என் மலர்
செங்கல்பட்டு
- கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.
- பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மாமல்லபுரம் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கண்களில் முதலில் படுவது, அங்குள்ள 100-ஆண்டிற்கு மேல் பழமையான பாரம்பரிய கலங்கரை விளக்கம் தான். இதன் மேல் ஏறி உச்சியில் நின்று, கடற்கரை நகரமான மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை மற்றும் குடவரை கோவில்களின் அழகை வான்வழி பார்வையில் பார்த்து ரசிப்பார்கள்.
இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான சாரம் கட்டும் பணிகள் முன்அறிவிப்பு இல்லாமல் திடீரென நேற்று நடந்ததால் அதனை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.
இந்த பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென கலங்கரை விளக்கம் மூடப்பட்டதால் விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
- பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.
- டிநீர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
தாம்பரம்:
தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக மாறிய பிறகு இங்கு தினமும் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
இதையடுத்து பயணிகள் வசதிக்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு அறையை தாம்பரம் ரெயில் நிலைய பொதுமேலாளர் முகமது அப்துல் ரகுமான் திறந்து வைத்தார்.
தாம்பரம் ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு பகுதியில் இந்த குளிர்சாதன காத்திருப்பு அறை அமைந்துள்ளது. இந்த காத்திருப்பு அறை ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 80 பேருக்கு போதுமான இருக்கை வசதிகள் உள்ளன.
இதன் உட்புறத்தில் மிகவும் சொகுசான சோபா இருக்கை வசதி, சாய்வு நாற்காலிகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான ரேக்குகள் ஆகியவை உள்ளன. மேலும் இங்கு பாலூட்டும் அறை வசதியும் உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.
மேலும் குடிநீர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரெயில் விவரங்களை காட்டும் டிஜிட்டல் காட்சி பலகை மற்றும் பொது அறிவிப்பு அமைப்பு ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த காத்திருப்பு அறை 24 மணி நேரமும் இயங்கும்.
இந்த அறைக்கு ஒரு மணி நேரத்துக்கான கட்டணம் 35 ரூபாய். 5 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம் ஆகும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இதற்கான 5 ஆண்டுகால உரிமம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட நவீன காத்திருப்போர் அறையை தொடங்கி உள்ளோம். இதுபோன்று தமிழகத்தில் பயணிகள் வருகை அதிகம் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகள் காத்திருப்பு அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், ரூ.35 கட்டணத்தை செலுத்தி இந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய தேவையில்லை. நேரடியாக சென்று கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.
- போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மறைமலைநகர்:
மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் சொந்தமாக வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே, கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் போதையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணன் வழக்கம் போல் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாஸ்மின் அவரை கடுமையாகக் கண்டித்துள்ளார். பின்னர் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மனைவி கண்டித்துவிட்டுச் சென்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் பூச்சி மருந்தை குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது உடல் வீட்டிற்குள்ளேயே கிடந்தது.
தொடர்ந்து வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கண்ணன் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குடும்பத் தகராறு தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.
- திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கறை சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம்.
செங்கல்பட்டு:
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தி.மு.க. பூத் கமிட்டி மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி சென்னை-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருவிடந்தை இ.சி.ஆர். நெடுஞ்சாலையில் நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை இ.சி.ஆர். சாலையில் சென்னை-புதுச்சேரி மார்க்கமாகவும் மற்றும் புதுச்சேரி- சென்னை மார்க்கமாகவும் கீழ்க்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை கோவளம் சந்திப்பு, கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.
அல்லது சென்னை-புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அக்கரை சந்திப்பு, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பூஞ்சேரி சந்திப்பு, திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம் சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம் அல்லது புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கமாக வர வேண்டிய வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பு, திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கறை சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டில் 1,50,000-க்கும் மேற்பட்ட பி.எல்.ஏ.-2. பி.எல்.சி., பி.டி.ஏ., பி.ஒய்.ஓ. வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள்.
- காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னின்று இந்த மாபெரும் மாநாட்டை நடத்துகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று மாலை சென்னை விழுப்புரம் மண்டல "என் வாக்குச் சாவடி! வெற்றி வாக்குச் சாவடி!" மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இதில் 1,50,000-க்கும் மேற்பட்ட பி.எல்.ஏ.-2. பி.எல்.சி., பி.டி.ஏ., பி.ஒய்.ஓ. வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள்.
பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னின்று இந்த மாபெரும் மாநாட்டை நடத்துகிறது. பார்ப்போர் அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான மேடை அமைத்து, சுமார் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகவும் எழுச்சியுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த மாபெரும் மண்டல மாநாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி குழுவினருக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் எழுச்சியுரையாற்றுகிறார்.
- ஒவ்வொரு இடமாக மீட்டு அங்கு கோவில் சார்பில் அறிவிப்பு பலகையை வைத்தனர்.
- கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்போரூர்:
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 240 ஏக்கர் நிலம் தனிநபர்களிடம் இருப்பதாகவும் அதனை மீட்டு கோவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர சென்னையை சேர்ந்த வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோவில் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி தாமதமானதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து 21 நாட்களுக்குள் கோவில் நிலங்களை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து நிலத்தை மீட்க வந்தனர்.
அப்போது, தற்போது நிலங்களை வைத்திருப்பவர்கள், விவசாய சங்கத்தினர், சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகம் எடுத்து வந்த அறிவிப்பு பலகைகளை உடைத்து, பேனர்களை கிழித்து வாக்குவாதம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் முன்னதாக சுமார் 40 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று கோர்ட்டை நாடி உரிய உத்தரவு வாங்கி வர நேற்று வரை கால அவகாசம் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்ததால் நிலங்களை மீட்க நேற்று இரவு அதிகாரிகள் ஆலோசித்தனர்.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் அருகில் திருப்போரூர்-நெம்மேலி செல்லும் சாலையில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் கார்த்திகேயன், ராஜலட்சுமி, ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோவில் ஊழியர்கள் உதவியுடன், காலை 6 மணிமுதல் ஒவ்வொரு இடமாக மீட்டு அங்கு கோவில் சார்பில் அறிவிப்பு பலகையை வைத்தனர்.
இன்று காலை மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 200 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சுமார் 240 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.700 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
- குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சுனன் தபசு பின்புறம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாகத்தில் பல்வேறு குடவரை சிற்பத்தூண்கள், பாறை வடிவிலான குளியல் தொட்டிகள் என பல்லவர் காலத்து சிலைகள் கற்களுடன் கூடிய மலைப்பகுதி உள்ளது. இங்கு மயில், குரங்கு, கீரிப்பிள்ளை, உடும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.
இவை சில நேரங்களில் உணவுக்காக வெளியே ஊருக்குள் வரும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை தின்னும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பது வழக்கம். தற்போது குரங்குகள் நகரப்பகுதியில் உள்ள கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அவர்கள் வனத்துறையிடம் கூறுங்கள் என சொல்வதாகவும், வனத்துறையினர் திருக்கழுக்குன்றம் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வந்து இவைகளை கண்காணிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் வனத்துறை அதிகாரிகள் மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாக மலைப்பகுதியை கண்காணித்து அங்கிருந்து குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.
- கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் 217 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.
* நமது பாரம்பரியத்தை உலக அளவில் கொண்டு செல்லும் திறன் சுற்றுலா துறைக்கே உண்டு.
* கலைகள், கலைஞர்கள், பண்பாட்டை கொண்டு செல்லும் வலிமை சுற்றுலாத்துறைக்கு உள்ளது.
* தமிழின் தொன்மையும், தமிழர்களின் நாகரிகமும் உலகம் முழுமைக்கும் தெரியும்.
* கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
* சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது.
* பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுவயதிலேயே நெருங்கி பழகியுள்ளார். அந்த வாலிபர் சிறுமியை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுபோன்ற நேரங்களில் வாலிபர் 15 வயது சிறுமியிடம் காதல் வசனங்களை பேசி அவரது மனதை மாற்றியுள்ளார்.
