என் மலர்
வழிபாடு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்துதவுவீர்கள். வெளியுலகத் தொடர்பும் விரிவடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
கல்யாண முயற்சி கை கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.
கடகம்
அலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வேலைப்பளு கூடும். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல் கொடுக்கல்கள் ஆதாயம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி லாபம் தரும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக மாறும். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
கும்பம்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
மீனம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாகத் தீட்டிய திட்டம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண முயற்சி கைகூடும்.
- 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
- நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 13-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
நாட்டுப் பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். தொழில் ரீதியாக சிலர் உங்களைத் தொடர்பு கொள்வீர்கள்.
ரிஷபம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
யோகமான நாள். அதிகாலையிலேயே அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தொலைபேசி வழியில் நல்ல செய்தி வந்துசேரும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னி
வீண்பழிகள் அகலும்நாள். வியாபார விருத்தியுண்டு. கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது.
துலாம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்தையும் இப்போதே செய்வோமா பிறகு செய்வோமா என்றுயோசிப்பீர்கள். நண்பர்கள் மீது நம்பிக்கை குறையும்.
விருச்சிகம்
புதியபாதை புலப்படும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். மாற்றினத்தவர்கள் மூலம் மனதிற்கினிய செய்தி கிடைக்கும்.
தனுசு
தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். கூட்டுத்தொழிலில் லாபம்உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கும்பம்
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தேகநலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
மீனம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கற்றவர்களின் பாராட்டுக்களால் கனிவு கூடும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
- திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-18 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி காலை 7.54 மணி வரை பிறகு பவுர்ணமி பின்னிரவு 3.55 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : கார்த்திகை பிற்பகல் 3.08 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி, நத்தம் மாரியம்மன் கோவிலில் லட்ச தீபக்காட்சி, திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்
இன்று பவுர்ணமி. ஸ்ரீ பாஞ்சராத்திரி தீபம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்ப உற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் லட்ச தீபக்காட்சி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீகுருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-பொறுப்பு
கடகம்-பெருமை
சிம்மம்-ஆதரவு
கன்னி-நட்பு
துலாம்- உதவி
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- அன்பு
மகரம்-பக்தி
கும்பம்-ஆக்கம்
மீனம்-போட்டி
- திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
- உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த விழாவின்போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே அனுப்பி வைத்து வருகிறார்கள். இந்த மாலைகளே சுவாமிகளுக்கு சாற்றப்படுகின்றது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 163-வது ஆண்டாக அலங்கார மாலைகளை திருவண்ணாமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் கே.கே.சிவகுமாரன் குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாலைகள் அனைத்தும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தீபாராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை வணங்கி சென்றனர்.
- பார்வதிதேவி பாவத்தை போக்க தவம் செய்ய காஞ்சிபுரத்தில் உள்ள கம்பா நதிக்கரைக்கு சென்றார்.
- திருவண்ணாமலைக்கு சென்று பார்வதிதேவி தவம் மேற்கொண்டார்.
கயிலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் தம் கைகளால் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. எங்கும் ஒரே இருள் சூழ்ந்தது. எல்லா தொழில்களும் செயலற்று போயின. இதனால் சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டியதன் பேரில் அவர் தனது நெற்றிக்கண்ணை லேசாக திறந்தார். அதன் மூலம் உலகில் இருள் விலகி வெளிச்சம் உண்டாது.
பார்வதிதேவி தனது செயலுக்கு வருந்தினார். பின்னர் பாவத்தை போக்க தவம் செய்ய காஞ்சிபுரத்தில் உள்ள கம்பா நதிக்கரைக்கு சென்றார். வெகுநாள் தவத்திற்கு பிறகு சிவன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். அதற்கு பார்வதிதேவி உங்கள் உடம்பில் இடப்பாகம் எனக்கு வேண்டும் என்றார்.
அதற்கு சிவபெருமான், 'நீ விரும்பியபடியே எனது இடப்பாகத்தை உனக்கு தருவோம். இந்த காஞ்சிபுரத்திற்கு தெற்கே நினைத்தாலே முக்தி தரும் புனித நகரமான திருவண்ணாமலை உள்ளது. அங்கு செல். நான் வந்து உனக்கு இடப்பாகம் தருவேன்' என்று கூறினார்.
அதன்படி பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு சென்று அங்கு தவம் மேற்கொண்டார். அப்போது திருவண்ணாமலை பகுதிக்கு வந்த மகிடாசுரனுடன் போரிடும் சூழல் ஏற்பட்டது. பார்வதிதேவி, துர்க்கையை போருக்கு அனுப்பினார். பெரும் போராட்டத்திற்கு பின்னர் மகிடாசுரன் வீழ்த்தப்பட்டான். அவனது உடலில் இருந்து விழுந்த சிவலிங்கத்தை பார்வதிதேவி எடுத்தபோது அது கையில் ஒட்டிக்கொண்டது.
அந்த லிங்கம் விடுவிக்கப்பட நவதீர்த்தங்களில் நீராட வேண்டும் என்று கவுதம முனிவர் கூறியதை அடுத்து அங்கே தனது வாளால் பூமியை பிளந்து ஒன்பது தீர்த்தங்களும், புண்ணிய குளங்களும் தோன்ற செய்தார். பின்னர் பார்வதி தேவி அந்த தீர்த்தங்களில் நீராடி பாவத்தை போக்கினார்.
