என் மலர்
நீங்கள் தேடியது "Astrology"
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
2-ந் தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம், இரவு பரணி தீபம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் காலை கண்ணாடி விமானத்திலும், இரவு கயிலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
3-ந் தேதி (புதன்)
* திருக்கார்த்திகை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருவண்ணாமலை தீபம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயணசுவாமி விசேஷ அலங்காரம்.
* திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (வியாழன்)
* பவுர்ணமி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் தெப்ப உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் லட்சத்தீப காட்சி.
* திருப்பதி ஏழு மலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வெள்ளி)
* திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி தலங்களில் விழா தொடக்கம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (சனி)
* திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
இந்த வார விசேஷங்கள்
25-ந் தேதி (செவ்வாய்)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் விழா தொடக்கம்.
* பழனி ஆண்டவர் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (புதன்)
* உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் திருவீதி உலா.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
28-ந் தேதி (வெள்ளி)
* பழனி ஆண்டவர் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவல்லித் தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (சனி)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
* திருவரங்கம் நம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
30-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
1-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் வெள்ளி விமானத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- ரிஷபம் சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
- கன்னி சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம்.
மேஷம்
வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் 2,7ம் அதிபதி சுக்ரன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசி அதிபதி செவ்வாய்க்கு 2, 5,8 எனும் பணபரஸ்தான சம்பந்தம் இருப்பதால் பணத் தேவைகள் பூர்த்தியாகும். வராக் கடன்கள் வசூல் ஆகும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் அகலும்.தன வரவு திருப்தி தரும். ஆடம்பர செலவினை குறைத்து சேமிப்பிற்கு முயற்சி செய்வீர்கள்.குடும்ப முன்னேற்றம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும்.சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் உருவாக லாம்.வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை இருக்கும்.வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். காலபைரவர் வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.
ரிஷபம்
சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சூரியன், செவ்வாய், சனி, சுக்ரன் பார்வை உள்ளது. சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுவதால் புதிய தொழில் ஒப்பந்தம் மூலமாக அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அசுப கிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் இனம் புரியாத மனசஞ்சலம் இருக்கும்.ஓய்வின்றி உழைக்க நேரும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமா இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும்.திருமண வயதினருக்கு வரன்பார்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 25.11.2025 அன்று காலை 4.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு இன்னல்களை நீக்கும்.
மிதுனம்
எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் வாரம்.வார இறுதியில் புதன்,சனி வக்ர நிவர்த்தி பெறுகிறார்கள். தன ஸ்தானத்தில் குரு பகவான் என முக்கிய கிரக நிலவரங்கள் மிதுன ராசிக்கு மிக சாதகமாக உள்ளது. சிலரது பிள்ளைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். சுக, போக பொருட்களின் சேர்க்கை இரட்டிப்பாகும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். 25.11.2025 அன்று காலை 4.27 மணி முதல் 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்தால் எந்தவித இன்னல்களும் வராது.நவகிரக அங்கார கனை வழிபடவும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சீனிவாச பெருமாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
கடகம்
புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது.அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.மன உளைச்சலைத் தந்த பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். மாமன், மைத்துனன் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 29.11.2025 அன்று இரவு 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பச் சுமை கூடும். வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். சிவ வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.
சிம்மம்
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார்.சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம். சிலருக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் வாசல் கதவை தட்டும். நல்ல வாய்ப்புகள் தடைபடும்.சிலர் பணியில் ஏற்பட்ட வீண் பழியால் வேலையில் இருந்து விலகலாம். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலம் என்பதால் யாரிடமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிரத்தை மற்றும் கடின உழைப்பால் தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் விவசாயிகள் பயிர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம்.29.11.2025 அன்று இரவு 8.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மேலதிகாரி அதிக பணிச்சுமையை வழங்கலாம்.சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம். விநாயகரை வழிபடுவதால் தீயவினைகள் அகலும்
கன்னி
சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுகிறார். லாப ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் என கிரக நிலைகள் மிக மிக சாதகமாக உள்ளது.பண வரவு திருப்தியாக இருக்கும்.பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். தடைபட்ட திருமண முயற்சிகள் துரிதமடையும். விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபம் அதிகரிக்கும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கவும்.
