என் மலர்
நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"
- தமிழ்நாட்டை சேர்ந்த கோபூடோ கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றார்.
- “போதிதர்மர்” வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
மாமல்லபுரம்:
சென்னை குயின் மேரி கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில், பெண்களுக்கான தற்காப்புக்கலை குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கா நாட்டு தற்காப்புக்கலை பயிற்சியாளர் கியோசி டிமோதி, சுவிட்சர்லாந்து கியோசி டெல்ஹம், தைவான் நாட்டு ஐஹி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள்களுடன் தமிழ்நாட்டை சேர்ந்த கோபூடோ கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றார்.
பின்னர் இவர்கள் 4 பேரையும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையகம், மாமல்லபுரம் வரவழைத்து அவர்களுக்கு "போதிதர்மர்" வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது. அப்போது விழா அரங்கத்தில் இருந்த சிலம்பம் கம்புகளை எடுத்து, அமெரிக்க நாட்டு தற்காப்புக்கலை வீரரும், சுவிட்சர்லாந்து வீரரும் முறையாக தத்ரூபமாக சிலம்பம் சுற்றி சண்டையிட்டனர்.

இது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. மன்சூரியா தற்காப்பு கலையின் தேசிய தலைவர் மல்லை சத்யா, செயலாளர் மாஸ்டர் அசோக்குமார், மாமல்லன், இளையராஜா, உள்ளிட்ட குங்ஃபூ வீரர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.
- உலகலாவிய புராதான சின்னமாக நிற்கும் மாமல்லபுரம் கடற்கரைகோவில் ஆகும்
- கிழக்கு பகுதி கடலில் ஆய்வு செய்து பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
மாமல்லபுரம்:
ஏழாம் நுாற்றாண்டு காலகட்டத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவர்களின் துறைமுக பட்டினமாக மாமல்லபுரம் விளங்கியது. மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில் அவர்கள் பலவகையான சிற்பங்களை செதுக்கினர்.
அத்துடன் அவர்கள் கோவில் கட்டுமானமாக உருவாக்கியது உலகலாவிய புராதான சின்னமாக நிற்கும் மாமல்லபுரம் கடற்கரைகோவில் ஆகும். இந்த கோவில் சிவன், விஷ்ணு சன்னிதிகளுடன் உருவாக்கபட்டுள்ளது. அதன் கிழக்கில் மேலும் சிலகோவில்கள் அமைந்து, அவைகள் கடல் சூழ்ந்து மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறையின் நீருக்கு அடியில் சென்று ஆய்வு செய்யும் சிறப்பு பிரிவினர் 2001-ல் கோவிலின் கிழக்கு பகுதி கடலில் ஆய்வு செய்து பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். 2004-ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின்போது, கடலில் உள்ள பாறைகள் வெளிப்பட்டன, அந்த பாறைகளில் பழங்கால கட்டுமானங்கள் உள்ளதா? என, 2005ல் ஆய்வு செய்து, பாறை கல்லிலான சுவர் போன்ற அமைப்பு சேதமடைந்து கிடப்பதாகவும், அவைகள் கலைநயமான வேலைப்பாடுகளுடன் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

அதன் தன்மையும், துல்லியமும் குறித்து அறிய முடியாத நிலை இருந்தது. தற்போது அதை கூடுதலாக ஆய்வு செய்வதற்காக, ஆர்.ஓ.வி எனக் கூறப்படும் [ரிமோர்ட்லி ஆப்ரேட் வெகிள்] மீன் வடிவிலான ரோபோட்டிக் கேமரா மூலமாக கடலில் மூழ்கிய கட்டுமான சிதைவுகளை துல்லியமாக படம் பிடித்து, அவைகளை ஆவணப்படுத்த தொல்லியல்துறை முடிவு செய்தது.
அதன்படி அத்துறையின் கூடுதல் இயக்குனர் அலோக் திரிபாதி, பிரிவின் தலைவர் அப்ரஜிதா சர்மா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக மாமல்லபுரம் கடலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கூடுதல் இயக்குனர் அலோக் திரிபாதி கூறியதாவது:-
கடற்கரை கோவிலுக்கு கிழக்கில், ஒரு கி.மீ., தூரத்தில் 6 மீட்டர் ஆழத்தில், நீருக்கு அடியில் பழங்காலத்து கோவில் வெட்டுக்கல் சுவர்கள் இருப்பதை ஆர்.ஒ.வி., கருவி மூலம் துல்லியமாக ஆய்வு நடத்தி கண்டு பிடித்துள்ளோம். தொடர்ந்து இதுகுறித்தும், கடலுக்குள் மூழ்கிய கோவில்கள் குறித்தும் இன்னும் கூடுதலாக நவீன தொழில்நுட்ப உதவியுடன், கடல் மற்றும் செயற்கைகோல் வழியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
- 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.
- இந்திய அணியில் உள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஏசியன் சர்ஃபிங் அசோசியேஷன் சார்பில் ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் 4-வது [ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்-2025] போட்டிக்கான முதற்கட்ட பயிற்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் தொடங்கியது.
இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சீன தைபே, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 20 நாடுகளை சேர்ந்த சர்பிங் வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரம் பதக்கங்கள் வழங்கப்படும். மேலும் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இடங்களுக்கும் போட்டியிடுவார்கள். இந்திய அணியில் உள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார்
- கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.