பிறகு அண்ணாமலை கோவிலுக்கு சென்று வணங்கினார். அப்போது மலையின் மீது ஒரு வெளிச்சம் உண்டானது. அதிலிருந்து தோன்றிய சிவபெருமான், உமையாளுக்கு தனது உடலில் இடப்பாகத்தை அளித்தார். அந்த காட்சியை கண்டு தேர்வர்களும், முனிவர்களும் வணங்கினர்.
- அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்து பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29-ந் தேதி வெள்ளி தேரோட்டம் 30-ந் தேதி மகா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
இந்த நிலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.
மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா" என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.
பரணி தீபத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்ததால் காலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
24 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4764 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. 130 இடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆந்திர முன்னாள் மந்திரி நடிகை ரோஜா, நீதியரசர் மகாதேவன், ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.தர்மராஜன், கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், டாக்டர் சேஷாத்ரி, அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனி மற்றும் சாரல் மழையிலும் பரணி தீப தரிசனம் கண்டு மனம் உருக வழிபட்டனர்.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு தீபத்திருவிழா கூடுதல் உற்சாகத்துடன் நடக்கிறது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை.
- மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும்.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை திருநாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, மிக வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
வீட்டில் விளக்கேற்றும்போது, நமது விருப்பத்திற்கேற்ற எண்ணிக்கையில் விளக்கேற்றலாம் என்றாலும் குறைந்தபட்சம் 27 விளக்காவது ஏற்றுவது சிறப்பாகும்.
27 விளக்குகளும் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக அமைகின்றன. மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
முதலில் வாசலில் கோலத்தின் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். வாசல், நிலைவாசலில் தீபம் ஏற்றிய பிறகு வெளியில் ஏற்றிய ஒரு தீபத்தை எடுத்து வந்து வீட்டிற்குள் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, கழிவறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம்.
விளக்கை வெறும் தரையில் ஏற்றக்கூடாது. வாழை இலையின் மீது வைத்து ஏற்றலாம். ஒரு விளக்கை சாமி படத்தின் முன்பு வைத்து, நெய் தீபமாக ஏற்றி வழிபடுவது விசேஷமாகும்.
- சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர்.
- கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் தான். ஆன்மிக பூமி, சித்த பூமி, நினைத்தாலே முக்தியை தரும் அற்புதத் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது, உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலம்.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது மகா புண்ணியம் என்பார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும், சிவபெருமான் ஜோதி வடிவாக மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது.
ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் "என்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவர்" என்று பதிலளித்தார். பின்னர், சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக மாறி நின்றார்.
இதையடுத்து பிரம்மதேவர், அன்னப் பறவை வடிவம் கொண்டு, சிவபெருமானின் முடியைக் காணவும், திருமால் வராக (பன்றி) வடிவம் எடுத்து ஈசனின் அடியைக் காணவும் புறப்பட்டனர். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை. திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் தெரிவித்தார்.
ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறியதுடன், அதற்கு சாட்சியாக சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றையும் அழைத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில் இருக்காது என்றும், தாழம்பூவை இனி சிரசில் சூடமாட்டேன் என்றும் சாபம் அளித்தார்.
சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் மலையாக உருமாறினார். பின்பு வழிபடுவதற்கு ஏற்றவாறு சுயம்பு லிங்கமாக மலையடிவாரத்தில் தோன்றினார். அந்த சுயம்புலிங்கத்தை மையமாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.
சிவபெருமான் மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது. பல யுகங்களை தாண்டி நிற்கும் இந்த மலையில் முனிவர்களும், சித்தர்களும் வலம் வந்து வழிபட்டிருக்கிறார்கள். சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அதிகாலையில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறாா், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதே இதன் தத்துவம்.
பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கோவில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வருவார். இந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் அவர் சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை. அவர் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும்.
அதன்பிறகே, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக, 7½ அடி உயர கொப்பரையில், ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றும் உரிமை, பர்வதராஜ குலத்தினருக்கு உரியது. இந்த மகா தீபம், தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபமானது, மலையை சுற்றியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்துக்கும் தெரியும் என்கிறார்கள். எரிந்த தீபத்தில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிற மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோக முயற்சி அனுகூலம் தரும்.
ரிஷபம்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
மிதுனம்
யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு மேலோங்கும்.
கடகம்
முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
சிம்மம்
எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி தரும் நாள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். திருமண வாய்ப்பு கைகூடும்.
கன்னி
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கை கொடுக்கும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும்.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. திட்டமிட்ட செயலொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.
விருச்சிகம்
வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். பக்கத்தில் உள்ளவர்களால் பக்கபலமாக இருப்பர். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும்.
மகரம்
குறைகள் அகலக் குகனை வழிபட வேண்டிய நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
மீனம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவ முன்வருவர். நண்பர்களால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வீடு கட்டும் முயற்சி பலன் தரும்.
- திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-17 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி காலை 10.13 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : பரணி மாலை 4.47 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரருக்கு இன்று மகாதீப தரிசனம், கார்த்திகை விரதம்
இன்று திருக்கார்த்திகை, திருவண்ணாமலை தீபம். கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் தீபோற்சவ காட்சி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சாந்தம்
கடகம்-நலம்
சிம்மம்-லாபம்
கன்னி-வெற்றி
துலாம்- அமைதி
விருச்சிகம்-பொறுமை
தனுசு- தேர்ச்சி
மகரம்-ஊக்கம்
கும்பம்-விவேகம்
மீனம்-மாற்றம்
- கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி, இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.58 மணிக்கு தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






