என் மலர்
நீங்கள் தேடியது "கிரிவலம்"
- போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
- முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.
- திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள்.
சிவ பெருமான் பஞ்சபூதங்களின் வடிவில் காட்சி தரும் பஞ்சபூத தலங்களில் ஈசன் அக்னி வடிவமாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படுவதும், தமிழகத்தில் உள்ள முக்தி தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவதும் திருவண்ணாமலை தான்.
திருவண்ணாமலை தலத்தில் தான், சிவ பெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. இதை போற்றும் விதமாகவே திருக்கார்த்திகை தீப திருநாளில், சிவமே மலையாக காட்சி தரும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
ஜோதி வடிவமாக காட்சிதந்த சிவ பெருமான், லிங்கோத்பவராக காட்சி தந்ததும் இங்கு தான் என சொல்லப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.
அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலை, கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி மாறி வந்துள்ளது.
"அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்." என்கின்றது அருணாசல புராணம். ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும்.
அதுபோல் சிவ பெருமானின் அருளை பெற விரும்புபவர்களும், பாவங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற விரும்புபவர்களும் மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.
திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலை யாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள். இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமான இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம். மற்றும் திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றை சுவாசிப்பதால் உடலும் உள்ளமும் நலம் பெறுகிறது.
பொதுவாக ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் ஐதீகம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவராத்திரி என்பதால் கிரிவலம் செல்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஞாயிறு கிரிவலம் செய்தால் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வழி பிறக்கும் என்கின்றனர்.
சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனைத் தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோவில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம்.
திருவண்ணாமலை கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் மலையின் காவல் தெய்வமான பூத நாராயணரை வணங்கி, மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கி தொடங்க வேண்டும். அடுத்து இடையூறு இல்லாமல் கிரிவலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.
கிரிவலத்தை முடித்தப் பின்னர், கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும். அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அண்ணாமலையாரையும், உண்ணா முலையம்மாளையும் தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஈசன் அருளுடன் துர்வாசரின் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும், விடாமல் ஓம் சிவ சிவ ஓம் என ஜபித்தவாறும் சென்றால் நமது எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது. இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திரத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை.
அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும். அப்படி ஒரே ஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம் சிவ சிவ ஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறுநாளே நமது கடுமையான பிரச்சினை ஒன்று தீரும் அல்லது அதற்கான சூழ்நிலை உருவாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.
- மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.
- சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.
மலையே சிவன். சிவனே மலை. ''வானனை, மதி சூடிய மைந்தனை, தேனனை, திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?" என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.
மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.
மகா சிவராத்திரியின் போது, கோவில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வருகிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.
- வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
- சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

- எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது.
- கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும்.
விநாயகரை வணங்கும் முறை
அகரம், உகரம், மகரம் (அ, உ, ம) ஆகிய மூன்றும் சேர்ந்தது தான் 'ஓம்' என்ற நாதபிரம்மம். 'ஓம்' என்ற வடிவத்தில் விநாயகரின் உருவம் அமைந்துள்ளது. வலது கையால் முகத்துக்கு மேலாக இடப்பக்கத்திலும், இடது கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்றுமுறை குட்டிக் காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டு கணபதியை வணங்க வேண்டும்.
சிவாலயங்களில் படிக்க வேண்டிய பாடல்
சிவாலயத்திற்கு செல்லும் பொழுது எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பிறகு இந்தப் பாடலை அவசியம் படித்து வழிபடுவது நல்லது.
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாய் பிழையும் நின்னஞ்செழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!
நிலவொளியில் கிரிவலம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்
* ஆன்மிக நலம், அருள் ஏற்படும்.
* நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
* நியாயமான கோரிக்கைகள் நிச்சம் கைகூடும்.
* திருமண தோஷம் விலகி, திருமணம் விரைவில் நடைபெறும்.
* குழந்தைச் செல்வம், நன்மக்கட்பேறு வாய்க்கும்.
* பகை விலகும்.
