என் மலர்
வழிபாடு
- மேஷம் தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம்.
- மீனம் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.
மேஷம்
தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம். மேஷ ராசிக்கு தனத்தை கொடுக்கக்கூடிய கிரகமான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தோற்றப் பொலிவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய தொழில் சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். எந்தப் பஞ்சாங்கத்தின் படி பார்த்தாலும் மேஷ ராசிக்கு ஏழரை சனி நடக்கும் காலம் என்பதால் தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை மதிப்பது அவசியம்.
விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். விரும்பியவர்கள் வந்து இணைவார்கள். 10.2.2026 அன்று நள்ளிரவு 1.11 மணி முதல் 12.2.2026 அன்று பகல் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக உழைப்பும் குறைந்த ஊதியமும் கிடைக்கும். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷபம்
இழுபறிகள் குறையும் வாரம். லாப ஸ்தானத்தில் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வாராக்கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப்பிரிவினை பங்கு முழுமையாக சொத்தாகவோ, பணமாகவோ வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை மனக்கசப்பு முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான முயற்சியில் தந்தை, மகனுக்கு ஒருமித்த கருத்து நிலவும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.12.2.2026 அன்று பகல் 1.42 மணி முதல் 15.2.2026 நள்ளிரவு 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு இருக்கும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக் கூடாது. அஷ்டலட்சுமிகளை வழிபடவும்.
மிதுனம்
திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ஜென்ம குரு பகவான் வெகு விரைவில் வக்கிர நிவர்த்தி அடையப் போகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பேச்சாற்றலால் லாபம் சம்பாதிக்க முயல்வீர்கள். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். உறவினர் பகை அகலும். வியாபாரம், தொழிலில் இருந்த மந்த நிலைமாறும். பெரிய மனிதர்களின் ஆதரவோடு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனித் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பணி நிரந்தரமாகும்.
சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு விருப்ப திருமணம் நடக்கலாம். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். திருமணத்தடை அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடை, தாமதம் அகலும். தினமும் சிவபுராணம் படிக்க தொல்லைகள், மனக் கவலைகள் அகலும்.
கடகம்
உழைப்பிற்கான அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய அற்புதமான வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் சம சப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். இது சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலங்கள் உண்டாகும். மறைமுகப் பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் பூர்த்தியாகும். சிலருக்கு கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவுரவப் பதவிகள் உயர்வுகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும்.
சிலருக்கு சொத்துக்கள் அடமானம், விற்றல் மூலமும் பணம் கிடைக்கும். சிலருக்கு சொத்துக்கள் வாங்க, கட்ட, விஸ்தரிக்கத் தேவையான பொருள் உதவி கிடைக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். தாய் மாமாவின் ஆதரவால் தாய்வழிச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். மங்களகரமான சுப நிகழ்வுகள் நடைபெறும். நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அம்பிகை வழிபாட்டால் சங்கடங்கள் தீரும்.
சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தெளிவாக திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை இருக்கும். சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். வேலை பளு கூடும். எளிமையாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகும். பிறரை நம்பி ஒப்படைத்த செயல்களால் விரோதம் உண்டாகும். கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் உங்களின் புதிய முயற்சிகளில் தடை உண்டாகலாம்.
சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். முன் கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்க வேண்டும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். சனிக்கிழமை ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.
கன்னி
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதியான புதன் ராசிக்கு ஆறில் ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார்கள். புதிய முயற்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
வேலை இழந்தவர்களுக்கு புதிய ஆன்லைன் வேலை கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி நிச்சயம். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். பெண்களுக்கு தாய் வழிச் சொத்து கிடைப்பதில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். முழுப் பங்கும் முறையாக வந்து சேரும். புதிய நட்புக்கள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் இருந்த இழுபறி நிலைமாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும். மேலும் சுப பலனை அதிகரிக்க ஸ்ரீ மீனாட்சியை வழிபடவும்.
துலாம்
புதிய வாய்ப்புகள் கைகூடும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதனுடன் சஞ்சரிக்கிறார். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டாகும். பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினை பிடிக்க முடியும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் தனித் திறமைகளை வெளிப் படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும்.
பணிச்சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். நிலவிய தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள். சிலர் புத்திர பாக்கியத்தை அடைய செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். தினமும் மாலை வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட கடன் தீர்ந்து தாராள தன வரவு உண்டாகும்.
