என் மலர்
நீங்கள் தேடியது "நயினார் நாகேந்திரன்"
- சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
- பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க. பணிமனை திறப்பு விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
* பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து பேசி அதன்பின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* தமிழ்நாட்டில் வெகு விரைவில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி மலரும்.
* எம்.ஜி.ஆர். வழியில் மக்களுக்கான கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
* பா.ஜ.க. கட்சியில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், நாளை அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள். அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!
ஓம் சாந்தி! என கூறியுள்ளார்.
- அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம்.
- காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.
சென்னை:
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களின் பேராதரவுடன் தனியொரு பெண்ணாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடங்கி ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வரை 360 டிகிரியிலும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட, 'அம்மா' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில், அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது.
மாணவர்களுக்கு சைக்கிள் முதல் லேப்டாப் வரை பல்வேறு பொருட்கள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் என அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம். காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.
அத்தகைய புகழ்மிக்க தமது ஆட்சியில் போக்குவரத்துத்துறை, ஊரகத்தொழில்கள் துறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை என்ற நான்கு முக்கியத் துறைகளின் அமைச்சராக என்னைப் பொறுப்பேற்கச் செய்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த புரட்சித்தலைவி அம்மா அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து அகமகிழ்வேன்! என்று கூறியுள்ளார்.
- சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.
நெல்லை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தை மலை மீது ஏற்ற முடியவில்லை. இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியும் வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொகுதி பங்கீடு மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க. கூட்டணியின் பேச்சுவார்த்தை சினிமா படத்தில் சொன்னது போல வாமா மின்னல் என வந்த வேகத்தில் போய்விடும்.
தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துகள் மறைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமரை கொலை செய்வேன் என சொன்னவர் இதுவரை கைது செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. தி.மு.க. பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது. பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதாவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவேன் என டி.டி.வி தினகரன் சொல்லி வந்ததாக கேட்கிறீர்கள். பா.ஜ.க., அ.தி.மு.க 2 கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.
எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்கள். பலமுனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது. தி.மு.க.விற்கு எதிராக பலமான போட்டி இல்லை என முதலமைச்சர் சொல்லி வருகிறார். அதனை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.
- போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
- முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது.
- தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது.
திருச்சி:
திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்ச் 11-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர் பான இறுதி முடிவை அறிவிப்போம்.
200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் கூறி வருவதாக சொல்கிறீர்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை அக்கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி வலுவிழந்து உள்ளது.
அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ். மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக் கொண்டு நிதி கொடுக்கவில்லை தமிழக அரசு கூறுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், மார்ச் 11-ந் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கான இடங்களை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
- திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும்.
- ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அமைச்சர் நேரு அவர்கள், அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான Countdown இன்றோடு தொடங்கிவிட்டது! கூடிய விரைவில்,
திமுக உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
- தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை வெளியிட்டார்.
சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
* மக்கள் பணியில் கவனம் தேவை எனக்குறிப்பிட்டு தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை அவர் வெளியிட்டார்.
- இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
- நயினார் நாகேந்திரன் உடன் மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்த கேள்விக்கு "எடப்பாடி பழனிசாமியுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு" என வேறேதும் கூறாமல் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகிறார். அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய பாஜக விரும்புவதாக தெரிகிறது. இதனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- நாளை நமமே.., தமிழ்நாடும் நமமே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்கள்
- நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்.
நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை 20 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும், நாளை நமமே.., தமிழ்நாடும் நமமே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
- நயினார் நாகேந்திரனை கண்டித்து நடிகை திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- திரிஷாவின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசினார்
த.வெ.க தலைவர் விஜய் மற்றும் திரிஷாவை ஒப்பிட்டு அநாகரிகமாக விமர்சித்தது தொடர்பாக நயினார் நாகேந்திரனை கண்டித்து நடிகை திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அரசியல் துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரிடம் இருந்து இத்தகைய பேச்சை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என்று திரிஷா குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "நடிகை திரிஷா குறித்த கருத்துக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- நடிகை திரிஷா வழக்கறிஞர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- உயர் பதவியில் இருக்கும் ஒருவர், விரும்பத்தகாத கருத்து தெரிவித்ததை எதிர்பார்க்கவில்லை.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயினார் நாகேந்திரினின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. தவைவர் நயினார் நாகேந்திரனின் தரம் தாழ்ந்த கருத்து குறித்து நடிகை திரிஷா வழக்கறிஞர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"எனது கட்சிக்காரரும், புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகையுமான திருமதி. திரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில், பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
1. இது ஊடகங்களில் பரவி வரும் எனது கட்சிக்காரரைப் பற்றிய விரும்பத்தகாத கருத்தைக் குறிப்பிடுவதற்காக வெளியிடப்படுகிறது.
2. மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற விரும்பத்தகாத மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவித்ததை எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
3. அவர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்பதை எனது கட்சிக்காரர் மிக தெளிவாக கூறுகிறார். மேலும், கடந்த காலத்தில் எனது கட்சிக்காரர் தொடர்ந்து பராமரித்தது போலவே, அரசியலில் அவர் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
4. எனது கட்சிக்காரர் தனது திறமையால் மட்டுமே வரையறுக்கப்பட விரும்புகிறார், எந்தவொரு கூறப்படும் அரசியல் சீரமைப்பாலும் அல்ல. மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்தக்கூடாது என்பது பொதுவான கூற்று. மேலும் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. எனது கட்சிக்காரரின் பெயர் அவரைப் பொருட்படுத்தாத விஷயங்களில் சேர்க்கப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.