துலாம்
புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும் வாரம்.ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற புதன் உள்ளார்.புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு இப்பொழுதே சேமிப்பீர்கள்.சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும்.திருமண முயற்சி சாதகமாகும்.பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால் நல்ல பலனை அடைய முடியும். கணவன் மனைவி கருத்தொற்றுமை சிறப்படையும். பிள்ளைகளிடம் இருந்து எதிர்பாராத அன்பு பரிசு கிடைக்கும்.எட்டாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. ஜாமின் போடக்கூடாது.தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மகாலட்சுமி வழிபாட்டால் அபிவிருத்தி பெற முடியும்.
விருச்சிகம்
தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கைக்கு குரு பார்வை உள்ளது. நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் மூலம் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்வீர்கள். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கூடிவரும்.வீடு, வாகன யோகம்,புத்திர பாக்கியம் உண்டாகும்.வீட்டில் திருமணம் போன்ற சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். பூமி, மனையின் மதிப்பு கூடும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அண்டை அயலாருடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறையும். ஏழாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையா ளர்கள், வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. ஓரிரு வாரங்களுக்கு திருமணம் முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.சிலருக்கு பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.முருகன் வழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும்.
தனுசு
நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளா தாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.மனமகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் நடக்கும்.ஆடம்பர விருந்து உபசரணைகளில் கலந்து கொள்ளக்கூடிய அமைப்பு உள்ளது. எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டு எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.மதிப்பு மிகுந்த கவுரவப் பதவிகள் தேடி வரும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சிரத்தையுடன் செயல்படுவீர்கள். இது அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகளுக்கு உதவியாக இருக்கும்.
மகரம்
முன்னேற்றமான வாரம்.ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. ஆன்ம பலம் பெருகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.ஆழ்ந்த அறிவும் சிந்திக்கும் திறனும் கூடும். சமூக அந்தஸ்து நிறைந்த முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்.விலகி சென்ற உறவுகள், நட்புகள் தேடி வருவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.மனச் சங்கடம் மறையும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும்.வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். அழகான ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
கும்பம்
சுமாரான வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். ராசிக்கு செவ்வாய் ராகு சம்பந்தம் உள்ளது.முன்னோர்களின் சொத்தில் முறையற்ற பங்கீடு கிடைக்கும். உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படும். வேலையில், தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும். பொருளாதார விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியம். சிலரின் பிள்ளைகளுக்கு தொழில் முன்னேற்றமோ, அரசாங்கப்பணியோ தேடி வர வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஏழரைச் சனியால் எவ்வளவு இடையூறுகள் நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். குழந்தை பேற்றில் உள்ள குறைபாட்டை நீக்க மருத்துவ உதவியை நாடலாம். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும்.கார்த்திகை மாத சோம வார சங்கு பூஜையில் கலந்து கொள்ள சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
மீனம்
தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும் வாரம்.ராசிக்கு உச்ச குருவின் வக்கிர பார்வை உள்ளது.ராசி அதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் காலமும், நேரமும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் ஜென்மச் சனியால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.வீடு, மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும் என்ற தாரக மந்திரத்தை மனதில் குறிக்கோளாக வைத்து செயல்படுவீர்கள். சில நன்மைகளும், மாற்றங்களும் நடக்கும்.தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்ப டுத்துவது புத்திசா லித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். ஆண் வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. தினமும் குரு கவசம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
இந்த வார விசேஷங்கள்
18-ந் தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
* சமநோக்கு நாள்.
19-ந் தேதி (புதன்)
* அமாவாசை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (வியாழன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் பவனி.