விருச்சிகம்
புதிய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும் வாரம். தன அதிபதி குரு பகவான் தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். தொழிலை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் ஏற்படும்.
நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். காணாமல் போன நகை, பணம் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையத் தொடங்கும். தேவையற்ற செலவுகள் குறைந்தால் சேமிப்பு உயரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி மன நிம்மதி ஏற்படும். வீடு, வாகன யோகம் கை கூடி வரும். சித்தப்பாவின் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். பிறரை அண்டி பிழைத்த நிலை மாறும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சியில் சாதகமான பலன் எதிர்பார்க்கலாம். சிதம்பரம் நடராஜரை வழிபடவும்.
தனுசு
தனித்திறமை வெளிப்படும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். புதிய தேடல் உண்டாகும். உடன் பிறப்புகளால் அனுகூலமும், ஆதாயமும் உண்டாகும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும் அர்தாஷ்டமச் சனி தொடங்கினாலும் குரு ராசியை பார்ப்பதால் படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். வேலை ஆட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரார்த்தனைகள் நிறைவேறும்.
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளையும் அவசியமற்ற கடனையும் குறைப்பது நல்லது. உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள். தாராள தன வரவு உண்டு. திருமணத் தடை விலகும். வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும். வீட்டில் ஸ்ரீ சக்ரம் வைத்து வழிபடவும்.
மகரம்
அறிவாற்றல் பெருகும் வாரம். ராசியில் நிலவிய கிரக சேர்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. வார இறுதியில் செவ்வாய் மட்டும் ராசியில் சஞ்சரிப்பார். பிற மாத கிரகங்கள் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான பணிகளைக் கூட சுலபமாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி வளர்ச்சி கிட்டும். சிலருக்கு தொழில் கடன் கிடைக்கும். பிள்ளைகளின் உதவியால் அடமானச் சொத்து நகைகளை மீட்பீர்கள்.
பூர்வீக சொத்து தொடர்பான முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்குப் பிறகு சாதகமாகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்து பவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். இறை பணிகளில் ஈடுபாடுகள் ஆர்வம் எழும். வழக்குகளில் வெற்றி பெறும் சூட்சுமத்தை அறிவீர்கள். வெளிநாட்டு குடியுரிமை கிடைப்பதில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். மருத்துவத்தில் நோய் கட்டுப்படும். சிலருக்கு வீண் விரயங்களும் இருக்கும். ராஜ அலங்கார முருகனை வழிபடவும்.
கும்பம்
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் உள்ள ராகுவுடன் புதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கை ஏற்படபோகிறது. ராசியில் உள்ள ராகுவுடன் சூரியன் சேர்வது கிரகணதோஷ அமைப்பாகும். இந்த மாதம் ஏற்படப்போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் ராசியில் கிரகணம் ஏற்படுவதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பணிபுரியும் இடத்தில் சக நண்பர்களிடம் ஏற்பட்ட மனபேதம் தீரும். திருமண முயற்சியில் சாதகமான பலன் உண்டு. சிலருக்கு மறுமணம் நடக்கும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தந்தை வழியில் உதவி, பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் முழுவதும் சூரியன் மீனத்திற்கு செல்லும் வரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6 மணிக்குள் சிவ வழிபாடு செய்து வர தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்
புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உச்ச செவ்வாய் சஞ்சரிப்பதால் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு சேமிக்க தொடங்குவீர்கள். கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சிற்கு குடும்ப உறுப்பினர்கள் மதிப்பு கொடுப்பார்கள். ஜென்மச் சனியின் காலம் என்றாலும் குரு சாதகமாக இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதும் புத்திசாலித்தனம்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம் பழைய சொத்துக்களை விற்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். 10.2.2026 அன்று நள்ளிரவு 1.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதி காக்க வேண்டியது அவசியம். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. கூட்டம் களை கட்டும் கல்லா களை கட்டாது. வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- கி.பி.10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், பின்னர் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் அமைந்துள்ளது, திருவாலீஸ்வரர் கோவில். இக்கோவில் மூலவர் திருவாலீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்திரநாயகி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிரம்மதேசத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு வந்தால் ஒருவரின் தலையெழுத்து மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு
கி.பி.10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், பின்னர் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சுவர்களில் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் பல உள்ளன. மூலவர் சன்னிதியின் வடக்கு சுவரில் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதே சுவரில் மற்றொரு மன்னரின் கல்வெட்டு ஒன்றில், ராஜராஜ சோழன் - சதுர்வேதி மங்கலம் கிராம மக்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு
இங்குள்ள பழங்கால நினைவுச் சின்னங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி, மத்திய அரசின் கீழ் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவாலீஸ்வரர் கோவில் சோழ கட்டிடக் கலை பாணியில் இருந்தாலும், கோவிலின் வெவ்வேறு இடங்கள் சோழர், பாண்டியர் காலத்து பாணியையும் எடுத்துக்காட்டுகிறது.
