என் மலர்
நீங்கள் தேடியது "O Panneer Selvam"
- தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.
* தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் என்றார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
- வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.
போடி:
தமிழகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தினுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு இன்று நிறைவுக்கு வந்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை போடியில் கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் தனது அரசியல் களம்குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்கள் இதுகுறித்து எதுவும் தகவல் தெரிவிக்காத நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடி பஸ் நிலையம் தேவர் சிலை அருகில் அவர் கட்சியை விட்டு விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுவரை அ.தி.மு.க.வை பிடித்திருந்த தீய சக்தி ஒழிந்தது. துரோகி பன்னீர்செல்வம் ஒழிக, போய்க்கோ போய்க்கோ என்று கோசமிட்டபடி பட்டாசு வெடித்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பி.எஸ்.சை 3 முறை முதலமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் அவர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் தி.மு.க.விற்கு சென்று விட்டார். அவர் எந்த இடத்திலும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே அ.தி.மு.க.வை பிடித்த தீயசக்தி ஒழிந்து விட்டது. இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.
- ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம்.
மதுரை:
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் வருகின்ற 1-ந்தேதி மண்டேலா நகரில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதலை காட்டும் வகையில் அம்மா பேரவை சார்பில் சீருடை அணிந்த 2,500 தூதுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான பயிற்சி முகாம் மண்டேலா நகரில் உள்ள திடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
இந்த பரப்பரை ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு செல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பிரதமர் மோடி எடப்பாடியாரை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வரும் நேரத்தில், இதை திசை திருப்பவும், மடைமாற்றம் செய்யவும், இதுபோன்ற செயல்களை சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மாற்று முகாமுக்கு செல்வதால் அ.தி.மு.க.விற்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் அறிவித்து உள்ள தேர்தல் வாக்குறுதிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காட்டி அரசியல் செய்தார்கள். இனி 100 செங்கலை காட்டினாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் செங்கோலை அவரது கையால் பிடிப்பார். நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும் என்றார்.
- என்னையும் அவர் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறி விட்டேன்.
- அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பேன்.
திருச்சி:
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக களப்பணியாற்றி வந்த அ.தி.மு.க. மீட்புக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நட ராஜன் தி.மு.க.வில் இணைய மறுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வெல்லமண்டி நடராஜன் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவன் நான். அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்று பணியாற்றினேன். முன்னதாக 2016 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதலில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டனர். மூன்றாவதாக என்னை ஜெயலலிதா அறிவித்து வெற்றி பெறச் செய்தார்.
அப்போதைய அமைச்சர வையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் எனக்கு வாய்ப்பளித்தார். ஐந்தாண்டுகள் அமைச்சர் பதவியில் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கும், கட்சிக்கும் நல்ல பெயர் பெற்று தந்தேன். அப்போது முதல் தற்போது வரை அ.தி.மு.க.வின் விசுவாசியாகவே நான் இருந்து வருகிறேன்.
இந்தநிலையில்தான், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார். என்னையும் அவர் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறி விட்டேன். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எனக்கு தி.மு.க.வுக்கு செல்ல மனம் இடம் தரவில்லை. அதில் என்னால் பயணம் செய்ய முடியாது. இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்றார்.
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓ பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டார். வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்த போது அவரும் தி.மு.க.வில் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போதும் தி.மு.க.வில் தான் இணையவில்லை, வீட்டில்தான் இருக்கிறேன் என தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவே தன்னுடைய முடிவு என கூறினார்.
இப்போது ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் ஐக்கியமான நிலையிலும் அங்கு செல்ல மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் குன்னம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், ஜெயலலிதாவின் படத்தை தூக்கி எறிந்து விட்டு தி.மு.க.வில் இணைய போகிறீர்களா என தாய், மனைவி, குழந்தைகள் கேட்டபோது, மனம் நொந்து போய்விட்டேன். தி.மு.க.வில் இணையவில்லை, அரசியலை விட்டு விலகுகிறேன் என அறிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். வெல்லமண்டி நடராஜன் விஜய் கட்சிக்கு செல்வாரா? அல்லது தாய் கழகமான அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்வாரா? என்பது சில நாட்களில் தெரியவரும்.
- ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்தார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2023-ம் ஆண்டு நடந்த கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார். இதை அ.தி.மு.க. பொதுக்குழுவும் அங்கீகரித்தது.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.
அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றினார்.
மேலும் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்ற கோஷத்துடன் செயல்பட்டு வந்தார். ஆனால், அவரால் அ.தி.மு.க.வை மீட்க முடியவில்லை. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் இருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்தனர். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான தர்மர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அய்யப்பன் எம்.எல்.ஏ. மட்டும் இருந்தார்.
ஆதரவாளர்கள் அனைவரும் பிரிந்து சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார். இதையடுத்து அவர் என்ன முடிவு எடுப்பார் என்று கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். இதையடுத்து அவர் தி.மு.க. வில் சேரப்போவதாக தகவல் பரவத்தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நேற்று அண்ணா அறிவாலயத்துக்கு வரவில்லை.
மேலும் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவு 1 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது. அப்போது தி.மு.க.வில் இணையலாம் என்று அவர்கள் முடிவு எடுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வமும், பி.கே.சேகர்பாபுவும் அங்கிருந்து ஒரே காரில் ஏறி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றதும் அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்று அண்ணா அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார். பின்னர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் ஓ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டார்.
இதேபோல் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா சிறைக்கு சென்ற கால கட்டத்தில் 2 முறையும், ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு ஒரு முறையும் முதலமைச்சராக இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்தார். 2022-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் தனியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் எக்ஸ் வலைதளத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-
"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு ஏ-பார்ம், பி-பார்ம் கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா தி.மு.க.தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்.
எம்.ஜி.ஆர். மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள். பாவம் சும்மா விடுமா?
அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அ.தி.மு.க. வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள். பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்கள் நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே.
இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
- தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
குன்னூர்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் இணைந்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவும், அ.தி.மு.க. ஒன்றிணையவும் எத்தனையோ முறை கோரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியே காரணமாக அமைந்துவிட்டார்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க.வில் சேர்க்காததால், ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.
ஏனென்றால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம்.
அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டது. இணைப்புக்கான தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். இருப்பினும் இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.
தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மக்கள் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் சட்டசபை தேர்தலில் கட்டாயம் முதலமைச்சராக பதவியேற்றார். வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
- 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என்று கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
- மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த முறை தனியாக போட்டியிட்ட பா.ஜ.க இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். தேர்தல் தொடர்பாக எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
இதனிடையே, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தை மாதத்திற்குள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.

முன்னதாக தி.நகரில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
- முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
MLA பதவியை ராஜினாமா செய்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தி.மு.க.வில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
- என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?
- தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சசிகலா பேசியதாவது:-
என் மீதான வழக்கில் தீர்ப்பு வந்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை. அப்போது என் கவனம் எல்லாம் அரசை கலைக்க விட்டு விடக்கூடாது என்ற பொறுப்பு அதிகமாகிவிட்டது. ஒரு வாரம் அவகாசம் கேட்டும் கிடைக்கவில்லை. நாளைக்கு மாலை 6 மணிக்கு பெங்களூரு சிறைக்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
உடனே எம்.எல்.ஏ.க்களை கூட்டி ஒருவரை முதலமைச்சராக (எடப்பாடி பழனிசாமி) தேர்ந்தெடுத்தோம். நான் அவர் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை. அவர் உடனே என்ன சொன்னார்? நீங்களே எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கி கொடுங்க என்றார். அதையும் செய்தேன். பிறகு பெங்களூரு சென்றேன்.
