என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Astrology"

    • சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
    • தை அமாவாசை.

    13-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

    * சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந் தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * போகிப் பண்டிகை.

    * சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (வியாழன்)

    * தைப் பொங்கல்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.

    * மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம், மாலை தங்கப் பல்லக்கில் ஊஞ்சல் சேவை.

    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (வெள்ளி)

    * மாட்டுப் பொங்கல்.

    * பிரதோஷம்.

    * மதுரை கூடலழகர் பெருமாள் கணு உற்சவ விழா தொடக்கம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (சனி)

    * உழவர் திருநாள்.

    * மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

    * கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (ஞாயிறு)

    * தை அமாவாசை.

    * தென்காசி விசுவநாதர், சங்கரன்கோவில் சங்கர நாராயணன் தலங்களில் லட்சதீபம்.

    * மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (திங்கள்)

    * மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் விழா தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    • குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
    • உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

    தனுசு ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்ல செய்திகள் நாளும் வந்த வண்ணமாகவே இருக்கும். 2-ம் இடத்தில் சூரியன், சுக்ரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறது. எனவே பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கும். மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமும், வழிபாடுகளும் தேவை.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் பலம் இழக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இடம், பூமி வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும்.

    குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். மனக்கவலை மாறும். இதுவரை தடையாக இருந்த காரியங்கள் இனித் தானாக நடைபெறும். மேலும் குரு பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வழக்குகள் சாதகமாக அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதோடு மேலிடத்து ஆதரவும் உண்டு.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளுக்கு கல்யாண முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். கடல் கடந்து வணிகம் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நல்ல மாற்றங்களும், பொருளாதாரத்தில் ஏற்றமும் வரும் நேரம் இது. அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடுவதற்கான சூழல் உருவாகும்.

    கும்ப - சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 7.2.2026 அன்று 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். தனாதிபதி சனியோடு சேருவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டு முயற்சிகளில் இருந்த தடை அகலும். அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வழிபிறக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடை பெறும் சுபநிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் வளர்ச்சியும், பிற்பகுதியில் தளர்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். பெண்களுக்கு செலவுகள் கூடும். இருப்பினும் வருமானம் போதுமானதாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 20, 21, 24, 25, பிப்ரவரி: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகர ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்கலக்கம் தீரும். மேலும் உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். விரோதங்கள் விலகும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். சொத்துக்களால் ஆதாயமும், நன்மையும் ஏற்படும் நேரம் இது. கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால், அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சென்ற மாதத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் இப்பொழுது விலகும். சிறுசிறு தொல்லைகள் உடல்நிலையைத் தாக்கினாலும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றை சரிசெய்துகொள்வீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ, வாசல் தேடி வரவு வந்து சேரும். குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அவற்றிற்குரிய ஆதிபத்யங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். 'குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரிய நினைத்தவர்களுக்கு அது கைகூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் ஏதேனும் செய்யலாமா? என்று சிந்திக்கும் நேரம் இது.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். உடன்பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத யோகம் உங்களுக்கு வரப்போகிறது. இலாகா மாற்றங்களோ, இடமாற்றங்களோ முன்னேற்றம் தரும் விதம் அமையும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடு மாறும். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொண்டு வருவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சனைகள் அகலும்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் இனிய பலன்கள் வந்துசேரும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பற்றாக்குறை அகன்று பணவரவு கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 22, 23, 26, 27, பிப்ரவரி: 5, 6, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    கும்ப ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். மிதுனத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் இந்த மாதம் இனிய மாதமாகவே அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்துசேரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உற்சாகத்தோடு செயல்பட்டு எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் சிறுசிறு தொல்லைகள் உடல்நலத்தில் ஏற்படலாம்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்றிருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி தாமதப்பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதி கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசியில் மட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். எந்தவழியிலும் உங்களுக்கு வரவேண்டிய தொகை வந்துசேரும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பழைய கூட்டாளிகள் மீண்டும் வந்து இணைந்து உங்கள் புதிய முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். இந்நேரங்களில் குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களைப் பெறலாம்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பொதுவாக பஞ்சம ஸ்தானாதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் மேன்மை உண்டு. அவர்களின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒருசிலர் பழைய சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு. சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இம்மாதம் நடைபெறும்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் தேவை படிப்படியாகப் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வீடு வாங்கிக் குடியேறும் யோகம் உண்டு. தொழிலில் சேர்ந்த பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவர். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடி வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சென்ற மாதத்தில் கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 23, 25, 28, 29, பிப்ரவரி: 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மீன ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மேலும் அர்த்தாஷ்டம குருவாகவும் இருக்கிறார். எனவே அடிக்கடி இடமாற்றம், ஆரோக்கியப் பாதிப்பும், அதிக விரயமும் ஏற்படலாம். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதோ, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலோ கவனம் செலுத்தலாம். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவரது வக்ர இயக்கம் நன்மைதான் என்றாலும், அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்கலாம். இடமாற்றம், வீடு மாற்றம் தானாகவே வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும்.

    குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சனை ஒரு வழியாகத் தீரும். ஆயினும் புதிய முயற்சிகளில் தடை வந்துகொண்டே இருக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீண்டதூரப் பயணம் பலன்தரும் விதம் அமையும். சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லவும், வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பவும் எடுத்த முயற்சிகள் பலன்தரும். வாகன மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் குருவிற்குரிய சிறப்பு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, இல்லத்திலும் குருகவசம் பாடி குருபகவானை வணங்குவது நல்லது.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பெற்றோர் வழியிலும், களத்திர வழியிலும் செலவு ஏற்படலாம். இடம், பூமி வாங்கும் சுபச்செலவுகளும் உண்டு. பிள்ளைகளின் திருமணத்தைப் பேசி முடித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுப்பீர்கள். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டு வாழ்க்கை பாதையை சீராக்கிக்கொள்வீர்கள்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 12-ல் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப பொருளாதார நிலையில் திடீர் முன்னேற்றமும், புது முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். இக்காலத்தில் சுக்ர வழிபாடு சுகத்தை வழங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டு முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் புதிய இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 20, 21, 26, 27, 30, 31, பிப்ரவரி: 10, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

    • மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை.
    • பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.

    சிம்ம ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 6-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீடு, இடம் வாங்குவதன் மூலமாகவோ, மணவிழா, மணிவிழா போன்றவை நடத்துவதன் மூலமாகவோ, சுப விரயங்களை மேற்கொண்டால் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரம், பிள்ளைகளால் பிரச்சனைகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். காரியத்திலும் தாமதம் ஏற்படும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். பிள்ளைகளாலும் பிரச்சனைகள் வந்து அலைமோதும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் வந்து மனக்கிலேசத்தை உருவாக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் இழப்புகள் ஏற்படலாம். குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. பஞ்சம ஸ்தானம் குரு வீடு. குரு வீட்டை குருவே பார்ப்பது யோகம்தான். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பயனாக கிடைக்க வேண்டிய பலன்கள் இப்பொழுது கிடைக்கும். இருந்தாலும் மனக்கசப்பு தரும் தகவல்களும் வந்துசேரும். நண்பர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில காரியங்கள் தாமதமாக வந்தாலும் முடிவில் நல்லவிதமாக முடிவடையும். இக்காலத்தில் சுபச்செலவுகள் செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்க இயலும். பஞ்சாயத்துக்களில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். 'வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, `வாழ்க்கைத் துணைக்கு வேலை இல்லையே' என்ற கவலை அகலும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினால் நல்லபடி அமையும். பொதுவாக நினைத்தது நிறைவேறும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு திருப்தி தரும். அவர்களது இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறும் வண்ணம் நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். அவர்கள் மூலமாக ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். 'பழைய தொழிலை பைசல் செய்துவிட்டு புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று, வேறு இடத்திற்கு மாறும் எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொள்வர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கலைஞர்களுக்கு பெருமை சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 10, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    கன்னி ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர். 10-ல் குரு இருப்பதால் புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் பதவி மாற்றம் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழியில் இருந்து விடுபடுவர். அவர்கள் விரும்பியபடியே பதவி வாய்ப்பு கிடைக்கும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும். குறிப்பாக இடம், பூமி வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். 'வரன்கள் வந்து வந்து திரும்புகின்றதே.. எதுவும் முடிவாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி வரும் வாய்ப்புகள் நல்லதாக அமையும். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் உங்களை வந்தடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் இருந்தவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாற எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அளிப்பர். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அகல, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இருப்பினும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பழைய பிரச்சனைக்குப் புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம்' என்பார்கள். அதன்படி 6-ல் சஞ்சரிக்கும் புதனால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக ஊதிய உயர்வுடன் நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொடர் கடனால் அவதிப்பட்டவர்களுக்கு, கொடுக்கல்- வாங்கலை ஒழுங்கு செய்துகொள்ள வழிபிறக்கும். பெற்றோரின் ஆதரவோடு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது பெயர்ச்சி மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பழுதாகி செலவு வைக்கும் பழைய வாகனத்தால் அவதிப்பட்டவர்களுக்கு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும் விதம் அமையும். போட்டிக்கு மத்தியில் வியாபாரம் வெற்றிநடைபோடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை உருவாக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பாதியில் லாபம் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ - மாணவிகள் கல்வியில் வெற்றி பெற, கடினமாக முயற்சிக்க வேண்டியதிருக்கும். உறவினர் பகை உருவாகும் என்பதால், பெண்கள் கவனமாக செயல்படுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 25, 29, பிப்ரவரி: 1, 2, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    துலாம் ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் புதனுடன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை வழங்குகிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அவர் வக்ரம் பெற்றிருப்பது யோகம்தான். எனவே உங்கள் ராசி புனிதமடைகிறது. சென்ற மாதத்தில் தாமதப்பட்ட காரியங்கள் இப்பொழுது தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது வந்துசேரும். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு, உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்திற்கு அதிபதி. மேலும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கும் அதிபதி. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஜீவனத்திற்கு கவலை இல்லாத சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், குணமடைவர். குருவின் பார்வை பலத்தால் உடன்பிறப்புகளின் திருமணம் அல்லது அவர்களின் வாரிசு திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

    பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும். இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்து வராத உடன்பிறப்புகள் இப்பொழுது மனம் மாறி ஒத்துழைப்பு தருவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்பொழுது மாற்றப்படுவர். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அதற்கு பண உதவி கிடைக்குமா?' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வர்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள். எனவே மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். துணிந்து சில முடிவுகளை எடுத்து, மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். எந்த ஒரு வேலையையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைகளைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்பர். பதவி உயர்வு தானாக தேடிவரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    கும்ப - சுக்ரன்

    உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டமாதிபதியான சுக்ரன் 7.2.2026 அன்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயம் ஏற்படும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி தடைப்பட்டு வந்திருக்கலாம். அது இப்போது கைகூடும். இடமாறுதல் இனிமை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் ஒப்பந்தங்கள் வந்துகொண்டே இருக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சி கைகூடலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 19, 28, 29, பிப்ரவரி: 3, 4, 10, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    விருச்சிக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு லாபாதிபதி புதனும், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கின்றனர். இதனால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல கிரக நிலைகள் சாதகமாக விளங்குகின்றன. தொழில் வெற்றிநடை போடும். இதயம் மகிழும் செய்தி வந்துகொண்டே இருக்கும். தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். எல்லா வழிகளிலும் ஏற்றமும், நல்ல மாற்றமும் கிடைக்கும் நேரம் இது.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால், அந்த இடங்களெல்லாம் புனிதமடைந்து அற்புதமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர் குரு. 'அவர் வக்ரம் பெற்றிருக்கிறாரே' என்று நினைக்க வேண்டாம். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். மதிப்பு, மரியாதை உயரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இல்லத்தில் இனிய நிகழ்வுகள் நடைபெற வழிபிறக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், புதிய பதவிகளும் கிடைக்கும்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கும் 8, 11-க்கும் அதிபதியான புதன் 29.1.2026 அன்று அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும். 'புதிய வாகனம் வாங்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்பு அமையும். நவீனமான வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். 'வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும்.

    கும்ப - சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். வீடு கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் முயற்சியும் கைகூடும். பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும் வாய்ப்பும் உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 19, 22, 23, பிப்ரவரி: 1, 2, 6, 7, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    • வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
    • பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு.

    மேஷ ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனோடு செவ்வாய் சேர்க்கை இருப்பதால், இம்மாதம் ஒரு இனிமையான மாதமாக அமையும். பூர்வ புண்ணியத்தின் பலனால் கிடைக்க வேண்டிய அத்தனை யோகமும் உங்களுக்கு வரப்போகிறது. பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால், லாபம் அதிகரிக்கும் மாதமாகவே இம்மாதம் இருக்கும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையிலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பாக்கிய - விரயாதிபதியான குரு, வக்ரம் பெறுவதால் சுபவிரயம் அதிகரிக்கும். 'இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது சுபச்செய்திகள் வந்து மனதை மகிழ்விக்கும். அதேநேரத்தில் பூர்வீக சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக பாகப் பிரிவினை செய்துகொள்ள எடுத்த முயற்சி தாமதமாகும். சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும்.

    குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்கள் புனிதமடைகின்றன. குடும்ப ஒற்றுமை கூடும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ திருமணம் முடிவாக வாய்ப்புண்டு. வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும். தந்தை வழி பிரச்சனைகள் மறையும். தனித்து இயங்க நினைத்தவர்களுக்கு இப்பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். கூட்டுத்தொழிலை, தனித் தொழிலாக மாற்றும்போது லாபம் அதிகரிக்கும். வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் நேரம், நல்ல நேரம்தான். சகோதர ஒற்றுமை பலப்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் தொடங்க நினைத்தவர்களுக்கு அது கைகூடும். குடும்பத்தில் உதிரி வருமானங்களால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் நேரம் இது.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது பணவரவு அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கு இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது. இளைய சகோதரருடன் இருந்த பகை மறையும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பும், சுபநிகழ்வுகளும் நடைபெறக்கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 22, 23, 28, 29, பிப்ரவரி: 1, 2.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ரிஷப ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதோடு செவ்வாய் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே தைரியத்தோடு எதையும் செய்ய முன்வருவீர்கள். 'கட்டிய வீட்டை விற்றுவிட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வீடு வாங்கும் யோகமும், வியக்கும் தகவல்களும் வந்த வண்ணமாக இருக்கும். கூட்டுக்கிரக யோகத்தோடு இந்த மாதம் பிறப்பதால், அதற்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கைத் தரம் உயரும். சுபகாரியங்கள் கைகூடும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் ஆவார். எனவே குரு வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திடீர் மாற்றங்களையும், திரவிய லாபத்தையும் தந்து உள்ளத்தை மகிழ்விக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு என்பதால், இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகளை உருவாக்குவார். இடமாற்றம் அல்லது வீடு மாற்றத்தைக் கொடுத்து நன்மைகள் பெற வழிகாட்டுவார்.

    குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால், உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். ஆன்மிகப் பயணம் அதிகரிக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். தொல்லை கொடுத்து வந்த தொழில் பங்குதாரர்கள், இப்பொழுது உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. 'தொழிலை விரிவு செய்யவும், மேலும் முதலீடு செய்யவும் பணமில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் 29.1.2026 அன்று தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் திருப்திகரமாகவே இருக்கும். 'பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல முடிவு கிடைக்கும். புதிய பணியாளர்கள் வந்திணைந்து பொருளாதாரநிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். அதிக முயற்சி எடுத்தும் முடிவடையாத காரியங்கள், இப்பொழுது முடிவடையும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உங்கள் வாழ்வில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் மாதம் இது.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்திற்குச் செல்வது, அற்புதமான நேரமாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. ஆன்மிகச் சுற்றுலாக்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமலும் தத்தளித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு யோகமான நேரம் இது. புதிய பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அதன் நெளிவு, சுளிவுகளை அறிந்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயர்வும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு. கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சனை படிப்படியாக குறையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 20, 21, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மிதுன ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரித்து வலிமை அடைவதால் திடீர் தாக்கங்கள், மன அமைதிக் குறைவு, ஆரோக்கியத் தொல்லை, கடன் நெருக்கடி, குடும்பச்சுமை அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டு மன வருத்தத்தை உருவாக்கும். எனவே அமைதியும், நிதானமும் தேவைப்படும் நேரம் இது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைப்படி நடந்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய முடியும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லதுதான். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சகப் பணியாளர்களால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இந்த இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண, குரு பகவான் பார்வை கைகொடுக்கும். சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். விட்டுப்போன வரன்கள் கூட மீண்டும் வரலாம். பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உற்றார், உறவினரின் ஆதரவு உண்டு. கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக மாறும். அவர்கள் மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடமும் காட்டுவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மாறும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சி கைகூடும். பழைய வாகனத்தை சீர்செய்து உபயோகப்படுத்துவீர்கள்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். குரு-சுக்ர பார்வை இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. 'இதெல்லாம் நடக்குமா?' என்று நினைத்த காரியம் இப்போது நடந்து முடிந்து விடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். இக்காலத்தில் குலதெய்வப் பிரார்த்தனை, தடைகளை அகற்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி வளர்ச்சியையும், பிற்பகுதி தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விறுவிறுப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்தும், உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு வீடு மாற்றம் இனிமை தரும். வேற்று இனத்தாரின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 22, 23, 26, 27, பிப்ரவரி: 1, 2, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, விரய ஸ்தானத்தில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அஷ்டமத்தில் சனியும், ராகுவும் பலம் பெற்று இருக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் கூட்டுக்கிரக யோகம் உள்ளது. எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் உருவாவதற்கான அறிகுறி தென்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை செய்வது நல்லது. இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வாசல் தேடி வந்த வரன்களை பரிசீலனை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். சனீஸ்வரர் வழிபாட்டினால் தடைகள் அகலும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, நன்மை - தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் 'விபரீத ராஜயோகம்' ஏற்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர், திடீரென எண்ணங்களும், செயல்களும் மாறும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். நோய் நொடியில் இருந்து விடுபடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்காக ஏற்றுக் கொண்ட பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரிகள் மாற்றப்படுவர். தொழிலுக்குத் தேவையான மூலதனம் நண்பர்கள் வாயிலாகக் கிடைக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். 'வைத்திருக்கும் வாகனத்தால் பிரச்சனை அதிகம் வருகின்றதே.. அதை விற்று விடலாமா?' என்று யோசிப்பீர்கள்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, இக்காலம் ஒரு பொற்காலமாக மாறப்போகிறது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் நேரம் இது. சகோதர வழியில் ஒற்றுமையும், பாசப்பிணைப்பும் ஏற்படும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராதவிதத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உத்தியோக மாற்றம் செய்ய நினைத்தால் அதுவும் கைகூடாது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தர, விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 23, 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    • திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம்.

    6-ந் தேதி (செவ்வாய்)

    * சங்கடகர சதுர்த்தி

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்சவம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    7-ந் தேதி (புதன்)

    * தியாகபிரம்ம ஆராதனை விழா.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருவரங்கம் நம்பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.

    * திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    8-ந் தேதி (வியாழன்)

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம்.

    * சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    9-ந் தேதி (வெள்ளி)

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளர் திருக்கோலக் காட்சி, இரவு சந்திர பிரபையில் பவனி.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந் தேதி (சனி)

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலக் காட்சி.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, திருமோகூர் காளமேகப் பெருமாள், திருச்சேறை சாரநாதர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    11-ந் தேதி (ஞாயிறு)

    * மதுரை செல்லத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்து அருளிய காட்சி.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    12-ந் தேதி (திங்கள்)

    * திரைலோக்கிய கவுரி விரதம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜர் திருக்கோலம்.

    * மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் திருவீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    • மேஷம் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம்.
    • ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம்.

    மேஷம்

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுக்கும் பாக்யாதிபதி குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இதனால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. குடும்ப பிரச்சினைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது.தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் அதிகரிக்கும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மிகச் சிறப்பாக இருக்கும். சஷ்டி திதியில் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்க்கிறார். குரு ராசி அதிபதியை பார்ப்பதால் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வ லர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

    மிதுனம்

    தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மிதுன ராசியினருக்கு சாதகமாக உள்ளது. இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்க ளையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்று வீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தாய் அல்லது தந்தையின் அரசாங்க வாரிசு வேலை கிடைக்கும்.சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.

    கடகம்

    மனக்கவலைகள் குறையும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இது கடக ராசிக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய யோகமான காலமாகும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் நிறைவேறும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவும், பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் குரு மற்றும் சனி பார்வையில் உள்ளார். தடை, தாமதங்கள் விலகும். மனச் சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது எல்லாம் நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும்.சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலி கமாக ஒத்தி வைப்பது நல்லது.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கை,கால், மூட்டு வலியால் சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

    கன்னி

    பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். ஜனன கால ஜாதரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. கண்டகச் சனி பற்றிய பயம் விலகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்துவீர்கள்.பெண்களுக்கு பொருளாதாரத்தில் தன் நிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். அரசு வேலைக்கான முயற்சி கைகூடும்.புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி கல்லூரிகள் மூலம் கல்வி சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது.தினமும் திருகோளாறு பதிகம் படிக்கவும்.

    துலாம்

    தெய்வு அனுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும் வாரம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும். இனம் புரியாத கவலைகள் குறையும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு சுப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரும். ஆரோக்கியம் சிறக்கும். கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.

    விருச்சிகம்

    ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குரு மற்றும் சனியின் பார்வையில் சூரியன் சுக்கிரன் புதனுடன் இணைந்துள்ளார்.கடன் தொல்லை அகலும்.போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிக்கு தேவை யான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். முக்கியமான தேவைகள் நிறைவேறும். பார்த்துச் சென்ற வரனின் முடிவிற்காக காத்து இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம்.வீட்டு வாடகை உயரும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். 4.1.2026 அன்று காலை 9.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும்.வெளி உணவுகளைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    தனுசு

    முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும்.நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும்.4.1.2026 அன்று காலை 9.43க்கு ஆரம்பித்து 6.1.2026 அன்று பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்ப வர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். சனிக்கிழமைகளில் முன்னோர்களை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    மகரம்

    நிம்மதியான வாரம்.ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும்.பெண்களுக்கு குடும்பப் பணிச்சுமையால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். பெண்கள் கணவரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். 6.1.2026 அன்று பகல் 12.17 முதல் 8.1.2026 அன்று மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும்.பேச்சைக் குறைப்பது நல்லது. வேலைப்பளு மிகுதியாகும். மன அமைதி குறையும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.

    கும்பம்

    மகிழ்ச்சிகரமான வாரம். ஏழரைச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும். லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பணக் கஷ்டம்,கடன் பாதிப்பு இருக்காது.சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.கடந்த கால கடன்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சீராகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். 8.1.2026 அன்று மாலை 6.39க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை குபேர லட்சுமியை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவும்.

    மீனம்

    திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய வாரம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். வேலையில் பணி நிரந்தரமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
    • திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.

    30-ந் தேதி (செவ்வாய்)

    * வைகுண்ட ஏகாதசி.

    * விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா.

    * திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

    * விஷ்ணு ஆலயங்களில் ராப்பத்து உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    31-ந் தேதி (புதன்)

    * கார்த்திகை விரதம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், எல்லாம் வல்ல சித்தராய் காட்சி, இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.

    * திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.

    * மதுரை கூடலழகர் பெருமாள், திருவள்ளூர்

    * வீரராகவப் பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

    1-ந் தேதி (வியாழன்)

    * பிரதோஷம்.

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ரத உற்சவம்.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    2-ந் தேதி (வெள்ளி)

    * ஆருத்ரா அபிஷேகம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இரவு நடேசர் மகா அபிஷேகம்.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் பவனி.

    * சமநோக்கு நாள்.

    3-ந் தேதி (சனி)

    * பவுர்ணமி.

