என் மலர்
நீங்கள் தேடியது "Monthly Rasipalan"
- குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
- உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
தனுசு ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்ல செய்திகள் நாளும் வந்த வண்ணமாகவே இருக்கும். 2-ம் இடத்தில் சூரியன், சுக்ரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறது. எனவே பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கும். மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமும், வழிபாடுகளும் தேவை.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் பலம் இழக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இடம், பூமி வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும்.
குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். மனக்கவலை மாறும். இதுவரை தடையாக இருந்த காரியங்கள் இனித் தானாக நடைபெறும். மேலும் குரு பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வழக்குகள் சாதகமாக அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதோடு மேலிடத்து ஆதரவும் உண்டு.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளுக்கு கல்யாண முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். கடல் கடந்து வணிகம் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நல்ல மாற்றங்களும், பொருளாதாரத்தில் ஏற்றமும் வரும் நேரம் இது. அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடுவதற்கான சூழல் உருவாகும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 7.2.2026 அன்று 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். தனாதிபதி சனியோடு சேருவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டு முயற்சிகளில் இருந்த தடை அகலும். அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வழிபிறக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடை பெறும் சுபநிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் வளர்ச்சியும், பிற்பகுதியில் தளர்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். பெண்களுக்கு செலவுகள் கூடும். இருப்பினும் வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 20, 21, 24, 25, பிப்ரவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மகர ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்கலக்கம் தீரும். மேலும் உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். விரோதங்கள் விலகும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். சொத்துக்களால் ஆதாயமும், நன்மையும் ஏற்படும் நேரம் இது. கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால், அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சென்ற மாதத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் இப்பொழுது விலகும். சிறுசிறு தொல்லைகள் உடல்நிலையைத் தாக்கினாலும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றை சரிசெய்துகொள்வீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ, வாசல் தேடி வரவு வந்து சேரும். குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அவற்றிற்குரிய ஆதிபத்யங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். 'குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரிய நினைத்தவர்களுக்கு அது கைகூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் ஏதேனும் செய்யலாமா? என்று சிந்திக்கும் நேரம் இது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். உடன்பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத யோகம் உங்களுக்கு வரப்போகிறது. இலாகா மாற்றங்களோ, இடமாற்றங்களோ முன்னேற்றம் தரும் விதம் அமையும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடு மாறும். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொண்டு வருவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் இனிய பலன்கள் வந்துசேரும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பற்றாக்குறை அகன்று பணவரவு கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 16, 22, 23, 26, 27, பிப்ரவரி: 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். மிதுனத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் இந்த மாதம் இனிய மாதமாகவே அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்துசேரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உற்சாகத்தோடு செயல்பட்டு எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் சிறுசிறு தொல்லைகள் உடல்நலத்தில் ஏற்படலாம்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்றிருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி தாமதப்பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதி கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசியில் மட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். எந்தவழியிலும் உங்களுக்கு வரவேண்டிய தொகை வந்துசேரும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பழைய கூட்டாளிகள் மீண்டும் வந்து இணைந்து உங்கள் புதிய முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். இந்நேரங்களில் குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களைப் பெறலாம்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பொதுவாக பஞ்சம ஸ்தானாதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் மேன்மை உண்டு. அவர்களின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒருசிலர் பழைய சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு. சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இம்மாதம் நடைபெறும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் தேவை படிப்படியாகப் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வீடு வாங்கிக் குடியேறும் யோகம் உண்டு. தொழிலில் சேர்ந்த பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவர். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடி வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சென்ற மாதத்தில் கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 23, 25, 28, 29, பிப்ரவரி: 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
மீன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மேலும் அர்த்தாஷ்டம குருவாகவும் இருக்கிறார். எனவே அடிக்கடி இடமாற்றம், ஆரோக்கியப் பாதிப்பும், அதிக விரயமும் ஏற்படலாம். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதோ, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலோ கவனம் செலுத்தலாம். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவரது வக்ர இயக்கம் நன்மைதான் என்றாலும், அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்கலாம். இடமாற்றம், வீடு மாற்றம் தானாகவே வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும்.
குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சனை ஒரு வழியாகத் தீரும். ஆயினும் புதிய முயற்சிகளில் தடை வந்துகொண்டே இருக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீண்டதூரப் பயணம் பலன்தரும் விதம் அமையும். சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லவும், வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பவும் எடுத்த முயற்சிகள் பலன்தரும். வாகன மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் குருவிற்குரிய சிறப்பு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, இல்லத்திலும் குருகவசம் பாடி குருபகவானை வணங்குவது நல்லது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பெற்றோர் வழியிலும், களத்திர வழியிலும் செலவு ஏற்படலாம். இடம், பூமி வாங்கும் சுபச்செலவுகளும் உண்டு. பிள்ளைகளின் திருமணத்தைப் பேசி முடித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுப்பீர்கள். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டு வாழ்க்கை பாதையை சீராக்கிக்கொள்வீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 12-ல் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப பொருளாதார நிலையில் திடீர் முன்னேற்றமும், புது முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். இக்காலத்தில் சுக்ர வழிபாடு சுகத்தை வழங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டு முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் புதிய இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 20, 21, 26, 27, 30, 31, பிப்ரவரி: 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
- மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை.
- பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.
