என் மலர்
நீங்கள் தேடியது "narikuravar"
- நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
- என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார்.
நெல்லையப்பர் கோவில் சமபந்தியில் நரிக்குறவர் சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்ததையடுத்து, தவறான தகவலை திட்டமிட்டு பரப்புவதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
* அண்ணா நினைவு நாள் சமபந்தியில் நரிக்குறவரின சிறுவர்கள் விரட்டியடிப்பு என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.
* நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நானே நேரில் ஆய்வு செய்தேன்.
* பிற்பகல் 1.20 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
* சமூக நீதி கடைபிடிக்கப்பட்டு அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட்டது.
* தானும் சபாநாயகரும் அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து சமபந்தி உணவை அருந்தினோம்.
* என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார். அவருக்கும் பார்சல் செய்து கொடுத்தோம்.
* வதந்தி பரப்பும் நபர் உணவு தீர்ந்த பின்னர் குழந்தைகளை அழைத்து வந்தார்.
* முறையாக கோவில் ஊழியர் அவரிடம் உணவு இல்லை என்பதை எடுத்துரைத்தார்.
* அரசியல் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட நபர் வேண்டுமென்றே வதந்தி பரப்பு வருகிறார்.
* சமூக நீதிக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலும் நெல்லையப்பர் கோவிலில் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல.
- நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் அதிகாரிகளால் விரட்டியடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சமூகநீதி பேசும் தி.மு.க. அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்நநாள் விருந்தில் கூட தீண்டாமையை கடைபிடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நெல்லையப்பர் கோவிலில் நடந்த விருந்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாநகர மேயர் இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில், பசியுடன் அங்கு உணவருந்த வந்த சிறுவர்களை அதிகாரி ஒருவர் மிரட்டி, விரட்டியடிப்பதும், அதன்பின் அந்த சிறுவர்களை இன்னொருவர் அருகில் உள்ள உணவகத்துக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருவதும் சமூக வலைத்தளங்களில் காணொலியாக பரவி வருகின்றன.
சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முக்கிய நாள்களில் ஆலயங்களில் சமபந்தி விருந்துகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சமபந்தி விருந்துகளிலேயே சமத்துவம் மறுக்கப்பட்டு தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்றால் தி.மு.க. ஆட்சியில் சமூகநீதி எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் உள்ளிட்டவர்கள் உணவு சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அநீதிக்கு எதிராக அஸ்வினி வினா எழுப்பியது வைரலான நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அந்த கோவிலுக்கு சென்று அஸ்வினியுடன் உணவருந்தினார்; பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மன்னிப்பு கேட்டு சமாளித்தார்.
ஆனால், அதன் பின் நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில் தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவ மக்களுக்கு இன்னும் சமூகநீதியும், சமத்துவமும் கிடைக்கவில்லை என்பதையே நெல்லையப்பர் கோவில் நிகழ்வு காட்டுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதற்காக நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூஞ்சேரியில் இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்
- நரிக்குறவ பெண் அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது.
செங்கல்பட்டு:
முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
'அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது. அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை உள்ளது. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால், தாமதம் ஆகிறது. அஸ்வினி சேகருக்கு கடை ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் இருந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு தேவை' என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவ பெண் அஸ்வினி கூறியிருந்தார்.
- புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை தீபாவளியன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவில் அன்னதானத்தின்போது அவமதிக்கப்பட்ட நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார்.
ஆனால், முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் பேசிய வீடியோ பதிவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
"விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா?' என அண்ணாமலை கூறி உள்ளார்.
நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






