என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalahasti temple"

    • காளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 13 நாட்கள் நடைபெற உள்ளது.
    • நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான 10-ந் தேதி பகல் 3 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது உள்ள கண்ணப்பர் கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் மகாசிவராத்திரி விழா தொடங்குகிறது.

    11-ந் தேதி சிறப்பு வழிபாடு, அம்பாரிகளில் காலை, மாலையில் சாமி, அம்மையார்கள் ஊர்வலம் மற்றும் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடைபெறும். 12-ந் தேதி காலை 10 மணி முதல் சூர்ய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். இரவு 9 மணி முதல் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும்.

    13-ந் தேதி காலை 10 மணி முதல் அன்ன வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ராவண வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா நடக்கிறது.

    14-ந் தேதி காலையில் ஹம்சம், மயில் வாகனத்திலும், இரவு 9 மணி முதல் சேஷ, யாளி வாகனத்திலும், 15-ந் தேதி காலை 11 மணிக்கு இந்திர விமானம், சப்பரத்திலும், இரவு 11 மணி முதல் சிவபெருமானுக்கு உகந்த வாகனமான நந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் நள்ளிரவு வரை வீதி உலா வருகின்றனர்.

    16-ந் தேதி காலை 11 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இரவு 9 மணி முதல் கோவில் அருகில் உள்ள நாரதர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

    8-ம் நாளான 17-ந் தேதி காலை 10 மணிக்கு அதிகார நந்தி, காமதேனு வாகனத்திலும், இரவு 10 மணி முதல் யானை, சிம்ம வாகனத்திலும் சாமி மற்றும் அம்மையார் திருக்கல்யாண அலங்காரத்தில் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து தேவஸ்தான திருமண மண்டபம் வரை சென்று அங்கு அதிகாலை 3 மணி முதல் சாமி, அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 11 மணிக்கு புதுமண தம்பதிகளாக காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோர் வெவ்வேறு ருத்ராட்ச அம்பாரிகளில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் இருந்து கோவில் வரை புதுமண தம்பதிகளாக ஊர்வலமாக கோவிலை சென்றடைவார்கள். 19-ந் தேதி காலை 8 மணி முதல் ஜனதா அம்பாரிகளில் கைலாச கிரிவலம் நடைபெறும். இரவு குதிரை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    20-ந் தேதி கொடி இறக்குதல், காலை 9 மணி முதல் கேடிக வாகனங்களிலும், இரவு 9 மணி முதல் சிம்மாசன, காமதேனு வாகனங்களிலும், 21-ந் தேதி இரவு 9 மணி முதல் நான்கு மாட வீதிகளில் பல்லக்கு சேவை உற்சவம் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை நடைபெறும்.

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில் மறுநாள் 23-ந் தேதி கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிலும், சாமி, அம்மையார் ஊர்வலத்திலும் தெரிந்தோ தெரியாமலோ கோவில் அர்ச்சகர்கள், வேதப்பண்டிதர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யாராயினும் செய்த பிழைகளை போக்கும் வகையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த பின்னர் இந்த சாந்தி அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    சந்திரகிரகணத்தின்போது ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் வாயுதலமாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து பரிகார பூஜைகளை செய்து அருள்பெற்றுச்செல்கின்றனர்.

    நாட்டின் அனைத்து கோவில்களிலும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஏற்படும்போது கிரகண காலத்தில் நடைசாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில்சூரிய மற்றும் சந்திர கிரகண நேரங்களில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு கிரகணக் கால அபிஷேகங்கள் நடத்தப்படுவது சிறப்புக்குரியதாகும்.

    அதன்படி நேற்று இரவு 11.54 முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது மூலவர்களுக்கு கிரகணக்கால சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட உள்ளதாக கோவிலின் வேதப் பண்டிதர் மாருதி சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சூரிய, சந்திரர்கள் சுயமாக தங்களின் பாவங்களை நீக்கிக் கொள்வதற்கு தவம் செய்து தங்களின் சக்திகளைத் திரும்ப பெற்றதாக தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போதும் சூரியனால் அமைக்கப்பட்ட புஷ்கரணியிலிருந்து (கிணறு) எடுக்கப்படும் புனித நீரால் மட்டுமே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சூரிய, சந்திர கிரகணங்களின் போது எப்போதும் போல் கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்து சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி கூறுகையில், “தினமும் இரவு 9 மணிக்கு நடைசாத்தப்படுவதுபோல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைசாத்தப்பட்டது. நள்ளிரவுக்கு பின்னர் 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அப்போது மூலவர்களுக்கு நடத்தப்படும் கிரகணக்கால அபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். அதன்படி கிரகணத்தின்போது திரளான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். 
    ×