என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரு போதும் ஊழல் செய்ய மாட்டேன்... செய்யவும் விட மாட்டேன் - விஜய் திட்டவட்டம்
- அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன்.
- தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் கூறியதாவது:
* தி.மு.க.வுக்கு முன்னாடி தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பா.ஜ.க. அடிமையாக தான் இருக்கிறார்கள்.
* பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மறைமுகமாக சரண்டர் ஆகி உள்ளது.
* த.வெ.க. வந்த பிறகு ஊழல் செய்ய மாட்டேன். செய்யவும் விட மாட்டேன்.
* அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்.
* அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன். மக்கள் அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள்.
* தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
* தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது.
* அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணாவின் பெயரைக்கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்து விட்டன.
* அடங்கிப் போவதற்கோ, அடிமையாக இருப்பதற்கோ, அண்டி பிழைப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை.
* அரசியல் பயணத்தில் முக்கியமான கால கட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினர் இருக்கிறோம்.
* தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
* மக்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்ய மாட்டோம்.
* 30 ஆண்டுகளாக நம்மை குறைத்து மதிப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் குணம் ஒரு போதும் மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.






