என் மலர்
நீங்கள் தேடியது "நாஞ்சில் சம்பத்"
- மணல் மாஃபியாக்களுக்கு எதிராக களத்தில் நின்றவர்.
- மறைந்தது லட்சியவாதிகளுக்கு இழப்பு; தாய் தமிழகத்திற்கு பேரிழப்பு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நல்லக்கண்ணு மறைவுக்கு தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாராண்ட மன்னரைக் காட்டிலும் நூறாண்டு கண்ட தோழர் நல்லக்கண்ணு புகழின் உச்சத்தைத் தொட்டவர்; தியாகத்திற்கு சதை வடிவம் தந்தவர்; சரித்திரப் பேரேட்டில் பல அத்தியாயங்களுக்குப் பேசப்பட வேண்டியவர்.
மணல் மாஃபியாக்களுக்கு எதிராக களத்தில் நின்றவர். சிவப்பை உவப்பாகக் கொண்டவர்; மறைந்தது லட்சியவாதிகளுக்கு இழப்பு; தாய் தமிழகத்திற்கு பேரிழப்பு.
அவரை இழந்து தவிக்கும் செங்கொடி தோழர்களுக்கும், அவர் மகள் ஆண்டாளுக்கும் என்னுடைய ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் செல்வாக்கை இழப்பார்.
- 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார்.
தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது
இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்க்கும்போது, பல கூட்டத்தை நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் 39 ஆண்டு காலத்தில் நான் இதேபோல் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்தில்லை.
அவருக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு, வளர்ச்சி தமிழகத்தில் புதிய அத்தியாயம் படைக்கும்.
அவர் 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார். தி.மு.க. திகைத்து நிற்கிறது.
சட்டம்-ஒழுங்கு கெட்டு தமிழகம் சாம்பல் மேடாக மாறி உள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆளுமையும், ஆண்மையும் எதிர்கட்சிகள் இழந்துள்ளன. இதனை எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.
ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் இதுவரை பெற்று வந்த செல்வாக்கை இழப்பார் என நினைக்கிறேன். வைகோ தி.மு.க.வுடன் இணைந்துள்ளார்.
தி.மு.க.வுடன் உள்ளோம், இனியும் இருப்போம் என காங்கிரஸ் கூறவில்லை.
மார்ச் 9-ந்தேதி தி.மு.க ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்துகிறது. அன்று எங்கள் பொலிடிகல் பாம் வெடிக்கும். ராகுல் காந்தியும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் தி.மு.க.வுக்கு மாரடைப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விளம்பர வெளிச்சத்தில் காலத்தை கடத்தும் விடியல் அரசு தேசிய அரசியலுக்கு வழித்தேடப்போகிறதாம்.
- கையில் குறிப்பு இல்லாமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத்தெரியாதவர் இந்திய தலைவர்களுக்கு ஆலோசனை.
இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் சாம்னா நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விமர்சித்த தவெக பரப்புரை செயலாளர நாஞ்சில் சம்பத்," இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமையேற்க வேண்டுமென சிலர் பிதற்றுவதை கேட்டால் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது" என்றார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா?
இண்டி (I.N.D.I.A) கூட்டணிக்கு அண்ணன் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று சிலர் பிதற்றுகிறார்கள். இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை, நாட்டின் கதியை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது!
தமிழகத்தின் திசையெங்கும் திராவிட மாடல் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, திக்கெட்டும் வெறும் விளம்பர வெளிச்சத்திலேயே காலத்தைக் கடத்தும் ஒரு விடியல் அரசு, இப்போது தேசிய அரசியலுக்கு வழி தேடப் போகிறதாம்! கதர் சட்டையை குறைத்து மதிப்பிடுகிறார்களா?
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள், கையில் குறிப்பு எடுத்துத் தராமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத் தெரியாதவர். அகில இந்தியத் தலைவர்களுக்கு ஆலோசனைக் கூறப் போகிறாராம். பீகாரில் பரப்புரை தாக்கத்தை நாடு பார்த்ததே. தமிழ்நாட்டிலேயே விடிவெள்ளி எப்போது வரும் என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தேசிய அளவில் டார்ச் அடிக்கப் போவதாகக் கிளம்பிவிட்டார்கள்.
கொள்கைக் குன்றாக, மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவர் விஜய் அவர்கள் களமிறங்கிய பிறகு, பலருக்குக் கை, கால் நடுக்கம் எடுக்கத் தொடங்கிவிட்டது. அதிலிருந்து தப்பிக்கவே 'தேசியத் தலைமை' என்கிற பொருந்தா பட்டத்தை சூட்டி, இவரை இங்கிருந்து அனுப்பிவிட சிலர் துடிக்கிறார்கள் போலிருக்கிறது.