சில மாதங்கள் சென்றது. நீங்கள் ஏன் பெங்களூருவில் இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் கேட்டனர். தமிழகத்துக்கு மாற்றிடலாம் என்றனர். அதை மறுத்து நான் பேசியது ஏதோ தெய்வாதீனமாக எனக்கு தோன்றியது போல இருக்கிறது. இல்லை என்றால் நான் இன்றைக்கு பேசிக்கொண்டு இருப்பேனா என்பதே கஷ்டம். அதுக்கு அப்புறம் திடீர்னு ஒரு பொதுக்குழு, என்னை நீக்கினார்கள்.
நான் ஒருவரை முதலமைச்சராக உட்கார வைத்து விட்டு சென்றேன். ஆனால் என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?
தினமும் எனக்கு பிரச்சனை. இதற்கிடையே எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது பரோலில் 15 நாட்கள் விடுப்பு கேட்டேன். 5 நாட்கள் மட்டும் கொடுங்கள் என இங்கே முதலமைச்சர் கூறினார். போயஸ் கார்டன் வீட்டில் தங்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை எனக்கு விதித்தனர். எனது கணவர் மறைந்த தகவல் வந்தது. அதற்கும் கேட்ட பரோல் கிடைக்கவில்லை.
ஆட்சியில் உட்கார வைத்த என்னை, ஈட்டி வைத்து குத்தியது போல செய்தனர். இதை எல்லாம் மீறி, நான் விடுதலை ஆகி சென்னைக்கு வந்தேன். காரில் கட்சி கொடி கட்டக்கூடாது. ஜெயலலிதா சமாதிக்கு போகக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர். தமிழக எல்லைக்கு வந்தவுடன் என்னை கைது செய்ய காத்திருந்தனர்.
இன்று கட்சி சரிந்து போய்விட்டது. எப்படியாவது ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்து இருந்தால் அப்பவே எதையும் செய்திருக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது. நம்மை கைவிடமாட்டார்கள். அதனால்தான் இந்த மண்ணில் இந்த முடிவை எடுப்பதற்காக வந்தேன். என் மனதில் உள்ளதை எல்லாம் உங்களிடம் சொல்லி விட்டேன். இனி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். புதிய களத்தை காணப்போகிறோம் என்றார்.
- ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தான் முதலமைச்சர் ஆக முன்வந்தது குறித்து சசிகலா பேசினார்.
சசிகலா பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டம்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். அவர் மீது குறைகூற ஒன்றும் இல்லை. அவர் ஒழுங்காகத்தான் செயல்பட்டார். சில நாட்களில் ஒரு கும்பல் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து என்னிடம், அவர் சரியில்லை என்றார்கள். அதற்கு நான். நன்றாகதானே செயல்படுகிறார் என்று கூறினேன்.
நீங்கள் இப்போதே பொதுச்செயலாளராக வேண்டும் எனவும். முதலமைச்சர் ஆக வேண்டும் எனவும் என்னிடம் கூறினார்கள். காலையிலும், மாலையிலும் நடந்தார்கள். பொதுக்குழுவை கூட்டி, என்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்து, அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
ஒரு நாள் ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அனைவரிடமும் கேட்டேன். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
அவர் நல்ல அதிகாரி இல்லை என்றும், ஜெயலலிதா இருக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டவர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
உடனே நான், ஜெயலலிதா சரியில்லை என ஒதுக்கியவரை எப்படி நியமிக்க முடியும்? இது எல்லாம் முதலமைச்சர் மீது ஒரு குறையா? என்று சொன்னேன். இதை இப்படியேவிட்டால் பிரச்சனை பெரிதாக ஆகும் என எண்ணி நான் முதலமைச்சர் ஆக முடிவுக்கு வந்தேன். அதற்குள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் என அமர்ந்துவிட்டார். அதை யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
- ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
- இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
படத்திற்கு கீழே இருந்த ரோஜாபூவை ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சையது கான் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டபடி இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது அதை பொருட்படுத்தாமல் இவர் ரோஜாபூவை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைப்போல ஒவ்வொன்றாக எடுத்து சுவைத்துக் கொண்டு இருந்தார். இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.