கோவில் அமைப்பு
கோவில் கருவறையில் மூலவரான சிவபெருமான், திருவாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோவில் விமானத்தில் சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருகிறார். மேலும் பூத கணங்கள், ரிஷப வாகனம், கஜ சம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. இதன் கலைநயம், பனமலை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால கோவில்களை ஒத்திருக்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமான் தனித்துவமான நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
பிரகாரத்தில் சூரிய பகவான், அதிகார நந்தி, சப்த கன்னியர்கள், சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக, பெரும்பாலான கோவில்களில் அம்பாள், சுவாமியின் இடதுபுறமாக வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால், இங்குள்ள தாயாரான சவுந்திரநாயகி அம்பாள் சுவாமியின் வலதுபுறத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். இந்த அன்னையை வழிபட்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
காசிக்கு சென்று பாவங்களைப் போக்க நினைப்பவர்கள், அங்கு போக முடியாத பட்சத்தில் காசிக்கு அடுத்த தலமாக கருதப்படும் இந்த பிரம்மதேசம் திருவாலீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபடலாம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் வரும் பவுர்ணமி மற்றும் இரண்டு பிரதோஷ தினங்களும் சிறப்பிக்கப்படுகின்றன.
கோவில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பூஜை நடைபெறும்.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து கவுதமபுரி சாலை வழியாக சென்றால் பிரம்மதேசம் திருவாலீஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
- சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-25 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி முழுவதும்
நட்சத்திரம் : சுவாதி முழுவதும்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்
சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - போட்டி
ரிஷபம் - செலவு
மிதுனம் - நற்செயல்
கடகம் - ஆதரவு
சிம்மம் - புகழ்
கன்னி - சாதனை
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - ஜெயம்
தனுசு - ஆதாயம்
மகரம் - சாந்தம்
கும்பம் - லாபம்
மீனம் - வரவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்
விரோதங்கள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
மிதுனம்
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. சொத்துகளால் லாபம் ஏற்படும்.
கடகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தன வரவு திருப்தி தரும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் மாறும்.
துலாம்
கடமை உணர்வோடு செயல்படும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். திருமண முயற்சி கைகூடும்.
மகரம்
பண வரவு திருப்தி தரும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில் முன்னேற்றம் உண்டு. ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
கும்பம்
சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் வீணான குழப்பம் தோன்றும்.
- கண்ணாடியை அகற்ற முடியாவிட்டால், இரவில் அதை ஒரு துணியால் மூடவும்.
- தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள்.
ஜாதகம் சரியாக இருந்தாலும் பலர் திருமணங்களில் தடைகள் அல்லது விவகாரத்தை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள். இன்று, திருமணத்திற்கு இடையூறாக இருக்கும் ஐந்து வாஸ்து தவறுகள் மற்றும் அவற்றின் எளிய தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தவறான திசையில் படுக்கையறை
வாஸ்துவின் படி, ஆண் அல்லது பெண்ணின் படுக்கையறை எப்போதும் தென்மேற்கில் (தென்மேற்கு மூலையில்) இருக்க வேண்டும். இந்த திசை உறவு நிலைத்தன்மை மற்றும் திருமண பேரின்பத்தைக் குறிக்கிறது. வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் ஒரு படுக்கையறை நிலையற்ற உறவுகளுக்கு வழிவகுக்கும், மேலும் திருமணங்கள் தாமதமாகலாம் அல்லது முறிந்து போகலாம். வடகிழக்கு என்பது வழிபாடு மற்றும் அமைதிக்கான திசையாகும். இங்கே ஒரு படுக்கையறை இருப்பது திருமண ஸ்திரத்தன்மையின்மைக்கு வழிவகுக்கும்.