    * ஆருத்ரா தரிசனம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தருளிய காட்சி.

    * திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந் தேதி (ஞாயிறு)

    * சிதம்பரம் சிவபெருமான் முத்து பல்லக்கில் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    5-ந் தேதி (திங்கள்)

    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • ரிஷபம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
    • கடகம் தடை, தாமதங்கள் விலகும் வாரம்.

    மேஷம்

    சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் வாரம்.ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகும்.தொழில் வளர்ச்சி அபரிமித மாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். தொழில் உத்தியோகத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். சாமர்த்தியம் அதிகமாகும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிர கம் மன நிம்மதியை அதிகரிக்கும். மனதை மகிழ்விக் கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை, கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். நடராஜருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    ரிஷபம்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சனியின் 3ம் பார்வை உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கோபத்தை அதிகரித்தாலும் நிதானத்தை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம். தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் கூட்டாளி களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்க வும். நடராஜருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட எல்லா விதமான பிரச்சினைகளும் சீராகும்.

    மிதுனம்

    தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று சனி பார்வையில் இருக்கிறார். வாழ்க்கையை நடத்து வதில் இருந்த சிரமங்கள் உங்களுடைய முயற்சியால் சீராகும். பயம் என்பதே இருக்காது. தைரியசாலியாக இருப் பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். குடும்ப சிக்கல்கள், மற்றும் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர் கள். பண வரவில் முன்னேற்றம் இருக் கும். குடும்ப உறவுகளின் அனுசரனை யால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். மனதும், உடலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். நடராஜருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.

    கடகம்

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சந்திரன் 9,10,11-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பிறர் ஆச்சரியப்படும் வகையில் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும்.வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள்.அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானந்துடன் செயல்பட வேண்டும். விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவை இல்லாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் அமைதி கடை பிடித்தால் ஓரிரு வாரங்களில் நிைலமை சீராகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விவசாயிகள் பருவ காலத் திற்கு ஏற்ற பயிரை விளைவிப்பது நலம். இளநீர் அபிஷேகம் செய்து நடராஜரை வழிபடவும்.

    சிம்மம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக் கும், ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சி களில் ஆர்வம் ஏற்படும். மன சங்கடங்கள் அகலும். தடை பட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்று வீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசு வழி ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம் தொடர் பான உங்களின் எண்ணம் ஈடேறும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறு வீர்கள். தடை பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சனி, ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக உள்ளதால் அதிக முதலீடு கொண்ட செயல் களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் பணத்தை வேறு வகையில் முதலீடு செய்ய வேண்டும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணை யால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். 29.12.2025 அன்று காலை 7.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். திருவாதிரை அன்று நடராஜருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.

    கன்னி

    புதிய தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். முயற்சிகளில் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். அனைவரிடமும் பெருந் தன்மையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வேலை, தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லலாம். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடன் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் திறமை யால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள். 29.12.2025 அன்று காலை 7.41-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து 31.12.2025 அன்று காலை 9.23-க்கு முடிவதால் சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மன சஞ்ச லத்தால் தாமதமாகும். நடராஜருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடவும்.

    துலாம்

    தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள்.பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மேலும் நன்மையை அதிகரிக்க குல தெய்வம், முன்னோர்களை வழிபடவும். 31.12.2025 அன்று காலை 9.23 மணி முதல் 2.1.2026 அன்று காலை 9.26 மணி வரை இருப்பதால் அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக் கூடாது. நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். திருவாதிரையன்று நடராஜருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.

    விருச்சிகம்

    விபரீத ராஜ யோகமான வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி குரு பகவான் 8,11ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம். சிலர் நண்பர் களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்க லாம். அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 2.1.2026 அன்று காலை 9.26 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யா மல் அமைதி காப்பது நல்லது. திருவாதிரை அன்று நடராஜருக்கு புனுகு சாற்றி வழிபடவும்.

    தனுசு

    உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசியில் உள்ள சூரியன், புதன், செவ்வாய், சுக்கி ரன் சேர்க்கைக்கு சனி, குரு பார்வை உள்ளது. தனுசு ராசியினர் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். அலுவல கத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். திருமண வயதில் இருப்பவர் களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட, வாகனம் வாங்க உகந்த நேரம். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். பங்காளிகள் பிரச்சினை, கோர்ட்டு, கேஸ், வாய்தாக்கள் என அலைந்த நிலை மறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர் பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு பச்சைக் கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மகரம்

    நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பதால் மனதில் நிம்மதி இருக்கும்.இதுவரை அனுபவித்த எண்ணிடலங்கா துயரம் தீரும். விரக்தியாக வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடு மாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும். இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

    கும்பம்

    வைராக்கியத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி குருவின் பார்வை உள்ளது.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். சகல சவுபாக்கி யங்களையும் எல்லாவிதமான வளர்ச்சியையும் பெறக்கூடிய நிலை உள்ளது. நினைப்பது நடக்கும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடை பட்ட வாடகை வருமா னங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும். திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். ராசியில் ராகு ஏழில் கேது உள்ளதால் திருமண முயற்சியில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல் பட்டால் அதிக நன்மைய டையலாம். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மீனம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும்.பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். உடன் பிறந்த சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்ற வர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புத்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் பிரச்சினைகளும் விலகும். சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதமிருந்து நடராஜருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
    • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.

