என் மலர்
நீங்கள் தேடியது "Tiruchendur Temple"
- அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- கோவில் வளாகம் மற்றும் கடற்கரை திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில் தவிர்த்து மற்ற சாதாரண நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகிறது.
மேலும் சுப முகூர்த்த நாள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருமண ஜோடிகள், பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இன்று ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை திருவிழா காலம் போல் காட்சியளித்தது. அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
- கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஞாயிற்று கிழமையான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது.
இன்று சுப முகூர்த்த தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றது.
அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் மு.கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா வருகிற 4-ந்தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.
மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
9-ந்தேதி 6-ம் திருவிழா அன்று காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் சேர்கிறார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
11-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பகல் 12 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.
ஆவணித்திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் மற்றும் 7-ம் திருவிழாவன்று அதிகாலை 1 மணிக்கும், மற்ற நாட்களில் கோவில் அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது.
- அதிகாலை முதல் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம், மேலும் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது. இன்று ஆவணி மாத முதல் சுப முகூர்த்த தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
இன்று 100-க்கும் மேற்பட்ட திருமணங்களும் கோவிலில் நடைபெற்றது. அதிகாலை முதல் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் ஒரு பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் கோவில் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வளர்பிறை சஷ்டி என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலில் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பொது தரிசன வரிசையில் சென்று தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், ரூ. 100 கட்டணம் தரிசன வரிசையில் நின்று தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- மற்ற கால பூஜைகள் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் நடந்தது.
இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினம் வருகிறது. நேற்று முதல் அமாவாசை என்பதால் சிலர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கோவில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். இதற்காக அவர் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடியிக்கு காலை 7.30 மணிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆறுமுக நயினார், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அவைத்தலைவர் திருப்பாற்கடல், மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் சிலருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டம் வருவதையொட்டி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்செந்தூரில் மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்கானி, பழைய காயல் முத்தையாபுரம், தூத்துக்குடி 3-ம் மைல் பைபாஸ் மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் சுவாமி மூலவர், சண்முகர், சத்ருசம்கார மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டார்.
- விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
- இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடக்காது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது.
வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விமான கலசங்களுக்கு கும்பம் எடுத்து வரப்பட்டு காலை 9.40 மணிக்கு மேல் தளத்தில் அமைந்துள்ள மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு மூலவருக்கு அபிசேகம் நடக்காது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
- இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இ்ந்தநிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருசாபிஷேகம் நடக்கின்றது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயன்படுத்த இயலாத 211 கிலோ பொன் இனங்கள் இன்று தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.300 கோடியில் மெகா திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து அங்கு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோவிலில் பிரித்தெடுக்கப்பட்ட 211 கிலோ பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் அதனை ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
அதன்படி 211 கிலோ பல மாற்று பொன் இனங்களை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி மாலா முன்னிலையில் ஸ்டேட் வங்கி பொது மேலாளர் கோவிந்த் நாராயண் கோயலிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அமைச்சர்கள் கோவில் வளாகத்தில் உள்ள அர்ச்சகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
2021-2022-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வந்த பல மாற்று பொன் இனங்களில் கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் தவிர ஏனையவற்றை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து அதில் இருந்து வரும் வட்டி மூலமாக கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக சென்னை, திருச்சி மற்றும் மதுரை என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் துரைச்சாமி ராஜூ, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் ஆர்.மாலா தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இப்பணிகளை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் பவானி அம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்களுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றும் வகையில் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் கோவில்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களில் இருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி நிகர பொன் இனங்களை கணக்கிடும் பணியானது ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் நடைபெற்றது.
அதில் இருந்து பயன்படுத்த இயலாத 211 கிலோ பொன் இனங்கள் இன்று தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் திருச்செந்தூர் கோவிலின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.
கோவிலில் தண்ணீர் தொட்டி, கழிவுநீர், பம்பிங் ரூம், நிர்வாக அலுவலகம், முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம் என 3 லட்சம் சதுர அடியில் நடைபெற்று வரும் மெகா திட்டப்பணியில் 10-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பார்த்தீபன், திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன், இணை ஆணையர்கள் கார்த்திக், அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.