தலைமை என்பது பெறுவது அல்ல; அது தகுதியால் தானாக சேர வேண்டிய இடம். இங்கே பலருக்கு தகுதியே தட்டுப்பாடாக இருக்கும்போது, தலைமைக்கு ஆசைப்படுவது 'ஆகாசத் தாமரைக்கு' ஆசைப்படுவது போன்றது! சரிதான், தாமரை அவர்களுக்கு பிடித்த ஒன்று தானே..
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
- இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது
மதுரையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,"விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுணம் தானே" என சிரித்துக் கொண்டே பேசினார்.
இதற்கு தவெக தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. தவெக பரப்புரை செயலாள் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு"நல்ல சகுனம்" என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் "கொத்தடிமை ஊதுகுழலாக" மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் "கள்ளக்கூட்டணி" தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த "கள்ளக்கூட்டணி" மனநிலை அருவருக்கத்தக்கது.
ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள்.
அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.
தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை; அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.
- அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா பஜார் திடலில் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனால் அச்சம் உருவாகிவிட்டது. அண்ணா, எம்.ஜி.ஆர். எழுதிய அரசியல் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை விஜய் எழுதப்போகிறார்.
தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கட்சிகள் இன்று தி.மு.க.விடம் தங்களை இழந்துவிட்டது. தி.மு.க.-விற்கு மாற்றாக தொடங்கிய ம.தி.மு.க.வை, தி.மு.க.விடம் தொலைத்துவிட்டு மதுரை, திருச்சி என கட்சியின் தலைவர் வைகோ ம.தி.மு.க.வை தேடி வருகிறார்.
தி.மு.க.வுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க.வை துண்டு துண்டாக வெட்டி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விற்பனை செய்ய தயாராகிவிட்டார். மாற்று என டார்ச் விளக்குடன் வந்த கமல்ஹாசன் அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் ஓய்வு எடுக்கிறார். தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை. அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று அரசியல் கட்சி மட்டுமல்ல. ஆட்சி மாற்றத்திற்கான கட்சி.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை சொல்வதற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது. எங்களுக்கு எதிரி தி.மு.க. தான் என விஜய் அறிவித்த பின்னர் முதலமைச்சர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்.
தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரித்துவிட்டது. அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். தமிழகம் போதையில் தள்ளாடுகிறது. அதனை காப்பாற்ற முதலமைச்சர் தவறிவிட்டார். ஆளும் கட்சி மெஷின் பவர், மணி பவர் ஆகியவற்றுடன் செயல்படுகிறது. இப்போது மசில் பவரை அதாவது தசை பலத்தை காட்டி தி.மு.க. குண்டர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். எங்கள் தலைவர் விஜய்க்கு மக்கள் பவர் அதிகரித்து வருகிறது.
இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என சொல்லும் தி.மு.க. இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்ட 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அனைத்து சாலைகளும் பனையூரை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது. போகிற போக்கை பார்த்தால் எல்லையில் நாட்டை பாதுக்கும் ராணுவ கேப்டன் கூட விசில் அடிக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிடுவார் என தோன்றுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன்.
- இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆட்டம் போட்ட சூரனை முருகன் எப்படி சம்ஹாரம் செய்தாரோ? அதேபோல் ஆட்டம் போட்டவர்களை தலைவர் விஜயின் தம்பிகள் சம்ஹாரம் செய்யப் போகிறார்கள். இனி வரும் காலம் நம் காலம். அடுத்த முதலமைச்சர் விஜய் தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள். 2 பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் களத்தில் நிற்கிறார்.
கடந்த காலங்களில் தே.மு.தி.க. கட்சியை விஜயகாந்த் உருவாக்கினார். ஆனால் இன்றைய தினம் விருப்பமனு வாங்குவதற்கு கூட கட்சியில் ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் உலகநாயகன் கமலஹாசன் வந்தார். தி.மு.க. மீது கூர்மையை தீட்டினார். ஆனால் தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன். இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் 1 கோடி இளைஞர்களை வைத்திருக்கிற தலைவனை இன்று தான் அரசியல் பார்க்கிறது.
தி.மு.க.விற்கு உழைத்தது உனது மகனா?, தி.மு.க.விற்கு வேர்வை பாய்ச்சியது உனது குடும்பம் மட்டும் தானா? தி.மு.க.விற்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியது உங்கள் குடும்பம் மட்டும் தானா? உதயநிதிக்கு ஒரு திருக்குறளை ஒழுங்கா சொல்ல தெரியுமா? மாநில சுய ஆட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் நிறுத்திவிடுகிறேன்.
ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும் போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும்.
நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதலமைச்சர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. ரேம்வாக்கிற்கு எங்கள் தளபதி போடும் பேண்ட் கலரில் முதலமைச்சர் பேண்ட் போடுகிறார். வேறு கலர் கிடைக்கவில்லையா. கலரும் களவு தானா? எங்கள் தளபதி போல் அவரும் ரேம்வாக் போகிறார். இந்த ரேம்வாக்கை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே எங்கள் தளபதி விக்கிரவாண்டியில். எங்கள் தளபதி ராம் வாக் செல்ல அவருக்கு தகுதி இருக்கிறது. உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கிறது?.
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊத கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். யாராவது தி.மு.க.வினரை பார்த்தால் விசில் எடுத்து ஊதுங்கள். விசில் ஊதும் போது அவரது செவில் கிழியும் அளவிற்கு ஊத வேண்டும். யானை பிளிரும் ஓசையை விட விசிலின் ஓசை அதிகமானது
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் விஜய ராஜ், பத்ரி பிரசாத், நகர செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஒன்றிய பொருளாளர் மதன், யாசர் அரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை.
- அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?
தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?
அன்று உண்மையை உரக்கப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும்—இன்று தீயசக்தி தி.மு.க-வின் திடீர் ஊதுகுழல் போலத் தான் பேசியதையே மாற்றிப் பேசும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் எத்தனை வித்தியாசங்கள்? இந்த மாற்றத்தின் பெயர்தான் 'தடுமாற்றம்'!
மக்கள் தலைவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தெரியாதது போல நடிக்கும் உங்களுக்கும் அது தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஒரே தலைவர், எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான்! இதை காலம் விரைவில் புரிய வைக்கும் என கூறியுள்ளார்.
- கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா?
- தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..
திருச்சியில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் நாள் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், 'அழுத்தத்துக்கு நானா பயப்படுவேன்? ஒரு காலத்திலும் பயப்பட மாட்டேன்' என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார்.
இதே விஜய், ஜெயலலிதாவிடம் எப்படி கை கட்டி நின்றார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியிட முடியாமல் போனதற்காக, ஜெயலலிதாவை சந்தித்து, "உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் எதிரி இல்லை" என்று அழுத்தத்துக்கு பயந்து தந்தையுடன் கை கட்டி நின்றவர்தான் விஜய். அவர்தான் இன்று வீரவசனம் பேசுகிறார்" எனப் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத்,
"தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்.. எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா?
தவெகவை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் ரூ.2000 கோடிக்கு மேல் நடந்த முறைகேடுக்கு ED விடுத்த நோட்டிசுக்கு எங்கெல்லாம் ஓடி ஒழிந்தார்? கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா? முதலில் உங்கள் கிழிசலை தைத்துக்கொள்ளுங்கள்..!" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டைப் போல தாய்மொழியைக் காப்பதற்கான ஒரு போர் உலகில் வேரெந்த தேசத்திலும் நடந்தது இல்லை.
- செந்தமிழைக் காக்கும் சேனை மீண்டும் தேவைப்பட்டால் தவெக தரும். தவெக தலைவர் விஜய் தருவார்.
சாதி, மதம் மனிதனை ஒன்றிணைக்காது; மொழிதான் மனிதனை ஒன்றிணைக்கும் என தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவு கூர்ந்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாற்று உரையை நாஞ்சில் சம்பத் நிகழ்த்தினார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
மொழிக்காக தீக்குளித்த மரபு தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உடைய போர் இந்த போர். நாங்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கி றோம். இந்தி என்கிற மொழியை எதிர்க்கவில்லை. இந்தி அநீதியின் சின்னம், ஆதிக்கத்தின் சின்னம், மதத்தின் சின்னம், மனு தர்மத்தின் சின்னம், பிரிவி னையின் சின்னம். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். என்னுடைய தமிழ் மொழி யின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு உன்னு டைய மொழிக்கு எந்த தகுதியும் இல்லை.
செந்தமிழ் காக்க சேனை ஒன்று தேவை என்று பாரதி தாசன் பாடினார். செந்தமிழ் காக்க இனி ஒரு சேனை தேவைப்படுமானால் அந்த சேனையை தருகிற இயக்கம் விஜய்யின் வெற்றிக் கழகம்தான். அந்த சேனை எங்களிடம்தான் இருக்கிறது.
நீங்கள் இந்தியை எதிர்ப்ப தாக நாடகம் போடுகிறீர்கள். 40 எம்.பி.க்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். டெல்லி யுடன் யுத்தம் செய்ய, டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்குகிற படைக்கலன்தான் ஒரு எம்.பி. அந்த கடமையை செய் தீர்களா? நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் நாடகம் முடிவுக்கு வரப் போகிறது.
துரியோதனின் வீழ்ச்சி அவன் தொடையில் இருந்தது. அதிசயம் ஆயிரம் செய்த ஜப்பானின் அன்றைய வீழ்ச்சி அணு குண்டில் இருந்தது.