    16-ந் தேதி (செவ்வாய்)

    * கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    17-ந் தேதி (புதன்)

    * பிரதோஷம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.

    19-ந் தேதி (வெள்ளி)

    * அமாவாசை.

    * அனுமன் ஜெயந்தி.

    * திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (சனி)

    * விஷ்ணு ஆலயங்களில் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந் தேதி (ஞாயிறு)

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் பகற்பத்து உற்சவம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந் தேதி (திங்கள்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.
    • மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

    தனுசு ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.

    உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகர ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.

    குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    கும்ப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

    'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மீன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.

    'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    • திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
    • பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    சிம்ம ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தொழிலில் குறுக்கீடுகள் வந்து கொண்டுதான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை மாற, சர்ப்ப கிரகங்களுக்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடுவது நல்லது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குருபகவான் வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் யாவும் புனிதமடைந்து நற்பலன் தரும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.

    இதுவரை தடைப்பட்ட சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, அதை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். இதுவரை பகையாக இருந்த உறவினர்கள், உங்களைத் தேடி வந்து பாசம் காட்டுவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மகத்தான பொறுப்புகள் கிடைக்கும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிபவர்களுக்கு அங்கு 'குடியுரிமை கிடைக்கவில்லையே' என்ற கவலை அகலும். இடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் முன்னேற்றம் காணும் நேரம் இது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல காரியங்கள் நடைபெறும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார்். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தங்களின் வியாபார தலத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுப்பர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 19, 29, 30, ஜனவரி: 3, 4, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    கன்னி ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால், நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மாதம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பதியும் ராசிகள் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்ெபாழுது துரிதமாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகவும், சிறப்பாகவும் இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.

    சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இதுவரை ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரியும் சூழல் உருவாகும். வாசல் தேடி வரும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் இப்பொழுது மாற்றப்படலாம். கேட்ட சலுகைகள் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வரப்போகிறது. குறிப்பாக பணத்தேவை பூர்த்தியாகும். புதிய இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு அல்லது இருக்கும் வீட்டை விரிவு செய்யும் அமைப்பு உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும். மகிழ்ச்சிகரமான ஆன்மிகப் பயணங்கள் உண்டு.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். மேலும் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரு சில காரியங்களை தாமதமாகச் செய்ய நேரிடும். வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நிலையான வருமானம் உண்டு. பூமி யோகம் அமையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 17, 20, 21, ஜனவரி: 1, 2, 5, 6, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    துலாம் ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். எனவே வருமானம் வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். 'சேமிக்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணம் கைகளில் புரளும் நேரத்தில் சுபச்செலவுகளைச் செய்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர் மாற்றம் பற்றியும், உத்தியோக மாற்றம் பற்றியும் நீங்கள் சிந்தித்தபடியே செயல்படுவீர்கள்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக இருந்தாலும், அதன் பார்வைக்கு பலன் அதிகம். எனவே இதுவரை இருந்த இடா்பாடுகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே.. கொடுத்த கடனை வாங்க முடிவில்லையே..' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

    சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் காரிய வெற்றியும், பணப் புழக்கமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொடர்ச்சியாக வந்த கடன் சுமை குறைய, புதிய வழிபிறக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். அதிகார அந்தஸ்திற்கு சிலர் உயர்த்தப்படுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தானாக வரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 19, 23, 24, ஜனவரி: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    விருச்சிக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்த பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சுபக் கிரகத்தின் பார்வை பதிவதால் சுபச் செய்திகள் வந்து சேரும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் குரு. அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வை தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் பதிகிறது. தன் வீட்டை, தானே பார்க்கும் குருவால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு கைகூடும். உறவினர் பகை அகலும். கொடுக்கல் - வாங்கல்களில் லாபம் உண்டு. குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பரிபூரண பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு, அதிகார அந்தஸ்தைப் பெறும் யோகம் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம - விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப அமைதி கூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க செலவிடுவீர்கள். மேலும் திருமண வயதடைந்த பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய இடத்தை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு, நடக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரும் வாய்ப்பு உண்டு.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமை அடைவதால் யோசிக்காது செய்த காரியங்களிலும் வெற்றி உண்டு. பூமி யோகமும், பிள்ளைகளின் வழியில் நல்ல காரியமும் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    • புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
    • வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.