நாம் இருவரும் தான் சேர்ந்து வாழ போகிறோமே? எனவே திருமணத்திற்கு முன்னரே நாம் ஒன்றாக இருப்பதில் எந்த தவறும் இல்லை எனக்கூறி அந்த வாலிபர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் எப்போதும் போல சிறுமி பள்ளிக்கும் சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போதுதான் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி குடும்பத்தினர் சிலருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் வெளியில் தெரிந்து விட்டால் நமது குடும்பத்துக்கு அசிங்கமாகிவிடும் என்று சிறுமியின் உறவினர்கள் கருதி உள்ளனர்.
இதனால் வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன உறவினர்கள் சிறுமியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அதிக அளவில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் 15 வயது சிறுமியான மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட போது தான் அவர் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது.
இது பற்றி உடனடியாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் மாணவி சிகிச்சை பெற்று உள்ளார். அங்கிருந்தும் முறையான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதன்பிறகு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் சிறுமி உயிரிழந்து உள்ளார்.
சிறுமி கர்ப்பமானது பற்றி ஆரம்பத்திலேயே போலீசுக்கு தெரிய வந்திருந்தால் அவர்கள் முறைப்படி விசாரணை நடத்தி இருப்பார்கள். சிறுமிக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு கிடைத்திருக்கும்.
கடந்த 4-ந்தேதியே சிறுமி கர்ப்பமானது தெரிய வந்த நிலையில் அதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதன்பிறகு கடந்த 17-ந் தேதி ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகே ஆஸ்பத்திரி டாக்டர்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக உயிருக்குப் போராடிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
- நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் கதை ஒன்று சொல்வதாக விஜய் ஆரம்பித்தார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.
38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார்.
அப்போது, நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் கதை ஒன்று சொல்வதாக விஜய் ஆரம்பித்தார்.
அவர் கூறியதாவது:-
சொந்த நாட்டையே ஒரு கூட்டம் அபகரிக்கிறது. சொந்த நாட்டிலேயே இருக்க முடியாத அளவிற்கு ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் வேறு வழியில்லாமல், சொந்த நாட்டைவிட்டு வெளியேறி காடு, மலை என மறைந்து வாழ வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது.
என்னடா, இப்படியே ஓடிக்கொண்டிருக்கிறோமே என்று, நட்பு கூட்டத்தை கூட்டி ஒரு பெரும் படையை திரட்டி அதிரடியாக ஒரு போரை நடத்தி, அந்த நாட்டையே திரும்ப மீட்டு எடுத்தது யார் தெரியுமா? நம் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான ராணி வேலுநாச்சியார் அவர்கள்.
அவர்களுக் நட்பு சக்தியாக கூட இருந்து உழைத்தது, சின்ன மருது, பெரிய மருது மற்றும் சையஐ காரிகி அவர்கள் மூன்று பேர் தான். அன்னைக்கு இருந்த ஆங்கிலேய படை, ஆர்காட்டு படை போன்று இங்கு என்னென்ன படை இருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இந்த ரெண்டு படை மட்டுமல்ல. இன்னும் எத்தனை படைகள் வந்தாலும், எதிர்த்து நின்று போராடுவதற்கு நல்ல தலைமையும், இத்தனை சக்தியும் என்னுடன் இருக்கும்போது நம் நாட்டை நம்மால் மீட்டெடுக்க முடியாதா? என்ன?
அதுவும் இந்த தவெக படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லை என்றாலும் தனியாளாக நின்று ஜெயிக்கும் படை.
தைரியமான பெண்கள் நிறைந்த படை நம்முடன் இருக்கிறார்கள். பெண்கள் படை பார்த்து தான் அரசியல் அரங்கமே அதிர்ந்துபோய் இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன்.
- தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் கூறியதாவது:
* தி.மு.க.வுக்கு முன்னாடி தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பா.ஜ.க. அடிமையாக தான் இருக்கிறார்கள்.
* பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மறைமுகமாக சரண்டர் ஆகி உள்ளது.
* த.வெ.க. வந்த பிறகு ஊழல் செய்ய மாட்டேன். செய்யவும் விட மாட்டேன்.
* அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்.
* அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன். மக்கள் அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள்.
* தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
* தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது.
* அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணாவின் பெயரைக்கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்து விட்டன.
* அடங்கிப் போவதற்கோ, அடிமையாக இருப்பதற்கோ, அண்டி பிழைப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை.
* அரசியல் பயணத்தில் முக்கியமான கால கட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினர் இருக்கிறோம்.
* தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
* மக்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்ய மாட்டோம்.
* 30 ஆண்டுகளாக நம்மை குறைத்து மதிப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் குணம் ஒரு போதும் மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டைப் போல தாய்மொழியைக் காப்பதற்கான ஒரு போர் உலகில் வேரெந்த தேசத்திலும் நடந்தது இல்லை.
- செந்தமிழைக் காக்கும் சேனை மீண்டும் தேவைப்பட்டால் தவெக தரும். தவெக தலைவர் விஜய் தருவார்.
சாதி, மதம் மனிதனை ஒன்றிணைக்காது; மொழிதான் மனிதனை ஒன்றிணைக்கும் என தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவு கூர்ந்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாற்று உரையை நாஞ்சில் சம்பத் நிகழ்த்தினார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
மொழிக்காக தீக்குளித்த மரபு தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உடைய போர் இந்த போர். நாங்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கி றோம். இந்தி என்கிற மொழியை எதிர்க்கவில்லை. இந்தி அநீதியின் சின்னம், ஆதிக்கத்தின் சின்னம், மதத்தின் சின்னம், மனு தர்மத்தின் சின்னம், பிரிவி னையின் சின்னம். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். என்னுடைய தமிழ் மொழி யின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு உன்னு டைய மொழிக்கு எந்த தகுதியும் இல்லை.
செந்தமிழ் காக்க சேனை ஒன்று தேவை என்று பாரதி தாசன் பாடினார். செந்தமிழ் காக்க இனி ஒரு சேனை தேவைப்படுமானால் அந்த சேனையை தருகிற இயக்கம் விஜய்யின் வெற்றிக் கழகம்தான். அந்த சேனை எங்களிடம்தான் இருக்கிறது.
நீங்கள் இந்தியை எதிர்ப்ப தாக நாடகம் போடுகிறீர்கள். 40 எம்.பி.க்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். டெல்லி யுடன் யுத்தம் செய்ய, டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்குகிற படைக்கலன்தான் ஒரு எம்.பி. அந்த கடமையை செய் தீர்களா? நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் நாடகம் முடிவுக்கு வரப் போகிறது.
துரியோதனின் வீழ்ச்சி அவன் தொடையில் இருந்தது. அதிசயம் ஆயிரம் செய்த ஜப்பானின் அன்றைய வீழ்ச்சி அணு குண்டில் இருந்தது.
ஒரு வல்லாதிக்கத்தின் வீழ்ச்சி அண்ணாவின் செந்நாவில் இருந்தது. உய்ய வந்த தமிழினத்தை உய்யாது தடுத்து குடும்ப புற்றில் குடியிருக்கும் பூநாகங்களின் வீழ்ச்சி விஜய்யின் கையில் இருக்கிறது என்பதை வருகிற காலத்தில் எழுதுவதற்கு நாம் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளில் சூளுரைப்போம். வருகிற காலம் நம் காலம். எத்தனை தடைகளை போட்டாலும் தகர்த்து முன்னேறுவோம்.
நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. தேதிகள் கிழிபட உடன்படாவிட்டா லும் நாளை நடக்கும். நாளை விஜய் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.
விஜய் பேசாமல் இருக்கி றார், ஆனால் விஜய்யை பற்றித்தான் எல்ேலாரும் பேசுகிறார்கள். இப்படி ஒரு வரலாறு எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் எங்கேயும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






