என் மலர்
நீங்கள் தேடியது "ராசிபலன்"
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்துதவுவீர்கள். வெளியுலகத் தொடர்பும் விரிவடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
கல்யாண முயற்சி கை கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.
கடகம்
அலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வேலைப்பளு கூடும். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல் கொடுக்கல்கள் ஆதாயம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி லாபம் தரும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக மாறும். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
கும்பம்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
மீனம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாகத் தீட்டிய திட்டம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண முயற்சி கைகூடும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
நாட்டுப் பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். தொழில் ரீதியாக சிலர் உங்களைத் தொடர்பு கொள்வீர்கள்.
ரிஷபம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
யோகமான நாள். அதிகாலையிலேயே அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தொலைபேசி வழியில் நல்ல செய்தி வந்துசேரும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னி
வீண்பழிகள் அகலும்நாள். வியாபார விருத்தியுண்டு. கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது.
துலாம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்தையும் இப்போதே செய்வோமா பிறகு செய்வோமா என்றுயோசிப்பீர்கள். நண்பர்கள் மீது நம்பிக்கை குறையும்.
விருச்சிகம்
புதியபாதை புலப்படும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். மாற்றினத்தவர்கள் மூலம் மனதிற்கினிய செய்தி கிடைக்கும்.
தனுசு
தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். கூட்டுத்தொழிலில் லாபம்உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கும்பம்
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தேகநலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
மீனம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கற்றவர்களின் பாராட்டுக்களால் கனிவு கூடும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
- திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-18 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி காலை 7.54 மணி வரை பிறகு பவுர்ணமி பின்னிரவு 3.55 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : கார்த்திகை பிற்பகல் 3.08 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி, நத்தம் மாரியம்மன் கோவிலில் லட்ச தீபக்காட்சி, திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்
இன்று பவுர்ணமி. ஸ்ரீ பாஞ்சராத்திரி தீபம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்ப உற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் லட்ச தீபக்காட்சி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீகுருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-பொறுப்பு
கடகம்-பெருமை
சிம்மம்-ஆதரவு
கன்னி-நட்பு
துலாம்- உதவி
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- அன்பு
மகரம்-பக்தி
கும்பம்-ஆக்கம்
மீனம்-போட்டி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோக முயற்சி அனுகூலம் தரும்.
ரிஷபம்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
மிதுனம்
யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு மேலோங்கும்.
கடகம்
முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
சிம்மம்
எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி தரும் நாள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். திருமண வாய்ப்பு கைகூடும்.
கன்னி
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கை கொடுக்கும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும்.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. திட்டமிட்ட செயலொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.
விருச்சிகம்
வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். பக்கத்தில் உள்ளவர்களால் பக்கபலமாக இருப்பர். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும்.
மகரம்
குறைகள் அகலக் குகனை வழிபட வேண்டிய நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
மீனம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவ முன்வருவர். நண்பர்களால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வீடு கட்டும் முயற்சி பலன் தரும்.
- திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-17 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி காலை 10.13 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : பரணி மாலை 4.47 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரருக்கு இன்று மகாதீப தரிசனம், கார்த்திகை விரதம்
இன்று திருக்கார்த்திகை, திருவண்ணாமலை தீபம். கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் தீபோற்சவ காட்சி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சாந்தம்
கடகம்-நலம்
சிம்மம்-லாபம்
கன்னி-வெற்றி
துலாம்- அமைதி
விருச்சிகம்-பொறுமை
தனுசு- தேர்ச்சி
மகரம்-ஊக்கம்
கும்பம்-விவேகம்
மீனம்-மாற்றம்
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி.
- திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-16 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி நண்பகல் 12.29 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : அசுவினி இரவு 6.23 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
பிரதோஷம், திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
பிரதோஷம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை கண்ணாடி விமானத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமா நிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-அன்பு
மிதுனம்-பரிசு
கடகம்-ஆதரவு
சிம்மம்-ஊக்கம்
கன்னி-உயர்வு
துலாம்- ஈகை
விருச்சிகம்-அமைதி
தனுசு- ஆதாயம்
மகரம்-புகழ்
கும்பம்-போட்டி
மீனம்-இன்பம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
ரிஷபம்
பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியத்தை முடித்துக் கொடுப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மிதுனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையும் சந்தர்ப்பம் கைகூடிவரும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
கடகம்
நந்தி வழிபாட்டால் நன்மை கிடைக்கும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
சிம்மம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகும். அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நெருக்கடி கொடுப்பர்.
துலாம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ்கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு திருப்தி தரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மகரம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கும்பம்
பிறரை விமர்சிப்பதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் பற்றிச்சிந்திப்பீர்கள்.
மீனம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
ரிஷபம்
புதிய பாதை புலப்படும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோக உயர்வு உண்டு.
மிதுனம்
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
கடகம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
சிம்மம்
யோகமான நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்களால் கையிருப்புக் கரையலாம். உத்தியோகப் பிரச்சனைகள் நீடிக்கும்.
துலாம்
லட்சியங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று இன்று கைகூடும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
தனுசு
பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
வாங்கல் கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
கும்பம்
வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
மீனம்
உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.