* சமநோக்கு நாள்.
22-ந் தேதி (சனி)
* திருத்தணி கவுரி விரதம்.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
23-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (திங்கள்)
* திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் விழா தொடக்கம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
- ‘சுக்ர மங்கள யோக’த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு.
- பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
தனுசு ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களை திடீர், திடீரென மாற்றியமைப்பீர்கள். தொழிலில் குறுக்கீடுகளும், தொல்லைகளும் உண்டு. நினத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீண்ட நாட்களாக கட்டுப்பட்டிருந்த நோய் மீண்டும் தலைதூக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் காலமாகவே அமையும். ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த நன்மையை உண்டாக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 12-க்கு வருவது யோகம்தான். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். 'சுக்ர மங்கள யோக'த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர், உங்கள் ராசிக்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். 'வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீடாக விலைக்கு வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் வரும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பரபரப்பாகக் காணப்படுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி தரும். உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்தும் அழைப்பு வரலாம். வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பு கரைந்தாலும், பொருளாதாரத்தை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 26, 27, 30, டிசம்பர்: 1, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
மகர ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிவதால் மிச்சம் வைக்கும் விதத்தில் பொருளாதார நிலை உயரும். வாக்கிய கணித ரீதியாக இன்னும் சில மாதங்களுக்கு ஏழரைச்சனி இருக்கிறது. அதுவரை நன்மையும், தீமையும் கலந்து நடைபெற்றாலும், குரு பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து திருப்திப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதம் அமையும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் பார்வை பலன் நன்மை செய்தாலும் கார்த்திகை 2-ந் தேதி முதல் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். எனவே கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் போட்டி அகலும். எதிரிகள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். கிளைத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமி விற்பனையாலும் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் நேரம் இது.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு சில நலன்களைப் பெறுவீர்கள். 'பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கின்றதே' என்று கவலைப்பட்டவர்கள், புதிய வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சி களில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 27, 28, டிசம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கும்ப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இனி ஆரோக்கியம் சீராகும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள். மந்த நிலை மாறி மகிழ்ச்சியான நிலை அமையும். இந்த மாதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி மாற்றினத்தவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அங்ஙனம் தன லாபாதிபதியான குரு பகவான் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் அடைகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் தடைகள் ஏற்படும். புதியவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேலும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மையை வழங்கும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அங்குள்ள செவ்வாய் மற்றும் சூரியனோடு இணைகிறார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோரின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறும் சூழல் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். தள்ளிச் சென்ற ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். அரசு வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உத்தியோக முயற்சி பலன் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். உறவினர் பகை அகலும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றமும், ஏற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 4, 5, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மீன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது. ராசிநாதன் ராசியைப் பார்க்கும் இந்த நேரம் நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் பணியாளர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். இக்காலத்தில் வியாழக் கிழமைதோறும் விரதம் இருந்து குருவை வழிபடுவது நல்லது. குறிப்பாக யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவும் கைகொடுக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். தொடர்ந்து சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். சேமிப்பு உயரும் இந்த நேரத்தில் அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். புதிய தொழிலால் பொருளாதார நிலை உயரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதார நிலையில் திருப்தி ஏற்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து பெறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ- மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவோடு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 26, 27, டிசம்பர்: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
- ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம்.