படுக்கைக்கு முன்னால் கண்ணாடி
வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கைக்கு முன்பாகவோ அல்லது அருகிலோ கண்ணாடியை வைத்திருப்பது ஒரு கடுமையான குறைபாடாகக் கருதப்படுகிறது. தூங்கும் போது உங்கள் பிரதிபலிப்பைப் பார்ப்பது திருமண வாழ்க்கையில் பதற்றம், தவறான புரிதல்கள் மற்றும் பிரிவை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் தவறான திருமண முடிவுகளுக்கு வழிவகுக்கும். எப்போதும் கண்ணாடியை படுக்கையிலிருந்து விலக்கி வைத்து மூடி வைக்கவும். கண்ணாடியை அகற்ற முடியாவிட்டால், இரவில் அதை ஒரு துணியால் மூடவும்.

உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருத்தல்
வாஸ்துவின் கூற்றுப்படி, நாற்காலி, மேசை, கட்டில் அல்லது அலமாரி, பாத்திரங்கள், கடிகாரங்கள், பிரேம்கள் அல்லது வேறு ஏதேனும் பயனற்ற பொருட்களை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது. இந்த பொருட்கள் வீட்டிற்குள் தனிமை, விரக்தி மற்றும் தடைகளை கொண்டு வருகின்றன. திருமணத்தில் தாமதங்கள் அல்லது உறவு முறிவுகள் பெரும்பாலும் இதனுடன் தொடர்புடையவை. வீட்டிலிருந்து உடைந்த அனைத்து பொருட்களையும் உடனடியாக அகற்றவும். நல்ல நிலையில் உள்ள பொருட்களை மட்டும் வைத்திருங்கள்.
போலி புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள்
தனிமையில் இருப்பவர்களின் படங்கள், சோகமான முகங்கள், மறையும் சூரியன், போர் அல்லது உடைந்த உறவுகளை சித்தரிக்கும் ஓவியங்களை உங்கள் வீட்டில் வைப்பது வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்தப் படங்கள் தனிமை மற்றும் விரக்தியை அதிகரிக்கும். இது திருமணத்தில் தடைகளை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் பூக்கள், இயற்கை, மகிழ்ச்சியான தம்பதிகள் அல்லது குடும்பங்களின் படங்களை வைக்கவும்.
பூஜை அறையில் வாஸ்து குறைபாடுகள்
பூஜை அறை வடகிழக்கில் (ஈசானிய மூலை) இருக்க வேண்டும். அது அழுக்காகவோ, சிக்கலாகவோ அல்லது தவறான திசையில் இருந்தாலோ, குடும்ப தெய்வம் கோபமடைந்து, வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் (குறிப்பாக திருமணம்) தடைபடும். ஒவ்வொரு நாளும் பூஜை அறையை சுத்தமாக வைத்திருங்கள், தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள்.
இந்த தவறுகளுக்கு எளிய தீர்வுகள்
உங்கள் படுக்கையறையை தென்மேற்கு நோக்கி மாற்றவும். படுக்கையிலிருந்து கண்ணாடிகளை அகற்றவும் அல்லது இரவில் அவற்றை மூடவும். உடைந்த அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்துங்கள். சோகமான படங்களை அகற்றி, அவற்றை பூக்கள் மற்றும் மகிழ்ச்சியான குடும்ப புகைப்படங்களால் மாற்றவும். வடகிழக்கு மூலையில் உள்ள பூஜை அறையை சுத்தமாக வைத்திருங்கள். இந்த நடவடிக்கைகள் வாஸ்து குறைபாடுகளை நீக்கி திருமண வாய்ப்புகளை அதிகரிக்கும்.