* உடல் உறுதி பெறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* புகழும், பொருளும் கிடக்கும். தொழில் விருத்தி ஏற்படும்.
கோவிலில் பிரகாரம் வரும்பொழுது...
கணபதிக்கு ஒரு பிரகாரம்
சூரியனுக்கு இரண்டு பிரகாரங்கள்
சிவன் பார்வதிக்கு மூன்று பிரகாரங்கள்
விஷ்ணு இலக்குமிக்கு நான்கு பிரகாரங்கள்
அரச மரத்திற்கு ஏழு பிரகாரங்கள்
குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது.
கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க கடவுள் துதி
வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள் சிலர், வினாத்தாளை வாங்கியவுடன் பதிலை மறந்து விடுவதுண்டு. இதனால் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ மாணவியர்கள் தினமும் கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றைப் படிக்கலாம். சரஸ்வதி கவசம் படித்தால் கல்வியில் தேர்ச்சியுறலாம். கற்றவர்கள் பாராட்டும் அளவு முன்னேற்றமும் வந்துசேரும்.
தெய்வங்களும்... திசையும்...
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது. அதற்கேற்ப வழிபட்டால்தான், அற்புதமான பலன் கிடைக்கும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும். ஆனால் நடராஜர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி படங்களை தெற்கு நோக்கி இருக்கும் விதத்தில் வைத்து வழிபட்டால்தான், சிறப்பான பலன்களை பெற முடியும். நடராஜர் படத்தை திருவாதிரை நட்சத்திர நாளில், பூஜையறையில் வைத்து சிவபுராணம் படித்தால், கலைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிட்டும். தட்சிணாமூர்த்தி படத்தை உத்திரம் நட்சத்திரம் அன்று பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் வளர்ச்சியைக் காணலாம்.
பலம் தரும் பழங்கள்
பார்வை பலத்தைக் கூட்டும் நெல்லிக்கனி
இருதயத்தைக் காக்கும் மாதுளம் பழம்
ஜீரண சக்தியைக் கொடுக்கும் பப்பாளிப்பழம்
உடல் பருமனைக் கூட்டும் வாழைப்பழம்
தேனுடன் இணைத்துச் சாப்பிட்டால் இருமல் நீக்கும் பலாப்பழம்
ரத்த விருத்தியை அதிகரிக்கும் சாத்துக்குடி
சதைப்பிடிப்பை அகற்றும் திராட்சை
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் கொய்யா
ரத்தத்தைச் சுத்தமாக்கும் எலுமிச்சை
ஞாபக சக்தியைக் கூட்டும் விளாம்பழம்
- கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனி மாதத்திற்கான குரு பவுர்ணமி இன்று அதிகாலை சுமார் 2.33 மணியளவில் தொடங்கியது. நாளை அதிகாலை 3.08 மணியளவில் நிறைவு பெறுகிறது.
இன்று காலையில் பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கிரிவல பாதையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.
- வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வருகிற 10-ந்தேதி பகல் 12.32 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 11-ந்தேதி பகல் 1.52 மணி வரை நீடிக்கிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் தர்ப்பகராஜ் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
- பவுர்ணமி நாளை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைகிறது.
- சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கடந்த மாதம் பவுர்ணமியின் போது கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) மாலை தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை நிறைவடைகிறது.
மேலும் இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தீபத் திருவிழாவின் போது எவ்வாறு பக்தர்களை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, பக்தர்கள் வந்து செல்லும் வழி குறித்து வருகிற பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை வைத்து ஒத்திகை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் ராஜகோபுரத்தில் இருந்தும், அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்தும் கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மேலும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் எந்தவித இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாள் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- இன்று மாலை வரை பவுர்ணமி உள்ளது.
- மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிறுவர் முதல் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிதவித்தனர். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.
மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.
- 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சுற்று பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளம்போல் காட்சி அளித்தனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி நேற்று மாலை 4.48 மணி வரை இருந்ததால் 2-ம் நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் சாமி தாிசனம் செய்தனர். தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வரை பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.






