என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்மிகம்"
- வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மகா தீபாராதனையும், மாலை 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும் நடைபெறுகிறது. இரவு கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெறுகிறது.
- நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது.
- சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைப்பது வழக்கம்.
மாசி மாத பவுணர்மியையொட்டி நாளை திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.52 மணி வரையில் உள்ள நிலையில் நாளை மாலை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
சந்திர கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்லலாமா? என்பது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் பி.டி.ரமேஷ் குருக்கள் கூறுகையில், சந்திர கிரணத்தின் போது கிரிவலம் செல்லலாம். கிரகணம் சமயத்தில் கிரிவலம் சென்றால் இருமடங்கு பலன் தரும்.
கர்ப்பிணிகள் மட்டும் கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும். கிரகணம் என்பது மனிதனுக்கு மட்டுமே. சாமிக்கு கிடையாது. தேவர்கள் கிரகணம் சமயத்தில் தவம் செய்வார்கள். அந்த சமயத்தில் தவம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே நதிகள், தீர்த்த குளங்களின் கரையில் தவம் செய்யலாம் என்றார்.
- பெருவயல், திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம்.
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-18 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 6.28 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 8.16 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று மாசி மகம், சிவன் கோவில்களில் நடராஜருக்கு சோமவார அபிஷேகம்
இன்று மாசி மகம். நடராஜருக்கு அபிஷேகம். கோயம்புத்தூர் ஸ்ரீ கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. திருமாவிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கஜேந்திர மோட்சம். பெருவயல், திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-பயிற்சி
மிதுனம்-முயற்சி
கடகம்-ஆதரவு
சிம்மம்-வெற்றி
கன்னி-மேன்மை
துலாம்- நன்மை
விருச்சிகம்-அன்பு
தனுசு- தெளிவு
மகரம்-சிந்தனை
கும்பம்-நேர்மை
மீனம்-பணிவு
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-16 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி இரவு 9.03 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : புனர்பூசம் காலை 9.51 மணி வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் மதுரை ஸ்ரீ இன்மையில் நன்மை தருவார் தலங்களில் திருக்கல்யாணம். கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள் சூர்ணாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கநாதர் புறப்பாடு
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-மேன்மை
மிதுனம்-பாராட்டு
கடகம்-புகழ்
சிம்மம்-பணிவு
கன்னி-வெற்றி
துலாம்- லாபம்
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- உவகை
மகரம்-ஈகை
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-பயணம்
- நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.
- வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா 22-ந்தேதி கொடியேற்றத்துடன், கோலாகலமாக தொடங்கியது. விழாவில் தினமும் உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமான கிரி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார். நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது. 3-ந்தேதி கொடியிறக்கம். 4-ந்தேதி தியாகராஜ சாமி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் மாசி பெருவிழா நிறைவுபெறுகிறது.
- குலசேகரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம்.
- திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி இரவு 10.50 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 11.05 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி, திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
இன்று சர்வ ஏகாதசி. கும்பகோணம் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் குதிரை வாகனத்திலும் அம்பாள் பல்லக்கிலும் பவனி. குலசேகரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் சந்தனக்குடக் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படை வீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-புகழ்
மிதுனம்-சிறப்பு
கடகம்-உறுதி
சிம்மம்-பண்பு
கன்னி-பரிசு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-கவனம்
தனுசு- கடமை
மகரம்-பக்தி
கும்பம்-ஓய்வு
மீனம்-திடம்
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி வரும் காட்சி.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-14 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி நள்ளிரவு 12.54 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் நண்பகல் 12.34 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம், ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி வரும் காட்சி. திருக்கச்சிநம்பி திருநட்சத்திர வைபவம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடியில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-பரிசு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-அனுகூலம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- மேன்மை
மகரம்-உதவி
கும்பம்-லாபம்
மீனம்-புகழ்
- கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் புலி வாகனத்தில் பவனி.
- காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-13 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி பின்னிரவு 3.06 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : ரோகிணி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி 9.00 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்
கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் புலி வாகனத்தில் பவனி. திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி. கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணிப் பெருமான் கருட வாகனத்தில புறப்பாடு. மருதமலை ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சுத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.
பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் தலங்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குழு வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-புகழ்
மிதுனம்-ஆசை
கடகம்-நேர்மை
சிம்மம்-நற்செய்தி
கன்னி-நன்மை
துலாம்- உயர்வு
விருச்சிகம்-லாபம்
தனுசு- வரவு
மகரம்-சிறப்பு
கும்பம்-வெற்றி
மீனம்-உழைப்பு
- வளர்பிறை அஷ்டமி.
- ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி காலை 7.49 மணி வரை பிறகு அஷ்டமி மறுநாள்
விடியற்காலை 4.10 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : கார்த்திகை பிற்பகல் 3.47 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
இன்று வளர்பிறை அஷ்டமி. வேலூர் கோட்டை துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை கோவில்களில் காலை அபிஷேகம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம், திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை, திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-வெற்றி
கடகம்-ஆசை
சிம்மம்-செலவு
கன்னி-சுகம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-அமைதி
தனுசு- ஆதரவு
மகரம்-வரவு
கும்பம்-சுபம்
மீனம்-முயற்சி
- கார்த்திகை விரதம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-11 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி காலை 10.08 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : பரணி மாலை 5.25 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று கார்த்திகை விரதம், சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம்
இன்று கார்த்திகை விரதம். திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பிரணவ உபதேசம் அருளிய காட்சி. கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள் சந்திர பிரபையில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-அமைதி
கடகம்-போட்டி
சிம்மம்-ஆதரவு
கன்னி-உற்சாகம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-பெருமை
தனுசு- ஆக்கம்
மகரம்-புகழ்
கும்பம்-அனுகூலம்
மீனம்-பக்தி
- காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 100 ரூபாய் கட்டணம் தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று மாசி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள சண்முக விலாஸ் மண்டபத்தில் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- வளர்பிறை சஷ்டி விரதம்.
- ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-10 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி நண்பகல் 12.17 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : அசுவினி இரவு 6.55 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், சமயபுரம், இருக்கன்குடி, தஞ்சை புன்னை நல்லூர் அம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்
இன்று வளர்பிறை சஷ்டி விரதம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டி யூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். மரத்தோளுக்கினியானில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீசிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-சுபம்
கடகம்-உயர்வு
சிம்மம்-நட்பு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- புகழ்
மகரம்-ஆதரவு
கும்பம்-வரவு
மீனம்-கீர்த்தி