- கருவறையில் சிவன் சமேதமாக அம்மன் காட்சியளிப்பதால், சொக்காயி அம்மன் மகேஸ்வரியின் அம்சமாக விளங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- வடக்கு புறத்தில், திரவுபதி அம்மனுடன் பஞ்ச பாண்டவர்களின் பிரம்மாண்ட சிலைகள் உள்ளன.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில், வீராணம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள சித்தமல்லி கிராமத்தில், சொக்காயி அம்மன் சமேத திருவரசமூர்த்தி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. கிராமப்புற மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவில், நாடிவரும் பக்தர்களுக்கு தைரியத்தையும், சிறந்த மன நிலையையும் அருள்கிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் காவல் மற்றும் பரிவார தெய்வங்கள் வீற்றிருந்து, ஊரின் எல்லையைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
தல வரலாறு
காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி, 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜாதித்யனால் உருவாக்கப்பட்டது. ஏரியின் மேற்கு திசையில் உள்ள மண் மேடான பகுதியில் தான் சித்தமல்லி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசமரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் இறைவன் காட்சியளித்ததால், 'திருவரச மூர்த்தி அய்யனார்' என்ற பெயர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருடன் சொக்காயி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
மகேஸ்வரி அம்சமான சொக்காயி அம்மன்
கருவறையில் சிவன் சமேதமாக அம்மன் காட்சியளிப்பதால், சொக்காயி அம்மன் மகேஸ்வரியின் அம்சமாக விளங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஏழு சப்த கன்னிமார்களில் ஒருவரான மகேஸ்வரியே, இத்தலத்தில் சொக்காயி அம்மனாக அருள் பாலிப்பதாக ஐதீகம். பழங்கால புராணக் கதைகளின்படி, அந்தகாசுரன் எனும் அசுரனை அழிக்க சிவனின் சக்தியில் இருந்து தோன்றிய தேவியர்களில் மகேஸ்வரியும் ஒருவராகக் கூறப்படுகிறது. இந்த அம்மனை வழிபட்டால் கோபம், மனச்சஞ்சலம் நீங்கி தைரியமும், மன உறுதியும், தெளிவான சிந்தனையும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் அமைப்பு
கோவில் நுழைவுவாசலில், காவல் தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன. முதலில் மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் காட்சியளிக்கிறார். எதிர்புறம் தலை அறுக்கப்பட்ட மதுரை வீரன் சிலை உள்ளது. அருகில் அய்யனார் சாமியின் குதிரை மற்றும் நாயின் சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் முன்பாக கொற்றவையின் சிலை தத்ரூபமாக அமைந்துள்ளது.
வடக்கு புறத்தில், திரவுபதி அம்மனுடன் பஞ்ச பாண்டவர்களின் பிரம்மாண்ட சிலைகள் உள்ளன. இவற்றின் கீழ், பழங்கால நடுகல் (வீரக்கல்) ஒன்று காணப்படுவது சிறப்பாகும். குதிரையில் அமர்ந்த வீரனும், அவருடன் ஒரு பெண்ணும் போருக்கு புறப்படுவது போன்ற உருவம் இதில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் தான், கோவில் உருவாகும் முன்பு வழிபட்ட திருவரசமூர்த்தி மற்றும் சொக்காயி அம்மனின் மூல வடிவமாக இருக்கலாம் என்று ஊர் பெரியவர்கள் நம்புகின்றனர்.
ஊர் பெரியவர்கள் கூற்றுபடி, திருவரசமூர்த்தி மற்றும் சொக்காயி அம்மன் இந்த ஊரில் வாழ்ந்த மக்களின் மூத்த குடியினராக இருந்திருக்கலாம் என்றும், மக்களின் நலன் கருதி தங்கள் உயிரை ஈந்த தெய்வீக வடிவங்களாக அவர்கள் போற்றப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதன் விளைவாக, மூத்த குடியாக இருந்த சொக்காயியை குல தெய்வமாகவும், திருவரசமூர்த்தியை காவல் தெய்வமான அய்யனாராகவும் வணங்கும் வழக்கம் உருவாகியிருக்கலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். பின்னாளில், சோழர்கள் காலத்தில் சிவ வழிபாடு மேலோங்கியபோது, இருவருக்கும் தனித்தனியே திருமேனிகள் அமைத்து கோவில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
கோவிலின் தெற்கு புறத்தில் விநாயகர் சிலையும், குளமும் அமைந்துள்ளன. கருவறையில், சொக்காயி அம்மன் சமேதமாக திருவரசமூர்த்தி அய்யனார் அருள்பாலிக்கிறார். கோவிலின் உள்புறத்தில் முருகர் மற்றும் விநாயகர் சிலைகளும் உள்ளன. இக்கோவிலில் ஆடி மாதத்தில் அதிக அளவில் பக்தர்கள் திரளாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவிடம்
கடலூரில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக 35 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் உள்ளது.
