என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரத்தில் தொடங்கியது இந்திய நாட்டிய விழா!
    X

    மாமல்லபுரத்தில் தொடங்கியது இந்திய நாட்டிய விழா!

    • நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும்.

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா இன்று மாலை 5:30-க்கு சென்னை இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கல இசையுடன் துவங்கியது. தமிழ்நாடு சுற்றுலாதுறை மற்றும் இந்திய சுற்றுலாதுறை இணைந்து நடத்தும் இந்த நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள், கதகளி, ஒடிசி, குச்சிப்புடி, கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நடனங்கள் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதனை துவக்கி வைத்தனர்.


    சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலர் க.மணிவாசன், சுற்றுலாதுறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், இணை இயக்குநர் சிவப்பிரியா, மாவட்ட சப்-கலெக்டர், சுற்றுலா அலுவலர் சக்திவேல், நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், முன்னாள் தலைவர் விசுவநாதன், கவுன்சிலர் மோகன்குமார் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்த நாட்டிய விழா தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும்.

    Next Story
    ×