என் மலர்
நீங்கள் தேடியது "Monthly Rasipalan"
- ‘சுக்ர மங்கள யோக’த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு.
- பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
தனுசு ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களை திடீர், திடீரென மாற்றியமைப்பீர்கள். தொழிலில் குறுக்கீடுகளும், தொல்லைகளும் உண்டு. நினத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீண்ட நாட்களாக கட்டுப்பட்டிருந்த நோய் மீண்டும் தலைதூக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் காலமாகவே அமையும். ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த நன்மையை உண்டாக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 12-க்கு வருவது யோகம்தான். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். 'சுக்ர மங்கள யோக'த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர், உங்கள் ராசிக்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். 'வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீடாக விலைக்கு வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் வரும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பரபரப்பாகக் காணப்படுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி தரும். உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்தும் அழைப்பு வரலாம். வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பு கரைந்தாலும், பொருளாதாரத்தை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 26, 27, 30, டிசம்பர்: 1, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
மகர ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிவதால் மிச்சம் வைக்கும் விதத்தில் பொருளாதார நிலை உயரும். வாக்கிய கணித ரீதியாக இன்னும் சில மாதங்களுக்கு ஏழரைச்சனி இருக்கிறது. அதுவரை நன்மையும், தீமையும் கலந்து நடைபெற்றாலும், குரு பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து திருப்திப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதம் அமையும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் பார்வை பலன் நன்மை செய்தாலும் கார்த்திகை 2-ந் தேதி முதல் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். எனவே கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் போட்டி அகலும். எதிரிகள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். கிளைத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமி விற்பனையாலும் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் நேரம் இது.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு சில நலன்களைப் பெறுவீர்கள். 'பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கின்றதே' என்று கவலைப்பட்டவர்கள், புதிய வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சி களில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 27, 28, டிசம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கும்ப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இனி ஆரோக்கியம் சீராகும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள். மந்த நிலை மாறி மகிழ்ச்சியான நிலை அமையும். இந்த மாதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி மாற்றினத்தவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அங்ஙனம் தன லாபாதிபதியான குரு பகவான் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் அடைகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் தடைகள் ஏற்படும். புதியவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேலும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மையை வழங்கும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அங்குள்ள செவ்வாய் மற்றும் சூரியனோடு இணைகிறார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோரின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறும் சூழல் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். தள்ளிச் சென்ற ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். அரசு வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உத்தியோக முயற்சி பலன் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். உறவினர் பகை அகலும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றமும், ஏற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 4, 5, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மீன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது. ராசிநாதன் ராசியைப் பார்க்கும் இந்த நேரம் நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் பணியாளர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். இக்காலத்தில் வியாழக் கிழமைதோறும் விரதம் இருந்து குருவை வழிபடுவது நல்லது. குறிப்பாக யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவும் கைகொடுக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். தொடர்ந்து சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். சேமிப்பு உயரும் இந்த நேரத்தில் அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். புதிய தொழிலால் பொருளாதார நிலை உயரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதார நிலையில் திருப்தி ஏற்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து பெறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ- மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவோடு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 26, 27, டிசம்பர்: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
- ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம்.
சிம்ம ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியனை குரு பார்க்கின்றார். ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கிறார். எனவே இனம் புரியாத கவலையும், மனக்குழப்பமும் ஏற்படும். கண்டகச் சனி ஆதிக்கம் இருப்பதால், பெற்றோரின் உடல்நலனில் தொல்லை, பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத சிக்கல், வருமானப் பற்றாக்குறை ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். தன்னிச்சையாக செயல்பட்டவர்களுக்கு, பிறரை சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகி்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களின் எதிர்ப்புகளால் முடிய வேண்டிய சுபகாரியங்கள் தாமதப்படும். அதேசமயம் அஷ்டமாதி பதியாகவும் குரு பகவான் விளங்குவதால், இதுவரை முடிவடையாதிருந்த வழக்குகள் இப்பொழுது முடிவடையும். வராது என்று நினைத்த கடன் பாக்கிகள் வசூலாகும். சுபச்செய்திகள் உண்டு.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்தநேரம், நல்ல நேரம்தான். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைப்பதோடு புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளுக்குரிய திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். வாங்கிய இடத்தை விற்பதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழி காட்டுதல் சிறப்பாக அமையும். பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 20, 21, டிசம்பர்: 2, 3, 7, 8, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கன்னி ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த மாதத்தில் புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். கடன்சுமை குறையும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எளிதில் வந்து சேரும். உச்சம்பெற்ற குரு சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக் கிறார். அதே சமயம் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். காரியங்கள் கைகூட நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து புகழ் பெறுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். மொத்தத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரம் இது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்படும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறி பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சீராகும். வழக்குகள் சாதகமாக அமையும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், மிக கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய சீர்கேடு வந்து கொண்டேயிருக்கும். மன உறுதி குறையும். வருமானம் வரும் வழியில் குறுக்கீடுகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளில் இழப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 19, 23, 24, டிசம்பர்: 4, 5, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
துலாம் ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். 'பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடுதலாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும் நேரம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. '10-ல் குரு பதவியில் மாற்றம்' என்பது ஜோதிடப் பொன்மொழி. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு திரவிய லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் வரலாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று சிந்திப்பீர்கள். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரமிது. நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சி பலன் தரும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீ்ர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி புதன் 2-ல் வரும் இந்த நேரம் செலவிற்கு ஏற்ப வரவு வந்துசேரும். சேமிக்க இயலாது. முந்தைய சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறி தென்படும். எதிலும் யோசித்துச் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். கலைஞர் களுக்கு நட்பு கைகொடுக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.
