என் மலர்
நீங்கள் தேடியது "Astrology"
- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.
30-ந் தேதி (செவ்வாய்)
* வைகுண்ட ஏகாதசி.
* விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா.
* திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.
* விஷ்ணு ஆலயங்களில் ராப்பத்து உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
31-ந் தேதி (புதன்)
* கார்த்திகை விரதம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், எல்லாம் வல்ல சித்தராய் காட்சி, இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
* திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
* மதுரை கூடலழகர் பெருமாள், திருவள்ளூர்
* வீரராகவப் பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
1-ந் தேதி (வியாழன்)
* பிரதோஷம்.
* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ரத உற்சவம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
2-ந் தேதி (வெள்ளி)
* ஆருத்ரா அபிஷேகம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இரவு நடேசர் மகா அபிஷேகம்.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் பவனி.
* சமநோக்கு நாள்.
3-ந் தேதி (சனி)
* பவுர்ணமி.
* ஆருத்ரா தரிசனம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தருளிய காட்சி.
* திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.
* மேல்நோக்கு நாள்.
4-ந் தேதி (ஞாயிறு)
* சிதம்பரம் சிவபெருமான் முத்து பல்லக்கில் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
5-ந் தேதி (திங்கள்)
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
- ரிஷபம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
- கடகம் தடை, தாமதங்கள் விலகும் வாரம்.
மேஷம்
சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் வாரம்.ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகும்.தொழில் வளர்ச்சி அபரிமித மாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். தொழில் உத்தியோகத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். சாமர்த்தியம் அதிகமாகும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிர கம் மன நிம்மதியை அதிகரிக்கும். மனதை மகிழ்விக் கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை, கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். நடராஜருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
ரிஷபம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சனியின் 3ம் பார்வை உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கோபத்தை அதிகரித்தாலும் நிதானத்தை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம். தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் கூட்டாளி களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்க வும். நடராஜருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட எல்லா விதமான பிரச்சினைகளும் சீராகும்.
மிதுனம்
தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று சனி பார்வையில் இருக்கிறார். வாழ்க்கையை நடத்து வதில் இருந்த சிரமங்கள் உங்களுடைய முயற்சியால் சீராகும். பயம் என்பதே இருக்காது. தைரியசாலியாக இருப் பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். குடும்ப சிக்கல்கள், மற்றும் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர் கள். பண வரவில் முன்னேற்றம் இருக் கும். குடும்ப உறவுகளின் அனுசரனை யால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். மனதும், உடலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். நடராஜருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.
கடகம்
தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சந்திரன் 9,10,11-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பிறர் ஆச்சரியப்படும் வகையில் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும்.வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள்.அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானந்துடன் செயல்பட வேண்டும். விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவை இல்லாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் அமைதி கடை பிடித்தால் ஓரிரு வாரங்களில் நிைலமை சீராகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விவசாயிகள் பருவ காலத் திற்கு ஏற்ற பயிரை விளைவிப்பது நலம். இளநீர் அபிஷேகம் செய்து நடராஜரை வழிபடவும்.
சிம்மம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக் கும், ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சி களில் ஆர்வம் ஏற்படும். மன சங்கடங்கள் அகலும். தடை பட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்று வீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசு வழி ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம் தொடர் பான உங்களின் எண்ணம் ஈடேறும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறு வீர்கள். தடை பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சனி, ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக உள்ளதால் அதிக முதலீடு கொண்ட செயல் களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் பணத்தை வேறு வகையில் முதலீடு செய்ய வேண்டும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணை யால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். 29.12.2025 அன்று காலை 7.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். திருவாதிரை அன்று நடராஜருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி
புதிய தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். முயற்சிகளில் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். அனைவரிடமும் பெருந் தன்மையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வேலை, தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லலாம். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடன் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் திறமை யால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள். 29.12.2025 அன்று காலை 7.41-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து 31.12.2025 அன்று காலை 9.23-க்கு முடிவதால் சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மன சஞ்ச லத்தால் தாமதமாகும். நடராஜருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடவும்.
துலாம்
தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள்.பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மேலும் நன்மையை அதிகரிக்க குல தெய்வம், முன்னோர்களை வழிபடவும். 31.12.2025 அன்று காலை 9.23 மணி முதல் 2.1.2026 அன்று காலை 9.26 மணி வரை இருப்பதால் அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக் கூடாது. நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். திருவாதிரையன்று நடராஜருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.
