என் மலர்
வழிபாடு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். மனதிற்கினிய சம்பவம் மாலையில் நடைபெறும்.
ரிஷபம்
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
காலை நேரத்திலேயே காது இனிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
கடகம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். காரியங்களைத் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிடும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
கன்னி
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க இயலாது. தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றலாமா என சிந்திப்பீர்கள்.
துலாம்
பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகளைப் பெறும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு.
விருச்சிகம்
வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரு மடங்காகும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
சந்தோஷம் கூடும் நாள். அடகு வைத்த நகைகளை மீட்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர்.
மகரம்
லாபகரமான நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீண் விரயம் உண்டு.
மீனம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
- கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
- புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருத்தண்கா (தூப்புல்) இடத்தில் அமைந்துள்ளது விளக்கொளி பெருமாள் கோவில். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 45-வது திருத்தலமாகும். இக்கோவில் மூலவர் விளக்கொளி பெருமாள், தீபப் பிரகாசர், திவ்ய பிரகாசர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி தாயார்.
ஒரு சமயம் பிரம்மதேவர், 'பூலோகத்தில் தனக்கு கோவில் இல்லையே' என்பதை நினைத்து வருந்தினார். இதனால் சிவபெருமானை நினைத்து பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். மனைவியுடன் இணைந்துதான் யாகம் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால் பிரம்மதேவர், சரஸ்வதி தேவியின் துணையில்லாமல் யாகம் நடத்த தொடங்கினார். இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி தேவி, யாகத்தை தடுக்க எண்ணி உலகத்தையே இருளில் மூழ்க செய்தார்.
இதையடுத்து பிரம்மதேவர், மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். விஷ்ணு பகவான், பிரம்மனின் கோரிக்கையை ஏற்று, ஜோதி வடிவில் காட்சி தந்து யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். எனவே தான் இங்குள்ள இறைவன் 'விளக்கொளி பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். பின்பு பிரம்மதேவர், சரஸ்வதி தேவியையும் சமாதானம் செய்தார்.
இந்த ஆலயம் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கோவிலில் லட்சுமி, ஹயக்ரீவர், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ஆழ்வார்கள் ஆகியோருக்கும் சன்னிதி உள்ளன. கோவிலுக்கு வெளியே சரஸ்வதி தீர்த்தம் காணப்படுகிறது.
புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அவ்விழாவில் வேதாந்த தேசிகர், வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருள்வார். கல்வியில் சிறக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளை பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- பலர் தங்கள் படுக்கையறைகளில் கண்ணாடிகளை வைக்க விரும்புகிறார்கள்.
- படுக்கையறையை எப்போதும் சுத்தமாகவும், நன்கு காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையறை வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். இது ஓய்வு எடுக்க மற்றும் கணவன் மனைவியுடனும் தொடர்புடையது. எனவே, இங்கே வாஸ்து சாஸ்திரங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். படுக்கையறையில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதை ஆராய்வோம்.
படுக்கையறையில் சிலைகளை வைக்காதீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, தெய்வங்களின் சிலைகளை பூஜை அறையில் மட்டுமே வைக்க வேண்டும். அவற்றை வீட்டில் வேறு எங்கும் வைக்கக்கூடாது. மேலும், படுக்கையறையில் தெய்வங்களின் சிலைகளை வைக்கக்கூடாது.
தவறான இடத்தில் சிலைகளை வைப்பது பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி, திருமணத்தில் விரிசலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், சிலைகள் அல்லது படங்கள் அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் பரப்பும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
படுக்கையறையில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்
* வாஸ்து சாஸ்திரத்தின்படி, தானியங்கள் போன்ற உணவுப் பொருட்களை படுக்கையறையில் வைக்கக்கூடாது. அவற்றை அங்கே வைத்திருப்பது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கத்திகள், கத்தரிக்கோல் போன்றவற்றையும் படுக்கையறையில் வைக்கக்கூடாது.

* படுக்கையறையில் நீர் தொடர்பான பொருட்களை, மீன் தொட்டிகள், நீரூற்றுகள் அல்லது நீர் படங்களை வைத்திருப்பது வாஸ்து குறைபாடுகளை உருவாக்குகிறது. இந்த நீர் பொருட்கள் நிதி உறுதியற்ற தன்மையையும் வறுமையையும் அதிகரிக்கும். படுக்கையறையில் இதுபோன்ற பொருட்களைத் தவிர்த்து, இயற்கை அல்லது பூக்கள் போன்ற நேர்மறையான படங்களை வைக்கவும். இந்த சிறிய மாற்றங்கள் படுக்கையறையின் ஆற்றலை மேம்படுத்தி செழிப்பைக் கொண்டுவரும்.