விருச்சிக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம்பெற்ற குரு பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தொட்டது துலங்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் வீடு தேடி வந்து வாழ்த்துவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும், நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்க உறுதுணையாக இருக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சிக்கிறார். அவரது முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும். தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும், தொழில் முன்னேற்றம் ஏற்படவும், வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரவும் குருவின் பார்வை வழிவகுக்கும். அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு தன - பஞ்சமாதிபதி ஆவார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும் உச்சம் பெற்ற குரு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசில நல்ல காரியங்கள் தடைப்பட்டாலும், கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் 'சுக்ர மங்கள யோகம்' செயல்படும். இதன் விளைவாக ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியே வரும் சுபகாரியங்களை சிறப்பாக முடித்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அரசு அனுகூலம் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சி கைகூடும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதி புதன். அவர் ராசிக்கு வரும் இந்த நேரம் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய சந்தர்ப்பங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 23, 24, 28, 29, டிசம்பர்: 8, 9, 10, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
- குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
- பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அருளாளர்களின் ஆசியும், அன்பு நண்பர்களின் ஆதரவும் திருப்தி தரும். ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து விருச்சிக ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகைமாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே இந்த வக்ர காலத்தில் வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு. நினைத்தது நிறைவேறாமலும் போகலாம். நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழச்சியை வழங்கலாம். இருப்பினும் இக்காலத்தில் குரு வழிபாடு அவசியம் தேவை.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அவர் உங்களுக்கு யோகத்தை வழங்கப்போகிறார். அங்குள்ள சூரியன், செவ்வாயோடு இணைகின்றார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் ஒரு நல்ல தகவல் கிடைக்கும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இப்பொழுது நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலையும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், தற்சமயம் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இதுவரை சேமித்த சேமிப்பை இப்பொழுது அசையா சொத்தாக மாற்ற முயற்சிப்பீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க சகோதரர்கள் உதவுவர்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்தநேரம், ஒரு அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். அடிப்படை வசதிகள் பெருகும். ஆனந்த வாழ்க்கை மலரும். குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நினைத்தது நடக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு கடன் என்ற மூன்றெழுத்து தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 4, 5, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
ரிஷப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த வகையில் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமியால் லாபம் வந்துசேரும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். சுபச்செய்திகள் அதிகம் கேட்கும் மாதம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலம் வளர்ச்சி அதிகரிக்கும் காலமாகவே இருக்கும். திட்டமிடாமலேயே சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி பலன் தரும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்ப்பது யோகம்தான். இது ஒரு பொன்னான நேரம் மட்டுமல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும் நேரமும் ஆகும். அங்குள்ள சூரியன் மற்றும் செவ்வாயோடு சுக்ரன் இணைவதால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, தாமதித்த திருமணம் தடையின்றி நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லை உண்டு. அதனால் மனக்கலக்கமும், மருத்துவச் செலவும் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராமல் வந்துசேரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களால் பலன் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 25, 26, 27, 30, டிசம்பர்: 1, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
மிதுன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பலம் பெற்ற சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளால் வரும் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த ஒரு சில நல்ல காரியங்கள் இப்பொழுது நிறைவேறுவதற்கான அறிகுறி தென்படும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுவடைகின்றது. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். எனவே வருமானம் தட்டுப்பாடுகளும் வரலாம். திசாபுத்தி பலம் இழந்திருப்பவர்களுக்கு கடன், கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நல்ல பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சாதாரணப் பொறுப்பிற்கு மாற்றப்படலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ம் இடத்திற்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். குறிப்பாக உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது நடைபெறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு அது கைகூடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பூமி விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். நிறைந்த தன லாபம் தரக்கூடிய விதத்தில் சில வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பிரபலமானவர்களின் பின்னணியில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கல்விக்காகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 27, 28, டிசம்பர்: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கடக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். எவ்வளவு தொகை வந்தாலும், அது சேமிப்பாக மாறாது. முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையாகச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பணப்பொறுப்பு சொல்லி யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்தால் அதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே குரு பார்த்தாலும், சேர்ந்தாலும் கோடி நன்மை என்பதற்கிணங்க தீமைகள் விலக வழிவகுத்துக் கொடுப்பார். கார்த்திகை 2-ந் தேதி முதல் கடக குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. 6-க்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கும் குருவே அதிபதி என்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைக் கவனமுடன் கையாள்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை வந்து சேரும். உள்ளத்தில் எதை நினைத்தீர்களோ, அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவர். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்துகொண்டு வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. வருமானம் உச்சம்பெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
- உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வளர்ச்சிக்கு இடையூறாக பல சம்பவங்கள் நடைபெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென திருப்தி தராத பொறுப்புகள் மாற்றப்படலாம். உறவினர் பகையால் ஊர் மாற்றம், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியாத சூழல் உருவாகும். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்பட்டு மனக் கலக்கத்தை உருவாக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று இருப்பதால் நன்மை கிடைக்கும். என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் ஆரோக்கிய சீர்கேடு உருவாகும். ஒருசில காரியங்கள் விரையில் முடிந்தாலும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரிங்கள் முடிவடையாமல் தாமதத்தை ஏற்படுத்தும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். அதனால் வேறு உத்தியோகத்திற்குச் செல்லலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதி சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்தும், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை கேட்டும் செய்வது நல்லது. ஒரு சில காரியங்கள் நடைபெறுவதுபோல் இருந்து கடைசி நேரத்தில் நழுவி செல்லலாம். கடன்சுமையின் காரணமாக மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வருவதாக இருந்த பதவி உயர்வு தடைப்படும். அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இவ்வேளையில், சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து எந்த முக்கிய முடிவும் எடுக்க இயலாது. சொத்துக்கள் விரயமாகலாம். சொந்தங்களால் பிரச்சனை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடினாலும் அது திருப்தி அளிக்காது. உடன்பிறப்புகளின் வழியில் செலவு உண்டு.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதியான அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் உண்டு. பெண்வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சனை ஏற்படும். கலைஞர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி நிலவும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு இல்லற வாழ்க்கை இனிமை தரும். எப்பொழுதோ கொடுத்த தொகை வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, 29, 30, நவம்பர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மகர ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். அதிலும் அவர் உச்சம் பெற்றிருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். 'குரு பார்வை கோடி நன்மைக்கு வித்திடும்' என்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பகை அனைத்தும் உறவாகும். பாதியில் நின்ற பல பணிகள் ஒவ்வொன்றாக முடியும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதிசார கதியில் வந்தாலும் சப்தம ஸ்தானம் என்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பார். 'இதுவரை சேமித்த சேமிப்புகள் கரைந்துவிட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதை ஈடுகட்டும் வாய்ப்புகள் வந்துசேரும். குருவின் பார்வையால் தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தன ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டில் ராகு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். என்றாலும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். சனி உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் உடல் நலத்திற்காக சிறிது செலவிடும் சூழல் உண்டு. குடும்பத்தினரின் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தொழிலில் கிளைத் தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். தாய்வழி ஆதரவு உண்டு. 'கட்டிடம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு இன்னும் கை கூடவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அது கைகூடும். எதையும் துணிந்து செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். நாள்பட்ட நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவர்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சனை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு. சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இலாகா மாற்றங்களும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தன வரவு திருப்தி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 23, 24, நவம்பர்: 1, 2, 5, 6, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்மச் சனியாகவும் இருக்கிறார். எனவே ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர், திடீரென மனக்குழப்பம் ஏற்படும். ஜென்மத்தில் ராகுவும் இருப்பதால் பொருளாதாரத்தில் ஓரளவு திருப்தி ஏற்பட்டாலும் விரயங்கள் மிகவும் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்யவேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு எதிர்ப்பு, வியாதி, கடன்சுமை ஆகியவற்றை குறிக்கும் இடத்தில் தனாதிபதி குரு உச்சம் பெறுவதால் இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. எதிரிகளின் பலம் மேலோங்கும். இணைந்து செயல்படுபவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ரண சிகிச்சைகள் கூட வரலாம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது. திடீரென வரும் மாற்றங்கள் மனவருத்தத்தை உருவாக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். அதிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இது போன்ற நேரங்களில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். மேலும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், அது எத்தனையாவது சுற்று என்பதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ நடைபெற்றால் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நடுச்சுற்று நடந்தால் நல்லது நடக்க வழிபிறக்கும். இருப்பினும் சனி பகவானை முறையாக வணங்குவது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொருளாதாரம் உயரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மாறும். சகோதரர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் சொத்துக்களில் முறையாக பங்கீடு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக நல்ல அழைப்புகள் வரலாம். கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் கூட இப்பொழுது கைகூடிவரும். உறவினர் பகை அகலும். தாய்வழி ஆதரவு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போதுமான முதலீடு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரலாம். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 22, 23, 27, 28, நவம்பர்: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிறைவான வாழ்க்கை அமையும். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும் விதம் நடைபெறும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்து மகிழ்வீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். அவரது பார்வை பரிபூரணமாக உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் தொட்டது துலங்கும். தொழிலில் கணிசமான தொகை கைகளில் புரளும். இனிய சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வாங்கிப் போட்ட சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பொழுது அது கைகூடும். பாதியில் நின்ற பணிகள் யாவும் முடிவடையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் விரய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சனி வக்ரம் பெறுவதால் எதிர்பாராத விரயங்கள் ஏராளமாக வந்துசேரும். 'பணம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் வேறு திருப்தியற்ற வேலை கிடைக்கும். வாகனப் பழுதுச் செலவு உண்டு. பிறருக்குப் பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசியில் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த செவ்வாய், இப்பொழுது பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பேச்சாற்றல் மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும் முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகைக்கிரகம் ஆவார். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஜீரணத் தொல்லைகளும், திடீர், திடீரென உடல்நிலையில் பாதிப்புகளும் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்தால், அதனால் பிரச்சனைகள் உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தள்ளிப்போன விஷயங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவி பெறுவர். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்குப் படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 24, 25, 28, 30, 31, நவம்பர்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
- தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
- குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.