'சித்தமல்லி' பெயர்க்காரணம்
இந்த ஊரை சித்தமல்லி என்று அழைப்பதற்கான காரணம் குறித்து பல நம்பிக்கைகள் உள்ளன. ஒரு காலத்தில் இப்பகுதியில் சித்தர்கள் வாழ்ந்திருக்கலாம் அல்லது அவர்கள் வணங்கிய அம்மன் கோவில் காரணமாக இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வேடுகளின்படி, சோழர்கள் காலத்தில் சித்தர்கள் வாழ்ந்த ஊர்களுக்கு சித்தமல்லி என்ற பெயர் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. திராவிட மொழியில் 'ஹல்லி' என்பது ஏரிக்கரை அருகிலுள்ள குடியிருப்பைக் குறிக்கும் சொல்லாகும். காலப்போக்கில் 'சித்த ஹல்லி, 'சித்த பள்ளி' என்றாகி, பின்பு 'சித்தமல்லி' என மருவி இருக்கலாம் என்று ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்
- ஆமை இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள்.
- உடைந்த அல்லது சேதமடைந்த சிலையைத் தவிர்க்கவும்.
பொதுவாக மக்கள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியை நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக வாஸ்து முறைகளை பின்பற்றுகிறார்கள். வாஸ்து குறை இருந்தால் அது வீட்டிலுள்ள குடும்பத்தின் முன்னேற்றத்தையும் அமைதியையும் பாதிக்கின்றன. வாஸ்துவின் படி ஒருவரின் வீட்டை அலங்கரிப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே, சிலர் தங்கள் வீடுகளில் சிலைகளை வைத்து தங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றனர்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைப்பதற்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் சில சிலைகள் உள்ளன. அவை உங்கள் செழிப்புடன் தொடர்புடையவை. இருப்பினும், இந்த சிலைகளை வாஸ்து முறைகளின் படி வீட்டில் வைக்க வேண்டும், அப்போதுதான் அவை நல்ல பலன்களைத் தரும்.

காமதேனு படம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் காமதேனு பசுவின் படத்தை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை நீக்கி, செழிப்பை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது. காமதேனு படத்தை வடகிழக்கு மூலையில் வைக்கவும். இது உங்கள் சிந்தனையில் தெளிவைக் கொண்டுவரும், சரி, தவறுகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறனை மேம்படுத்தும், மேலும் சரியான முடிவுகளை உறுதி செய்யும்.

காமதேனு பசு சிலை
வீட்டில் காமதேனு பசுவின் சிலையை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை நீக்கி, செழிப்பை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது. உங்கள் வீட்டின் கிழக்கு மூலையில் காமதேனு பசுவின் சிலையை வைக்கவும். இந்த திசையில் வைப்பது உங்கள் ஆசைகளை நிறைவேற்ற உதவும். இதை ஒரு பிரார்த்தனை பகுதி, அல்லது படிப்பு அறையில் வைக்கலாம்.
ஆமை
ஆமை என்பது விஷ்ணுவின் கூர்ம அவதாரம். வாஸ்து முறைகளின் படி, ஆமை இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள். எனவே, வீட்டில் ஆமை சிலையை வைத்திருப்பது செழிப்பைத் தரும் என்று கருதப்படுகிறது.
இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்
ஒரே தெய்வத்தின் இரண்டு சிலைகளையோ அல்லது ஒன்றை ஒன்றுக்கு எதிரில் வைக்காதீர்கள். உடைந்த அல்லது சேதமடைந்த சிலையைத் தவிர்க்கவும். படுக்கையறை அல்லது கழிப்பறைக்கு அருகில் கோவில் கட்டாதீர்கள். மேலும், சனீஸ்வரின் சிலைகளையோ அல்லது துர்கா தேவியின் கோப வடிவத்தையோ தவிர்க்கவும்.
- தேய்பிறை சஷ்டி விரதம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-24 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நாளை விடியற்காலை 5.13 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : சித்திரை நாளை விடியற்காலை 4.53 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை
தேய்பிறை சஷ்டி விரதம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு திருமஞ்சனம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர், நாமகிரிப்பேட்டை ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லி அம்மன் கோவில்களில் அபிஷேகம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-இரக்கம்
கடகம்-மாற்றம்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-பொறுமை
துலாம்- போட்டி
விருச்சிகம்-புகழ்
தனுசு- உயர்வு
மகரம்-லாபம்
கும்பம்-நலம்
மீனம்-நற்செயல்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. நேற்றைய வரவை இன்று விலை உயர்ந்த பொருளாக மாற்றுவீர்கள்.
