என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiappar Temple"

    • வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 18-ந்தேதி வரையில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்பாள் எழுந்தருளி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 13-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.

    14-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.15-ந் தேதி அதிகாலை 4:30 மணி முதல் 5.30 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இரவு 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 18-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். 

    • ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 4-ம் திருவிழாவான 21-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    10-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • நெல்லையப்பர் கோவில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை:

    நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது இதற்குமூல காரணமாக இருந்து வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர்.

    இந்த திருவிழாவில் வருடம் வருடம் சாதி ரீதியான கலர் வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வது, பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க என கோஷமிடுவது, ஒரு சிலர் ஒழிக கோஷம் போடுவது, மேலும் திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் தங்கள் சாதி ரீதியான டி-சர்டுகளை அணிந்து வந்து சாதி ரீதியான ரிப்பன்கள் அணிந்து வருவது போன்ற கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது. எனவே ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் கலர் கலராக பட்டாசுகள் வெடிப்பதற்கும் சாதி ரீதியான படமோ பெயரோ கொடியோ காண்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் இணைந்து இந்த திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும்

    என்ன உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்கள்.

    • நெல்லையப்பர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
    • கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என பணியாளர்கள் கூறினர்.

    நெல்லை:

    கோவில்களில் தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

    இதனை ஒட்டி இந்து சமய அறநிலைய துறையின் நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோவில்களில் வழிபட வரும் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்து கோவில் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

    டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்களுக்கு செல்போன் தடை குறித்த அறிவுறுத்தலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

    விரைவில் டோக்கன் வழங்கி பக்தர்களின் செல்போன்கள் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்றும், இனி கோவிலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் பேசவோ செய்ய வேண்டாம் என்று அவர்கள் பக்தர்களிடம் அறிவுறுத்தினர்.

    • பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர்.
    • ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெண்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக தாமிர சபை மண்டபத்தில் நேற்று இரவு சுவாமி எழுந்தருளிய நிலையில், அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது.

    இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். தொடர்ந்து அதிகாலையில் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதானை காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் ஒன்று.
    • மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபையில் நடராஜரின் திருநடன நிகழ்ச்சி நடைபெறும்.

     நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் ஒன்று.

    திருவாதிரை திருவிழா

    மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபையில் நடராஜரின் திருநடன நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்தாண்டு திருவாதிரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    சுவாமி வீதி உலா

    தினமும் சிறப்பு அலங்கா ரத்தில் பல்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 4-ம் நாளான 31-ந் தேதி சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

    சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பாக கடந்த 29-ந் தேதி முதல் இன்று வரை அதிகாலையில் திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று சுவாமி சந்திரசேகரர் பவனி, அம்பாள் செப்புத்தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்தனர்.

    ஆருத்ரா தரிசனம்

    தொடர்ந்து 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்ட திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக நள்ளிரவு 12 மணி முதல் தாமிரசபை மண்டபத்தில் சுவாமி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து கோபூஜையும், சிறப்பு அலங்கார நடன தீபாராதனையும் நடைபெற்றது.

    அதன்பின்னர் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடராஜ பெருமான், காந்திமதி அம்பாளுக்கு திருதாண்டவ காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாயநம கோஷத்தோடு சுவாமியின் திருநடன காட்சியை கண்டு தரிசனம் செய்தனர்.

    • சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தை மாதம் கரிநாளில் நெல்லையப்பர், வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாறு நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது, காந்திமதி அம்பாள், "கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது" எனத் தடுக்கிறார். ஆனால் தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்றுவிடுகிறார். இதனால் கோபம் அடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும் போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, "திருமுருகன் பூண்டி பதிகம்" பாடிய பின் கோவில் நடை திறந்துள்ளதாக நிகழ்வு அமைந்துள்ளது.

    அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன், கோவிலில் இருந்து புறப்பட்டு பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி கோவிலுக்கு திரும்பினார்.

    சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த "பதிகம்" பாடி, ஊடல் தீர்த்து வைத்தப் பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தை அமாவாசையையொட்டி இன்று பத்ர தீபம் ஏற்றப்படுகிறது.
    • 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீப (10 ஆயிரம் தீபம்) திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பத்ர தீப திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர வழிபாடு மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், திருமூல மகாலிங்கம், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.

    நேற்று மாலை 6.45 மணிக்கு சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் மேளதாளம் முழங்க மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு அந்த தீபத்திலிருந்து தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்க விளக்குக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், 11 மணிக்கு ஊஞ்சல்மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள், உற்சவர்கள் எழுந்தருளளும், 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கோவில் மேல் பிரகாரத்தில் மகேசுவர பூஜை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

    இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பத்ர தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • 29-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தாமிரபரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.
    • 6-ந்தேதி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    4-ம் நாளான 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

    வருகிற 4-ந் தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

    தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விசேஷ தீபாராதனைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்கள்.

    5-ந் தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.
    • இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.

    இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு கோவில் திருநடை அதிகாலையில் திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை , விஸ்வரூப பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் திருக்கொடி பல்லக்கில் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    தொடா்ந்து சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, வாசனைப்பொடி, பால், தயிா், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிசேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    ெதாடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநெல்வேலி என மாவட்டத்திற்கு பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகின்றது.

    தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வருகிற 4-ந் தேதியும், சவுந்தர சபையில் நடராஜபெருமான் திருநடனக் காட்சி 5-ந் தேதியும், தெப்பத்திருவிழா 6-ந் தேதியும் நடைபெறுகிறது.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விஸ்வரூப பூஜைகள் நடந்தது. பின்னர் சாமி சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு மஞ்சள் பொடி, பால், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி, 5-ந்தேதி சவுந்தர சபாவில் நடராஜ பெருமான் திருநடன காட்சி, 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.

    பணகுடி ராமலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழா நாட்களில் கும்பாபிஷேக பூஜை, சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 3-ந்தேதி தேரோட்ட திருவிழாவும், 10-ம் திருவிழா அன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

    • விழாவின்போது ஆண்டுக்கு 3 முறை சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுடன் தீர்த்தவாரி வைபவத்திற்காக தாமிரபரணி தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம்.
    • விழாவின் 10-வது நாளான இன்று தை தீா்த்தவாாி நிகழ்ச்சி நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.

    தைப்பூச திருவிழா

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி தை மாதத்தில் வரும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின்போது ஆண்டுக்கு 3 முறை சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுடன் தீர்த்தவாரி வைபவத்திற்காக தாமிரபரணி தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கடந்த 26-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் 4-வது நாளன்று திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெற்றது.

    தீர்த்தவாரி

    விழாவின் 10-வது நாளான இன்று தை தீா்த்தவாாி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அஸ்தர தேவர், அஸ்தர தேவி, சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் இன்று மதியம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தைப்பூச மகா மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

    கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக ஈரடுக்கு மேம்பாலம், கைலாசப்புரம் வழியாக தைப்பூச மண்டபத்திற்க வந்தடைந்தபின்னர் அங்கு வைத்து யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் தாமிரபரணி நதிக்கு பூஜைகள் நடைபெற்றது.

    புனித நீராடினர்

    தொடர்ந்து நதிக்கரையில் அஸ்தர தேவர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு தைப்பூச மண்டபத்தில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தை தீா்த்தவாாி விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், மற்ற மூர்த்திகள் மீண்டும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    தெப்ப திருவிழா

    நாளை நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு சவுந்திர சபையில் ஆனந்த நடனமாடி காட்சி தரும் வைபவமும், வருகிற 6-ந்தேதி(திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கோவில் வெளித்தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×