* பலர் தங்கள் படுக்கையறைகளில் கண்ணாடிகளை வைக்க விரும்புகிறார்கள். இருப்பினும், அவற்றின் எதிர்மறை விளைவுகள் இடத்தைப் பொறுத்தது. மேலும், படுக்கையறையில் படுக்கைக்கு முன்னால் ஒரு டிரஸ்ஸிங் டேபிள் இருப்பது வாஸ்து குறைபாட்டை உருவாக்குகிறது, இது ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பாதிக்கிறது.
இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு கண்ணாடியை நிறுவினால், உங்கள் படுக்கை கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இருப்பது நல்ல யோசனையல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். படுக்கையறையில் உங்கள் படுக்கைக்கு முன்னால் ஒரு கண்ணாடியை வைப்பது உங்கள் மன அமைதியைக் கெடுக்கும்.
தூய்மையில் கவனம் செலுத்துதல்
வாஸ்து சாஸ்திரத்தில் தூய்மை மிகவும் முக்கியமானது. ஒரு ஒழுங்கற்ற மற்றும் அழுக்கான படுக்கையறை எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. இது நிதி சிக்கல்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. உங்கள் படுக்கையறையை எப்போதும் சுத்தமாகவும், நன்கு காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-22 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி பின்னிரவு 3.11 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.41 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் அபிஷேகம்
இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சி பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முருக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெரு மானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்ணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-நலம்
சிம்மம்-பக்தி
கன்னி-சிறப்பு
துலாம்- போட்டி
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-வெற்றி
கும்பம்-மாற்றம்
மீனம்-பணிவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
பிரச்சனைகள் அகலும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
கன்னி
யோகமான நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
தனுசு
புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில்ரீதியாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
மகரம்
வரவும், செலவும் சமமாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும்.
மீனம்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும்.
- சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார்.
- கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது, மிகவும் பழமை வாய்ந்த செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீசுவரர் திருக்கோவில். தேவார வைப்புத் தலம், மகாலட்சுமி வழிபட்ட தலம், ராகு-கேது பரிகாரத் தலம், சிவன், அம்பாள், சண்முகர் ஆகிய மூவருக்கும் தனித் தனியாக கொடிமரம் அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய தலமாக இக்கோவில் விளங்குகிறது. இத்தலத்தின் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்றும், இறைவி 'செண்பகாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தல வரலாறு
ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல தலங்களுக்கு சென்ற அர்ஜூனன், செண்பக காடு வழியாக வந்தபோது, வித்தியாசமான நிறத்தில் ஒரு பன்றி இருப்பதை கண்டான். அந்த பன்றியை வேட்டையாட எண்ணிய அர்ஜூனன், பன்றியின் மீது அம்பு எய்தான். அம்பு பாய்ந்த பன்றி, கீழே விழுந்து இறந்தது. அர்ஜூனன் அருகில் வந்து பார்த்தபோது, பன்றியின் உடலில் இரண்டு அம்புகள் இருந்தன.
அர்ஜூனன், 'இன்னொரு அம்பை யார் செலுத்தி இருப்பார்' என்று யோசித்தான். அந்த வேளையில் அங்கு வந்த வேடன் ஒருவன், "இந்த பன்றியை நான் தான் கொன்றேன். எனவே இது எனக்கு தான் சொந்தம்" என்றான். அர்ஜூனன், 'முதலில் அம்பு எய்தது நான் தான். என்னுடைய அம்புபட்டு தான் பன்றி வீழ்ந்தது. எனவே இந்த பன்றி எனக்கே சொந்தம்" என்றான். இதனால் கோபம் அடைந்த வேடன், தன்னுடைய அம்பை எடுத்து அர்ஜூனன் மீது குறிவைத்தான்.
உடனே சுதாரித்துக்கொண்ட அர்ஜூனன், வேகமாக வேடனின் தலையை குறி பார்த்து அம்பு எய்தான். அர்ஜூனன் எய்த அம்பு வேடனின் தலையில் பட்டு ரத்தம் வடிந்தது. அடுத்த நொடியே வேடன், சிவபெருமானாக தோன்றினார்.