விருச்சிகம்
விபரீத ராஜ யோகமான வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி குரு பகவான் 8,11ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம். சிலர் நண்பர் களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்க லாம். அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 2.1.2026 அன்று காலை 9.26 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யா மல் அமைதி காப்பது நல்லது. திருவாதிரை அன்று நடராஜருக்கு புனுகு சாற்றி வழிபடவும்.
தனுசு
உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசியில் உள்ள சூரியன், புதன், செவ்வாய், சுக்கி ரன் சேர்க்கைக்கு சனி, குரு பார்வை உள்ளது. தனுசு ராசியினர் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். அலுவல கத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். திருமண வயதில் இருப்பவர் களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட, வாகனம் வாங்க உகந்த நேரம். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். பங்காளிகள் பிரச்சினை, கோர்ட்டு, கேஸ், வாய்தாக்கள் என அலைந்த நிலை மறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர் பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு பச்சைக் கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபடவும்.
மகரம்
நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பதால் மனதில் நிம்மதி இருக்கும்.இதுவரை அனுபவித்த எண்ணிடலங்கா துயரம் தீரும். விரக்தியாக வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடு மாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும். இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
கும்பம்
வைராக்கியத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி குருவின் பார்வை உள்ளது.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். சகல சவுபாக்கி யங்களையும் எல்லாவிதமான வளர்ச்சியையும் பெறக்கூடிய நிலை உள்ளது. நினைப்பது நடக்கும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடை பட்ட வாடகை வருமா னங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும். திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். ராசியில் ராகு ஏழில் கேது உள்ளதால் திருமண முயற்சியில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல் பட்டால் அதிக நன்மைய டையலாம். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
மீனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும்.பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். உடன் பிறந்த சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்ற வர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புத்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் பிரச்சினைகளும் விலகும். சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதமிருந்து நடராஜருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
16-ந் தேதி (செவ்வாய்)
* கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
17-ந் தேதி (புதன்)
* பிரதோஷம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
19-ந் தேதி (வெள்ளி)
* அமாவாசை.
* அனுமன் ஜெயந்தி.
* திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.
* நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (சனி)
* விஷ்ணு ஆலயங்களில் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (ஞாயிறு)
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் பகற்பத்து உற்சவம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந் தேதி (திங்கள்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
- உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.
- மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
தனுசு ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.
உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மகர ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.
குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
கும்ப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மீன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.
'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
- திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
- பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்ம ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தொழிலில் குறுக்கீடுகள் வந்து கொண்டுதான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை மாற, சர்ப்ப கிரகங்களுக்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடுவது நல்லது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குருபகவான் வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் யாவும் புனிதமடைந்து நற்பலன் தரும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
இதுவரை தடைப்பட்ட சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, அதை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். இதுவரை பகையாக இருந்த உறவினர்கள், உங்களைத் தேடி வந்து பாசம் காட்டுவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மகத்தான பொறுப்புகள் கிடைக்கும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிபவர்களுக்கு அங்கு 'குடியுரிமை கிடைக்கவில்லையே' என்ற கவலை அகலும். இடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் முன்னேற்றம் காணும் நேரம் இது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல காரியங்கள் நடைபெறும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார்். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தங்களின் வியாபார தலத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுப்பர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 18, 19, 29, 30, ஜனவரி: 3, 4, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
கன்னி ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால், நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மாதம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பதியும் ராசிகள் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்ெபாழுது துரிதமாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகவும், சிறப்பாகவும் இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.
சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இதுவரை ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரியும் சூழல் உருவாகும். வாசல் தேடி வரும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் இப்பொழுது மாற்றப்படலாம். கேட்ட சலுகைகள் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வரப்போகிறது. குறிப்பாக பணத்தேவை பூர்த்தியாகும். புதிய இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு அல்லது இருக்கும் வீட்டை விரிவு செய்யும் அமைப்பு உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும். மகிழ்ச்சிகரமான ஆன்மிகப் பயணங்கள் உண்டு.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். மேலும் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரு சில காரியங்களை தாமதமாகச் செய்ய நேரிடும். வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நிலையான வருமானம் உண்டு. பூமி யோகம் அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 20, 21, ஜனவரி: 1, 2, 5, 6, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
துலாம் ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். எனவே வருமானம் வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். 'சேமிக்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணம் கைகளில் புரளும் நேரத்தில் சுபச்செலவுகளைச் செய்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர் மாற்றம் பற்றியும், உத்தியோக மாற்றம் பற்றியும் நீங்கள் சிந்தித்தபடியே செயல்படுவீர்கள்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக இருந்தாலும், அதன் பார்வைக்கு பலன் அதிகம். எனவே இதுவரை இருந்த இடா்பாடுகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே.. கொடுத்த கடனை வாங்க முடிவில்லையே..' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் காரிய வெற்றியும், பணப் புழக்கமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொடர்ச்சியாக வந்த கடன் சுமை குறைய, புதிய வழிபிறக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். அதிகார அந்தஸ்திற்கு சிலர் உயர்த்தப்படுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தானாக வரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 18, 19, 23, 24, ஜனவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
விருச்சிக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்த பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சுபக் கிரகத்தின் பார்வை பதிவதால் சுபச் செய்திகள் வந்து சேரும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் குரு. அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வை தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் பதிகிறது. தன் வீட்டை, தானே பார்க்கும் குருவால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு கைகூடும். உறவினர் பகை அகலும். கொடுக்கல் - வாங்கல்களில் லாபம் உண்டு. குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பரிபூரண பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு, அதிகார அந்தஸ்தைப் பெறும் யோகம் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம - விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப அமைதி கூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க செலவிடுவீர்கள். மேலும் திருமண வயதடைந்த பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய இடத்தை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு, நடக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரும் வாய்ப்பு உண்டு.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமை அடைவதால் யோசிக்காது செய்த காரியங்களிலும் வெற்றி உண்டு. பூமி யோகமும், பிள்ளைகளின் வழியில் நல்ல காரியமும் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
- புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
- வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.
மேஷ ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் லாப ஸ்தானாதிபதி சனி லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கொடுக்கல் - வாங்கல் நல்லபடியாக அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், உங்கள் ராசிநாதன் செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் இனிய மாதமாகவே அமையும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் பலம் பெறுகின்றன. இதன் விளைவாக கல்யாணக் கனவுகள் நனவாகும். நீண்ட நாட்களாக பேசிப் பேசி கைவிட்டுப் போன வரன்கள் இப்பொழுது மீண்டும் வரலாம். அவற்றை பரிசீலனை செய்து தகுந்ததை தேர்வு செய்ய உகந்த நேரம் இது. தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக முடிவடையும். முந்திய காலத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறத் தொடங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். பொருளாதார நிலை உயர வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஏழரைச் சனி தொடங்க இருப்பதால், சுய ஜாதகத்தின் பலம் அறிந்து ஏற்றுக்கொள்வது நல்லது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில், பொன் - பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் நல்ல இடத்திற்கு வருவதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய் உச்சம்பெறும் இந்த நேரம், அற்புதமான நேரமாகும். எந்த செயலைச் செய்தாலும், அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக நடந்துகொள்வர். கடன்சுமை குறையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களின் எண்ணங்கள் எளிதில் வெற்றிபெறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும். திடீர் மாற்றம் உருவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 1, 2, 5, 6.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
ரிஷப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதியான புதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த யோகமான நேரத்தில் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ஆயினும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் அனைத்தும் புனிதம் அடைகின்றன. உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். எதிரிகள் விலகுவர். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். சென்ற மாதத்தில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் என்றாலும், குரு வக்ரமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் மன வருத்தமும் வந்துசேரும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டு மென்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான சூழல் உருவாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். எதிர்பாராத திருப்பங்கள் பலவும் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் கூடுதல் உயர்வு கிடைத்து, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். எந்த காரியத்தை முயற்சித்தாலும், அது உடனடியாக முடிவடையும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். விரயாதிபதி உச்சம்பெறுவதால் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படித்து முடிப்பது உத்தமம். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 23, 24, 27, 28, ஜனவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
மிதுன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. சுக்ரனோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும் வாய்ப்பு உண்டு. இம்மாதம் ஜென்ம குரு வரப்போவதால் திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் கூட ஒரு சிலருக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதலாகி செல்லும் வாய்ப்பு உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அங்ஙனம் ஜென்ம குருவாக வரும்பொழுது அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். திடீர் இடமாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாமா?, வேண்டாமா? என்பது பற்றி சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தனித்து இயங்க முடியாமல் பிறரை சார்ந்திருப்பவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும்.