சிம்ம ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 6-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீடு, இடம் வாங்குவதன் மூலமாகவோ, மணவிழா, மணிவிழா போன்றவை நடத்துவதன் மூலமாகவோ, சுப விரயங்களை மேற்கொண்டால் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரம், பிள்ளைகளால் பிரச்சனைகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். காரியத்திலும் தாமதம் ஏற்படும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். பிள்ளைகளாலும் பிரச்சனைகள் வந்து அலைமோதும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் வந்து மனக்கிலேசத்தை உருவாக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் இழப்புகள் ஏற்படலாம். குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. பஞ்சம ஸ்தானம் குரு வீடு. குரு வீட்டை குருவே பார்ப்பது யோகம்தான். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பயனாக கிடைக்க வேண்டிய பலன்கள் இப்பொழுது கிடைக்கும். இருந்தாலும் மனக்கசப்பு தரும் தகவல்களும் வந்துசேரும். நண்பர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில காரியங்கள் தாமதமாக வந்தாலும் முடிவில் நல்லவிதமாக முடிவடையும். இக்காலத்தில் சுபச்செலவுகள் செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்க இயலும். பஞ்சாயத்துக்களில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். 'வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, `வாழ்க்கைத் துணைக்கு வேலை இல்லையே' என்ற கவலை அகலும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினால் நல்லபடி அமையும். பொதுவாக நினைத்தது நிறைவேறும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு திருப்தி தரும். அவர்களது இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறும் வண்ணம் நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். அவர்கள் மூலமாக ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். 'பழைய தொழிலை பைசல் செய்துவிட்டு புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று, வேறு இடத்திற்கு மாறும் எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொள்வர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கலைஞர்களுக்கு பெருமை சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர். 10-ல் குரு இருப்பதால் புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் பதவி மாற்றம் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழியில் இருந்து விடுபடுவர். அவர்கள் விரும்பியபடியே பதவி வாய்ப்பு கிடைக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும். குறிப்பாக இடம், பூமி வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். 'வரன்கள் வந்து வந்து திரும்புகின்றதே.. எதுவும் முடிவாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி வரும் வாய்ப்புகள் நல்லதாக அமையும். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் உங்களை வந்தடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் இருந்தவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாற எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அளிப்பர். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அகல, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இருப்பினும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பழைய பிரச்சனைக்குப் புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம்' என்பார்கள். அதன்படி 6-ல் சஞ்சரிக்கும் புதனால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக ஊதிய உயர்வுடன் நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொடர் கடனால் அவதிப்பட்டவர்களுக்கு, கொடுக்கல்- வாங்கலை ஒழுங்கு செய்துகொள்ள வழிபிறக்கும். பெற்றோரின் ஆதரவோடு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது பெயர்ச்சி மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பழுதாகி செலவு வைக்கும் பழைய வாகனத்தால் அவதிப்பட்டவர்களுக்கு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும் விதம் அமையும். போட்டிக்கு மத்தியில் வியாபாரம் வெற்றிநடைபோடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை உருவாக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பாதியில் லாபம் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ - மாணவிகள் கல்வியில் வெற்றி பெற, கடினமாக முயற்சிக்க வேண்டியதிருக்கும். உறவினர் பகை உருவாகும் என்பதால், பெண்கள் கவனமாக செயல்படுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 25, 29, பிப்ரவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் புதனுடன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை வழங்குகிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அவர் வக்ரம் பெற்றிருப்பது யோகம்தான். எனவே உங்கள் ராசி புனிதமடைகிறது. சென்ற மாதத்தில் தாமதப்பட்ட காரியங்கள் இப்பொழுது தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது வந்துசேரும். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு, உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்திற்கு அதிபதி. மேலும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கும் அதிபதி. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஜீவனத்திற்கு கவலை இல்லாத சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், குணமடைவர். குருவின் பார்வை பலத்தால் உடன்பிறப்புகளின் திருமணம் அல்லது அவர்களின் வாரிசு திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும். இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்து வராத உடன்பிறப்புகள் இப்பொழுது மனம் மாறி ஒத்துழைப்பு தருவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்பொழுது மாற்றப்படுவர். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அதற்கு பண உதவி கிடைக்குமா?' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வர்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள். எனவே மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். துணிந்து சில முடிவுகளை எடுத்து, மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். எந்த ஒரு வேலையையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைகளைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்பர். பதவி உயர்வு தானாக தேடிவரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டமாதிபதியான சுக்ரன் 7.2.2026 அன்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயம் ஏற்படும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி தடைப்பட்டு வந்திருக்கலாம். அது இப்போது கைகூடும். இடமாறுதல் இனிமை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் ஒப்பந்தங்கள் வந்துகொண்டே இருக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சி கைகூடலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 28, 29, பிப்ரவரி: 3, 4, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
விருச்சிக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு லாபாதிபதி புதனும், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கின்றனர். இதனால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல கிரக நிலைகள் சாதகமாக விளங்குகின்றன. தொழில் வெற்றிநடை போடும். இதயம் மகிழும் செய்தி வந்துகொண்டே இருக்கும். தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். எல்லா வழிகளிலும் ஏற்றமும், நல்ல மாற்றமும் கிடைக்கும் நேரம் இது.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால், அந்த இடங்களெல்லாம் புனிதமடைந்து அற்புதமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர் குரு. 'அவர் வக்ரம் பெற்றிருக்கிறாரே' என்று நினைக்க வேண்டாம். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். மதிப்பு, மரியாதை உயரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இல்லத்தில் இனிய நிகழ்வுகள் நடைபெற வழிபிறக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், புதிய பதவிகளும் கிடைக்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கும் 8, 11-க்கும் அதிபதியான புதன் 29.1.2026 அன்று அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும். 'புதிய வாகனம் வாங்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்பு அமையும். நவீனமான வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். 'வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். வீடு கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் முயற்சியும் கைகூடும். பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும் வாய்ப்பும் உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 22, 23, பிப்ரவரி: 1, 2, 6, 7, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
- வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
- பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனோடு செவ்வாய் சேர்க்கை இருப்பதால், இம்மாதம் ஒரு இனிமையான மாதமாக அமையும். பூர்வ புண்ணியத்தின் பலனால் கிடைக்க வேண்டிய அத்தனை யோகமும் உங்களுக்கு வரப்போகிறது. பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால், லாபம் அதிகரிக்கும் மாதமாகவே இம்மாதம் இருக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையிலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பாக்கிய - விரயாதிபதியான குரு, வக்ரம் பெறுவதால் சுபவிரயம் அதிகரிக்கும். 'இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது சுபச்செய்திகள் வந்து மனதை மகிழ்விக்கும். அதேநேரத்தில் பூர்வீக சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக பாகப் பிரிவினை செய்துகொள்ள எடுத்த முயற்சி தாமதமாகும். சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும்.
குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்கள் புனிதமடைகின்றன. குடும்ப ஒற்றுமை கூடும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ திருமணம் முடிவாக வாய்ப்புண்டு. வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும். தந்தை வழி பிரச்சனைகள் மறையும். தனித்து இயங்க நினைத்தவர்களுக்கு இப்பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். கூட்டுத்தொழிலை, தனித் தொழிலாக மாற்றும்போது லாபம் அதிகரிக்கும். வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் நேரம், நல்ல நேரம்தான். சகோதர ஒற்றுமை பலப்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் தொடங்க நினைத்தவர்களுக்கு அது கைகூடும். குடும்பத்தில் உதிரி வருமானங்களால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் நேரம் இது.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது பணவரவு அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கு இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது. இளைய சகோதரருடன் இருந்த பகை மறையும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பும், சுபநிகழ்வுகளும் நடைபெறக்கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 22, 23, 28, 29, பிப்ரவரி: 1, 2.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதோடு செவ்வாய் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே தைரியத்தோடு எதையும் செய்ய முன்வருவீர்கள். 'கட்டிய வீட்டை விற்றுவிட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வீடு வாங்கும் யோகமும், வியக்கும் தகவல்களும் வந்த வண்ணமாக இருக்கும். கூட்டுக்கிரக யோகத்தோடு இந்த மாதம் பிறப்பதால், அதற்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கைத் தரம் உயரும். சுபகாரியங்கள் கைகூடும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் ஆவார். எனவே குரு வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திடீர் மாற்றங்களையும், திரவிய லாபத்தையும் தந்து உள்ளத்தை மகிழ்விக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு என்பதால், இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகளை உருவாக்குவார். இடமாற்றம் அல்லது வீடு மாற்றத்தைக் கொடுத்து நன்மைகள் பெற வழிகாட்டுவார்.
குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால், உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். ஆன்மிகப் பயணம் அதிகரிக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். தொல்லை கொடுத்து வந்த தொழில் பங்குதாரர்கள், இப்பொழுது உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. 'தொழிலை விரிவு செய்யவும், மேலும் முதலீடு செய்யவும் பணமில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் 29.1.2026 அன்று தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் திருப்திகரமாகவே இருக்கும். 'பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல முடிவு கிடைக்கும். புதிய பணியாளர்கள் வந்திணைந்து பொருளாதாரநிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். அதிக முயற்சி எடுத்தும் முடிவடையாத காரியங்கள், இப்பொழுது முடிவடையும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உங்கள் வாழ்வில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் மாதம் இது.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்திற்குச் செல்வது, அற்புதமான நேரமாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. ஆன்மிகச் சுற்றுலாக்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமலும் தத்தளித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு யோகமான நேரம் இது. புதிய பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அதன் நெளிவு, சுளிவுகளை அறிந்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயர்வும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு. கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சனை படிப்படியாக குறையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 20, 21, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மிதுன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரித்து வலிமை அடைவதால் திடீர் தாக்கங்கள், மன அமைதிக் குறைவு, ஆரோக்கியத் தொல்லை, கடன் நெருக்கடி, குடும்பச்சுமை அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டு மன வருத்தத்தை உருவாக்கும். எனவே அமைதியும், நிதானமும் தேவைப்படும் நேரம் இது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைப்படி நடந்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய முடியும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லதுதான். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சகப் பணியாளர்களால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இந்த இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண, குரு பகவான் பார்வை கைகொடுக்கும். சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். விட்டுப்போன வரன்கள் கூட மீண்டும் வரலாம். பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உற்றார், உறவினரின் ஆதரவு உண்டு. கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக மாறும். அவர்கள் மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடமும் காட்டுவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மாறும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சி கைகூடும். பழைய வாகனத்தை சீர்செய்து உபயோகப்படுத்துவீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். குரு-சுக்ர பார்வை இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. 'இதெல்லாம் நடக்குமா?' என்று நினைத்த காரியம் இப்போது நடந்து முடிந்து விடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். இக்காலத்தில் குலதெய்வப் பிரார்த்தனை, தடைகளை அகற்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி வளர்ச்சியையும், பிற்பகுதி தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விறுவிறுப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்தும், உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு வீடு மாற்றம் இனிமை தரும். வேற்று இனத்தாரின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 22, 23, 26, 27, பிப்ரவரி: 1, 2, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கடக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, விரய ஸ்தானத்தில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அஷ்டமத்தில் சனியும், ராகுவும் பலம் பெற்று இருக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் கூட்டுக்கிரக யோகம் உள்ளது. எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் உருவாவதற்கான அறிகுறி தென்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை செய்வது நல்லது. இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வாசல் தேடி வந்த வரன்களை பரிசீலனை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். சனீஸ்வரர் வழிபாட்டினால் தடைகள் அகலும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, நன்மை - தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் 'விபரீத ராஜயோகம்' ஏற்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர், திடீரென எண்ணங்களும், செயல்களும் மாறும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். நோய் நொடியில் இருந்து விடுபடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்காக ஏற்றுக் கொண்ட பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரிகள் மாற்றப்படுவர். தொழிலுக்குத் தேவையான மூலதனம் நண்பர்கள் வாயிலாகக் கிடைக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். 'வைத்திருக்கும் வாகனத்தால் பிரச்சனை அதிகம் வருகின்றதே.. அதை விற்று விடலாமா?' என்று யோசிப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, இக்காலம் ஒரு பொற்காலமாக மாறப்போகிறது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் நேரம் இது. சகோதர வழியில் ஒற்றுமையும், பாசப்பிணைப்பும் ஏற்படும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராதவிதத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உத்தியோக மாற்றம் செய்ய நினைத்தால் அதுவும் கைகூடாது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தர, விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 23, 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
- உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.
- மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
தனுசு ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.
உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மகர ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.
குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
கும்ப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மீன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.
'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
- திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
- பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்ம ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தொழிலில் குறுக்கீடுகள் வந்து கொண்டுதான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை மாற, சர்ப்ப கிரகங்களுக்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடுவது நல்லது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குருபகவான் வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் யாவும் புனிதமடைந்து நற்பலன் தரும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
இதுவரை தடைப்பட்ட சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, அதை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். இதுவரை பகையாக இருந்த உறவினர்கள், உங்களைத் தேடி வந்து பாசம் காட்டுவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மகத்தான பொறுப்புகள் கிடைக்கும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிபவர்களுக்கு அங்கு 'குடியுரிமை கிடைக்கவில்லையே' என்ற கவலை அகலும். இடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் முன்னேற்றம் காணும் நேரம் இது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல காரியங்கள் நடைபெறும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார்். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தங்களின் வியாபார தலத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுப்பர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 18, 19, 29, 30, ஜனவரி: 3, 4, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
கன்னி ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால், நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மாதம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பதியும் ராசிகள் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்ெபாழுது துரிதமாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகவும், சிறப்பாகவும் இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.
சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இதுவரை ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரியும் சூழல் உருவாகும். வாசல் தேடி வரும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் இப்பொழுது மாற்றப்படலாம். கேட்ட சலுகைகள் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வரப்போகிறது. குறிப்பாக பணத்தேவை பூர்த்தியாகும். புதிய இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு அல்லது இருக்கும் வீட்டை விரிவு செய்யும் அமைப்பு உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும். மகிழ்ச்சிகரமான ஆன்மிகப் பயணங்கள் உண்டு.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். மேலும் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரு சில காரியங்களை தாமதமாகச் செய்ய நேரிடும். வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நிலையான வருமானம் உண்டு. பூமி யோகம் அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 20, 21, ஜனவரி: 1, 2, 5, 6, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
துலாம் ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். எனவே வருமானம் வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். 'சேமிக்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணம் கைகளில் புரளும் நேரத்தில் சுபச்செலவுகளைச் செய்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர் மாற்றம் பற்றியும், உத்தியோக மாற்றம் பற்றியும் நீங்கள் சிந்தித்தபடியே செயல்படுவீர்கள்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக இருந்தாலும், அதன் பார்வைக்கு பலன் அதிகம். எனவே இதுவரை இருந்த இடா்பாடுகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே.. கொடுத்த கடனை வாங்க முடிவில்லையே..' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் காரிய வெற்றியும், பணப் புழக்கமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொடர்ச்சியாக வந்த கடன் சுமை குறைய, புதிய வழிபிறக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். அதிகார அந்தஸ்திற்கு சிலர் உயர்த்தப்படுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தானாக வரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 18, 19, 23, 24, ஜனவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
விருச்சிக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்த பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சுபக் கிரகத்தின் பார்வை பதிவதால் சுபச் செய்திகள் வந்து சேரும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் குரு. அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வை தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் பதிகிறது. தன் வீட்டை, தானே பார்க்கும் குருவால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு கைகூடும். உறவினர் பகை அகலும். கொடுக்கல் - வாங்கல்களில் லாபம் உண்டு. குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பரிபூரண பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு, அதிகார அந்தஸ்தைப் பெறும் யோகம் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம - விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப அமைதி கூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க செலவிடுவீர்கள். மேலும் திருமண வயதடைந்த பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய இடத்தை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு, நடக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரும் வாய்ப்பு உண்டு.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமை அடைவதால் யோசிக்காது செய்த காரியங்களிலும் வெற்றி உண்டு. பூமி யோகமும், பிள்ளைகளின் வழியில் நல்ல காரியமும் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
- புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
- வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.
மேஷ ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் லாப ஸ்தானாதிபதி சனி லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கொடுக்கல் - வாங்கல் நல்லபடியாக அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், உங்கள் ராசிநாதன் செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் இனிய மாதமாகவே அமையும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் பலம் பெறுகின்றன. இதன் விளைவாக கல்யாணக் கனவுகள் நனவாகும். நீண்ட நாட்களாக பேசிப் பேசி கைவிட்டுப் போன வரன்கள் இப்பொழுது மீண்டும் வரலாம். அவற்றை பரிசீலனை செய்து தகுந்ததை தேர்வு செய்ய உகந்த நேரம் இது. தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக முடிவடையும். முந்திய காலத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறத் தொடங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். பொருளாதார நிலை உயர வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஏழரைச் சனி தொடங்க இருப்பதால், சுய ஜாதகத்தின் பலம் அறிந்து ஏற்றுக்கொள்வது நல்லது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில், பொன் - பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் நல்ல இடத்திற்கு வருவதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய் உச்சம்பெறும் இந்த நேரம், அற்புதமான நேரமாகும். எந்த செயலைச் செய்தாலும், அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக நடந்துகொள்வர். கடன்சுமை குறையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களின் எண்ணங்கள் எளிதில் வெற்றிபெறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும். திடீர் மாற்றம் உருவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 1, 2, 5, 6.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
ரிஷப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதியான புதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த யோகமான நேரத்தில் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ஆயினும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் அனைத்தும் புனிதம் அடைகின்றன. உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். எதிரிகள் விலகுவர். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். சென்ற மாதத்தில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் என்றாலும், குரு வக்ரமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் மன வருத்தமும் வந்துசேரும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டு மென்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான சூழல் உருவாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். எதிர்பாராத திருப்பங்கள் பலவும் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் கூடுதல் உயர்வு கிடைத்து, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். எந்த காரியத்தை முயற்சித்தாலும், அது உடனடியாக முடிவடையும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். விரயாதிபதி உச்சம்பெறுவதால் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படித்து முடிப்பது உத்தமம். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 23, 24, 27, 28, ஜனவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
மிதுன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. சுக்ரனோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும் வாய்ப்பு உண்டு. இம்மாதம் ஜென்ம குரு வரப்போவதால் திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் கூட ஒரு சிலருக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதலாகி செல்லும் வாய்ப்பு உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அங்ஙனம் ஜென்ம குருவாக வரும்பொழுது அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். திடீர் இடமாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாமா?, வேண்டாமா? என்பது பற்றி சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தனித்து இயங்க முடியாமல் பிறரை சார்ந்திருப்பவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும்.
'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அதன் பார்வை பலனால் சில நன்மைகளும் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் உருவான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 'சொத்து விற்பனையால் வரும் லாபத்தைக் கொண்டு சுப காரியங்கள் நடத்தலாமா?' என்று யோசிப்பீர்கள்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும்போது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதேநேரம் கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு இடத்தில் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். தனுசு ராசியானது குருவிற்குரிய வீடு என்பதால், அதில் சஞ்சரிக்கும் பகை கிரகமான சுக்ரன் பலவித வழிகளிலும் திடீர் திடீரென மாற்றங்களைக் கொடுப்பார். மன வருத்தங்களும் அதிகரிக்கும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். ஒரு சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கைகூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 26, 27, 29, ஜனவரி: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கடக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி பலம்பெற்று சஞ்சரிக்கிறார். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குருவும், வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாதம் சோதனைக் காலமாகவே இருக்கும். சிக்கல்களும், சிரமங்களும், சிறுசிறு தொல்லைகளும் வரலாம். பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த வழிபாட்டை முழுமையாக சனியின் மீது செலுத்த வேண்டிய நேரம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் 12-ம் இடத்திற்கு வரும்போது பயணங்கள் அதிகரிக்கும். பல வழிகளிலும் விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் திடீரென வந்து இதயத்தை வாட்டும். குரு பார்வை பதியும் இடங்கள் நன்மை தரும் என்பதால், தாய்வழி ஆதரவு கிடைக்கும். மற்ற சகோதரர்களிடம் அன்பு காட்டிய பெற்றோர், இப்போது உங்கள் மீதும் பாசம் காட்டுவர். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.
உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் மாறுதலாகிச் செல்வர். எதிர்பாராத சலுகைகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிக்கு பலன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக எதையாவது செய்யலாமா? என்று சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாமல் நழுவிச் சென்ற காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். பெண் வழிப் பிரச்சினைகள் தீர வழிபிறக்கும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், உச்சம் பெறுகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். யோகம் செய்யும் கிரகம் வலுவடைவதால் தேக நலன் சீராகும். செல்வ வளம் பெருகும். தெய்வப்பற்று அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் மாறும். வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு கடின முயற்சி கல்வியில் வெற்றி தரும். பெண்களுக்கு உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். வரவும், செலவும் சமமாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 27, 28, ஜனவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
- ‘சுக்ர மங்கள யோக’த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு.
- பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
தனுசு ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களை திடீர், திடீரென மாற்றியமைப்பீர்கள். தொழிலில் குறுக்கீடுகளும், தொல்லைகளும் உண்டு. நினத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீண்ட நாட்களாக கட்டுப்பட்டிருந்த நோய் மீண்டும் தலைதூக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் காலமாகவே அமையும். ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த நன்மையை உண்டாக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 12-க்கு வருவது யோகம்தான். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். 'சுக்ர மங்கள யோக'த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர், உங்கள் ராசிக்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். 'வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீடாக விலைக்கு வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் வரும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பரபரப்பாகக் காணப்படுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி தரும். உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்தும் அழைப்பு வரலாம். வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பு கரைந்தாலும், பொருளாதாரத்தை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 26, 27, 30, டிசம்பர்: 1, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
மகர ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிவதால் மிச்சம் வைக்கும் விதத்தில் பொருளாதார நிலை உயரும். வாக்கிய கணித ரீதியாக இன்னும் சில மாதங்களுக்கு ஏழரைச்சனி இருக்கிறது. அதுவரை நன்மையும், தீமையும் கலந்து நடைபெற்றாலும், குரு பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து திருப்திப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதம் அமையும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் பார்வை பலன் நன்மை செய்தாலும் கார்த்திகை 2-ந் தேதி முதல் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். எனவே கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் போட்டி அகலும். எதிரிகள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். கிளைத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமி விற்பனையாலும் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் நேரம் இது.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு சில நலன்களைப் பெறுவீர்கள். 'பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கின்றதே' என்று கவலைப்பட்டவர்கள், புதிய வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சி களில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 27, 28, டிசம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கும்ப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இனி ஆரோக்கியம் சீராகும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள். மந்த நிலை மாறி மகிழ்ச்சியான நிலை அமையும். இந்த மாதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி மாற்றினத்தவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அங்ஙனம் தன லாபாதிபதியான குரு பகவான் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் அடைகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் தடைகள் ஏற்படும். புதியவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேலும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மையை வழங்கும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அங்குள்ள செவ்வாய் மற்றும் சூரியனோடு இணைகிறார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோரின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறும் சூழல் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். தள்ளிச் சென்ற ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். அரசு வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உத்தியோக முயற்சி பலன் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். உறவினர் பகை அகலும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றமும், ஏற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 4, 5, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மீன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது. ராசிநாதன் ராசியைப் பார்க்கும் இந்த நேரம் நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் பணியாளர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். இக்காலத்தில் வியாழக் கிழமைதோறும் விரதம் இருந்து குருவை வழிபடுவது நல்லது. குறிப்பாக யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவும் கைகொடுக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். தொடர்ந்து சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். சேமிப்பு உயரும் இந்த நேரத்தில் அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். புதிய தொழிலால் பொருளாதார நிலை உயரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதார நிலையில் திருப்தி ஏற்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து பெறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ- மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவோடு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 26, 27, டிசம்பர்: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
- ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம்.
சிம்ம ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியனை குரு பார்க்கின்றார். ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கிறார். எனவே இனம் புரியாத கவலையும், மனக்குழப்பமும் ஏற்படும். கண்டகச் சனி ஆதிக்கம் இருப்பதால், பெற்றோரின் உடல்நலனில் தொல்லை, பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத சிக்கல், வருமானப் பற்றாக்குறை ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். தன்னிச்சையாக செயல்பட்டவர்களுக்கு, பிறரை சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகி்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களின் எதிர்ப்புகளால் முடிய வேண்டிய சுபகாரியங்கள் தாமதப்படும். அதேசமயம் அஷ்டமாதி பதியாகவும் குரு பகவான் விளங்குவதால், இதுவரை முடிவடையாதிருந்த வழக்குகள் இப்பொழுது முடிவடையும். வராது என்று நினைத்த கடன் பாக்கிகள் வசூலாகும். சுபச்செய்திகள் உண்டு.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்தநேரம், நல்ல நேரம்தான். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைப்பதோடு புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளுக்குரிய திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். வாங்கிய இடத்தை விற்பதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழி காட்டுதல் சிறப்பாக அமையும். பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 20, 21, டிசம்பர்: 2, 3, 7, 8, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கன்னி ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த மாதத்தில் புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். கடன்சுமை குறையும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எளிதில் வந்து சேரும். உச்சம்பெற்ற குரு சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக் கிறார். அதே சமயம் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். காரியங்கள் கைகூட நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து புகழ் பெறுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். மொத்தத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரம் இது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்படும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறி பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சீராகும். வழக்குகள் சாதகமாக அமையும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், மிக கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய சீர்கேடு வந்து கொண்டேயிருக்கும். மன உறுதி குறையும். வருமானம் வரும் வழியில் குறுக்கீடுகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளில் இழப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 19, 23, 24, டிசம்பர்: 4, 5, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
துலாம் ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். 'பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடுதலாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும் நேரம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. '10-ல் குரு பதவியில் மாற்றம்' என்பது ஜோதிடப் பொன்மொழி. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு திரவிய லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் வரலாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று சிந்திப்பீர்கள். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரமிது. நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சி பலன் தரும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீ்ர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி புதன் 2-ல் வரும் இந்த நேரம் செலவிற்கு ஏற்ப வரவு வந்துசேரும். சேமிக்க இயலாது. முந்தைய சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறி தென்படும். எதிலும் யோசித்துச் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். கலைஞர் களுக்கு நட்பு கைகொடுக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.