இதையடுத்து அர்ஜூனன், 'தங்களையா நான் காயப்படுத்தினேன்' என்று கண்ணீருடன் வருந்தினான். சிவபெருமான், "கவலைப்படாதே அர்ஜூனா, நடப்பது அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான். அடுத்த பிறவியில் நீ கண்ணப்பனாக பிறந்து, என்னை வணங்கி புகழ் பெறுவாய்" என்று ஆசி வழங்கினார். சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு 'பார்த்த பிரகர லிங்கம்' என்ற பெயரும் உண்டு.
அடுத்த பிறவியில் அர்ஜூனன், கண்ணப்பன் எனும் வேடனாக பிறந்தான். மிகுந்த சிவ பக்தி கொண்டிருந்த கண்ணப்பன், சிவனுக்கு தன் கண்ணையே காணிக்கையாக கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான். மேலும் சிவன் அருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றான். அர்ஜூனன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார்.
இக்கோவில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. காலப்போக்கில் இக்கோவில் முற்றிலும் அழிந்து, மூலவர் சிவலிங்கம் செண்பக மரங்களுக்கு இடையில் புதைந்து இருந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒரு பசு தினமும் பால் சொரிந்து கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்த ஊர் மக்கள், அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அங்கு சுயம்பு லிங்கம் இருந்துள்ளது. அந்த லிங்கத்தில் வெட்டு வடு இருந்ததால் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பின்பு இறைவனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முக மண்டபத்தின் முன், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. உள் பிரகாரத்தில் விநாயகர், வீரபத்திரர், பால முருகன், சமயக் குரவர்கள், சேக்கிழார் போன்றோர் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் விஸ்வநாதர், ராமலிங்கர், நவக்கிரகங்கள் காட்சி அளிக் கின்றன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

கோவில் தோற்றம் - சிவனை வழிபடும் மகாலட்சுமி
அம்பாள் செண்பகாம்பிகை தாயார், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் சன்னிதி முன்பாக கொடிமரம் பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை இருக்கின்றன. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்குள்ள சிவபெருமானை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள தூண் ஒன்றில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறார். மேலும் இங்குள்ள மண்டப தூண்களில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் அனுமனின் பல்வேறு தோற்றத்தில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர். இங்குள்ள சரஸ்வதியிடம் வீணை கிடையாது. பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு ஒவ்வொரு சஷ்டியின் போதும் 6 மலர்கள், 6 நைவேத்தியங்கள், 6 வகையான பழங்கள் படைத்து பூஜை செய்யப்படுகிறது.
வழிபாடு
கோவிலில் தினமும் காலை பூஜையின்போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், நவக்கிரகங்க ளுக்குரிய நவரத்தினத்தையும் வைக்கின்றனர். பின்பு, ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியங்கள், மலர்களை கொண்டு பூஜை செய்யப்படுகிறது. சூரியனுக்கு வைத்த மலரை பிரகாரத்தில் காணப்படும் சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின்பே மூலவருக்குரிய பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் 'ருத்ரதிரிசதி' எனப்படும் சிவபெரு மானுக்குரிய 300 திருநாமங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அவ்வேளையில் சிவபெருமானை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக சிவன் கோவில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு சிவபெரு மானே பள்ளியறைக்குள் செல்கிறார். இதற்காக அர்த்த மண்டபத்தில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங் குள்ள சிவபெருமானை இந்திரன் வழிபட்டதாக கூறப் படுகிறது. அதன் அடிப்படையில், புரட்டாசியில் இந்திர பூஜை நடைபெறுகிறது. அப்போது, சுவாமியின் சன்னிதி முழுவதும் காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்புகளால் அலங்கரிக்கப்படுகிறது.
ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், புரட்டாசி மகாளய அமாவாசை, மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி உத் திரம் போன்ற விழாக்கள் மிகவும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற் காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே இக்கோவில் அமைந் துள்ளது. திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
- 15-21 நாட்களுக்கு ஒருமுறை கற்பூரத்தை மாற்றவும்.
- எரிவாயு அடுப்புக்கு அருகில் அல்லது சமையலறையின் ஒரு மூலையில் கற்பூரத் துண்டை வைக்கவும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர பல வழிகள் சொல்லப்படுகின்றன. வருமானம் பெருக, வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க, வேலை கிடைக்க, பல சுப பலன்கள் கிடைக்க சிறு விசயம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்.
வாஸ்து படி, கற்பூரம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இது எதிர்மறை சக்தியை எரித்து, நேர்மறை சக்தியைக் கொண்டு வந்து வீட்டில் லட்சுமி தேவியின் ஆசியை வழங்குகிறது. மேலும் பணம் உங்கள் வீட்டிற்குள் வந்து நிலைக்கவில்லை மற்றும் நீங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொண்டால் கற்பூரத்தை கொண்டு செய்ய வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்...