'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அதன் பார்வை பலனால் சில நன்மைகளும் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் உருவான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 'சொத்து விற்பனையால் வரும் லாபத்தைக் கொண்டு சுப காரியங்கள் நடத்தலாமா?' என்று யோசிப்பீர்கள்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும்போது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதேநேரம் கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு இடத்தில் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். தனுசு ராசியானது குருவிற்குரிய வீடு என்பதால், அதில் சஞ்சரிக்கும் பகை கிரகமான சுக்ரன் பலவித வழிகளிலும் திடீர் திடீரென மாற்றங்களைக் கொடுப்பார். மன வருத்தங்களும் அதிகரிக்கும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். ஒரு சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கைகூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 26, 27, 29, ஜனவரி: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கடக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி பலம்பெற்று சஞ்சரிக்கிறார். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குருவும், வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாதம் சோதனைக் காலமாகவே இருக்கும். சிக்கல்களும், சிரமங்களும், சிறுசிறு தொல்லைகளும் வரலாம். பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த வழிபாட்டை முழுமையாக சனியின் மீது செலுத்த வேண்டிய நேரம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் 12-ம் இடத்திற்கு வரும்போது பயணங்கள் அதிகரிக்கும். பல வழிகளிலும் விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் திடீரென வந்து இதயத்தை வாட்டும். குரு பார்வை பதியும் இடங்கள் நன்மை தரும் என்பதால், தாய்வழி ஆதரவு கிடைக்கும். மற்ற சகோதரர்களிடம் அன்பு காட்டிய பெற்றோர், இப்போது உங்கள் மீதும் பாசம் காட்டுவர். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.
உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் மாறுதலாகிச் செல்வர். எதிர்பாராத சலுகைகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிக்கு பலன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக எதையாவது செய்யலாமா? என்று சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாமல் நழுவிச் சென்ற காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். பெண் வழிப் பிரச்சினைகள் தீர வழிபிறக்கும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், உச்சம் பெறுகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். யோகம் செய்யும் கிரகம் வலுவடைவதால் தேக நலன் சீராகும். செல்வ வளம் பெருகும். தெய்வப்பற்று அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் மாறும். வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு கடின முயற்சி கல்வியில் வெற்றி தரும். பெண்களுக்கு உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். வரவும், செலவும் சமமாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 27, 28, ஜனவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
9-ந் தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* குரங்கணி முத்து மாலையம்மன் பவனி.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருநாகேசுவரம் நாகநாதசுவாமி பவனி.
* கீழ்நோக்கு நாள்.
11-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
12-ந் தேதி (வெள்ளி)
* வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (சனி)
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருநாகேசுவரம் நாக நாதசுவாமி, திருவாஞ்சியம் முருகப்பெருமான் தலங்களில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
14-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி தலங்களில் பவனி வரும் காட்சி.
* சமநோக்கு நாள்.
15-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, குன்றக்குடி, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
2-ந் தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம், இரவு பரணி தீபம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் காலை கண்ணாடி விமானத்திலும், இரவு கயிலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
3-ந் தேதி (புதன்)
* திருக்கார்த்திகை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருவண்ணாமலை தீபம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயணசுவாமி விசேஷ அலங்காரம்.
* திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (வியாழன்)
* பவுர்ணமி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் தெப்ப உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் லட்சத்தீப காட்சி.
* திருப்பதி ஏழு மலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வெள்ளி)
* திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி தலங்களில் விழா தொடக்கம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (சனி)
* திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
இந்த வார விசேஷங்கள்
25-ந் தேதி (செவ்வாய்)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் விழா தொடக்கம்.
* பழனி ஆண்டவர் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (புதன்)
* உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் திருவீதி உலா.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
28-ந் தேதி (வெள்ளி)
* பழனி ஆண்டவர் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவல்லித் தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (சனி)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
* திருவரங்கம் நம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
30-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
1-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் வெள்ளி விமானத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- ரிஷபம் சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
- கன்னி சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம்.
மேஷம்
வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் 2,7ம் அதிபதி சுக்ரன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசி அதிபதி செவ்வாய்க்கு 2, 5,8 எனும் பணபரஸ்தான சம்பந்தம் இருப்பதால் பணத் தேவைகள் பூர்த்தியாகும். வராக் கடன்கள் வசூல் ஆகும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் அகலும்.தன வரவு திருப்தி தரும். ஆடம்பர செலவினை குறைத்து சேமிப்பிற்கு முயற்சி செய்வீர்கள்.குடும்ப முன்னேற்றம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும்.சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் உருவாக லாம்.வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை இருக்கும்.வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். காலபைரவர் வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.
