என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneer Selvam"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    • ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வில் தன்னை சேர்க்க மறுப்பதால் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா? என்று ஆலோசித்ததாக தெரிகிறது.

    இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு இப்போது டெல்லி சென்றுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

    எந்த கூட்டணியில் சேருவது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 15-ந்தேதியன்று நடத்த இருந்த மாவட்டச்செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை தற்போது ஒத்திவைத்துள்ளார்.

    இந்த கூட்டத்தை அவர் டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர். நினைவு நாளில் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
    • ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க.வும் தயாராகி உள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

    இதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

    ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. டெல்லி சென்று திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருந்தார். இது போன்ற பரபரப்பான சூழலில் தான் சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அது பற்றி யாரும் பேசவும் இல்லை.

    அதே நேரத்தில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சிலர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய முடிவை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது.

    இவர்களில் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சி நடத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சியை தொடங்காமலேயே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்பதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற தனி அமைப்பை அவர் நடத்தி வருகிறார். இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உரிமை மீட்பு குழுவை உரிமை மீட்பு கழகம் என ஓபிஎஸ் மாற்றியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் அவரை சேர்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு பொதுக்குழுவில் கதவடைக்கும் சூழலை ஏற்படுத்தி இருப்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க.வில் இணையவே முடியாத சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை புதுக்கட்சியாக மாற்றலாமா? என்பது பற்றியும் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதுபோன்ற நிலை ஏற்பட்டால் புதுக்கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஓ. பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிச்சயம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்படாவிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
    • தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை.

    சென்னை:

    மறைந்த ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.

    * டெல்லிக்கு சென்று மரியாதை நிமித்தமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என நோக்கத்தில் தான் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என அமித்ஷாவிடம் கூறினேன்.

    * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.

    * தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை என்றார். 

    • யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.
    • எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.

    * சாதாரண பெண்ணுக்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    * ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் நடந்த கொலைக்காக சி.பி.ஐ. விசாரணை கேட்காதது ஏன்?

    * பா.ஜ.க. என்னை அழைத்து கூட்டணிக்காக பேச வேண்டும் என கூறினர்.

    * என்னை அழைத்து அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என பா.ஜ.க. பேசியது.

    * எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றார். 

    • அ.தி.மு.க. வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்னிடம் பேசியிருப்பார்.
    • சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் இருந்தபோதும் என்னிடம் பேச அவர் தயாராக இல்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:-

    * அ.தி.மு.க.விற்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

    * 45 வயதிற்குட்பட்டவர்கள் மட்டும் தான் பூத் கமிட்டியில் இருக்க வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    * தன்னை சுற்றி இருப்பவர்களை பலவீனமடைய செய்யும் போது அவர்களும் பலவீனமடைகிறார்கள்.

    * நிர்வாகிகளை நீக்கி கொண்டிருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்.

    * அ.தி.மு.க. வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்னிடம் பேசியிருப்பார்.

    * சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் இருந்தபோதும் என்னிடம் பேச அவர் தயாராக இல்லை.

    * அ.தி.மு.க.வின் பலம் தெரியாமல் கொடி பறக்கிறது என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    * நாமக்கல்லில் த.வெ.க. கொடி பறந்தபோது பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் என்று இ.பி.எஸ். பேசினார்.

    * ஒருவர் முன்னேற வேண்டுமென்றால் தன் காலிலே சுயமாக நடக்க வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது என்றார். 

    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா?
    • கொடநாடு விவகாரத்தை வைத்து யார் தி.மு.க.வின் பி டீம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 2009-ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஒதுக்கப்பட்டார்.

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைப்பட்டால் தான் ஆட்சி அமைக்க முடியும் என அ.தி.மு.க. நன்மைக்காக பேசினேன்.

    * எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி இருக்க முடியாது.

    * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

    * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர்.

    * கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை.

    * கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா?

    * கொடநாடு விவகாரத்தை வைத்து யார் தி.மு.க.வின் பி டீம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    * எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    * பாராளுமன்ற தேர்தலில் பணம் செல்வு செய்தால் போதும் என சீட் வழங்கியவர்.

    * எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு வழிவகை செய்த சசிகலாவை கொச்சையாக பேசினார்.

    * ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.

    * நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பா.ஜ.க.விற்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    • தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-

    * தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    * வேறொரு கட்சியின் சொல்பேச்சை கேட்டு அ.தி.மு.க. வழி நடத்தப்படுகிறது.

    * பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக அ.தி.மு.க மாறிவிட்டது.

    * இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார். 

    • 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

    அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

    அ.தி.மு.க.வில் பயணித்து வந்த மனோஜ் பாண்டியன் 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு, 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இதன்பின், அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.

    இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.

    இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செங்கோட்டையன் மதுரையில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் சென்றார்.

    அங்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவை சந்தித்து பேசினர்.

    செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து, கோபியில் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது குறித்து நாளை (அதாவது இன்று) விளக்கம் அளித்து பேச உள்ளேன். கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு இதற்கான விளக்கத்தை அளிப்பேன்,' என்றார்.

    இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.விலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிக தண்ணீர் காரணமாகவும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    கம்பம் பகுதியில் நெல் வயல்களில் மழைநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வாங்கி வைத்திருந்த ஆடுகள், பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    திராட்சை செடிகளும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதால் வாழை பயிரிட்டிருந்த வயல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    நேற்று மழை சற்று குறைந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

    பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 11வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தடை நீடிக்கிறது. இதேபோல் மேகமலை மற்றும் சுருளி அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் ஏராளமானோர் வைகை அணைக்கு குவிந்தனர். அங்கு 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் அதனை கண்டு ரசித்தனர்.

    மழை வெள்ளத்தால் பயிர்கள், ஆடு, கோழிகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில் இதுகுறித்து பார்வையிட்டு கணக்கீடு செய்யும் பணியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புகளால் சேதமடைந்த மக்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    உப்புக்கோட்டை பகுதியில் பட்டாளத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டுள்ளார். அங்குள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத் உள்பட கட்சி நிர்வாகிகள் சென்றனர். 

    • எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.
    • அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை உள்ளது. இந்த சிலையை அ.தி.மு.க.வினர் பராமரித்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலையின் முன்பு, "சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி அ.தி.மு.க." என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    அந்த போர்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வின் 54-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க.வினரை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அப்போது சிலையின் முன் பகுதியில் போர்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.

    இதனால் அங்கிருந்த அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.

    இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்ட சம்பவத்தால் நாகர்கோவில் வடசேரியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தேவாரத்தில் இருந்து போடிவரை விரிவாக்கம் செய்யப்பட்ட 18ம் கால்வாய் சேதமடைந்து 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.
    • இலவசம் பஞ்சு மெத்தை, தலையணைகள் ஆகியவற்றிற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் வெவ்வேறு கருத்துகள் பலரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசியல் தேவையில்லை என்பதே எனது கருத்து. அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷனின் அறிக்கை அளிக்கும் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே முடிவில் உண்மை வெளிவரும் என நம்புவோம்

    தேவாரத்தில் இருந்து போடிவரை விரிவாக்கம் செய்யப்பட்ட 18ம் கால்வாய் சேதமடைந்து 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மூலம் கடைமடை வரை நீர் வந்து விவசாயிகள் பயனடைந்தனர். தற்போது சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இலவசம் பஞ்சு மெத்தை, தலையணைகள் ஆகியவற்றிற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். போடியில் 48 பஞ்சு பேட்டைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 8 மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பியுள்ளவாகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் என்றார்.

    ×