சி. சேகர், செண்பகராஜ், வெள்ளபாண்டி, பாண்டியன், சவுந்தர்ராஜன், சுந்தர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
    • புளியநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் தூய்மையை சேவை பணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார்.

    இதில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள், மஸ்தூர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தூய்மை சேவை பணி உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து புளியநகர், நடுவக்குறிச்சி, மாசிலாமணிபுரம் மற்றும் செபத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது. பின்னர் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டன
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கிராமங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள வசதியாக, அனக்காவூர், எச்சூர் ஆகிய கிராமங்களுக்கு தலா ரூ.8.50 லட்சம் மதிப்பில் 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டு இருந்தன.

    அதேப் போல் அனக்காவூர், மேல்மா, மகாஜனம்பாக்கம், அனக்காவூர் ஆகிய கிராமங்களில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2.77 லட்சம் மதிப்பில் 3 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டு இருந்தன.

    இந்த நிகழ்ச்சி அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமைத் தாங்கினார்.

    செய்யாறுஒ.ஜோதி எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் பங்கேற்று டிராக்டர்கள் மற்றும் மின்கலன் வண்டிகளை ஊராட்சித் தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதில் மாவட்டக் கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதிகா குமாரசாமி, கனிமொழி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், அனக்காவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.கே.ரவிக்குமார், திராவிட முருகன், மோ.ரவி, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் -பிரகாரங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    • தண்ணீரை பீய்ச்சி அடித்து சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு சுத்தப் படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் மற்றும் பிரகாரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. நவீன ஏர் கம்ப்ரசர் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூண்கள், சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு உள்ளிட்ட அழுக்குகளை நீக்கி சுத்தப் படுத்தினர்.

    இதனால் பிசுக்குகள் நீங்கி சுவர்கள் கல் தூண்கள் 'பளிச்' என காணப்பட்டது.

    • வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
    • அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை சுற்றுச்சூழல் துறையும் நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கிரேட் எப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

    தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திலீப் குமார் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

    கடற்கரை தினம் கொண்டாடப்படும் காரணம், கடற்கரை தினத்தை ஒட்டி ஐநா சபை வகுத்த நெறிமுறைகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுத்தல் இவற்றை பற்றி தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், பசுமை செயல்பாடுகளை கண்காணிக்கும் அலுவலர் பசுமை டிவைனியா மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

    சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்க ளுக்கு பச்சை வண்ண த்தொப்பி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோப்பு த்துறை அரசினர் மேல்நி லைப்பள்ளி தலைமையாசி ரியர் எஸ் கவி நிலவன் தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன், மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர். இமய சிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி வண்ணன், மற்றும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உலக கடற்கரை தூய்மை தினத்தை (ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை) முன்னிட்டு உலக ஓசோன் தினத்தை முன்னிட்டும் கலைக்கு ழுவினர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    பின்னர் நகராட்சி தலைவர் புகழேந்தி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று உப்பு சத்தியாகிரக மண்டபத்தை அடைந்தது.

    மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். முடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×