விருச்சிக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம்பெற்ற குரு பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தொட்டது துலங்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் வீடு தேடி வந்து வாழ்த்துவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும், நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்க உறுதுணையாக இருக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சிக்கிறார். அவரது முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும். தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும், தொழில் முன்னேற்றம் ஏற்படவும், வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரவும் குருவின் பார்வை வழிவகுக்கும். அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு தன - பஞ்சமாதிபதி ஆவார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும் உச்சம் பெற்ற குரு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசில நல்ல காரியங்கள் தடைப்பட்டாலும், கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் 'சுக்ர மங்கள யோகம்' செயல்படும். இதன் விளைவாக ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியே வரும் சுபகாரியங்களை சிறப்பாக முடித்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அரசு அனுகூலம் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சி கைகூடும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதி புதன். அவர் ராசிக்கு வரும் இந்த நேரம் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய சந்தர்ப்பங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 23, 24, 28, 29, டிசம்பர்: 8, 9, 10, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
- குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
- பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அருளாளர்களின் ஆசியும், அன்பு நண்பர்களின் ஆதரவும் திருப்தி தரும். ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து விருச்சிக ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகைமாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே இந்த வக்ர காலத்தில் வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு. நினைத்தது நிறைவேறாமலும் போகலாம். நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழச்சியை வழங்கலாம். இருப்பினும் இக்காலத்தில் குரு வழிபாடு அவசியம் தேவை.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அவர் உங்களுக்கு யோகத்தை வழங்கப்போகிறார். அங்குள்ள சூரியன், செவ்வாயோடு இணைகின்றார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் ஒரு நல்ல தகவல் கிடைக்கும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இப்பொழுது நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலையும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், தற்சமயம் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இதுவரை சேமித்த சேமிப்பை இப்பொழுது அசையா சொத்தாக மாற்ற முயற்சிப்பீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க சகோதரர்கள் உதவுவர்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்தநேரம், ஒரு அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். அடிப்படை வசதிகள் பெருகும். ஆனந்த வாழ்க்கை மலரும். குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நினைத்தது நடக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு கடன் என்ற மூன்றெழுத்து தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 4, 5, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
ரிஷப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த வகையில் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமியால் லாபம் வந்துசேரும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். சுபச்செய்திகள் அதிகம் கேட்கும் மாதம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலம் வளர்ச்சி அதிகரிக்கும் காலமாகவே இருக்கும். திட்டமிடாமலேயே சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி பலன் தரும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்ப்பது யோகம்தான். இது ஒரு பொன்னான நேரம் மட்டுமல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும் நேரமும் ஆகும். அங்குள்ள சூரியன் மற்றும் செவ்வாயோடு சுக்ரன் இணைவதால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, தாமதித்த திருமணம் தடையின்றி நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லை உண்டு. அதனால் மனக்கலக்கமும், மருத்துவச் செலவும் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராமல் வந்துசேரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களால் பலன் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 25, 26, 27, 30, டிசம்பர்: 1, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
மிதுன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பலம் பெற்ற சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளால் வரும் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த ஒரு சில நல்ல காரியங்கள் இப்பொழுது நிறைவேறுவதற்கான அறிகுறி தென்படும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுவடைகின்றது. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். எனவே வருமானம் தட்டுப்பாடுகளும் வரலாம். திசாபுத்தி பலம் இழந்திருப்பவர்களுக்கு கடன், கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நல்ல பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சாதாரணப் பொறுப்பிற்கு மாற்றப்படலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ம் இடத்திற்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். குறிப்பாக உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது நடைபெறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு அது கைகூடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பூமி விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். நிறைந்த தன லாபம் தரக்கூடிய விதத்தில் சில வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பிரபலமானவர்களின் பின்னணியில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கல்விக்காகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 27, 28, டிசம்பர்: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கடக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். எவ்வளவு தொகை வந்தாலும், அது சேமிப்பாக மாறாது. முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையாகச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பணப்பொறுப்பு சொல்லி யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்தால் அதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே குரு பார்த்தாலும், சேர்ந்தாலும் கோடி நன்மை என்பதற்கிணங்க தீமைகள் விலக வழிவகுத்துக் கொடுப்பார். கார்த்திகை 2-ந் தேதி முதல் கடக குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. 6-க்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கும் குருவே அதிபதி என்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைக் கவனமுடன் கையாள்வது நல்லது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை வந்து சேரும். உள்ளத்தில் எதை நினைத்தீர்களோ, அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவர். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்துகொண்டு வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. வருமானம் உச்சம்பெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
- உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வளர்ச்சிக்கு இடையூறாக பல சம்பவங்கள் நடைபெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென திருப்தி தராத பொறுப்புகள் மாற்றப்படலாம். உறவினர் பகையால் ஊர் மாற்றம், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியாத சூழல் உருவாகும். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்பட்டு மனக் கலக்கத்தை உருவாக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று இருப்பதால் நன்மை கிடைக்கும். என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் ஆரோக்கிய சீர்கேடு உருவாகும். ஒருசில காரியங்கள் விரையில் முடிந்தாலும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரிங்கள் முடிவடையாமல் தாமதத்தை ஏற்படுத்தும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். அதனால் வேறு உத்தியோகத்திற்குச் செல்லலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதி சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்தும், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை கேட்டும் செய்வது நல்லது. ஒரு சில காரியங்கள் நடைபெறுவதுபோல் இருந்து கடைசி நேரத்தில் நழுவி செல்லலாம். கடன்சுமையின் காரணமாக மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வருவதாக இருந்த பதவி உயர்வு தடைப்படும். அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இவ்வேளையில், சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து எந்த முக்கிய முடிவும் எடுக்க இயலாது. சொத்துக்கள் விரயமாகலாம். சொந்தங்களால் பிரச்சனை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடினாலும் அது திருப்தி அளிக்காது. உடன்பிறப்புகளின் வழியில் செலவு உண்டு.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதியான அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் உண்டு. பெண்வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சனை ஏற்படும். கலைஞர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி நிலவும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு இல்லற வாழ்க்கை இனிமை தரும். எப்பொழுதோ கொடுத்த தொகை வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, 29, 30, நவம்பர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மகர ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். அதிலும் அவர் உச்சம் பெற்றிருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். 'குரு பார்வை கோடி நன்மைக்கு வித்திடும்' என்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பகை அனைத்தும் உறவாகும். பாதியில் நின்ற பல பணிகள் ஒவ்வொன்றாக முடியும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதிசார கதியில் வந்தாலும் சப்தம ஸ்தானம் என்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பார். 'இதுவரை சேமித்த சேமிப்புகள் கரைந்துவிட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதை ஈடுகட்டும் வாய்ப்புகள் வந்துசேரும். குருவின் பார்வையால் தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தன ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டில் ராகு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். என்றாலும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். சனி உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் உடல் நலத்திற்காக சிறிது செலவிடும் சூழல் உண்டு. குடும்பத்தினரின் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தொழிலில் கிளைத் தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். தாய்வழி ஆதரவு உண்டு. 