சிம்ம ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியனை குரு பார்க்கின்றார். ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கிறார். எனவே இனம் புரியாத கவலையும், மனக்குழப்பமும் ஏற்படும். கண்டகச் சனி ஆதிக்கம் இருப்பதால், பெற்றோரின் உடல்நலனில் தொல்லை, பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத சிக்கல், வருமானப் பற்றாக்குறை ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். தன்னிச்சையாக செயல்பட்டவர்களுக்கு, பிறரை சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகி்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களின் எதிர்ப்புகளால் முடிய வேண்டிய சுபகாரியங்கள் தாமதப்படும். அதேசமயம் அஷ்டமாதி பதியாகவும் குரு பகவான் விளங்குவதால், இதுவரை முடிவடையாதிருந்த வழக்குகள் இப்பொழுது முடிவடையும். வராது என்று நினைத்த கடன் பாக்கிகள் வசூலாகும். சுபச்செய்திகள் உண்டு.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்தநேரம், நல்ல நேரம்தான். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைப்பதோடு புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளுக்குரிய திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். வாங்கிய இடத்தை விற்பதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழி காட்டுதல் சிறப்பாக அமையும். பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 20, 21, டிசம்பர்: 2, 3, 7, 8, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கன்னி ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த மாதத்தில் புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். கடன்சுமை குறையும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எளிதில் வந்து சேரும். உச்சம்பெற்ற குரு சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக் கிறார். அதே சமயம் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். காரியங்கள் கைகூட நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து புகழ் பெறுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். மொத்தத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரம் இது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்படும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறி பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சீராகும். வழக்குகள் சாதகமாக அமையும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், மிக கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய சீர்கேடு வந்து கொண்டேயிருக்கும். மன உறுதி குறையும். வருமானம் வரும் வழியில் குறுக்கீடுகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளில் இழப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 19, 23, 24, டிசம்பர்: 4, 5, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
துலாம் ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். 'பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடுதலாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும் நேரம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. '10-ல் குரு பதவியில் மாற்றம்' என்பது ஜோதிடப் பொன்மொழி. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு திரவிய லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் வரலாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று சிந்திப்பீர்கள். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரமிது. நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சி பலன் தரும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீ்ர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி புதன் 2-ல் வரும் இந்த நேரம் செலவிற்கு ஏற்ப வரவு வந்துசேரும். சேமிக்க இயலாது. முந்தைய சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறி தென்படும். எதிலும் யோசித்துச் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். கலைஞர் களுக்கு நட்பு கைகொடுக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.
விருச்சிக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம்பெற்ற குரு பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தொட்டது துலங்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் வீடு தேடி வந்து வாழ்த்துவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும், நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்க உறுதுணையாக இருக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சிக்கிறார். அவரது முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும். தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும், தொழில் முன்னேற்றம் ஏற்படவும், வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரவும் குருவின் பார்வை வழிவகுக்கும். அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு தன - பஞ்சமாதிபதி ஆவார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும் உச்சம் பெற்ற குரு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசில நல்ல காரியங்கள் தடைப்பட்டாலும், கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் 'சுக்ர மங்கள யோகம்' செயல்படும். இதன் விளைவாக ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியே வரும் சுபகாரியங்களை சிறப்பாக முடித்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அரசு அனுகூலம் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சி கைகூடும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதி புதன். அவர் ராசிக்கு வரும் இந்த நேரம் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய சந்தர்ப்பங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 23, 24, 28, 29, டிசம்பர்: 8, 9, 10, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
- குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
- பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அருளாளர்களின் ஆசியும், அன்பு நண்பர்களின் ஆதரவும் திருப்தி தரும். ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து விருச்சிக ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகைமாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே இந்த வக்ர காலத்தில் வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு. நினைத்தது நிறைவேறாமலும் போகலாம். நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழச்சியை வழங்கலாம். இருப்பினும் இக்காலத்தில் குரு வழிபாடு அவசியம் தேவை.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அவர் உங்களுக்கு யோகத்தை வழங்கப்போகிறார். அங்குள்ள சூரியன், செவ்வாயோடு இணைகின்றார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் ஒரு நல்ல தகவல் கிடைக்கும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இப்பொழுது நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலையும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், தற்சமயம் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இதுவரை சேமித்த சேமிப்பை இப்பொழுது அசையா சொத்தாக மாற்ற முயற்சிப்பீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க சகோதரர்கள் உதவுவர்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்தநேரம், ஒரு அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். அடிப்படை வசதிகள் பெருகும். ஆனந்த வாழ்க்கை மலரும். குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நினைத்தது நடக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு கடன் என்ற மூன்றெழுத்து தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 4, 5, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
ரிஷப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த வகையில் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமியால் லாபம் வந்துசேரும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். சுபச்செய்திகள் அதிகம் கேட்கும் மாதம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலம் வளர்ச்சி அதிகரிக்கும் காலமாகவே இருக்கும். திட்டமிடாமலேயே சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி பலன் தரும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்ப்பது யோகம்தான். இது ஒரு பொன்னான நேரம் மட்டுமல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும் நேரமும் ஆகும். அங்குள்ள சூரியன் மற்றும் செவ்வாயோடு சுக்ரன் இணைவதால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, தாமதித்த திருமணம் தடையின்றி நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லை உண்டு. அதனால் மனக்கலக்கமும், மருத்துவச் செலவும் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராமல் வந்துசேரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களால் பலன் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 25, 26, 27, 30, டிசம்பர்: 1, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
மிதுன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பலம் பெற்ற சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளால் வரும் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த ஒரு சில நல்ல காரியங்கள் இப்பொழுது நிறைவேறுவதற்கான அறிகுறி தென்படும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுவடைகின்றது. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். எனவே வருமானம் தட்டுப்பாடுகளும் வரலாம். திசாபுத்தி பலம் இழந்திருப்பவர்களுக்கு கடன், கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நல்ல பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சாதாரணப் பொறுப்பிற்கு மாற்றப்படலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ம் இடத்திற்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். குறிப்பாக உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது நடைபெறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு அது கைகூடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பூமி விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். நிறைந்த தன லாபம் தரக்கூடிய விதத்தில் சில வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பிரபலமானவர்களின் பின்னணியில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கல்விக்காகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 27, 28, டிசம்பர்: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கடக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். எவ்வளவு தொகை வந்தாலும், அது சேமிப்பாக மாறாது. முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையாகச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பணப்பொறுப்பு சொல்லி யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்தால் அதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே குரு பார்த்தாலும், சேர்ந்தாலும் கோடி நன்மை என்பதற்கிணங்க தீமைகள் விலக வழிவகுத்துக் கொடுப்பார். கார்த்திகை 2-ந் தேதி முதல் கடக குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. 6-க்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கும் குருவே அதிபதி என்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைக் கவனமுடன் கையாள்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை வந்து சேரும். உள்ளத்தில் எதை நினைத்தீர்களோ, அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவர். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்துகொண்டு வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. வருமானம் உச்சம்பெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இந்த வார விசேஷங்கள்
11-ந் தேதி (செவ்வாய்)
* திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கருட வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம்.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
12-ந் தேதி (புதன்)
* திருநெல்வேலி காந்திமதியம்மன் சிவபூஜை செய்தல், இரவு சப்தா வர்ண பல்லக்கில் பவனி.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி காந்திமதியம்மன் அதிகாலை தவசுக்கு புறப்படுதல்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் பவனி.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
15-ந் தேதி (சனி)
* சுமார்த்த ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன், தூத்துக்குடி பாகம்பிரியாள், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
* கடையம் விசுவநாதர் திருக்கல்யாணம்.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* மாயவரம் கவுரிநாதர் கடைமுகம், உற்சவ தீர்த்தவாரி, விருட்சப சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.
* சமநோக்கு நாள்.
17-ந் தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* முடவன் முழுக்கு.
* ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் அன்னாபிஷேகம்.
- பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
இந்த வார விசேஷங்கள்
4-ந் தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி காந்திமதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.
* திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
5-ந் தேதி (புதன்)
* பவுர்ணமி.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் அன்னாபிஷேகம்.
* தென்காசி உலகம்மை, சங்கரன்கோவில் கோமதியம்மன், தூத்துக்குடி பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை, பத்தமடை மீனாட்சியம்மன் தலங்களில் விழா தொடக்கம்.