சிம்ம ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று வலுவிழந்து சஞ்சரிக்கிறார். வக்ரச் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதன் விளைவாக மருத்துவச் செலவு கூடும். 'திறமை இருந்தும் எதையும் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வளர்ச்சி ஏற்பட்டாலும் விரயங்கள் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதைப் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே விரயங்கள் அதிகரிக்கும். அதைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ, ஏதேனும் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாழ்க்கைத் துணை வழியே பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை தொல்லை ஏற்பட்டு மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் முறையாக அதில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. தாய் - தந்தையரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், அமைதியான வாழ்க்கைக்கு அடிகோலும் விதத்தில் சம்பவங்கள் நடைபெறும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் நிதானம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 25, நவம்பர்: 8, 9, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார். சுக்ரனும், புதனும் தன் வீடுகளை மாற்றி அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலய தரிசனங்களும், ஆன்மிகப் பயணங்களும் உருவாகும். விரயாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் விரயங்கள் உண்டு. என்றாலும் அதைச் சமாளிக்க, முன்னதாகவே அதற்குரிய தொகை வந்துசேரும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 4, 7-க்கு அதிபதியானவர் குரு என்பதால் ஆரோக்கியம் சீராகும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணத் தடைகளும், காரியத் தடைகளும் அகலும். தாயின் உடல்நலம் சீராகும். சென்ற மாதம் ஏற்பட்ட தட்டுப்பாடுகளும், பண நெருக்கடியும் தானாகவே விலகும். எதிர்பாராத வரவுகளால் இதயம் மகிழும். குடும்ப ஒற்றுமை பலப்பட நீங்கள் எடுத்த முயற்சி பலன்தரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சனி- ராகு சேர்க்கை ஏற்படுகிறது. 6-க்கு அதிபதி சனி, 6-ம் இடத்திலேயே வக்ரம் பெறுவது யோகம்தான். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சி தரும் விதத்தில் கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பீர்கள். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு மூலம் வெளிவந்து புது முயற்சியில் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தொழில் நடக்கும் இடத்தை மாற்றம் செய்ய விரும்புவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். உடன்பிறந்தவர்கள் பகை மறந்து செயல்படுவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உடல்நலனில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்ெபாழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். குறிப்பாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 21, 22, 27, 28, நவம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிக விரயம் ஏற்படும். லாபாதிபதி சூரியனும் நீச்சம் பெற்றிருக்கிறார். 10-ல் உள்ள குருவால் பதவி மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும் சூழல் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரன் பெயர்ச்சிக்குப் பிறகு, மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். எதையும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். என்றாலும் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவிற்கு வருவதில் தாமதம் ஏற்படும். திருமணத்தடை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் பண நெருக்கடியின் காரணமாக ஒரு சிலர் சொத்துக்களை விற்க நேரிடும். பாகப் பிரிவினை திருப்தி தராமல் போகலாம். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனை தலைதூக்கும். பெற்றோரின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பரம்பரை நோயின் தாக்கத்தால் பதற்றம் ஏற்படும். முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
இக்காலம் ஒரு இனிய காலமாகும். ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது, அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். எதிர் கருத்து உள்ளவர்கள் கூட இணக்கமாக நடந்துகொள்வர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் வந்த பிரச்சனை அகலும். வருமானம் உயரும். பிள்ளை களின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். உடல்நலன் சீராகும். செல்வநிலை உயரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இலக்கை அடைய இயலும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 23, 24, 30, 31, நவம்பர்: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
விருச்சிக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம் பெற்ற குரு பகவான் பார்க்கிறார். அது 5-ம் பார்வையாக இருப்பதால் பொன் கொழிக்கும் மாதம் இது. எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும். அடுத்தடுத்து ஆதாயம் தரும் தகவல் வந்து கொண்டேயிருக்கும். 'நீங்கள் கொடுத்து வைத்தவர்' என்று கூட இருப்பவர்கள் பாராட்டுவார்கள். பொருளாதார நிலை உச்சம் அடையும். புதிய திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பதால், இக்காலத்தில் உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் அதிக அளவில் வந்து மகிழ்விக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகார அந்தஸ்து தேடிவரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். 'கும்ப ராகு, குடம் குடமாக கொடுக்கும்' என்பார்கள். அந்த அடிப்படையில் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் உங்கள் ராசிக்கே வருவது யோகமான நேரமாகும். இடம், பூமி வாங்கும் வாய்ப்பு உண்டு. எதைச் செய்ய நினைத்தாலும், அதை உடனடியாகச் செய்து முடிக்கும் வகையில் பொருளாதார நிலை இடம் கொடுக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். இது ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயம் ஏற்படத்தான் செய்யும். என்றாலும் அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இடமாற்றம் எளிதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுபச் செய்தி உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 19, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 11, 12, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
- வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
மேஷ ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுக்கடுக்காக வந்த மருத்துவச் செலவு குறையும். இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும்.
சனி-ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். சனி வக்ரம் பெற்றிருப்பதால் பயப்பட தேவையில்லை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடும். திட்டமிட்டுச் செலவு செய்ய இயலாது. திடீர் செலவுகள் மனக்கலக்கத்தை உருவாக்கும். கும்ப ராசியில் உள்ள சனி உங்களுக்கு நன்மைகளையே வழங்கும். கூட்டுத் தொழில் செய்வோர், ஏற்புடைய விதத்தில் லாபம் காண்பர்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர், செவ்வாய். அவர் தன் சொந்த வீட்டிற்கு வரும் இந்த நேரத்தில் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இலாகா மாற்றம், தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இடம், பூமி விற்பனை கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். ஆயினும் அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவும், அதனால் மன வருத்தமும் உருவாகும். எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு, நல்ல வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் நேரம் இது. வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமைவதால் கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பாராட்டும் உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 27, 28, நவம்பர்: 1, 2, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் சென்று ஆட்சி பெறுகிறார். எனவே மாதத்தின் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி பலன் தரும். எதிர்பார்த்தபடி பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் நீடிப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. மனப்பயம் அகன்று மகிழ்ச்சி கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக உச்சம் பெற்றாலும் நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று செயல்படுவதால், அதன் பார்வைக்குப் பலன் உண்டு. அந்த அடிப்படையில் கல்யாண முயற்சி கைகூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். ஆர்வம் காட்டிய புதிய தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருந்தாலும் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஒரு சில குறுக்கீடுகள் ஏற்படலாம். தைரியத்தோடு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இல்லம் தேடி லாபம் வந்து கொண்டேயிருக்கும். பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இதுவரை குடும்பத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியம் இப்பொழுது நடைபெறும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிர்பாராத பயணங்களால் லாபம் கிடைக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவெடுக்கும் பொழுது, அனுபவஸ்தர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுவழிச் சலுகைகள் கிடைக்கும். ஆபரணப் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில் போட்டிகள் அகலும். வருமானம் உயரும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருந்தியவர்களுக்கு, இப்பொழுது உரிய பலன் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு பகை மாறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 29, 30, நவம்பர்: 2, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.