'கட்டிடம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு இன்னும் கை கூடவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அது கைகூடும். எதையும் துணிந்து செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். நாள்பட்ட நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவர்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சனை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு. சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இலாகா மாற்றங்களும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தன வரவு திருப்தி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 23, 24, நவம்பர்: 1, 2, 5, 6, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்மச் சனியாகவும் இருக்கிறார். எனவே ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர், திடீரென மனக்குழப்பம் ஏற்படும். ஜென்மத்தில் ராகுவும் இருப்பதால் பொருளாதாரத்தில் ஓரளவு திருப்தி ஏற்பட்டாலும் விரயங்கள் மிகவும் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்யவேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு எதிர்ப்பு, வியாதி, கடன்சுமை ஆகியவற்றை குறிக்கும் இடத்தில் தனாதிபதி குரு உச்சம் பெறுவதால் இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. எதிரிகளின் பலம் மேலோங்கும். இணைந்து செயல்படுபவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ரண சிகிச்சைகள் கூட வரலாம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது. திடீரென வரும் மாற்றங்கள் மனவருத்தத்தை உருவாக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். அதிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இது போன்ற நேரங்களில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். மேலும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், அது எத்தனையாவது சுற்று என்பதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ நடைபெற்றால் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நடுச்சுற்று நடந்தால் நல்லது நடக்க வழிபிறக்கும். இருப்பினும் சனி பகவானை முறையாக வணங்குவது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொருளாதாரம் உயரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மாறும். சகோதரர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் சொத்துக்களில் முறையாக பங்கீடு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக நல்ல அழைப்புகள் வரலாம். கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் கூட இப்பொழுது கைகூடிவரும். உறவினர் பகை அகலும். தாய்வழி ஆதரவு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போதுமான முதலீடு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரலாம். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 22, 23, 27, 28, நவம்பர்: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிறைவான வாழ்க்கை அமையும். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும் விதம் நடைபெறும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்து மகிழ்வீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். அவரது பார்வை பரிபூரணமாக உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் தொட்டது துலங்கும். தொழிலில் கணிசமான தொகை கைகளில் புரளும். இனிய சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வாங்கிப் போட்ட சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பொழுது அது கைகூடும். பாதியில் நின்ற பணிகள் யாவும் முடிவடையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் விரய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சனி வக்ரம் பெறுவதால் எதிர்பாராத விரயங்கள் ஏராளமாக வந்துசேரும். 'பணம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் வேறு திருப்தியற்ற வேலை கிடைக்கும். வாகனப் பழுதுச் செலவு உண்டு. பிறருக்குப் பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசியில் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த செவ்வாய், இப்பொழுது பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பேச்சாற்றல் மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும் முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகைக்கிரகம் ஆவார். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஜீரணத் தொல்லைகளும், திடீர், திடீரென உடல்நிலையில் பாதிப்புகளும் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்தால், அதனால் பிரச்சனைகள் உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தள்ளிப்போன விஷயங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவி பெறுவர். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்குப் படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 24, 25, 28, 30, 31, நவம்பர்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
- தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
- குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.
சிம்ம ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று வலுவிழந்து சஞ்சரிக்கிறார். வக்ரச் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதன் விளைவாக மருத்துவச் செலவு கூடும். 'திறமை இருந்தும் எதையும் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வளர்ச்சி ஏற்பட்டாலும் விரயங்கள் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதைப் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே விரயங்கள் அதிகரிக்கும். அதைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ, ஏதேனும் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாழ்க்கைத் துணை வழியே பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை தொல்லை ஏற்பட்டு மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் முறையாக அதில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. தாய் - தந்தையரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், அமைதியான வாழ்க்கைக்கு அடிகோலும் விதத்தில் சம்பவங்கள் நடைபெறும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் நிதானம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 25, நவம்பர்: 8, 9, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார். சுக்ரனும், புதனும் தன் வீடுகளை மாற்றி அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலய தரிசனங்களும், ஆன்மிகப் பயணங்களும் உருவாகும். விரயாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் விரயங்கள் உண்டு. என்றாலும் அதைச் சமாளிக்க, முன்னதாகவே அதற்குரிய தொகை வந்துசேரும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 4, 7-க்கு அதிபதியானவர் குரு என்பதால் ஆரோக்கியம் சீராகும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணத் தடைகளும், காரியத் தடைகளும் அகலும். தாயின் உடல்நலம் சீராகும். சென்ற மாதம் ஏற்பட்ட தட்டுப்பாடுகளும், பண நெருக்கடியும் தானாகவே விலகும். எதிர்பாராத வரவுகளால் இதயம் மகிழும். குடும்ப ஒற்றுமை பலப்பட நீங்கள் எடுத்த முயற்சி பலன்தரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சனி- ராகு சேர்க்கை ஏற்படுகிறது. 6-க்கு அதிபதி சனி, 6-ம் இடத்திலேயே வக்ரம் பெறுவது யோகம்தான். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சி தரும் விதத்தில் கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பீர்கள். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு மூலம் வெளிவந்து புது முயற்சியில் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தொழில் நடக்கும் இடத்தை மாற்றம் செய்ய விரும்புவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். உடன்பிறந்தவர்கள் பகை மறந்து செயல்படுவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உடல்நலனில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்ெபாழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். குறிப்பாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 21, 22, 27, 28, நவம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிக விரயம் ஏற்படும். லாபாதிபதி சூரியனும் நீச்சம் பெற்றிருக்கிறார். 10-ல் உள்ள குருவால் பதவி மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும் சூழல் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரன் பெயர்ச்சிக்குப் பிறகு, மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். எதையும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். என்றாலும் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவிற்கு வருவதில் தாமதம் ஏற்படும். திருமணத்தடை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் பண நெருக்கடியின் காரணமாக ஒரு சிலர் சொத்துக்களை விற்க நேரிடும். பாகப் பிரிவினை திருப்தி தராமல் போகலாம். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனை தலைதூக்கும். பெற்றோரின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பரம்பரை நோயின் தாக்கத்தால் பதற்றம் ஏற்படும். முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
இக்காலம் ஒரு இனிய காலமாகும். ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது, அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். எதிர் கருத்து உள்ளவர்கள் கூட இணக்கமாக நடந்துகொள்வர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் வந்த பிரச்சனை அகலும். வருமானம் உயரும். பிள்ளை களின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். உடல்நலன் சீராகும். செல்வநிலை உயரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இலக்கை அடைய இயலும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 23, 24, 30, 31, நவம்பர்: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
விருச்சிக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம் பெற்ற குரு பகவான் பார்க்கிறார். அது 5-ம் பார்வையாக இருப்பதால் பொன் கொழிக்கும் மாதம் இது. எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும். அடுத்தடுத்து ஆதாயம் தரும் தகவல் வந்து கொண்டேயிருக்கும். 'நீங்கள் கொடுத்து வைத்தவர்' என்று கூட இருப்பவர்கள் பாராட்டுவார்கள். பொருளாதார நிலை உச்சம் அடையும். புதிய திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பதால், இக்காலத்தில் உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் அதிக அளவில் வந்து மகிழ்விக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகார அந்தஸ்து தேடிவரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். 'கும்ப ராகு, குடம் குடமாக கொடுக்கும்' என்பார்கள். அந்த அடிப்படையில் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் உங்கள் ராசிக்கே வருவது யோகமான நேரமாகும். இடம், பூமி வாங்கும் வாய்ப்பு உண்டு. எதைச் செய்ய நினைத்தாலும், அதை உடனடியாகச் செய்து முடிக்கும் வகையில் பொருளாதார நிலை இடம் கொடுக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். இது ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயம் ஏற்படத்தான் செய்யும். என்றாலும் அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இடமாற்றம் எளிதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுபச் செய்தி உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 19, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 11, 12, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
- வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
மேஷ ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுக்கடுக்காக வந்த மருத்துவச் செலவு குறையும். இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும்.