கடகம்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும்.
சிம்மம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு வாங்கும் யோகம் உண்டு.
கன்னி
லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் பம்பரமாக சுழன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
துலாம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சிகம்
வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும்.
தனுசு
மங்கலச்செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
மகரம்
முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பச் சுமை கூடும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமான பற்றாக்குறை அகல புதிய வழி பிறக்கும்.
கும்பம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.
- கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
- பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்னி சட்டி, அழகு குத்துதல், அங்கப் பிரதட்சணம், ஆயிரம் கண் பானை, கரும்புத் தொட்டில், தேர் இழுத்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். இந்த காலகட்டங்களில் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றுப்படுகையில் பக்தர்கள் கூட்டம் கடல்போல் காட்சி அளித்தது.
கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு பாலூட்டும் இடவசதி, குடிநீர் வசதி, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல முன்னேற்பாட்டு வசதிகளை செய்திருந்தன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாத்தூர் டி.எஸ்.பி. குருசாமி தலைமையில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது.
- சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது.
மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலுக்கு அதிபதியானவர், பிரம்ம தேவன். இவரால் தான் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் படைக்கப்படுகின்றன. பூமியில் பிரம்மனுக்கு கோவில்கள் குறைவு என்றாலும், அதில் நான்கு முகங்களுடன் பிரம்மா காட்சி தருவார். நான்கு முகங்களும் நான்கு வேதங்களையும், நான்கு திசைகளையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
புராணங்கள்படி, சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது. அவ்வாறு ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா 'நான்முகன்' ஆனதற்கு சில புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்றை இங்கு பார்ப்போம்.
சிவனை போன்று 5 தலைகள் இருந்ததால், "அழிக்கும் கடவுளான சிவபெருமானை விட, படைக்கும் கடவுளான நானே உயர்ந்தவர்" என்ற கர்வம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பிரம்மா யாரையும் மதிக்காமல் செயல்பட ஆரம்பித்தார். இதை அறிந்த சிவபெருமான், பிரம்மனின் கர்வத்தை அடக்கி, உண்மையை உணர்த்திட முடிவு செய்தார்.
ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் இருந்துகொண்டே பிரம்ம தேவனை அழைத்தார். சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது. இருப்பினும், படைப்பு தொழிலில் கவனம் செலுத்துவது போல இருந்தார். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், பிரம்மலோகம் வந்தார். அப்போதும் பிரம்மா, சிவபெருமானை கவனிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான சிவபெருமான், "பிரம்மனே! என்னை போன்று உனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் தானே இவ்வளவு ஆணவம். இப்போதே உனது ஐந்தாவது தலையை துண்டித்து விடுகிறேன்" என பிரம்மனின் ஒரு தலையை துண்டித்து எறிந்தார். மேலும், "படைக்கும் தொழிலை இழந்து, பூலோகத்தில் மானிடராய் வாழ்ந்து அவதிப்படுவாய்" என்று சாபமிட்டார்.
பின்பு, தன் தவறை உணர்ந்த பிரம்மா, பூலோகத்தில் மானிடராய் அலைந்து திரிந்து, செல்லும் இடமெல்லாம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவ்வாறு திருப்பட்டூர் தலத்துக்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, சிவபெருமான் மனம் மகிழ்ந்து பிரம்மனுக்கு சாப விமோசனம் அளித்தார். இதையடுத்து நான்முகனாக, பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலை கவனிக்க தொடங்கினார்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-23 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி மறுநாள் விடியற்காலை 4.03 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : அஸ்தம் பிள்ளிரவு 3.03 வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த/சித்தயோகம்
ராகு காலம் : காலை 10.30-12.00 மணி
எமகண்டம் : பிற்பகல் 3.00-4.30 மணி
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6-7 மணி மாலை 5-6 மணி
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை
சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருமயம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமணருக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - லாபம்
ரிஷபம் - விருத்தி
மிதுனம் - நிறைவு
கடகம் - கவனம்
சிம்மம் - முயற்சி
கன்னி - ஊக்கம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - சுகம்
தனுக - மேன்மை
மகரம் - உற்சாகம்
கும்பம் - தெளிவு
மீனம் - கடமை