* தஞ்சை பெரியகோவில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
6-ந் தேதி (வியாழன்)
* கார்த்திகை விரதம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
* மாயாவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவம்.
* உத்திரமாயூரம் வள்ள லார் சன்னிதியில் பஞ்ச மூர்த்திகளுடன் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (சனி)
* திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் உற்சவம் ஆரம்பம்.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் பவனி வரும் காட்சி.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (ஞாயிறு)
* மாயாவரம் கவுரி மாயூர நாதர் நாற்காலி மஞ்சத்தில் பவனி.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.
* திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் சந்திர பிரபையில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அன்ன வாகனத்தில் பவனி. உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
- கடகம் அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம்.
- மீனம் எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம்.
மேஷம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் 3,6ம் அதிபதி புதனுடன் இணைந்து உள்ளார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். 7ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். பவுர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
ரிஷபம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் சூரியன் நீச்ச பங்கு ராஜயோகம் பெறுகிறார். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பார்த்துச் சென்றவரனிடம் இருந்து சாதகமான பதில் வரும்.திருமண முயற்சி சாதகமாகும். விவாகரத்து வழக்குகள் ஒத்திப் போகும். நிதானமும், நம்பிக்கையும் அனைத்து இன்னல்களிலும் இருந்து உங்களை காப்பாற்றும். குடும்ப பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். பவுர்ணமி அன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.
மிதுனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 6-ம்மிடமான ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாயுடன் ராசி அதிபதி புதன் சேர்ந்து நிற்பது சுபித்துச் செல்லக்கூடிய பலன் அல்ல. பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமின் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். தாய்வழிச் சொத்து தேடி வரும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும்.கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
கடகம்
அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது.உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். பழைய பாக்கிகள்இ வசூலாகும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. பொதுக் காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் கூடும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும்.பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். அஷ்டமச் சனி உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும்.முதலீட்டாளர்களுக்கு வெளியூர், வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும்.சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது. 4.11.2025 அன்று பகல் 12.34 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும்.பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி
வெற்றிகரமான வாரம்.ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.ஆட்சி பலம் பெறும் சுக்கிரனால் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். நீச்ச பங்க ராஜயோக சூரியனால் அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.காலி மனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். 4.11.2025 அன்று பகல் 12.34 முதல் 6.11.2025 பகல் 11.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.
துலாம்
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். ராசியில் ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனுடன் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரியன் சஞ்சரிக்கிறார்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும்.முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.விரும்பிய கடன் தொகை கிடைக்கும்.குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உதவியாக இருப்பார்கள்.பாகப்பிரி வினை சுமுகமாகும். கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும்,கவுரவமும் கிடைக்கும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உதயமாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 6.11.2025 பகல் 11.47 முதல் 8.11.2025 பகல் 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.
விருச்சிகம்
கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 8,11ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்.பணபர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். 8.11.2025 அன்று பகல் 11.14 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அக்கம் பக்கத்தினரின் தீய பார்வை யால் ஆரோக்கியம் குறையும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.
தனுசு
முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசியை சனி பகவான் பார்க்கிறார். அஷ்டமஸ் தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குரு பகவான் சனி பகவானை பார்க்கிறார். வியாபாரத்தில் எதிர் பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப் பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் ஏற்படும் போட்டியை சமாளிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும். அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். . பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு.மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வ தால் நிம்மதி அதிகமாகும். பெண்க ளுக்கு சொத்துக்கள் மற்றும் சொந்தங்க ளால் மகிழ்ச்சி கூடும். தடைபட்ட புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் நீங்கும். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.
மகரம்
இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது. வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும்.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணியில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாங்கும் போது முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். தாய்வழிச் சொத்தில் இளைய சகோதரத்தால் ஆதாயம் உண்டு. இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.வருமானம் மகிழ்ச்சியை தரும் விதத்தில் இருக்கும்.ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்கள் அகலும்.
