என் மலர்
செங்கல்பட்டு
- படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும், கூவத்தூரில் இருந்து வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு வந்த வேனும் நேருக்க நேர் மோதி விபத்த ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருளர் குடும்பத்தினர் கோவளம் சாலையில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "டிட்வா" புயலின் தாக்கத்தால் நேற்று மாலை மாமல்லபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகள், மிஷின், வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.
கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்பகுதி, பட்டிப்புலம் பகுதிகளில் கடற்கரை கரையோரம் குடில் அமைத்து தங்கியிருந்த இருளர் 120 குடும்பங்கள் பாதுகாப்பு இன்றி இருப்பதாக தகவலறிந்த, மாவட்ட கலெக்டர் சினேகா அவர்களை பாதுகாக்க உத்தரவிட்டார்.
சப்-கலெக்டர் மாலதி ஹலென் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் சரவணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து, அப்புறப்படுத்தி கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர், தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்டோர் உணவுகள் வழங்கினர்.
மாமல்லபுரத்தில் ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். டிட்வா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர். கடற்கரை சாலையோர கடைகள் மற்றும் அரசு கைவினை பொருட்கள் கடை இருக்கும் ஐந்துரதம் வளாகங்களில் உள்ள கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
+2
- இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது.
- கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கடலோர காவல்படை வீரர்களே பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கியுடன் தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இரு குழுக்களாக மீனவர்கள் உதவியுடன் கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் கடலுக்கு சென்று மீனவர்கள் போர்வையில் எவரேனும் புதிய ஆட்கள் உள்ளனரா? என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 6மணி வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
- அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும்.
- உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தவெக முடங்கிவிட்டது. மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தவெக நிர்வாகிகள் ஓடி விட்டனர். பதுங்கிவிட்டனர் என்றெல்லாம் பேச்சு.
யார் ஓடியது. உங்கள் தந்தை முன்னாள் அமைச்சர் கருணாநிதி கைது செய்யும்போது யார் ஓடியது? சொந்த மகனே ஓடினார். திமுகவிற்கு வரலாறு தெரியுமா?
வரலாற்று பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். தவெகவிற்கு வரலாறு தெரியாமல் இல்லை. எங்களுக்கு மக்கள் இயக்கமாக இருக்கவும் தெரியும், உங்களின் சூழ்ச்சிகளை உச்சநீதிமன்றத்தில் தூக்கி எறியவும் தெரியும்.
என்ன செய்துவிட்டோம்.. மக்கள் இயக்கமாக இருந்து மக்கள் கட்சி உருவாக்கி, மக்களிடம் போய் பிரசாரம் செய்தாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நிர்வாக மாற்றங்களை உருவாக்க முடியும் என்று பேசினோம்.
அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும். மக்களின் ஒரே நம்பிக்கை தலைவர் விஜய்.
கரூர் சம்பவத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. பொதுக்கூட்டத்தில் எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று அரசுக்கு தெரியாது என்றால் உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.
கரூர் ஒரு மோசமான இடம் என்றும், அங்கு இருப்பவர் செந்தில் பாலாஜி ஒரு ரவுடி என்று தெரியாதா? என எங்களுக்கு அட்வைஸ் செய்கிறது திமுகவின் வாடகை வாய்கள். இன்னும் 6 மாதங்களில் தெரியும் யார் ரவுடி.. யார் அதிகாரம் பண்றது என்று தெரியும்.
புது அரசியலை உருவாக்க வந்திருக்கிறோம். ஊழல் குடும்பத்தை அழிக்க வந்திருக்கிறோம்.
கரூர் சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியில் ஆக்டிங்கை பார்த்திருப்பீர்கள். மறுநாள் காளையில் துபாயில் இருந்து ஒருவர் வந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏதோ தமிழ்நாட்டிற்கு தியாகம் செய்வதற்காக துபாய்க்கு உண்ணாவிரதம் செய்ய போனதுமாதிரியும், அங்கிருந்து மக்களுக்காக ஓடி வந்தது போலவும்.. வந்து ஒரு மணி நேரம் கூட மருத்துவமனையில் அவர் இல்லை.