கூவத்தூர் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது.50) இவர் கல்பாக்கம் அடுத்த காத்தாங்கடை கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்கு நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் பெட்ரோல் பங்கை மூடிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்படும் போது காத்தாங்கடை சந்திப்பு பகுதியில் காரில் பதுங்கி இருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மோகன்ராஜை வழிமறித்து கையில் இருந்த பட்டாகத்தி மற்றும் அருவாலால் அவரதே கழுத்து, தோல்பட்டை, முதுகில் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் உயிருக்கு போராடிய நிலையில் கொத்துயிரும், கொலையுருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகன்ராஜை அப்பகுதியில் கடை வைத்திருப்போர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். தகவலரிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி அறிவழகன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார், இதையறிந்த மர்ம கும்பல் மோகன்ராஜை கொலை செய்ய காத்தாங்கடை சந்திப்பில் காரில் நீண்ட நேரமாக காத்திருந்து, திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார்கள்.
கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த கொலை ஏதேனும் கொடுக்கல் வாங்கல் பணப் பிரச்சனையா? நிலத்தகராரா? பெட்ரோல் பங்கில் ஏதும் பிரட்சனையா? கோயில் விவகாரமா? அல்லது வேறேதும் காரணங்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவின் பெயரில் கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, திருக்கழுகுன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கூவத்தூர் போலீசார் சந்தேகத்தின் பெயரில் நாவங்கால் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்மீக பக்தரும் பெட்ரோல் பங்கு அதிபருமான மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இ.சி.ஆரில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்த கொலை சம்பவம் கூவத்தூர், காத்தாங்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
- தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றலாபயணிகள் இங்கு உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தின் அருகே கடல்சார் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அங்குள்ள பழங்காலத்து நங்கூரம், மிதவை விளக்கு, கப்பல் மாலுமி தளம், பைனாகுலர், உள்ளிட்ட கடல்சார் அறிவியல் கருவிகள் விபரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தி ஆவலுடன் பார்த்து வந்தனர்.
இது அறிவியல் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளநிலையில் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏராளமானோர் கடல்சார் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்று நினைத்து செல்லும் போது அதன் கதவுகள் மூடப்பட்டு கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே கடல்சார் அருங்காட்சியத்தில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், நாளை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.
- மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரம்.
வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' தீவிர புயல் இன்று வலுவிழந்து புயலாக மாறி வந்து கொண்டிருக்கிறது.
இந்த புயலின் மைய பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு அரசு பல்வேறு அறிவுரைகளையும், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.
புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாமல்லபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளார்.
அவர் இன்று காலையில் நீலாங்கரை, கானாத்தூர், நெம்மேலி, கோவளம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பருவ மழைக்கான சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் ஐ.ஏ.எஸ். மற்றும் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகள், மீட்பு படை அதிகாரிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.
மாமல்லபுரம் மற்றும் அதையொட்டிய கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் புயல் மீட்பு மையங்களையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டார்.
அப்போது கோவளத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மாமல்லபுரம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடற்கரை ஓரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது.
குறிப்பாக மாவட்டம் முழுவதும் 206 இடங்களில் பாதுகாப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு தங்கும் மக்களுக்காக 3 வேளை உணவு வழங்க வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாமுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.
புயல் கரையை கடக்கும் போது மின் கம்பங்கள் சாய்ந்ததால் அதனை சரி செய்ய 600 மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. மின் வாரிய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
மரம் விழுந்ததால் அதை அப்புறப்படுத்த அதற்கான ஆட்கள் மரம் அறுக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எனவே எந்த வகையிலும் எவ்வளவு பெரிய பாதிப்பு வந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.
அதனால் அனைத்து முக்கிய அதிகாரிகளும் இங்கு முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.
ஏதாவது பாதிப்பு வந்தால் மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு படையினர் 120 பேர் 3 குழுவாக தயாராக உள்ளனர்.
தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் எந்த வகையிலும் பொது மக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
அப்போது கலெக்டர் ராகுல்நாத், சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் உடன் இருந்தனர்.
- ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது
- புயலில் பாதிப்படைந்த மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.
அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார்.
பின்னர் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
+2
- சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
- பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.
மாமல்லபுரம்:
சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.
சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.
பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
- வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
- பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும்.
மாமல்லபுரம்:
சென்னையை அடுத்த மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறை தினத்தையொட்டி பொழுதை கழிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மாமல்லபுரம் வந்ததால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.
புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
குடும்பம், குடும்பமாக வந்த பல பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி வந்து புராதன சின்னங்களில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால் நேற்று கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை போன்ற சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் பயணித்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதற்கிடையில் சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும். அரையாண்டு விடுமுறை தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னையில் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு நடக்கிறது
- 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
மாமல்லபுரம்:
ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 200 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறு துறைசார் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு பிறகு தலைவர்கள் சுற்றுலாவாக சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன்தபசு போன்ற பகுதிகளை பார்வையிடவும், அதன்முன் நின்று புகைப்படம் எடுக்கவும் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக தலைவர் சைதன்ய பிரசாத் மற்றும் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வில், தலைவர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவது, உணவருந்தும் இடம், எவ்வாறு வரவேற்பது, எங்கே நின்று புகைப்படம் எடுக்கவைப்பது போன்ற விஷயங்களை திட்டமிட்டனர்.
இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்.பி பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், தாசில்தார் பிரபாகரன், தொல்லியல்துறை அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.