பூஜை அறையில் ஒரு துண்டு கற்பூரம்
பூஜை அறை ஒரு சக்தி நிறைந்த இடமாகும். இங்கு ஒரு சிறிய கற்பூரத்தை வைக்கவும் அல்லது தினமும் மாலையில் கற்பூரத்தை எரிக்கவும். இது எதிர்மறை சக்தியை நீக்கி வீடு முழுவதும் நேர்மறை ஆற்றலைப் பரப்புகிறது. பூஜை அறையில் கற்பூரத்தை வைத்திருப்பது தெய்வங்களை மகிழ்வித்து, வீட்டிற்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவருகிறது. தினமும் கற்பூரத்தை எரிப்பது வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்கிறது.
படுக்கையறையில் ஒரு துண்டு கற்பூரம்
கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்தால், படுக்கையறையின் தலைப்பகுதியிலோ அல்லது அலமாரியிலோ ஒரு சிறிய கற்பூரத்தை வைக்கவும். இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. கற்பூரத்தின் வாசனை எதிர்மறையை நீக்கி, தம்பதியினரிடையே அன்பை அதிகரிக்கிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவருவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பெட்டியிலோ அல்லது அலமாரியிலோ கற்பூரம்
பெட்டியிலோ அல்லது அலமாரியின் கைப்பிடியின் உள்ளே அல்லது அதன் மீது ஒரு சிறிய கற்பூரத்தை வைக்கவும். கற்பூரம் செல்வத்தைப் பாதுகாக்கிறது மற்றும் தேவையற்ற செலவினங்களை தடுக்கிறது. இது உங்கள் வீட்டிற்குள் பணத்தை தொடர்ந்து செலுத்தி, உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்துகிறது. பகவான் குபேரனால் மகிழ்ச்சியடைந்த இது, செல்வ வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. 15-21 நாட்களுக்கு ஒருமுறை கற்பூரத்தை மாற்றவும்.
பிரதான நுழைவாயிலில் கற்பூரம்
ஒரு சிறிய கற்பூரத் துண்டைக் கட்டவும் அல்லது சிவப்புத் துணியிலும் புனித நூலிலும் சுற்றி பிரதான கதவின் தாழ்ப்பாள், கைப்பிடி அல்லது மூலையில் வைக்கவும். இது தீய கண், விரோதம் மற்றும் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கிறது. நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைந்து, மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கிறது. இது வீட்டு பாதுகாப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சமையலறையில் கற்பூரம்
சமையலறை உணவு மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. எரிவாயு அடுப்புக்கு அருகில் அல்லது சமையலறையின் ஒரு மூலையில் கற்பூரத் துண்டை வைக்கவும். இது ஏராளமான உணவை உறுதி செய்கிறது. கற்பூரத்தின் வாசனை பூச்சிகளை விலக்கி வைக்கிறது மற்றும் சமையலறையில் நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கிறது.
கற்பூரத்தின் நன்மைகள்
வீட்டில் கற்பூரத்தை எரிப்பது அல்லது வைத்திருப்பது எதிர்மறை சக்தியை நீக்குகிறது, வாஸ்து குறைபாடுகளை நீக்குகிறது, செல்வத்தை அதிகரிக்கிறது, உறவுகளுக்கு இனிமையை தருகிறது, நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. தினமும் கற்பூரத்தை எரிப்பது வீட்டில் அமைதியைப் பேணுகிறது மற்றும் நிதி நிலைமையை பலப்படுத்துகிறது.
- காளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 13 நாட்கள் நடைபெற உள்ளது.
- நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான 10-ந் தேதி பகல் 3 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது உள்ள கண்ணப்பர் கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் மகாசிவராத்திரி விழா தொடங்குகிறது.
11-ந் தேதி சிறப்பு வழிபாடு, அம்பாரிகளில் காலை, மாலையில் சாமி, அம்மையார்கள் ஊர்வலம் மற்றும் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடைபெறும். 12-ந் தேதி காலை 10 மணி முதல் சூர்ய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். இரவு 9 மணி முதல் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும்.
13-ந் தேதி காலை 10 மணி முதல் அன்ன வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ராவண வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா நடக்கிறது.
14-ந் தேதி காலையில் ஹம்சம், மயில் வாகனத்திலும், இரவு 9 மணி முதல் சேஷ, யாளி வாகனத்திலும், 15-ந் தேதி காலை 11 மணிக்கு இந்திர விமானம், சப்பரத்திலும், இரவு 11 மணி முதல் சிவபெருமானுக்கு உகந்த வாகனமான நந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் நள்ளிரவு வரை வீதி உலா வருகின்றனர்.