ஒரு வல்லாதிக்கத்தின் வீழ்ச்சி அண்ணாவின் செந்நாவில் இருந்தது. உய்ய வந்த தமிழினத்தை உய்யாது தடுத்து குடும்ப புற்றில் குடியிருக்கும் பூநாகங்களின் வீழ்ச்சி விஜய்யின் கையில் இருக்கிறது என்பதை வருகிற காலத்தில் எழுதுவதற்கு நாம் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளில் சூளுரைப்போம். வருகிற காலம் நம் காலம். எத்தனை தடைகளை போட்டாலும் தகர்த்து முன்னேறுவோம்.
நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. தேதிகள் கிழிபட உடன்படாவிட்டா லும் நாளை நடக்கும். நாளை விஜய் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.
விஜய் பேசாமல் இருக்கி றார், ஆனால் விஜய்யை பற்றித்தான் எல்ேலாரும் பேசுகிறார்கள். இப்படி ஒரு வரலாறு எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் எங்கேயும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.
- மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியல் தமிழ்நாட்டில் தேவை இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள். தொலைந்தார்கள்.
அதை இட்டு நிரப்புவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தினுடைய நிழல் படியாத ஒரு கட்சியான தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் நாளைக்கு அதிகாரத்திற்கு வரும் என்கிற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியிலே நெஞ்சில் இன்று உதயமாகி உள்ளது.
விஜயின் அதிர்வுகள் இன்றைக்கு இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைக்கு த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கே அந்த ஆசை உள்ளது.
நான் ரெயிலில் பயணித்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் என் பக்கத்து இருக்கையில் இருந்தார். நான் அவரிடம் என்ன த.வெ.க.வுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா? என்று கேட்டேன்.
அவர் சொன்னார். எங்களுக்கு த.வெ.க. மீது தான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது தி.மு.க.வை என்று வருத்தத்துடன் சொன்னார்.
எல்லா கட்சிகளும் த.வெ.க. எனும் நந்தவனத்திற்கு வருவதற்கு நாள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய். திருவண்ணாமலையில் 1,35,000 இளைஞர்களின் நிர்வாகிகளின் வடக்கு மண்டல மாநாடு நடத்துகின்ற அன்று, அரசியலில் ஆயிரம் பிறை கண்ட அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையனை த.வெ.க.வில் இணைத்ததன் மூலம் தி.மு.க. இளைஞரணி மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
டிச.5-ந்தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள். அவரது நினைவிடம் நோக்கி பேரணிகள் நடத்துவதாக அறிவித்தார்கள்.
அன்றைக்கு தான் த.வெ.க. தலைவர் என்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அன்றைக்கு நான் இணைந்து செய்தியானதே தவிர அந்த பேரணி செய்தியை எந்த தொலைக்காட்சியும் வெளிப்படுத்தவில்லை.
ஆகவே, எதிரியை எங்கே, எப்போது அடிக்க வேண்டும் என்ற லாவகம் தெரிந்த ஒரே தலைவர் இந்திய அரசியலில் எங்கள் த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
- பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாஞ்சில் சம்பத்திற்கு தவெகவின் பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார்.
மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து விஜய் பின்வாங்கவில்லை.
- மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை.
தவெக தலைவர் விஜய் பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறினாலும், திமுகவை விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர்களை விமர்சனம் செய்வது இல்லை. மேலும் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் அந்தளவு விமர்சித்ததில்லை எனவும் நீண்ட நாட்களாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் விஜய், பாஜகவின் 'சி' டீம் எனவும் திமுகவால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மௌனம் பாஜகவின் ஆதரவு மனநிலை என்று எடுத்துக்கொள்ளலாமா எனவும் பலநாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதன் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கான விளக்கத்தை இன்று தன் கட்சியில் இணைந்த புதிய நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பகிர்ந்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,
"கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. பாஜக ஆதரவு தொடர்பான விமர்சனங்கள் குறித்து விஜய்யிடம் பேசினேன். அதற்கு, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் கட்சி. தேர்தல் இங்கு நடக்கப்போகிறது. அதனால் திமுகவை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜகவிற்கு நேரம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.
மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. திமுகவில்தான் ஆயுள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் வைகோ வெளியேறியதால் வெளியேறினேன். அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் பிரச்சாரம் செய்தே வாழ்ந்தவன் என்பதால், அந்த வாய்ப்பை விஜய்யிடம் கேட்டுள்ளேன். திமுகவையும், பாஜகவையும் ஒரேநேரத்தில் எதிர்க்கும் துணிச்சலையே நான் பாராட்டுகிறேன். எதிர்ப்பவர் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்." என தெரிவித்தார்.