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம்.ராசியில் உள்ள ராகுவை 3,10ம் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு கிடைக்கும் வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள்.அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றிய முடிவு எடுக்க சாதகமான காலம்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயோதிகர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வெகு நாட்களாக தாமதப்பட்ட பணிகள் இந்த வாரம் சாதகமாகும். அனைத்து பாக்கியங்களும் தேடி வரும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிறிய தொகை கடன் வாங்க நேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும்.சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.
மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம். 3, 8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம்.பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச் சுமை அதிகரிக்கும். இடமாற்றம்,வீடு மாற்றம்,வாகன மாற்றம் போன்றவை ஏற்படலாம். ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் வெற்றி நிச்சயம்.மனத் தடுமாற்றம் இருக்காது.குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம்,யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.பிரதோஷ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.
- சிக்கல் சிங்காரவேலர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் புறப்பாடு.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
இந்த வார விசேஷங்கள்
28-ந் தேதி (செவ்வாய்)
* திருச்செந்தூர், குமாரவயலூர், திருமாலிருஞ்சோலை, அலைமாக நிலங்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்.
* வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரத உற்சவம்.
* திருவனந்தபுரம், திருவட்டாறு சிவபெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
29-ந் தேதி (புதன்)
* சிக்கல் சிங்காரவேலர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் புறப்பாடு.
* திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
30-ந் தேதி (வியாழன்)
* சிரவண விரதம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவல்லி தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.
1-ந் தேதி (சனி)
* சுமார்த்த ஏகாதசி.
* மதுரை கூடலழகர் பெருமாள் புறப்பாடு.
* திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
2-ந் தேதி (ஞாயிறு)
* வைஷ்ணவ ஏகாதசி.
* வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் நூபுர கங்கைக்கு எழுந்தருளிய காட்சி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
3-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* நாங்குநேரி உலகநாயகி அம்மன் வருஷாபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
- கந்தசஷ்டி விழா தொடக்கம்
- நாக சதுர்த்தி
இந்த வார விசேஷங்கள்
22-ந் தேதி (புதன்)
* கோவர்த்தன விரதம்.
* கந்தசஷ்டி விழா தொடக்கம்.
* சிக்கல் சிங்கார வேலவர் விழா தொடக்கம்.
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* மெய்கண்ட நாயனார் குருபூஜை.
* சமநோக்கு நாள்.
23-ந் தேதி (வியாழன்)
* சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரணக் காட்சி.
* திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு.
* குமாரவயலூர் முருகன் சேஷ வானத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (வெள்ளி)
* சுபமுகூர்த்த நாள்.
* சிக்கல் சிங்கார வேலவர் மோகன அவதாரம்.
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* பூசலார் நாயனார் குரு பூஜை.
* சமநோக்கு நாள்.
25-ந் தேதி (சனி)
* நாக சதுர்த்தி.
* தூர்வா கணபதி விரதம்.
* சதுர்த்தி விரதம்.
* குமார வயலூர் முருகன் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
* சிக்கல் சிங்காரவேலவர், வேணுகோபாலன் திருக்கோலம்.
* சமநோக்கு நாள்.
26-ந் தேதி (ஞாயிறு)
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள், சிக்கல் சிங்கார வேலவர் தேர்.
* குமாரவயலூர் முருகன், சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
* ஐயடிகள் காடவர்கோன் குரு பூஜை.
* சமநோக்கு நாள்.
27-ந் தேதி (திங்கள்)
* சஷ்டி விரதம்.
* சுபமுகூர்த்த நாள்.
* குமாரவயலூர் முருக பெருமான் சக்திவேல் வாங்குதல்.
* திருச்செந்தூர் உள்பட முருகன் தலங்களில் கந்த சஷ்டி - சூரசம்காரம்.
* மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம்.
* கீழ்நோக்கு நாள்.