சனி-ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். சனி வக்ரம் பெற்றிருப்பதால் பயப்பட தேவையில்லை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடும். திட்டமிட்டுச் செலவு செய்ய இயலாது. திடீர் செலவுகள் மனக்கலக்கத்தை உருவாக்கும். கும்ப ராசியில் உள்ள சனி உங்களுக்கு நன்மைகளையே வழங்கும். கூட்டுத் தொழில் செய்வோர், ஏற்புடைய விதத்தில் லாபம் காண்பர்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர், செவ்வாய். அவர் தன் சொந்த வீட்டிற்கு வரும் இந்த நேரத்தில் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இலாகா மாற்றம், தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இடம், பூமி விற்பனை கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். ஆயினும் அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவும், அதனால் மன வருத்தமும் உருவாகும். எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு, நல்ல வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் நேரம் இது. வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமைவதால் கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பாராட்டும் உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 27, 28, நவம்பர்: 1, 2, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் சென்று ஆட்சி பெறுகிறார். எனவே மாதத்தின் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி பலன் தரும். எதிர்பார்த்தபடி பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் நீடிப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. மனப்பயம் அகன்று மகிழ்ச்சி கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக உச்சம் பெற்றாலும் நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று செயல்படுவதால், அதன் பார்வைக்குப் பலன் உண்டு. அந்த அடிப்படையில் கல்யாண முயற்சி கைகூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். ஆர்வம் காட்டிய புதிய தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருந்தாலும் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஒரு சில குறுக்கீடுகள் ஏற்படலாம். தைரியத்தோடு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இல்லம் தேடி லாபம் வந்து கொண்டேயிருக்கும். பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இதுவரை குடும்பத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியம் இப்பொழுது நடைபெறும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிர்பாராத பயணங்களால் லாபம் கிடைக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவெடுக்கும் பொழுது, அனுபவஸ்தர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுவழிச் சலுகைகள் கிடைக்கும். ஆபரணப் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில் போட்டிகள் அகலும். வருமானம் உயரும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருந்தியவர்களுக்கு, இப்பொழுது உரிய பலன் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு பகை மாறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 29, 30, நவம்பர்: 2, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.
மிதுன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இல்லத்திலும் பிரச்சனை, இடம் பூமியாலும் பிரச்சனை என்ற நிலை உருவாகும். 'நல்ல காரியங்கள் நடைபெற தாமதமாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு குறையும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உத்தியோக மாற்றம் உறுதியாகும். ஊா் மாற்றம், இடமாற்றம் அமையும் பொழுது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நல்லது. ஜென்ம குரு விலகு வதால் இனி பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பஞ்சமாதிபதியும், பாக்கிய ஸ்தானாதிபதியும் நீச்சம் பெறுகிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை மீறி முன்னேற்றம் காண முயற்சி எடுப்பீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் ஒரு வழியில் வருமானம் வந்தால் மறுவழியில் செலவு இருமடங்காகும். குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகளும், மனக்கசப்புகளும் ஏற்படலாம். நம்பி எதையும் செய்ய இயலாது. பெற்றோர் வழியில் பெரும் செலவு ஏற்படும். 'கற்ற கல்விக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி, விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் இலாகா மாற்றம் வந்து மன வருத்தத்தை உருவாக்கும். வளர்ச்சியில் ஏற்படும் குறுக்கீடுகளை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எதிலும் சிந்தித்துச் செயல்படுவதே நல்லது.
துலாம்-சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுவரை நீச்சம் பெற்ற சுக்ரன், இப்பொழுது சொந்த வீட்டிற்கு வருவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரப் போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பணநெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் ஒப்பந்தங்கள் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானத்தை விட செலவு கூடும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, நவம்பர்: 2, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கடக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும், இணைந்திருக்கிறார். எனவே நல்ல சந்தர்ப்பங்கள் கை நழுவிச் செல்லும். தனாதிபதி சூரியன் நீச்சம்பெறுவதால் வரவேண்டிய பாக்கி கள் ஸ்தம்பித்து நிற்கும். எவ்வளவு முயற்சி எடுத்தும், பிரபலஸ்தர்களின் நட்பை பெற்றிருந்தாலும் எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மைக்கு வழிகாட்டும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியான கடக ராசியில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசார பெயர்ச்சியாக இருந்தாலும், குரு பகவான் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். 'வரன்கள் வந்து வாசலோடு நின்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். இடமாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. மன அமைதிக் குறைவை உண்டாக்கும். அதிக விரயங்களால் கலக்கமும், இடையூறுகளை சமாளிக்க முடியாமல் தடுமாற்றமும் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பொழுது, நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். எதை எந்த நேரத்தில் செய்ய நிைனத்தாலும், அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பட்ட சிரமங்கள் தீர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு நல்ல சம்பவங்கள் நடைபெறும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் கைகூடும். தொழிலில் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பிரச்சனைகள் உருவெடுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்குச் சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் எதையும் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, நவம்பர்: 3, 4, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.