மிதுன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இல்லத்திலும் பிரச்சனை, இடம் பூமியாலும் பிரச்சனை என்ற நிலை உருவாகும். 'நல்ல காரியங்கள் நடைபெற தாமதமாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு குறையும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உத்தியோக மாற்றம் உறுதியாகும். ஊா் மாற்றம், இடமாற்றம் அமையும் பொழுது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நல்லது. ஜென்ம குரு விலகு வதால் இனி பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பஞ்சமாதிபதியும், பாக்கிய ஸ்தானாதிபதியும் நீச்சம் பெறுகிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை மீறி முன்னேற்றம் காண முயற்சி எடுப்பீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் ஒரு வழியில் வருமானம் வந்தால் மறுவழியில் செலவு இருமடங்காகும். குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகளும், மனக்கசப்புகளும் ஏற்படலாம். நம்பி எதையும் செய்ய இயலாது. பெற்றோர் வழியில் பெரும் செலவு ஏற்படும். 'கற்ற கல்விக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி, விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் இலாகா மாற்றம் வந்து மன வருத்தத்தை உருவாக்கும். வளர்ச்சியில் ஏற்படும் குறுக்கீடுகளை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எதிலும் சிந்தித்துச் செயல்படுவதே நல்லது.
துலாம்-சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுவரை நீச்சம் பெற்ற சுக்ரன், இப்பொழுது சொந்த வீட்டிற்கு வருவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரப் போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பணநெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் ஒப்பந்தங்கள் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானத்தை விட செலவு கூடும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, நவம்பர்: 2, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கடக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும், இணைந்திருக்கிறார். எனவே நல்ல சந்தர்ப்பங்கள் கை நழுவிச் செல்லும். தனாதிபதி சூரியன் நீச்சம்பெறுவதால் வரவேண்டிய பாக்கி கள் ஸ்தம்பித்து நிற்கும். எவ்வளவு முயற்சி எடுத்தும், பிரபலஸ்தர்களின் நட்பை பெற்றிருந்தாலும் எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மைக்கு வழிகாட்டும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியான கடக ராசியில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசார பெயர்ச்சியாக இருந்தாலும், குரு பகவான் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். 'வரன்கள் வந்து வாசலோடு நின்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். இடமாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. மன அமைதிக் குறைவை உண்டாக்கும். அதிக விரயங்களால் கலக்கமும், இடையூறுகளை சமாளிக்க முடியாமல் தடுமாற்றமும் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பொழுது, நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். எதை எந்த நேரத்தில் செய்ய நிைனத்தாலும், அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பட்ட சிரமங்கள் தீர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு நல்ல சம்பவங்கள் நடைபெறும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் கைகூடும். தொழிலில் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பிரச்சனைகள் உருவெடுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்குச் சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் எதையும் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, நவம்பர்: 3, 4, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
- பெண்களுக்கு இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.
- கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சந்திரனும் இணைந்து 'குரு சந்திர யோகம்' உருவாகும் விதத்தில் மாதம் தொடங்குகிறது. எனவே தொட்ட காரியங்கள் வெற்றிபெறும். தோள் கொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். வெற்றிக்குரிய தகவல்கள் வீடு தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை என்பதால், கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கேட்காமலேயே சில நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் வழிகாட்டுவர். இளைய சகோதரர்களிடம் இணக்கம் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். புனித பயணங்கள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்க மேலதிகாரிகள் முன்வருவர். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும் நேரம் இது.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் குரு. அவர் இப்பொழுது அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனாலும் ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பது யோகம்தான். ஆரோக்கிய தொல்லை அகலும். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடியும். நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது. குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுய தொழில் செய்ய முன்வருவர். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றமும் உண்டு. அது உயர்வானதாகவே இருக்கும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவும். புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் நன்மை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு இல்லம் தேடி நல்ல தகவல் வரும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 21, 24, 25, அக்டோபர்: 3, 4, 6, 7, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
மகர ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சுக்ரனோடு கேது இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்த்த காரியங்களில் எண்ணற்ற தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். எதிலும் ஈடுபாடு ஏற்படாமல் மனம் அலைபாயும். அதுமட்டுமல்லாமல் மனதில் ஏதோ ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். பிறரின் உதவியை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். குருவின் அதிசார பெயர்ச்சிக்கு பிறகு நெருக்கடி நிலை அகன்று நிம்மதி கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். 'பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கு ஏற்ற விதம் சம்பள விகிதமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும் நேரம் இது.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பது ஒரு அற்புதமான நேரமாகும். ஏழரைச் சனி நடந்தாலும் கூட குருவின் பார்வையால் நல்ல மாற்றம் இல்லம் தேடிவரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க குரு பகவானை வழிபடுவது நல்லது. சப்தம ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையை செவ்வனே செய்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவி தானாக வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தொழில் சிறப்பாக நடைபெறும். என்னயிருந்தாலும் ஏழரைச் சனி நடைபெறுவதால் திடீர் செலவுகளை சமாளிக்க கூடிய சூழல் உருவாகும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தன ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் உண்டு. குடும்ப பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். 'கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே' என்று கவலைப் படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பணத்தேவை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி புரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். கலைஞர்களுக்கு அதிக முயற்சி தேவை. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப சுமை கூடும். பயணங்களால் விரயம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 22, 23, 26, 27, அக்டோபர்: 5, 6, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
கும்ப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் சேர்ந்திருக்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரனும், கேதுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது. சனியும் ஜென்மச் சனியாக இருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கடன்சுமை கூடிக் கொண்டே செல்லும். தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த இயலாது. மனவருத்தம் அதிகரிக்கும். வருமானப் பற்றாக்குறை யின் காரணமாக இனம்புரியாத கவலை மேலோங்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய தகவல் கிடைக்கும். அவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மனதிற்கினிய பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது எதிரிகளின் பலம் மேலோங்கும். எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். வீடு தேடி வம்பு, வழக்குகள் வரலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளத்தை வாடவைக்கும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.
