என் மலர்

    நீங்கள் தேடியது "O Panneer Selvam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வந்தே பாரத் ரெயில்களை திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் என 2 புதிய ரெயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு காரியத்தை செய்யும்போது அதனால் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிவதற்காகவே ராகு-கேது பூஜையை மேற்கொண்டு விளக்கேற்றுவார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
    • சிக்கல்களில் இருந்து விடுபட்டு அரசியல் களத்தில் ஏறுமுகம் காண்பதற்கு வேண்டியே ஓ.பி.எஸ். பூஜை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சுப்ரீம் கோர்ட்டும், தலைமை தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் களத்தில் கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    இப்படி அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக ஓரம் கட்டப்பட்டிருக்கும் நிலையிலும் அவர் கட்சி கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்தியும் வருகிறார். இதற்கும் முடிவுகட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அ.தி.மு.க. கொடி மற்றும் பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஓ.பி.எஸ். பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ராகு-கேது பூஜை நடத்தினார். ஒரு காரியத்தை செய்யும்போது அதனால் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிவதற்காகவே ராகு-கேது பூஜையை மேற்கொண்டு விளக்கேற்றுவார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

    அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வம், அரசியல் களத்தில் தனக்கு ஏற்படும் தடைகளை தகர்ப்பதற்காகவே ராகு-கேது பூஜையை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையிலும் அவரால் மீண்டும் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்ள முடியாமலேயே போய்விட்டது.

    இதுபோன்ற சிக்கல்களில் இருந்து விடுபட்டு அரசியல் களத்தில் ஏறுமுகம் காண்பதற்கு வேண்டியே ஓ.பி.எஸ். பூஜை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடி தரப்பில், ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
    • மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.

    இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது எடப்பாடி தரப்பில், ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. உறுப்பினர் என கூறி வருகிறார். கட்சி லெட்டர் பேடை சட்ட விரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று வாதிடப்பட்டது.

    மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடி தலைமையில் இன்று நடைபெறுவது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல்.
    • இந்தியாவை பாரத் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக அறிவித்து ரத்தான புரட்சி பயணம் விரைவில் தொடங்க உள்ளது. சனாதனம் பற்றிய பிரச்சனைக்கு ஏற்கனவே முழுமையான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இறையாமையை போற்றும் ஒரே கட்சி தி.மு.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் சொல்வதையெல்லாம் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    எடப்பாடி தலைமையில் இன்று நடைபெறுவது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல். இந்தியாவை பாரத் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. முறையாக அறிவிக்கப்பட்ட பின்னர் அறிக்கை விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.வின் மீது மக்களுக்குள்ள வெறுப்பினை, அதிருப்தியினை திசை திருப்பும் வகையில், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.
    • இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'விடியலை நோக்கி' என்று மேடைக்கு மேடை தேர்தல் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று தமிழ்நாட்டு மக்களை 'விரக்தியை நோக்கி' அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என பலமுனைத் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தி.மு.க.வின் மீது மக்களுக்குள்ள வெறுப்பினை, அதிருப்தியினை திசை திருப்பும் வகையில், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி அரசாங்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், அதற்குரிய பலனை மக்கள் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், சனாதனம் குறித்து பேசுவது தேவையற்றது. சமதர்மம் குறித்து பேசும் தி.மு.க., முதலில் தி.மு.க.வில் சமதர்மம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப தி.மு.க. முயன்றாலும் அது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடாது. வருகின்ற தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வுவது நிச்சயம். அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அகற்றும் ஆயுதமாகும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
    • பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'பூரண மதுவிலக்கு' என தேர்தல் பிரசாரத்தின்போது மேடைக்கு மேடை முழங்கிய தி.மு.க., இன்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு, மது விற்பனையை அதிகப்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதன் காரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குடிப்பழக்கத்தைத் தவிர்த்து மனிதனாக எல்லோரும் வாழ நடவடிக்கை எடுக்காமல், குடிப்பழக்கத்தை அதிகப்படுத்தி மனித குலத்தை அழிக்கும் பணிகளை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருவதைப் பார்க்கும்போது, ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

    தி.மு.க. அரசின் பூரண மதுக்கொள்கை காரணமாக கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், மதுக்குடித்ததை தட்டிக் கேட்டதால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். மதுவால் சட்டம் ஒழுங்கை அரசே சீரழித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் பல டாப் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தன் நடிப்பினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ரஜினியை 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

    இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார்- காசோலைகளை பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினியை  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.
    • அ.தி.மு.க. கொடியில் சிறிய அளவில் மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அங்கீகரித்திருந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.

    இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முழுமையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்திருக்கிறது.

    இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர், கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர் என பதவிகளையும் கொடுத்து வந்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து செயல்படும் எண்ணத்திலேயே இருந்து வந்தனர்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அதேநேரத்தில் அவருடன் இருக்கும் ஆதரவாளர்கள் அனைவரையும் தன்பக்கம் இழுத்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் உள்ளார்.

    இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். தன்னுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் சென்று விட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஓ.பி.எஸ். உணர்ந்துள்ளார்.

    இதையடுத்து ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள அவர் காய் நகர்த்தி வருகிறார். இப்படியே தனது நிலைப்பாட்டை கொண்டு சென்றால் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க. பக்கம் சென்று விடுவார்கள் என்கிற அச்சமும் ஓ.பி.எஸ்.சுக்கு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆதரவாளர்களை தன்வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்காக புதிய கட்சியை தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. கொடியில் சிறிய அளவில் மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க திட்டமிட்டு உள்ள ஓ.பன்னீர் செல்வம் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. அல்லது புரட்சி தலைவி அ.தி.மு.க. என 2 பெயர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:-

    எங்கள் அணியில் ஏற்கனவே 82 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கிளை கழக நிர்வாகிகளும் செயல்பட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருப்பது போன்று ஒன்றிய அளவிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசறை, பேரவைக்கும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களை எந்த சூழ்நிலையிலும் கைவிட்டு விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார். இதனாலேயே விரைவில் புதிய கட்சியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். புரட்சி தலைவி, புரட்சி தலைவர் ஆகிய வார்த்தைகள் கட்சியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

    அதேநேரத்தில் 'அம்மா' என்கிற பெயருடன் புதிய கட்சியை தொடங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஓ.பி.எஸ். தொடங்க உள்ள புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. என்கிற பெயரையே சூட்டுவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

    அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைக்கும். அதற்கான வழியை டெல்லி பா.ஜனதா தலைவர்கள் நிச்சயம் செய்து தருவார்கள் என மலைபோல நம்பி இருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்றாகி விட்டது.

    அதேநேரத்தில் கோர்ட்டு மூலமாக ஏதாவது விடிவு காலம் பிறக்கும் என்றும் நம்பி இருந்தோம். அந்த வகையிலும் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இதனால் எங்கள் பலத்தை காட்ட தனிக்கட்சி ஒன்றுதான் தீர்வு என்றாகி விட்டது.

    புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை விரைவில் பெரிய கூட்டத்தை கூட்டி அறிவிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

    அதற்கான இடம், தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். தனிக்கட்சியை தொடங்கிய பின்னர் பாராளுமன்ற தேர்தலுக்குள் பெரிய பொதுக்கூட்டத்தையோ அல்லது மாநாட்டையோ நடத்தவும் முடிவு செய்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்குவோம். அப்போது எங்களது வாக்கு வங்கி என்ன என்பது தெரிய வரும்.

    தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.சுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன? என்பதை கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவோம். இது அவரது எதிர்கால வெற்றிக்கு வழிவகுப்பதாக அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளரின் நடவடிக்கைகள் பிடிக்காமலேயே அ.தி.மு.க.வினர் எதிரணியில் இருந்து வருகிறார்கள்.
    • மாவட்ட செயலாளர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட பழைய அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசி அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தனக்குள்ள செல்வாக்கு என்ன? என்பதை நிரூபிப்பதற்காக மதுரையில் நடத்திய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அ.தி.மு.க. மாநாடு வெற்றி மாநாடாக அமைந்திருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

    அ.தி.மு.க. மாநாடு வெற்றிகரமாக அமைந்ததில் மிகுந்த உற்சாகத்தோடு காணப்படும் எடப்பாடி பழனிசாமி கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளார். இதற்காக பிரிந்து சென்றிருக்கும் அ.தி.மு.க.வினரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் மாவட்ட செயலாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை மையமாக வைத்து பிரிந்து சென்றிருப்பவர்களுடன் பேசி அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் முகம் கோணாமல் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எடப்பாடி பழனிசாமி நடத்திய மாநாடு வெற்றிகரமாக அமைந்திருப்பதை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளார்கள் பலர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளரின் நடவடிக்கைகள் பிடிக்காமலேயே அ.தி.மு.க.வினர் எதிரணியில் இருந்து வருகிறார்கள். அதுபோன்று இருப்பவர்களை மாவட்டச் செயலாளர்கள் சந்தித்து பேசி ஒருங்கிணைத்து செயல்பட அழைப்பு விடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி மாவட்ட செயலாளர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட பழைய அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசி அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார்கள் என்றும் மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றார்.

    தங்க தமிழ்ச்செல்வத்தின் மகள் டாக்டர் சாந்திக்கும், சுப்பிரமணியனுக்கும் வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமண அழைப்பிதழை வழங்க தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அவரை ஓ.பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்றார்.

    தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார். அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் மகள் திருமணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்க தமிழ்ச்செல்வன் சென்றது இரு கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print