- சுபமுகூர்த்த தினம்.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-15 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 2.36 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : ரேவதி இரவு 7.52 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் வெள்ளி விமானத்திலும் இரவு ஸ்ரீ சுவாமி குதிரை வாகனத்திலும் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிசு
ரிஷபம்-தனம்
மிதுனம்-மேன்மை
கடகம்-நற்செயல்
சிம்மம்-லாபம்
கன்னி-உழைப்பு
துலாம்- உயர்வு
விருச்சிகம்-நலம்
தனுசு- பெருமை
மகரம்-நன்மை
கும்பம்-வாழ்வு
மீனம்-கடமை
- கடகம் நன்மைகள் நடக்கும் வாரம்.
- கன்னி நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.
மேஷம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசிக்கு 4-ம் மிடமான சுகஸ்தானத்தில் நிற்கும் அதிசார குரு பகவான் வக்ரகதியில் வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் தனவரவில் தன்னிறைவு உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் பாதிப்பு சற்று குறையும். எதிர்பாராத சில பண வரவுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் நிலவும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும்.சுப மங்கள விசேஷங்கள் நடக்கும். புதிய தொழில் சிந்தனை அதிகரிக்கும்.இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். மனக்கவலை மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.
ரிஷபம்
நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம்.ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியி னருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும். திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.வேலைப்பளு குறையும்.புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
மிதுனம்
மறைமுக எதிர்ப்புகள் குறையும். வாரம்.ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீ கத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறி யாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும்.தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.
கடகம்
நன்மைகள் நடக்கும் வாரம்.ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.
சிம்மம்
சாதகமான வாரம்.ராசி அதிபதி சூரியன் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சுகஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தாராள தன வரவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.வீட்டிலும் வெளி இடத்திலும் உள்ள நிலைமைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.உங்களின் ஆராய்ச்சி திறன் உயரும்.உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.தந்தையின் ஆசியுடன் குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் நடக்கும்.விவசாயிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். 1.12.2025 அன்று இரவு 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
கன்னி
நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரே பத்தாம் அதிபதியாக இருப்பதால் தொழில் மூலமாக தன வரவு அதிகமாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சிினைகள் எல்லாம் சூரியனை கண்ட பணி போல் விலகும்.சிந்தனைகள் தெளிவாகும். தடைபட்ட கனவுகள் லட்சியங்களை நிறைவேற்ற உகந்த காலமாகும். நிதானமாக செயல்படுவீர்கள். புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்ற செயல்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அரசு மற்றும் அரசாங்க பணிகளால் ஆதாயங்கள் கிடைக்கும். சிலர் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பார்கள்.1.12.2025 அன்று இரவு 11.18 முதல் 3.12.2025 அன்று இரவு 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விபரீத விளைவுகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவபுராணம் படித்து சிவபெருமானை வழிபடவும்.
துலாம்
சங்கடங்கள் விலகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். அலுவலக பணிச் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 3.12.2025 அன்று இரவு 11.14 முதல் 5.12.2025 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும் ஆனால் விவேகம் இருக்காது.குடும்ப உறவினர்களை கடுமையான சொற்களால் பேசக்கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
விருச்சிகம்
திறமைகளால் மதிப்பு உயரும் வாரம்.ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். நோய் தொந்தரவுகள் அகலும்.சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும்.5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.
தனுசு
எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் வார இறுதியில் வக்கிர கதியில் சம சப்தமஸ்தானம் செல்கிறார்.திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தினர் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். உடல் ஆரோக்கி யத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட அனைத்தும் சுப பலன்களும் வந்து சேரும்.
மகரம்
வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இதுவரை வராமல் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் சீராகும்.கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும்.பெண்களுக்கு கருவுருதலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து சிவனுக்கு புனுகு சாற்றி வழிபடவும்.
கும்பம்
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.ராசியில் உள்ள ராகுக்கு குரு பார்வை கிடைக்கிறது. வாக்கு வன்மை பெருகும்.எதிர்பார்த்த அனைத்து வகையிலும் வருமானம் உண்டாகும்.வரா கடன்கள் வசூல் ஆகும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீடு வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள்.மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும்.ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.
மீனம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும்.பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்.சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. பழைய நண்பர்ளை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். அலைபேசி மூலம் நல்ல தகவல் உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
வரவு வாயிலைத் தேடி வரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கடகம்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் அகல செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
சிம்மம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். யோசித்து செயல்படுவது நல்லது. வி.ஐ.பி.க்கள் விரோதமாகலாம். பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும்.
கன்னி
கல்யாண முயற்சி கைகூடும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். ஆசையாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். குடும்ப பிரச்சனை குறையும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.
தனுசு
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தாயின் உடல்நலம் சீராகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
மகரம்
நல்லவர்கள் தொடர்பால் நலம் காணும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
கும்பம்
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன்சுமை குறையும். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.
மீனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
- சுபமுகூர்த்த தினம்.
- ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-14 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி மாலை 4.28 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.08 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவண்ணாமலை அருணாசல நாயகர் மகா ரதோற்சவம், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் காலையில் அபிஷேகம்
இன்று சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கும், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-சுகம்
மிதுனம்-ஆக்கம்
கடகம்-நற்செயல்
சிம்மம்-ஆர்வம்
கன்னி-நன்மை
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- சிறப்பு
மகரம்-அமைதி
கும்பம்-பாசம்
மீனம்-தேர்ச்சி