குருவின் பார்வை பலத்தால் ஓரளவு நன்மை கிடைக்கும். என்றாலும் ஏழரைச் சனியும் நடைபெறுகிறதல்லவா?. எனவே புது முயற்சிகள் செய்யத் தொடங்கும் பொழுது, அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறை வேறும். பொதுவாக குரு வழிபாடு இக்காலத்தில் நன்மையை வழங்கும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் நல்ல சம்பவங்கள் நடைபெறலாம். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் சூடுபிடிக்கும். ஆனால் புரட்டாசி 22-ந் தேதிக்கு மேல் குரு அதிசாரமாக பெயர்வதால், மகிழ்ச்சியும், மனநிம்மதியும் குறையும். சனிபகவான் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் உயர்வு உண்டு. பெண்களுக்கு கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 25, 26, 29, 30, அக்டோபர்: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
மீன ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 4-ம் இடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம குருவாக இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. அஷ்டமத்தில் செவ்வாயும் இருக்கிறார். எனவே இக்கட்டான சூழ்நிலையும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இதயத்தை வாடவைக்கும் அமைப்பும் உண்டு. ஆயினும் மாதக் கடைசியில் குருபகவானால் மகிழ்ச்சியும், எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலைமை சீராகி நினைத்தது நிறைவேறும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நற்பலன் கிடைக்கும். மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைக் கொடுப்பார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிநாட்டு அழைப்பு வந்து மனதை மகிழ்விக்கும். முன்பு குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று அதன் மூலம் லாபம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். அவர் உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல. தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். எனவே அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர்.
குருவின் பார்வை பலத்தால் உங்கள் ராசி புனிதமடைவதால், ஏழரைச் சனியால் ஏற்படும் சிரமங்கள் குறையும். சிந்தனைகளில் வெற்றி பிறக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். 'கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறாமல் தாமதப்படுகின்றதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் வந்துசேரும். மங்கல ஓசை மனையில் கேட்கும். ஒட்டு மொத்தத்தில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும் நேரம் இது.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இந்த வக்ரம் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உங்கள் ராசிக்கு சனி பகவான் லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருப்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சனி பகவான் வழிபாடு நன்மை பயக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபமும், விரயமும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதிப்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்
- உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.
- வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர்.
சிம்ம ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சுக்ரனும், கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. கும்பத்தில் ராகு இருப்பதால் பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபச் செலவுகளை செய்வது நல்லது.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். வெற்றிச் செய்திகள் வீடுதேடி வரும். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வார்கள். அவர்களோடு ஏற்பட்ட பனிப்போர் அகலும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். தொழில் நடத்துபவர்கள் 'புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாமா?' என்பது பற்றி சிந்திப்பர். அதிக மூலதனம் போடுவதற்காக, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். வீடு வாங்கும் யோகம் அல்லது இடம் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால், சுப விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதடைந்த பிள்ளைகள் இருந்தால் அவர் களின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பெற்றோரின் மணிவிழாக்கள், பவளவிழாக்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குருவின் பார்வைக்கு அதிக பலன் உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தாய் வழி ஆதரவு உண்டு. பிறரை சார்ந்திருப்பவர்கள் தன்னிச்சையாக இயங்கக்கூடிய நேரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகள், வேண்டிய சலுகைகளைக் கொடுப்பர். இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று நினைத்தவர்களுக்கு, புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. கண்டகச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எதிரிகளின் பலம் கூடும். தொழிலில் லாபம் வந்தாலும், அது கைக்கு கிடைப்பது அரிது. முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் இருந்து விடுபட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு கொடுக்கல் - வாங்கல் சிறப்பாக இருக்கும். சுபச்செலவு அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 22, 26, 27, அக்டோபர்: 8, 9, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
கன்னி ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று, விரயாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் ஒருபுறம் வந்தாலும், விரயங்கள் மறுபுறம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றுவர வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடலாம். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றமும், இடமாற்றமும் வருவதற்கான அறிகுறி தென்படும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். 'கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'வேலையில் இருந்து விடுபட்டு, சுயமாக ஏதேனும் செய்யலாமா?' என்று சிந்திப்பார்கள்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம்பெறுவது நன்மைதான். என்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருப்பதால் குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் உருவாகி மனக்கலக்கம் ஏற்படும். பெற்றோர் வழியில் வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தப்பட்ட கவலை மேலோங்கும். என்ன இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்பதால், ஒருசில காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். பூர்வீகச் சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-க்கு அதிபதி வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் சனி அதிபதியாக விளங்கு வதால் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொத்துக்களால் பகை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 24, 25, 29, 30, அக்டோபர்: 10, 11, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
துலாம் ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் விரய ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் திருப்தி கரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். அதிகப் பயணங்களால் அலைச்சலும், மன அமைதிக் குறைவும் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத நேரம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். என்றாலும் அதுவரை மனக்குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக தொழில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு, ஊதியம் எதிர்பார்த்தபடி கிடைத்தல், அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் போன்றவை படிப்படியாக நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்வை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சி்ந்தனை அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்றுக்கொள்ளும் விதம் அமையும். பிள்ளைகளின் வேலை அல்லது படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு வருகிறது. 10-ல் குரு வந்தால் பதவி மாற்றம் உருவாகும் என்பது நியதி. அதற்காக பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதியான அவர் உச்சம் பெறும்பொழுது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறை வேறும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆனால் நீங்கள் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து, எப்போதும் நேர் மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் வராவிட்டாலும், வந்த மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அந்த எண்ணமும் ஈடேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சுக ஸ்தானாதிபதியான அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலனில் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலையும், விரயங்களும் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் சனிக்கிழமை விரதமும், சனீஸ்வர வழிபாடும் நன்மையைத் தரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெண்களுக்கு பிள்ளைகளால் விரயம் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 20, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
விருச்சிக ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். லாபாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 'புத ஆதித்ய யோக'த்தோடு மாதம் பிறக்கிறது. எனவே பொருளாதார நிலை உயரும். வெற்றிக் குரிய தகவல் வீடு தேடி வரும். தொழில் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியால் பல நல்ல காரியங்களை நடத்திக் காட்டுவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரியும் மாதம் இது.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி புதன் 12-ம் இடத்திற்கு வரும்போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படப் போகிறது. மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். கல்வி, கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நாலாபுறமும் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும், சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவலும் வந்துசேரும். வீடு வாங்குவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்ற நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மகத்தான பதவி கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகளும், சுபச்செய்திகளை கேட்கும் சூழலும் உண்டு.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர் உச்சம் பெறும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். குருவின் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிவதால் வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக வரும். புதிய ஒப்பந்தங்களும் வந்து கொண்டே இருக்கும். வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு, பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அர்த்தாஷ்டம சனியான அவர் வலிமை இழக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வாகன மாற்றம் செய்யும் முயற்சி கைகூடும். வருமானம் உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. சனி பகவான் வழிபாடு சந்தோஷம் தரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் சேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வாரிசுகளுக்கு சுபகாரியங்கள் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 22, 23, 29, 30, அக்டோபர்: 5, 6, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
- பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும்.
- உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தேக நலன் சீராகும். சொத்துக்களால் யோகமும், சொந்தங்களால் நன்மையும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் சில காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகளின் திருமண முயற்சி கைகூடும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சென்ற மாதம் 6-ம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தபோது, கடன் சுமை அதிகரித்து, கவலைகள் மேலோங்கி இருக்கலாம். அந்த நிலை இப்பொழுது மாறும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்துசேரும். சப்தம ஸ்தானத்திற்கு வரும் புதனால் வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானம் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு உச்சம் பெறும் நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். குரு பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இந்த இடங்களை உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை. குருவின் பார்வை பலத்தால் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார் - உறவினர்களின் ஆதரவு திருப்தி தரும். ஊர் மாற்றம், இடமாற்றம் நன்மை தரும் விதம் அமையும். தொழிலில் பணியாளர்களின் மாற்றங்களும், புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் காட்டும் ஆர்வமும் பலன்தரும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாபாதிபதியாக விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை சனி மீது பதிகிறது. எனவே அதன் கடுமை கொஞ்சம் குறையும். மாதக் கடைசியில் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் சனி வலிமையடைவதால் தொழில் வியாபாரத்தில் மிகமிக கவனம் தேவை. நெருக்கடி நிலை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதக் கடைசியில் பண நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாறுதலான இடத்தால் மனதிற்கு திருப்தி இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் குறுக்கீடுகள் உண்டு. மாணவ - மாணவியர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்க்கை சக்கரம் சுழலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 29, 30, அக்டோபர்: 5, 6, 10, 11, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் கேதுவோடு சஞ்சரிக்கிறார். 'குரு சந்திர யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புகழ் கூடும். புனிதப் பயணங்கள் உண்டு. நல்ல சந்தர்ப்பங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வாகன யோகமும், தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் நற்பலன்கள் நடைபெறும். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பெரிய மனிதர்களின் உதவியால் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். பிள்ளைகளின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு வாங்குவது அல்லது இடம் வாங்கி வீடு கட்டுவது என்ற சிந்தனையை செயல்படுத்த முற்படுவீர்கள். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பதால், பொருளாதார நிலை உச்சம் அடையும். எனவே கடன் சுமை குறையவும் வழிபிறக்கும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகை கிரகம் ஆவார். இருப்பினும் குருவின் பார்வை சகல தோஷங்களையும் அகற்றும் என்பதால், அவரது பார்வை பதியும் இடங்கள் அத்தனையும் புனிதமடைகிறது. அதன் விளைவாக எண்ணற்ற நற்பலன் உங்கள் இல்லம் தேடி வரலாம். முன்னேற்றம் தரும் குரு பகவானை இக்காலத்தில் முறையாக நீங்கள் வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடு அகலும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளமும், குதூகலமான சூழ்நிலையும் உருவாகும். உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் இப்பொழுது விலகுவர். கடை திறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் இப்பொழுது நிறைவேறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால், சில காரியங்களில் திடீர் திடீரென மாற்றம் செய்வீர்கள். வாகனங்களால் பிரச்சினைகள் வரலாம். ஒரு சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். தொழில், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வருமானம் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, அக்டோபர்: 3, 4, 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
மிதுன ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குருவும், சந்திரனும் இணைந்து 'குரு சந்திர யோக'த்தை உருவாக்கு கிறார்கள். உங்கள் ராசிநாதன் புதன் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தொழில் வளர்ச்சியும், கூடுதல் லாபமும் வந்துசேரும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும், எதிர்கால முன்னேற்றம் கருதியும் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் தடைப்பட்ட மங்கல நிகழ்வுகள், இப்பொழுது நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெறும் இந்த நேரத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். குருவின் பார்வைக்கு பலன் அதிகம் என்பதால் எதிர்பார்ப்புகள் இக்காலத்தில் எளிதில் நிறைவேறும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். இதுவரை அடிக்கடி ஆரோக்கிய குறைபாட்டால் அவதிப்பட்ட நீங்கள், இப்போது உற்சாகத்தோடு செயல் படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். கொடுக்கல் - வாங்கல்களில் தாராளம் காட்டுவீர்கள். வளர்ச்சிக்கு உறுதுணையாக பிற இனத்தார்களின் அறிமுகம் கிடைக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழாக்களை நடத்துவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பாக்யாதிபதியாகவும் சனி விளங்குவதால் தொழிலில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். உற்றார் - உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும். கடமையைச் செவ்வனே செய்ய இயலாது. புதிய முயற்சிகளை பலமுறை செய்த பிறகுதான் வெற்றி காண முடியும். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும் நேரம் இது.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரலாம். மாணவ - மாணவி களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். தேவையான நேரத்தில் உங்கள் தேவைக்குரிய பணம் கைகளில் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 22, 23, அக்டோபர்: 4, 5, 8, 9, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கடக ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வது கடினம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நண்பர்கள் பகைவர் களாக மாறலாம். நல்ல சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் எதிர்வரும் இடர் பாடுகளை அகற்றும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செலவழிக்கும் சூழல் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், இப்பொழுது சொந்த வீட்டிற்கு குடியேறும் யோகம் வாய்க்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை தீரும். வருமானம் திருப்தி தரும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசியிலேயே குரு உச்சம் பெறுவது யோகம்தான். 'குரு பார்த்தாலும், சேர்ந்தாலும், இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்' என்பர். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பலம்பெற்ற குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்தபடியே வருமானம் உயரும். இல்லத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு. இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 'தொழில் தொடங்க முடியவில்லையே' என்ற கவலை இப்போது மாறும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் ஒரு சில நல்ல காரியங்கள் நடந்தேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மேலோங்கும். இக் காலத்தில் முறையாக வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி வக்ரம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். எதிர்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும்.
பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகள் பலரும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவர். பெண் களுக்கு இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 24, 25, அக்டோபர்: 6, 7, 11, 12, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
- பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
- பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே திடீர் திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும். குருவின் பார்வை இருப்பதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும். கல்யாண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரி மாறுதலாகிச் செல்வார். கடன் சுமை குறைய நீங்கள் கையாண்ட நூதன யுக்திகள் பலன் தரும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது, எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். 'வாழ்க்கைத் துணைக்கு இதுவரை நல்ல வேலை அமையவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பர். ஒரு சிலர் பணிபுரியும் இடத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, சொத்துகளால் லாபம் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர் களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ முயற்சி செய்தால் அனுகூலம் உண்டு.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரன், குருவிற்கு பகைக்கிரகம் என்பதால், திடீர் திடீரென லாபம் வருவதுபோலவே, திடீர் திடீரென விரயங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. சுபவிரயம் அதிகரிக்கும். இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ- மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 23, 24, 28, 29, செப்டம்பர்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
மகரம்
மகர ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். அவரோடு கூட ராகுவும் இணைந்திருக்கிறார். ராகுவைப் போல கொடுப்பானுமில்லை என்பார்கள். அந்த அடிப்படையில் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால் செலவுகள் நிறைய ஏற்படும். சுபச் செலவுகளாக செய்வது நல்லது. இடர்பாடுகளுக்கு நடுவில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது. இதுபோன்ற வக்ர காலங்களில் இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது நல்லது.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது, புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ் கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் அகலும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி வந்த உங்களுக்கு, தொடர்ந்து வருமானம் வந்து கொண்டேயிருக்கும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் அமையலாம். வெளிநாடு சென்று பணிபுரியவேண்டும் என்று விரும்பு பவர்களுக்கு, அதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். பொதுவாழ்வில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை எதிர்பார்த்த பொறுப்புகள் இப்பொழுது கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு தருவர். வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது. இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரத்தில், கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். தொழிலில் யாரையும் நம்பிச் செயல்பட இயலாது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குத் தலைமையின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். பணவரவு திருப்தி தரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 20, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். பகைக் கிரகமான சூரியன் அவரைப் பார்க்கிறார். மேலும் சனியோடு, ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதமாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண்பழிகள் வீடு தேடி வரலாம். பிறருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். அதோடு அஷ்டமத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பதால் வாகனத்தாலும் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். குலதெய்வ வழிபாடு நன்மையை வழங்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் கடகத்திற்கு வரும்போது உத்தியோகத்தில் சில மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். 'புத சுக்ர யோகம்' ஏற்படும் இந்த நேரத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வருமான உயர்விற்கு வழிபிறக்கும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கை கொடுக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபத்தை வரவழைத்துக் கொடுக்க முன்வருவர்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் சிம்மத்திற்கு வரும்போது, பிள்ளைகள் வழியில் சில விரயங்கள் ஏற்படலாம். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து மாறுதல்கள் வரலாம். வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறவர்களுக்கு அது கைகூடும். வீடு மாற்றம் திருப்திகரமாக அமையும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கிச் செல்லும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இதுவரை தாமதமான இடமாற்றம் இப்போது கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை அனுபவஸ்தர்களை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. சிம்மத்தில் இருக்கும் சூரியனோடு புதன் சேருவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. எனவே அரசியல் உலகில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக தடைப்பட்ட பதவி உயர்வு இப்பொழுது கிடைப்பதுடன் இடமாற்றமும் சேர்ந்து வரலாம்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்லநேரம் தான். இடம், பூமி வாங்குவது போன்றவற்றில் இருந்த தடை அகலும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்கும். அதன் மூலம் வருகின்ற லாபத்தை தொழிலுக்கான மூலதனமாக்குவீர்கள். நீண்ட நாட்களாக பஞ்சாயத்து செய்தும் முடிவடையாத சொத்துப் பிரச்சினை இப்பொழுது முடிவிற்கு வரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திருமணத் தடை அகலும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். பிரபலங்களின் ஒத்துழைப்போடு இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவி களுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 28, 29, செப்டம்பர்: 2, 3, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மீனம்
மீன ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை கூடும். கூட்டுத் தொழில்புரிவோர் தனித்து இயங்க முற்படுவர். ஆனால் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பொதுவாழ்விலே எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்காது. புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து அலைமோதும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இதுபோன்ற நேரங்களில் உடல்நிலையிலும் கவனம் தேவை. உடன் இருப்பவர்களிடமும் கவனத்தோடு இருப்பது நல்லது.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்ற வற்றில் கவனம் செலுத்துவீர்கள். சொத்துகள் வாங்கும் பொழுது வில்லங்கம் பார்த்து வாங்க வேண்டும். இல்லையேல் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தகராறுகள் அதிகரிக்கும். 'பஞ்சாயத்துகள் இழுபறி நிலையில் இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். 'தொழில் போட்டிகளை சமாளிக்க இயலவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள். பிறரிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும் அது நடைபெறாமல் போகலாம்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்கு கிறார். எனவே மேல் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் கொஞ்சம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் பொழுது, தன் வீட்டைத் தானே பார்ப்பதால் 2-ம் இடம் புனிதமடைகிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழிவகுத்துக் கொடுப்பர்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, நற்பலன்கள் ஏராளமாக நடைபெறும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். தொழில் வளர்ச்சி உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ - மாணவிகளுக்கு சாதனைகள் நிகழ்த்தும் நேரம் இது. பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 29, 30, 31, செப்டம்பர்: 1, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.
- பெண்களுக்கு வருமானம் உயரும்.
- குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இது யோகம்தான். ஆனால் அவரை பார்க்கும் சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் பகைக் கிரகங்கள். எனவே இடர்பாடுகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்பார்ப்புகள் நிறை வேறுவதில் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் கூட்டாளிகளால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும். தொழிலில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியா னவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு, அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். குறிப்பாக கடகத்தில் சஞ்சரிக்கும் புதனோடு சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால் தேவைக்கேற்ற பொருளாதாரம் வந்துசேரும். திடீர் மாற்றம் மன வருத்தத்தை உருவாக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகினாலும், புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - லாபாதிபதியான புதன், உங்கள் ராசி யிலேயே சஞ்சரிக்கும் நேரம் ஒரு உன்னதமான நேரமாகும். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். உறவினர்களோடு இருந்த கருத்து வேறுபாடு அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். குடும்ப உற வினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வெளிநாடு செல்லும் யோகமும், அதற்காக எடுத்த முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். குறிப்பாக வருமானம் உயரும். இந்த நேரத்தில் கடன்சுமை குறைய வழிபிறக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இருந்த குறுக்கீடுகள் விலகும். வாடகை கட்டிடத்தில் உள்ள தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கு வருவது யோகம்தான். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். ஸ்தம்பித்து நின்ற தொழில் தானாக நடைபெறும். தொழிலை விரிவு செய்ய வள்ளல்களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் பிறக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். உத்தி யோகத்தில் உள்ளவர்களிடம் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நன்மையைத் தரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 18, 19, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 11, 12, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
கன்னி
கன்னி ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் அஷ்டமாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் இருக்கிறார். எனவே பணம் ஒருபுறம் வந்தாலும், மறுபுறம் விரயங்களும் வந்தபடியே இருக்கும். இழப்புகளும் எதிர்பாராத குறுக்கீடுகளும் வந்து கொண்டே இருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். திடீர், திடீரென சோதனைகள் வரலாம். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வருவது மிகவும் அற்புதமான நேரமாகும். பொதுவாக தனாதிபதி வலுவாக இருப்பதால் எந்த காரியமும் செய்யலாம். அந்த அடிப்படையில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு வழிபிறக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது பல வழி களிலும் விரயங்கள் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். காலையில் ஒரு ஊர், மதியம் ஒரு ஊர், மாலையில் ஒரு ஊர் என்று செல்லும் விதத்தில் அலைச்சல் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியச் சீர்கேடுகள் உருவாகும். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் உங்களைவிட்டு விலகலாம். நாடு மாற்றம் செய்ய நினைத்தவர்களுக்கு அது தாமதப்படும். வெளிநாட்டில் உள்ளவர்களின் வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அது விரும்பும் விதத்தில் அமையாது. அரசியல் களத்தில் உள்ளவர்கள் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள இயலாது.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தன ஸ்தானத்திற்கு வந்து, தன் வீட்டைத் தானே பார்க்கப்போகிறார். எனவே சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவர். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். வருமானப் பற்றாக்குறை அகலும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் உறுதியாகலாம். கொடுக்கல்- வாங்கல்களில் ஏற்பட்ட இடையூறு அகலும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். அதில் இருந்து விடுபட அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, பழைய வியாபாரம் லாபத்தைப் பெற்றுத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் ஏற்படும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை. உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 21, 22, 28, 29, செப்டம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பொதுவாக 9-ம் இடம் பலம்பெறும்பொழுது பொன், பொருள் சேர்க்கை, பொருளாதார நிலையில் உயர்வு போன்றவை ஏற்படும். மேலும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால், சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாளாக துன்புறுத்தி வரும் நோய் அகலும். பிள்ளை களின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்த தடை அகலும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும் வகையில் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பர். சனி - சூரியன் பார்வை இருப்பதால் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்தி பலம் பார்த்து செயல்படுவது நல்லது. இந்த நேரத்தில் 'புத ஆதித்ய யோக'மும் நடைபெறுவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு செவ்வாய் வருவது நல்ல நேரம்தான். தன - சப்தமாதிபதியாக விளங்கும் செவ்வாய், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். சொத்துக்களால் வந்த பிரச்சினை அகலும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனதளவில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல்வாதியாக இருந்தால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ-மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 23, 24, 31, செப்டம்பர்: 1, 5, 6, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். இடம், பூமி சேர்க்கையும், எடுத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் பரவும். வருமானம் பெருக வழியமைத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் இயங்கு வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதமாக முடியும். நாடாளும் நபர்களின் நட்பால் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது சகல பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். வாகன யோகம் முதல் வளர்ச்சி தரும் யோகம் வரை அனைத்தும் வந்து சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். உதிரி வருமானங்கள் பெருகும். 'புத சுக்ர யோகம்' இருப்பதால் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாக வந்துசேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கிளைத் தொழில்கள் தொடங்கவும் முயற்சி செய்வீர்கள். செய்யும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்தபடியே ஒருசிலருக்கு சுயதொழில் செய்யும் சூழலும் உருவாகும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இனிய பலன்கள் ஏராளமாக நடை பெறும் நேரம் இது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பவர் செவ்வாய். அவர் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். வருமானம் உயரும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது வளர்ச்சி கூடும். வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் வளர்ச்சி கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, அதை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடி வரும் நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 20, 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 2, 3, 4, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
- கல்யாணக் கனவுகள் நனவாகும்.
