என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயினார் நாகேந்திரன்"

    • அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
    • பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில், 'போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அவையனைத்திற்கும் பின்னணியில் போதையின் கரங்கள் தான் ஓங்கியிருக்கின்றன. ஆனால், "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என வீர வசனம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரமோ இத்துப்போய்விட்டது. எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்.

    மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த அக்கொடும்குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் தி.மு.க.-உம் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்! என்று கூறியுள்ளார். 



    • மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொ்லல முடியுமா?.
    • இந்தியாவையே நாளை பிடித்து விடுவேனு கூட விஜய் சொல்லலாம்.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்.

    அவர் மக்களை சந்திக்கும்போதெல்லாம் தமிழகத்தில் திமுக- தவெக இடையில்தான் கூட்டணி எனப் பேசி வருகிறார். இந்த தேர்தலில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலில் அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்ததால் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. மேலும், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என தவெக அறிவித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியும் தவெக உடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இதனால் அதிமுக-வினர் விஜய் மற்றும் விஜய் கட்சியை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். பாஜக-வினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் "இந்தியாவையே நாளை பிடித்து விடுவேனு கூட விஜய் சொல்லலாம். ஆனால், இது சினிமா அல்ல. தவெக-வுக்கு கட்டமைப்பு கிடையாது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொல்ல முடியுமா?" என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

    • பிரதமர் மோடி 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார்.
    • தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற சுற்றுப் பயண யாத்திரையை நேற்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டார்.

    நேற்று இரவு கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறினார். ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கினர்.

    ஆனால், பிரதமர் மோடி 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார்.

    இதே போல், தி.மு.க. தேர்தல் அறிக்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், இப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்த அறிக்கையில் கவர்ச்சி திட்டங்கள் இருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.

    தமிழகத்தில் நடப்பது போலியான ஆட்சி. கஞ்சா, நவநாகரிக போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக புழுங்குகிறது.

    பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது.

    பாலியல் வன்கொடுமையில் மக்களை காக்கவும், கஞ்சா போதையில் இருந்து மக்களை காக்க தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும். 42-வது மாவட்டமாக இங்கு வந்துள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி ஒரு ஆண்டு ஆகிறது. தமிழகத்தில் நல்லாட்சி அமைய இக்கூட்டணி உருவாகி உள்ளது.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பொங்கலுக்கு பிறகு பெரிய வலுவான கூட்டணியாக உருவாகும். நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
    • திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது.

    தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஐயோ பாவம் தவிர விஜய்க்கு வேறு என்ன சொல்ல முடியும்.

    விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் (செங்கோட்டையன்) ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார்.

    அவர் சேர்ந்ததனால், ஏதோ அம்மா உடன் இருப்பதுபோல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார்.

    செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.

    திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது.

    கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
    • எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    திருப்பரங்குன்ற தீபத் தூணில் கார்த்திகை தீப மேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் தி.மு.க. அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் மதுரை மாநகர் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிக்கிறேன்.

    தி.மு.க. அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.

    தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம். நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன், அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கை கோர்த்து நிற்போம். ஆனால், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது.

    எனவே, உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றவை என்பதைக் கருத்தில் கொண்டு இனியும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென உங்கள் அனைவரிடமும் சிரம் தாழ்ந்த கோரிக்கை விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
    • புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அத்துடன் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மனுக்கள் பெற்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்

    அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர் அ.தி.மு.க. ஆட்சி சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்.

    தே.மு.தி.க. சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கோணத்தில் மாடுகள் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு போன்றவற்றை நடத்தி இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் மாவட்டந்தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சட்டமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரும் கடந்த அக்டோபர் 12-ந்தேதி தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் அவர், தனது பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்து வரும் அவர், தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.

    குறிப்பாக தென் தமிழகத்தை குறிவைத்து சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தை பயன்படுத்த தயாராகி வரும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை தற்போதே தொடங்கிவிட்டார்.

    நேற்று டெல்லி சென்று திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், எனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இருவரில் ஒருவர் வருவார் என்றும் தெரிவித்தார். ராமேசுவரத்தில் காசி தமிழ்ச்சங்கமம் விழா, ராமேசுவரம்-தாம்பரம் புதிய வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா, புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்தி வயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

    மேலும் தற்போது இந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அங்கு 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார், உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவும் ஆய்வு செய்தார். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் உள்ளிட்ட கருவிகளை வைத்தும், டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டது.

    அதேபோல் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள், பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேடு தளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் தமிழக பா.ஜ.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.
    • எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-

    இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் உத்தேச தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் தரவில்லை.

    தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

    எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
    • நயினார் நாகேந்திரன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.

    தற்போது தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    • டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நயினார் சந்திக்கிறார்.
    • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

    யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
    • யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வழங்கியுள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

    யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

    யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    டெல்லிக்கு செல்லும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார். 

    • பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.

    வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தமிழகம் வரும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூற வாய்ப்பு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    ×