16-ந் தேதி காலை 11 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இரவு 9 மணி முதல் கோவில் அருகில் உள்ள நாரதர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
8-ம் நாளான 17-ந் தேதி காலை 10 மணிக்கு அதிகார நந்தி, காமதேனு வாகனத்திலும், இரவு 10 மணி முதல் யானை, சிம்ம வாகனத்திலும் சாமி மற்றும் அம்மையார் திருக்கல்யாண அலங்காரத்தில் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து தேவஸ்தான திருமண மண்டபம் வரை சென்று அங்கு அதிகாலை 3 மணி முதல் சாமி, அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
18-ந் தேதி காலை 11 மணிக்கு புதுமண தம்பதிகளாக காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோர் வெவ்வேறு ருத்ராட்ச அம்பாரிகளில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் இருந்து கோவில் வரை புதுமண தம்பதிகளாக ஊர்வலமாக கோவிலை சென்றடைவார்கள். 19-ந் தேதி காலை 8 மணி முதல் ஜனதா அம்பாரிகளில் கைலாச கிரிவலம் நடைபெறும். இரவு குதிரை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
20-ந் தேதி கொடி இறக்குதல், காலை 9 மணி முதல் கேடிக வாகனங்களிலும், இரவு 9 மணி முதல் சிம்மாசன, காமதேனு வாகனங்களிலும், 21-ந் தேதி இரவு 9 மணி முதல் நான்கு மாட வீதிகளில் பல்லக்கு சேவை உற்சவம் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை நடைபெறும்.
மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில் மறுநாள் 23-ந் தேதி கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிலும், சாமி, அம்மையார் ஊர்வலத்திலும் தெரிந்தோ தெரியாமலோ கோவில் அர்ச்சகர்கள், வேதப்பண்டிதர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யாராயினும் செய்த பிழைகளை போக்கும் வகையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த பின்னர் இந்த சாந்தி அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். தொழில் முன்னேற்றமுண்டு.
ரிஷபம்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியிலிருந்த தடை அகலும். வாங்கல் கொடுக்கல்கள் சீராகும்.
மிதுனம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.
கடகம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், பற்றிச் சிந்திப்பீர்கள். எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.
கன்னி
செல்வாக்கு உயரும் நாள். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவதால் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
துலாம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
தனுசு
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரும்.
மீனம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.
- வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமி திருவீதியுலா.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-21 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை பின்னிரவு 2.50 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : பூரம் நள்ளிரவு 12.49 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
திருமயம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமி திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-போட்டி
கடகம்-புகழ்
சிம்மம்-லாபம்
கன்னி-தாமதம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- வெற்றி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-உயர்வு
மீனம்-உவகை
- கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது.
- கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மகாலட்சுமி கோவில். இந்த கோவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இக்கோவில் 'இரண்டாவது கோலாப்பூர்' என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக மகாலட்சுமி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மகாலட்சுமி தேவியின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் அந்த பக்தர் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து மகிழ்ந்த மகாலட்சுமி, சுயம்புவாக தோன்றி பக்தருக்கு காட்சி அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கிய சிறிய வரவேற்பு வளைவு உள்ளது. அதில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில் மகாலட்சுமி தாயார் காட்சி தருகிறார். கருவறையின் வாசலில் துவாரபாலகிகள் மற்றும் அஷ்டலட்சுமிகளின் உருவங்கள் தங்க முலாம் பூசப்பட்டிருக்கின்றன.
கிழக்கு நோக்கிய கருவறையில் மகாலட்சுமி தாயார் அருள் வழங்குகிறார். அவர் அருகில் கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை நிலத்தில் சிக்கிக் கொண்டது. அந்த இடத்தை தோண்டும்போது, அதில் வெங்கடேசப் பெருமாள் சிலை கிடைத்தது. அந்த சிலையே கருவறையில் மகாலட்சுமியின் அருகில் காணப்படுகிறது. கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. இருப்பினும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மகாலட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இக்கோவில், ராய்ச்சூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
3-ந் தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
* வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்து குமாரசுவாமி திருவீதி உலா.
* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* சங்கடகர சதுர்த்தி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லட்சதீபம் உற்சவம் ஆரம்பம்.
* திருமயம் ஆண்டாள் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
8-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* ராமநாதபுரம் செட்டித் தெரு அன்னை முத்தாலம்மன் விழா தொடக்கம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.