நமக்க அதிகாரம் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கடைசி நிமிடம் வரை இருந்திருப்போம். ஒரு மணி நேரம் விசிட்டிற்கு பிறகு பேட்டியில், தவெக தலைவரை கேள்வி கேளுங்கள் என்கிறார்.
உங்கள் பொதுச் செயலாளர்கள் தூங்கி எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள். அதற்கு எங்கள் பொதுச் செயலாளர்கள் எவ்வளவோ மேல்.
உங்கள் பொதுச் செயலாளரை (அமைச்சர் துரைமுருகன்) முதலில் எழுந்து ஒரு வாக்கிங் செய்ய சொல்லுங்கள். சட்டசபையில் உட்கார்ந்துக் கொண்டு கிண்டல், கேலி பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவை நாவடக்கம் இல்லை அவருக்கு.
எப்போது பார்த்தாலும் சட்டசைபயில் ஐயா உதயநிதி வாழ்க.. உதயநிதி வாழ்க என்கிறார். உதயநிதி என்ன தியாகியா? இதுபோன்று கேள்வி கேட்டால் போதும் என் மீது ஒரு எப்ஐஆர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
- இளைஞர் புரட்சி 2026-ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது ஆதவ் அர்ஜூனா.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் 9 மணி நேரம் அழுதார். மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது.
கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டும் அல்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.
தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டத்திற்கு நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வருகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர மக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எங்களால் எப்படி கணிக்க முடியும்?
இதெல்லாம் உளவுத்துறைக்கு தெரியாதா? இது தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.
சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா?
நாங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுப்போம் என்கிறார் துரைமுருகன். தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டிற்கு செல்லுங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
இளைஞர் புரட்சி 2026ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல்.
- 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பயிற்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னோட சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ள நிலையில், மக்களுடைய உரிமைகளைப் பற்றி கவலைப்பட அக்கட்சிக்கு நேரம் இருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்று நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள் என்று அதன் தலைவர் என்ற முறையில் நான் உறுதி அளிக்கிறேன்.
2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை-வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்தக் கட்சியை, அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் பண்ணி விட்டார். அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பவில்லை. அவரின் கட்சிக்காரங்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகவில்லை. வி.சி.க. வர்றாங்க கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க காங்கிரஸ் வர்றாங்க என்று அவரும் தினமும் சொல்லி பார்த்தார். ஆனால் யாரும் அங்க போகவில்லை. மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை.
தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவங்களோட நம்பிக்கையை பெற்று அதை நம் கூட்டணிக்கான வாக்குகளாக மாத்த வேண்டும். அந்த கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது.
தி.மு.க. 7-வது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் இருக்கு என்று நிரூபிக்கணும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார்.
- ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பி.எல்.ஏ.-2 தி.மு.க. முகவர்களை நியமித்து உள்ளார். அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வை பலப்படுத்தும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பு மூலம் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்த்துள்ளார்.
இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து அவற்றை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக பயிற்சி கூட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 'கான்புளூயன்ஸ்' அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தலைகுனியாது 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பரப்புரையை தி.மு.க. தொடங்கிடும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் இந்த பயிற்சிக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மாவட்டக் கழக செயலாளர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலாளர்கள், ஒன்றிய நகர பகுதி கழகச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் என சுமார் 3 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தலைகுனியாது 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை செய்யப்படும் விதம் குறித்து விரிவாக விளக்கம் அளித்து பேசினார். அப்போது ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு பிரசார விளக்க காணொலி திரையிடப்பட்டது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்புக்கான செயலியில் உள்ள அம்சங்கள் பற்றி விளக்கங்களும் செயலி விளக்க காணொலி மூலம் விளக்கப்பட்டது.
இந்த விளக்க காணொலியுடன் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பயிற்சி அளித்தார்.
அதன் பிறகு மாவட்டச் செயலாளர், தொகுதி பார்வையாளர் ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
கூட்ட முடிவில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நன்றி கூறினார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என கூறியுள்ளார்.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அனுமதி உள்பட பல்வேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
இதையடுத்து, சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
அப்போது, 41 பேரின் குடும்பத்தாரை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்த தவெக தலைவர் விஜய் உருக்கமாக பேசியுள்ளார்.