    மேஷ ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் லாப ஸ்தானாதிபதி சனி லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கொடுக்கல் - வாங்கல் நல்லபடியாக அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், உங்கள் ராசிநாதன் செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் இனிய மாதமாகவே அமையும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் பலம் பெறுகின்றன. இதன் விளைவாக கல்யாணக் கனவுகள் நனவாகும். நீண்ட நாட்களாக பேசிப் பேசி கைவிட்டுப் போன வரன்கள் இப்பொழுது மீண்டும் வரலாம். அவற்றை பரிசீலனை செய்து தகுந்ததை தேர்வு செய்ய உகந்த நேரம் இது. தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக முடிவடையும். முந்திய காலத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறத் தொடங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். பொருளாதார நிலை உயர வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஏழரைச் சனி தொடங்க இருப்பதால், சுய ஜாதகத்தின் பலம் அறிந்து ஏற்றுக்கொள்வது நல்லது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில், பொன் - பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் நல்ல இடத்திற்கு வருவதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய் உச்சம்பெறும் இந்த நேரம், அற்புதமான நேரமாகும். எந்த செயலைச் செய்தாலும், அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக நடந்துகொள்வர். கடன்சுமை குறையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களின் எண்ணங்கள் எளிதில் வெற்றிபெறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும். திடீர் மாற்றம் உருவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 1, 2, 5, 6.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ரிஷப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதியான புதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த யோகமான நேரத்தில் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ஆயினும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் அனைத்தும் புனிதம் அடைகின்றன. உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். எதிரிகள் விலகுவர். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். சென்ற மாதத்தில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

    பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் என்றாலும், குரு வக்ரமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் மன வருத்தமும் வந்துசேரும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டு மென்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான சூழல் உருவாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். எதிர்பாராத திருப்பங்கள் பலவும் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் கூடுதல் உயர்வு கிடைத்து, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். எந்த காரியத்தை முயற்சித்தாலும், அது உடனடியாக முடிவடையும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். விரயாதிபதி உச்சம்பெறுவதால் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படித்து முடிப்பது உத்தமம். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 23, 24, 27, 28, ஜனவரி: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மிதுன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. சுக்ரனோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும் வாய்ப்பு உண்டு. இம்மாதம் ஜென்ம குரு வரப்போவதால் திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் கூட ஒரு சிலருக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதலாகி செல்லும் வாய்ப்பு உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அங்ஙனம் ஜென்ம குருவாக வரும்பொழுது அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். திடீர் இடமாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாமா?, வேண்டாமா? என்பது பற்றி சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தனித்து இயங்க முடியாமல் பிறரை சார்ந்திருப்பவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும்.

    'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அதன் பார்வை பலனால் சில நன்மைகளும் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் உருவான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 'சொத்து விற்பனையால் வரும் லாபத்தைக் கொண்டு சுப காரியங்கள் நடத்தலாமா?' என்று யோசிப்பீர்கள்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும்போது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதேநேரம் கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு இடத்தில் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். தனுசு ராசியானது குருவிற்குரிய வீடு என்பதால், அதில் சஞ்சரிக்கும் பகை கிரகமான சுக்ரன் பலவித வழிகளிலும் திடீர் திடீரென மாற்றங்களைக் கொடுப்பார். மன வருத்தங்களும் அதிகரிக்கும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். ஒரு சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கைகூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 26, 27, 29, ஜனவரி: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    கடக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி பலம்பெற்று சஞ்சரிக்கிறார். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குருவும், வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாதம் சோதனைக் காலமாகவே இருக்கும். சிக்கல்களும், சிரமங்களும், சிறுசிறு தொல்லைகளும் வரலாம். பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த வழிபாட்டை முழுமையாக சனியின் மீது செலுத்த வேண்டிய நேரம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் 12-ம் இடத்திற்கு வரும்போது பயணங்கள் அதிகரிக்கும். பல வழிகளிலும் விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் திடீரென வந்து இதயத்தை வாட்டும். குரு பார்வை பதியும் இடங்கள் நன்மை தரும் என்பதால், தாய்வழி ஆதரவு கிடைக்கும். மற்ற சகோதரர்களிடம் அன்பு காட்டிய பெற்றோர், இப்போது உங்கள் மீதும் பாசம் காட்டுவர். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.

    உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் மாறுதலாகிச் செல்வர். எதிர்பாராத சலுகைகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிக்கு பலன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக எதையாவது செய்யலாமா? என்று சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாமல் நழுவிச் சென்ற காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். பெண் வழிப் பிரச்சினைகள் தீர வழிபிறக்கும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், உச்சம் பெறுகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். யோகம் செய்யும் கிரகம் வலுவடைவதால் தேக நலன் சீராகும். செல்வ வளம் பெருகும். தெய்வப்பற்று அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் மாறும். வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு கடின முயற்சி கல்வியில் வெற்றி தரும். பெண்களுக்கு உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். வரவும், செலவும் சமமாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 27, 28, ஜனவரி: 1, 2, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

    ×