- 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.
மேஷம்
மேஷ ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும். தொழில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு, கடன் சுமை குறைதல் போன்றவை ஏற்படும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்போது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன், பஞ்சம ஸ்தானத்திலேயே பலம்பெற்று சஞ்சரிப்பதால் தேக்கநிலை மாறும். தெளிவு பிறக்கும். ஊக்கமும், உற்சாகமும் அதிகரித்து உடனுக்குடன் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு. 'அதிக விலைக்கு வாங்கிப் போட்ட இடத்தை குறைந்த விலைக்கு கேட்கிறார்களே' என்ற கவலை அகலும். பூமி விற்பனையில் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் 'புத சுக்ர யோகம்' இருப்பதால் நல்ல சம்பவங்கள் பலவும் நடை பெறும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்றோ உங்கள் பிள்ளைகள் விரும்பினால், அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உடன் பிறப்புகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துகளை பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். புத-ஆதித்ய யோகம் இருப்பதால் அரசுவழியில் அனுகூலம் உண்டு.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்குஅதிபதி செவ்வாய் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அவர் பார்வை உங்கள் ராசியிலேயே பதிகின்றது யோகம்தான். கல்யாணக் கனவுகள் நனவாகும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. வீடுகட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுதுபார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தனாதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தனவரவு தாராளமாக வந்துசேரும். இனத்தார் பகை மாறும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி செழிப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் வரலாம். கலைஞர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 21, 22, செப்டம்பர்: 2, 3, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். முரண்பாடான இந்தக் கிரகச் சேர்க்கையின் காரணமாக ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். ஒரு சமயம் மிதமிஞ்சிய பொருளாதார நிலை இருக்கும். மற்றொரு சமயம் வறட்சி நிலை நிலவும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென மாற்றங்கள் வந்து தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கும். அசுர குரு, தேவ குரு ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில், உங்கள் ராசிநாதன் சுக்ரன் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். அவர் அங்குள்ள புதனோடு இணைவதால் 'புத சுக்ர யோகம்' செயல்படுகிறது. எனவே பூமி வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டு. உடன்பிறப்புகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் நடத்துபவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த மூலதனம் ஏற்படலாம்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 4-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருக்கும் தொய்வு அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதன்மூலம் வரும் உதிரி வருமானத்தில் குடும்பச்சுமை கொஞ்சம் குறையும். 'வீடு கட்டியும் நீண்ட நாட்களாக வாடகைக்கு விட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான். எதிர்பாராத விதத்தில் இனிமை தரும் மாற்றங்கள் வந்துசேரும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகளைக் கண்டு அருகில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுவர். பூமி பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. மேல்அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்குழப்பம் மாறும். கேட்ட நிதியுதவி கிடைக்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதி சுக ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரத்தில் மகிழ்ச்சி வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அகலும். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி நீடிப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். வசதி பெருகும். நல்ல தகவல் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 23, 24, செப்டம்பர்: 5, 6, 9, 10, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசியிலேயே குரு சுக்ர சேர்க்கை இருப்பதால் திடீரென சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், அதை குரு பார்ப்பதாலும் தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பயணங்கள் பலன்தரும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வருவதால் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். அவர்களின் எதிர்கால நலன்கருதி திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 'புத சுக்ர யோகம்' இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டுமென்ற அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு. அதே நேரத்தில் இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு அதுவும் கைகூடும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் புதன். சுக ஸ்தானாதிபதி, சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் எல்லாவிதமான சவுகரியங்களும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் அகலும். பெற்றோர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். குறிப்பாக என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும், அங்கு வேலை பார்க்க வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது கனவுகள் நனவாகும் நேரமாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் மையப் பகுதி மகிழ்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு துணிந்து எடுத்த முடிவுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு மறதி விலகும். மதிப்பெண் கூடும். பெண்களுக்கு விரயங்கள் ஏற்படும் நேரம் என்பதால், சுப விரயமாக மாற்ற முயற்சிப்பது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கடகம்
கடக ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஓரளவிற்கு நன்மை கிடைக்கும் என்றாலும் விரயங்களைக் கட்டுப்படுத்த இயலாது. திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதம் அமையும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், உங்களுக்குரிய பாக்கியங்களும், அனைத்து நலன்களும் வந்துசேரும். ராகு-கேதுக்களுக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் தடைகள் விலகும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ரண சிகிச்சையில் சிக்கித் தவித்தவர்களுக்கு இப்பொழுது விடிவு காலம் பிறக்கப்போகிறது. மாற்று மருத்துவங்கள் ஒரு சிலருக்கு கைகொடுக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டுவரும் வாய்ப்பு உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கும், அதன் மூலம் நல்ல பொறுப்புகளும் கிடைக்கும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது உடன்பிறப்புகளால் விரயம் ஏற்படும். அவர்களின் கடன்சுமை குறைய வழிவகுத்துக் கொடுப்பீர்கள். அல்லது அவர்களின் கல்யாணம் போன்றவற்றை முன்னின்று நடத்த செலவிடுவீர்கள். நாடு மாற்றம் பற்றியும், வீடு மாற்றம் பற்றியும் சிந்திக்கும் நேரம் இது. நாகரிகப் பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும், மேலதிகாரிகளும் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்படுவர். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் பொருளாதார நிலை உயரும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். நல்ல நிகழ்ச்சிகள் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். வீடு கட்டுவது அல்லது வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம், வியாபாரப் போட்டிகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதாரம் உச்சநிலை அடையவும், பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தவும், தேக்க நிலையில் இருந்த தொழில் சிறப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமிஞ்சிய லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். சுபகாரியம் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 23, 24, 28, 29, செப்டம்பர்: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.