தன்னை மன்னித்து விடுமாறு விஜய் கண்ணீர் மல்க பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,"உங்களை மாமல்லபுரம் அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள், நிச்சயம் உங்களை கரூர் வந்து சந்திப்பேன்.
வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன், என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்து தருவேன்.
வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி செலவு என அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் உறுதி அளித்தார்.
மண்டபம் கிடைக்காததால் தான் தன்னால் கரூர் வர இயலவில்லை என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கின. அறுவடை செய்த நெல்லும் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.
இதன்படி முதல் குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆர்.கே. ஷாகி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் சா்மா, தனூஜ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2-வது குழுவில் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோரும் 3-வது குழுவில் உதவி இயக்குநர் டி.எம்.பிரீத்தி, பிரியா பட், அனுபமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள இந்த 3 மத்திய குழுக்களும் இன்று தங்களது ஆய்வை தொடங்கினார்கள். அதன்படி முதல் குழுவினர் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் அயப்பாக்கம், வெள்ள ப்பந்தல், தத்தலூர், வழுவத்தூர், ஈசூர், பூதூர், படாளம், கள்ளபிரான்புரம், பொளம்பாக்கம், கயப்பாக்கம் ஆகிய 10 இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
2-ம் குழுவினர் இன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 27-ந்தேதி கடலூர் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். 3-ம் குழுவினர் இன்று திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது
- சென்னை மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் பள்ளிகளுக்கும் கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 760 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்களும், நாளை (18-ந்தேதி) 1935 சிறப்பு பஸ்கள், 19-ந்தேதி 1040 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரங்கள் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
1-வது நடைமேடை: நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை.
2-வது நடைமேடை: திருநெல்வேலி, பாபநாசம், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை(டி.என்.எஸ்.டி.சி), திருநெல்வேலி(டி.என்.எஸ்.டி.சி).
3-வது நடைமேடை: மதுரை, மதுரை கோட்டம், உசிலம்பட்டி, கீழக்கரை, திருமயம், காரைக்குடி, புதுக்கோட்டை, தேவகோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம், ஏர்வாடி, கீரமங்கலம், தொண்டி, பொன் அமராவதி, வீரசோழன், சிவகங்கை, பரமக்குடி, ஒப்பிலான்.
4-வது நடைமேடை: திருச்சி, அன்னவாசல், ஊரணிபுரம், புள்ளம்பாடி, கரூர்,பொள்ளாச்சி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், தேனி, பழனி, கொடைக் கானல், போடி, மூணாறு, கம்பம், குமிழி, திண்டுக்கல்(டி.என்.எஸ்.டி.சி), தேனி(டி.என்.எஸ்.டி.சி), கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி.
5-வது நடைமேடை: திருச்சி, பெரம்பலூர், துறையூர், அரியலூர், புதுக்கோட்டை, காரைக்குடி.
6-வது நடைமேடை: சேலம், எர்ணாகுளம், குருவாயூர், ஊட்டி, ஓசூர், பெங்களூரு, கோயம்புத்தூர், நாமக்கல், மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம்(டி.என்.எஸ்.டி.சி), ஈரோடு(டி.என்.எஸ்.டி.சி), கோயம்புத்தூர்(டி.என்.எஸ்.டி.சி).
7-வது நடைமேடை: கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம்.
8-வது நடைமேடை: திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், அரியலூர்.
9-வது நடைமேடை: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வடலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி.
மேலும் பஸ் நிறுத்தம் பகுதியில் எல்லா இடங்களிலும் வழிகளை அறிந்து கொள்ள பெயர் பலகை, பாதுகாப்புக்காக சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் காத்திருப்பு அமருமிடம், உணவகங்கள், கடைகள், அவசர மருத்துவ பிரிவு, பிரீபெய்டு ஆட்டோ, கார் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் சிறப்பு பஸ்கள் குறித்து அமைச்சர் சிவசங்கரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர்கள், பயணிகளிடம் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கிளாம்பாக்கம் பஸ் நிலைய தலைமைச் செயலர் பிரின்ஸ்லி ராஜ்குமார், போக்குவரத்து தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
- கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
சென்னை :
தீபாவளியை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வருகிற17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் அறிவித்துள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-