ரிஷபம்
சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சூரியன், செவ்வாய், சனி, சுக்ரன் பார்வை உள்ளது. சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுவதால் புதிய தொழில் ஒப்பந்தம் மூலமாக அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அசுப கிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் இனம் புரியாத மனசஞ்சலம் இருக்கும்.ஓய்வின்றி உழைக்க நேரும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமா இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும்.திருமண வயதினருக்கு வரன்பார்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 25.11.2025 அன்று காலை 4.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு இன்னல்களை நீக்கும்.
மிதுனம்
எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் வாரம்.வார இறுதியில் புதன்,சனி வக்ர நிவர்த்தி பெறுகிறார்கள். தன ஸ்தானத்தில் குரு பகவான் என முக்கிய கிரக நிலவரங்கள் மிதுன ராசிக்கு மிக சாதகமாக உள்ளது. சிலரது பிள்ளைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். சுக, போக பொருட்களின் சேர்க்கை இரட்டிப்பாகும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். 25.11.2025 அன்று காலை 4.27 மணி முதல் 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்தால் எந்தவித இன்னல்களும் வராது.நவகிரக அங்கார கனை வழிபடவும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சீனிவாச பெருமாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
கடகம்
புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது.அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.மன உளைச்சலைத் தந்த பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். மாமன், மைத்துனன் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 29.11.2025 அன்று இரவு 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பச் சுமை கூடும். வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். சிவ வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.
சிம்மம்
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார்.சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம். சிலருக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் வாசல் கதவை தட்டும். நல்ல வாய்ப்புகள் தடைபடும்.சிலர் பணியில் ஏற்பட்ட வீண் பழியால் வேலையில் இருந்து விலகலாம். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலம் என்பதால் யாரிடமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிரத்தை மற்றும் கடின உழைப்பால் தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் விவசாயிகள் பயிர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம்.29.11.2025 அன்று இரவு 8.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மேலதிகாரி அதிக பணிச்சுமையை வழங்கலாம்.சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம். விநாயகரை வழிபடுவதால் தீயவினைகள் அகலும்
கன்னி
சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுகிறார். லாப ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் என கிரக நிலைகள் மிக மிக சாதகமாக உள்ளது.பண வரவு திருப்தியாக இருக்கும்.பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். தடைபட்ட திருமண முயற்சிகள் துரிதமடையும். விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபம் அதிகரிக்கும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கவும்.
துலாம்
புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும் வாரம்.ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற புதன் உள்ளார்.புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு இப்பொழுதே சேமிப்பீர்கள்.சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும்.திருமண முயற்சி சாதகமாகும்.பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால் நல்ல பலனை அடைய முடியும். கணவன் மனைவி கருத்தொற்றுமை சிறப்படையும். பிள்ளைகளிடம் இருந்து எதிர்பாராத அன்பு பரிசு கிடைக்கும்.எட்டாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. ஜாமின் போடக்கூடாது.தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மகாலட்சுமி வழிபாட்டால் அபிவிருத்தி பெற முடியும்.
விருச்சிகம்
தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கைக்கு குரு பார்வை உள்ளது. நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் மூலம் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்வீர்கள். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கூடிவரும்.வீடு, வாகன யோகம்,புத்திர பாக்கியம் உண்டாகும்.வீட்டில் திருமணம் போன்ற சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். பூமி, மனையின் மதிப்பு கூடும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அண்டை அயலாருடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறையும். ஏழாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையா ளர்கள், வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. ஓரிரு வாரங்களுக்கு திருமணம் முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.சிலருக்கு பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.முருகன் வழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும்.
தனுசு
நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளா தாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.மனமகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் நடக்கும்.ஆடம்பர விருந்து உபசரணைகளில் கலந்து கொள்ளக்கூடிய அமைப்பு உள்ளது. எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டு எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.மதிப்பு மிகுந்த கவுரவப் பதவிகள் தேடி வரும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சிரத்தையுடன் செயல்படுவீர்கள். இது அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகளுக்கு உதவியாக இருக்கும்.
