search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "secretary"

    • புதுவை மாநில அ.தி.மு.க. 2 ஆண்டுக்கு முன் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த புதுவை மாநில அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. 2 ஆண்டுக்கு முன் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.

    தற்போது நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு புதுவை மாநில அ.தி.மு.க என ஒருங்கிணைப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவி த்துள்ளார். ஒருங்கிணைந்த புதுவை மாநில அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    மாநில செயலாளராக அன்பழகன், அவைத்தலை வராக அன்பானந்தம், இணை செயலாளர்களாக பேராசிரியர் ராமதாஸ், வீரம்மாள், மகாதேவி, துணை செயலாளர்களாக உமா, முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், குணசேகரன், பொருளாளராக ரவி பாண்டுரங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒருங்கிணைந்த மாநில அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படவில்லை. காரைக்கால் தொடர்ந்து தனி மாவட்டமாக செயல்படும்.

    • ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
    • நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுக் கான அமைப்பு தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணை யாளர் மகபூப்ஜான், பார்வையாளர்கள் வக்கீல் ஆசைத் தம்பி, பாஸ்கர சேதுபதி ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், ஆலோசனை குழு உறுப்பினர் குணா, மாநில இளைஞரணி துணை செயலாளர் கராத்தே பழனிச்சாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர் வாகிகள் சால்வை அணி வித்து வாழ்த்து தெரி வித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய் யப்பட்டுள்ள வி.கே.சுரேஷ் ம.தி.மு.க. தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட இளைஞரணி செய லாளர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் பெருவாரியான இளைஞர்கள் ம.தி.மு.க. வில் இணைவதற்கு முக்கிய பங்கு வகித்த வர்களில் இவர் குறிப்பி டத்தக்கவர். இவரது திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டு தலை மையேற்று நடத்தி வைத்தார்.

    இவர் கட்சி பணியை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதால் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பல முறை இவரை பாராட்டி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
    • துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தல், ஒழுங்கு நடவ டிக்கை குழு உறுப்பினர் மகப்பூப்ஜான் தலைமையில் நடந்தது. நிர்வாகிகளாக தேர்வு பெற்றவர்களை முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் முன்னிலையில் அறிவித்தனர்.

    மாவட்ட அவைத் தலைவராக பிரகாசம், மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ், பொரு ளாளராக ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலா ளர்கள் மங்களேசுவரி, சரவணன், பிச்சை, குகநாதன், பாஸ்கரன், மாவட்ட தலைமை உறுப்பி னர்களான சுபாஷ், செந்தில், நித்தியானந்தம், சத்தியேந்திரன், மனோகரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்களை ஒருமனதாக தேர்வு செய்த தொண்டர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோவுக்கும், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • 5-வது அமைப்புத்தேர்தல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

     திருப்பூர் :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கான 5-வது அமைப்புத்தேர்தல் திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ம.தி.மு.க.தேர்தல் பணி துணைச்செயலாளர் அ.சேதுபதி, துணை ஆணையாளர்களாக கோவை மாநகர இளைஞரணி துணை செயலாளர் தங்கவேல், கோவை பகுதி செயலாளர் விஸ்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நேமிநாதன், மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ், பொருளாளராக நல்லூர் மணி என்ற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினராக சக்திவேல், துணை செயலாளர்களாக குமார், தாமோதரன், வழக்கறிஞர் தமயந்தி கந்தசாமி, பூபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், ராமசாமி, கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் ரெயில்நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இதில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.மணி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
    • தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    மங்கலம் :

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகள் பல ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் உள்ளன.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:- பாரம்பரியமாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், போதிய வருவாய் இன்றி தறிகளை நவீனப்படுத்த முடியாமல் உள்ளனர். சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதன் மூலம் உற்பத்தி திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். தமிழக அரசு சார்பில் விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 67.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக சட்டசபை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்குவது போல் மத்திய அரசும் விசைத்தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்கினால் உற்பத்தி அதிகரித்து விசைத்தறி தொழில் வளர்ச்சி பெறும். விசைத்தறியாளர் வாழ்வாதாரம் மேம்ப மத்திய அரசு தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை ஆதரித்தும், பொதுச் செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டும் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    முன்னதாக ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், சோழவந்தான் 10-வது வார்டு செயலாளர் மணிகண்டன், மருத்துவர் அணி கருப்பட்டி டாக்டர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், சோழவந்தான் பேரூர் கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், சண்முக பாண்டியன், மன்னாடிமங்கலம், தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு, நகர இளைஞரணி கேபிள் மணி, சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, கள ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்படி, வெண்ணந்தூர் வட்டாரம், தொட்டியவலசு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்க

    ளில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க

    திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள மகாகனி, தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.

    நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி

    திட்டத்தின் கீழ், ஊனாந்தாங்கல் கிராம

    பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்புகளை ஆய்வு செய்தார்.

    விளை பொருட்களை தேசிய மின்னணு சந்தை மூலம் சந்தைப்படுத்துதல் குறித்து நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சத்திரம் வட்டாரம் நவணி கிராமத்தில் "இ"-

    வாடகை செயலியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடத்தில் கலந்து ரையாடல் நடைபெற்றது.

    ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் நாசர், வேளாண்மை துணைஇயக்குநர்கள், உதவி இயக்கு நர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 5-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் பெரியகருப்பன் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து திருப்பத்தூர் அண்ணா சாலையில் ஒன்றிய, பேரூர் சார்பில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிய தலைவர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஊரகத் வளர்ச்சி துறையை அகில இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் வருவதற்கு சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
    • பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரும், ஏற்கனவே திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த இல.பத்மநாபன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில், மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • ஆண்டிபாளையம்- பி. முருகசாமி, வீரபாண்டி- அ. கோவிந்தராஜ், முத்தணம்பாளையம்- எஸ். என். குமார்.
    • 15 வேலம்பாளையம்- கொ. ராமதாஸ், அண்ணா காலனி- அ. நாகராஜன், பாண்டியன்நகர்- வெ. ஜோதி.

    சென்னை:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

    அவைத்தலைவர்- க. நடராசன், செயலாளர்- க. செல்வராஜ், துணைச்செயலாளர்கள் (பொது) குமார், (ஆதிதிராவிடர்) சொ. சேகர், (மகளிர்) ஜி.கே. நந்தினி, பொருளாளர்- க. சாமிநாதன்.

    தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்

    க. சரவணன், சி. கோவிந்தசாமி, ப.கு. கனகராஜ், பா. குணராஜ்.

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    ஆர். தங்கவேல், ப. சண்முகசுந்தரம், எம். எம். மஸ்ஊது, அ. அப்துல்ரகுமான், மு. முகமதுரபி, மு. நாச்சிமுத்து, செ. உமாமகேஸ்வரி.

    ஒன்றிய செயலாளர்கள்

    திருப்பூர் வடக்கு-என். விஸ்வநாதன், திருப்பூர் தெற்கு- பி. விஸ்வலிங்கசாமி, பொங்கலூர் கிழக்கு-சா. பாலுசாமி, பொங்கலூர் மேற்கு- பி. அசோகன்,

    நகரச்செயலாளர்கள்

    பல்லடம்- என். ராஜேந்திரகுமார்.

    பகுதி செயலாளர்கள்

    15 வேலம்பாளையம்- கொ. ராமதாஸ், அண்ணா காலனி- அ. நாகராஜன், பாண்டியன்நகர்- வெ. ஜோதி, கொங்குநகர்- ஆர். சம்பத்குமார், வாலிபாளையம்- மு.க. உசேன், நல்லூர்- மேங்கோ. அ. பழனிசாமி, கருவம்பாளையம்- வி. எ. அய்யப்பன், ஆண்டிபாளையம்- பி. முருகசாமி, வீரபாண்டி- அ. கோவிந்தராஜ், முத்தணம்பாளையம்- எஸ். என். குமார்.

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவை ஏற்று, பாதுகாப்பு துறை செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். #SrilankaBlast #ColomboBlast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 



    இதற்கிடையே, பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி பாதுகாப்பு செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில், இலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த ஹேமசிரி பெர்னாண்டோ தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்தார். #SrilankaBlast #ColomboBlast
    சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

    ரஜினி மக்கள் மன்றத்துக்கு அரசியல் கட்சி பாணியில் அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.



    இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் ரஜினி மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியானது.

    சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினி உத்தரவிட்டுள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்துவந்த சுகன்யாவிற்கு ‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    அதன்மூலம் சுகன்யாவிற்கு ரஜினியிடம் நல்ல அறிமுகமும் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூர் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சுகன்யாவின் குடும்பம், தந்தையின் பணி காரணமாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறது. இதுகுறித்து பேசிய சுகன்யா, “சிங்கப்பூரில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.

    ஆனால் தனித்தனியாக இயங்குகிறார்கள். அப்படி தனித்தனியாக இயங்குபவர்களை ஒன்றிணைப்பதே எங்கள் முதல் நோக்கம். ரஜினி முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என கூறி உள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram



    ×