மகரம்
முன்னேற்றமான வாரம்.ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. ஆன்ம பலம் பெருகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.ஆழ்ந்த அறிவும் சிந்திக்கும் திறனும் கூடும். சமூக அந்தஸ்து நிறைந்த முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்.விலகி சென்ற உறவுகள், நட்புகள் தேடி வருவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.மனச் சங்கடம் மறையும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும்.வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். அழகான ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
கும்பம்
சுமாரான வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். ராசிக்கு செவ்வாய் ராகு சம்பந்தம் உள்ளது.முன்னோர்களின் சொத்தில் முறையற்ற பங்கீடு கிடைக்கும். உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படும். வேலையில், தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும். பொருளாதார விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியம். சிலரின் பிள்ளைகளுக்கு தொழில் முன்னேற்றமோ, அரசாங்கப்பணியோ தேடி வர வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஏழரைச் சனியால் எவ்வளவு இடையூறுகள் நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். குழந்தை பேற்றில் உள்ள குறைபாட்டை நீக்க மருத்துவ உதவியை நாடலாம். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும்.கார்த்திகை மாத சோம வார சங்கு பூஜையில் கலந்து கொள்ள சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
மீனம்
தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும் வாரம்.ராசிக்கு உச்ச குருவின் வக்கிர பார்வை உள்ளது.ராசி அதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் காலமும், நேரமும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் ஜென்மச் சனியால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.வீடு, மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும் என்ற தாரக மந்திரத்தை மனதில் குறிக்கோளாக வைத்து செயல்படுவீர்கள். சில நன்மைகளும், மாற்றங்களும் நடக்கும்.தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்ப டுத்துவது புத்திசா லித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். ஆண் வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. தினமும் குரு கவசம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
இந்த வார விசேஷங்கள்
18-ந் தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
* சமநோக்கு நாள்.
19-ந் தேதி (புதன்)
* அமாவாசை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (வியாழன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் பவனி.
* சமநோக்கு நாள்.
22-ந் தேதி (சனி)
* திருத்தணி கவுரி விரதம்.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
23-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (திங்கள்)
* திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் விழா தொடக்கம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
- ‘சுக்ர மங்கள யோக’த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு.
- பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
தனுசு ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களை திடீர், திடீரென மாற்றியமைப்பீர்கள். தொழிலில் குறுக்கீடுகளும், தொல்லைகளும் உண்டு. நினத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீண்ட நாட்களாக கட்டுப்பட்டிருந்த நோய் மீண்டும் தலைதூக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் காலமாகவே அமையும். ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த நன்மையை உண்டாக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 12-க்கு வருவது யோகம்தான். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். 'சுக்ர மங்கள யோக'த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர், உங்கள் ராசிக்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். 'வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீடாக விலைக்கு வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் வரும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பரபரப்பாகக் காணப்படுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி தரும். உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்தும் அழைப்பு வரலாம். வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பு கரைந்தாலும், பொருளாதாரத்தை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 26, 27, 30, டிசம்பர்: 1, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
மகர ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிவதால் மிச்சம் வைக்கும் விதத்தில் பொருளாதார நிலை உயரும். வாக்கிய கணித ரீதியாக இன்னும் சில மாதங்களுக்கு ஏழரைச்சனி இருக்கிறது. அதுவரை நன்மையும், தீமையும் கலந்து நடைபெற்றாலும், குரு பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து திருப்திப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதம் அமையும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் பார்வை பலன் நன்மை செய்தாலும் கார்த்திகை 2-ந் தேதி முதல் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். எனவே கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் போட்டி அகலும். எதிரிகள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். கிளைத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமி விற்பனையாலும் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் நேரம் இது.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு சில நலன்களைப் பெறுவீர்கள். 'பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கின்றதே' என்று கவலைப்பட்டவர்கள், புதிய வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சி களில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 27, 28, டிசம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கும்ப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இனி ஆரோக்கியம் சீராகும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள். மந்த நிலை மாறி மகிழ்ச்சியான நிலை அமையும். இந்த மாதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி மாற்றினத்தவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அங்ஙனம் தன லாபாதிபதியான குரு பகவான் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் அடைகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் தடைகள் ஏற்படும். புதியவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேலும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மையை வழங்கும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அங்குள்ள செவ்வாய் மற்றும் சூரியனோடு இணைகிறார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோரின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறும் சூழல் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். தள்ளிச் சென்ற ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். அரசு வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உத்தியோக முயற்சி பலன் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். உறவினர் பகை அகலும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றமும், ஏற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 4, 5, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மீன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது. ராசிநாதன் ராசியைப் பார்க்கும் இந்த நேரம் நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் பணியாளர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். இக்காலத்தில் வியாழக் கிழமைதோறும் விரதம் இருந்து குருவை வழிபடுவது நல்லது. குறிப்பாக யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவும் கைகொடுக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். தொடர்ந்து சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். சேமிப்பு உயரும் இந்த நேரத்தில் அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். புதிய தொழிலால் பொருளாதார நிலை உயரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதார நிலையில் திருப்தி ஏற்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து பெறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ- மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவோடு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 26, 27, டிசம்பர்: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.






