என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியூஷ் கோயல்"

    • இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
    • வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது என்றார்.

    பெர்லின்:

    இந்தியா, அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது:

    இந்தியா அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது.

    வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது.

    வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, உடனடி வர்த்தக இலக்குகளை அடைவதற்கான அழுத்தத்தால் அல்ல, நீண்டகால தொலைநோக்கு பார்வையைக் கொண்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு உரியவை.

    இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பமென நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது

    ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.

    இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.

    வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.  

    இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

    அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.

    இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.

    இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
    • இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையான சூழ்நிலையில் முன்னேறி வருகின்றன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க அந்தந்த நாட்டின் வர்த்தக மந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

    மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

    இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியில் முடிவடைய இருநாடுகளும் முன்வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, டிரம்பின் நேர்மறையாக மதிப்பீட்டை அன்புடன் வரவேற்பதாக பதில் அளித்திருந்தார்.

    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

    இருநாடுகளுக்கும் சாதகமான சூழலில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும்.
    • சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும் என்றார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக வரியும், அபராத வரியும் விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் பங்கேற்ற மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:

    இந்தியா யாருக்கும் அடிபணியாது. கொரோனா நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி ஐ.டி. துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.

    சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும். உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும். இன்று இந்தியா வலுவானது, அதிக மரியாதைக்குரியது. நாடு புதிய வர்த்தக ஏற்பாடுகளை தொடர்ந்து உருவாக்கும்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் உள்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. வர்த்தக ஒப்பந்தங்களையும் இறுதி செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும்.
    • இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்தார். வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார். இந்தக் காலக்கெடு நெருங்குவதால் பேச்சுவார்த்தை அதற்குள் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:

    வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் நலனை உறுதிசெய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    நாட்டின் நலனே எப்போதும் முக்கியம். அதனை மனதில் வைத்துக் கொண்டு, சிறந்த ஒப்பந்தத்தை தயார் செய்தால் வளர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா தயாராக உள்ளது.

    பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும். குறிப்பிட்ட காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம்.

    நன்கு முதிர்ச்சி அடைந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நாட்டின் நலன் உறுதி செய்யப்படும்போது மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

    • மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மக்கள் மீது பழியைப் போட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய பியூஷ் கோயல், "140 கோடி இந்தியர்கள் தேசப் பற்றை உயரிய கடமையாக கருதும் வரை, பஹல்காம் தாக்குதல் போன்ற நாட்டை உலுக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்" என்று தெரிவித்தார்.

    மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அமைச்சர் மக்கள் மீது பழியை போட்டு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், காஷ்மீரில் திட்டமிட்டபடி ஜூலை மாதம் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய மக்கள் விரைவில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லுவார்கள். அமர்நாத் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு மாதமும் ரேசன் மூலம் விநியோக்க 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை.
    • உத்தரபிரதேசம், பீகாரில் உணவு தானிய உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    உலகம் முழுவதும் இன்று பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உணவு தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. சரியான நேரத்தில் மழை பெய்யாத நிலையில் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 80 கோடி மக்கள் அரிசி, கோதுமையை பெற்று வருகிறார்கள். அந்தியோதயா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படுகிறது.

    கூடுதல் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாதமும் 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை. ஒரு வருடத்தில் தேவை 108 லட்சம் டன்களாகிறது. ஏழை எளிய மக்கள் உணவு பொருட்களை இலவசமாகப் பெறுகிறார்கள். அரிசியின் விலை சீராக உள்ளது, எனவே உணவு தானிய ஏற்றுமதியை அரசு நிறுத்தவில்லை. செப்டம்பர் வரை, முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியாவில் 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைய உள்ளன.
    • இதில் முதல் ஜவுளி பூங்கா என்ற பெருமையை விருதுநகர் ஜவுளி பூங்கா பெற்றுள்ளது.

    சென்னை:

    பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) தமிழகத்தின் விருதுநகரில் அமைய உள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும் என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடக்க விழாவில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:

    இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மெகா ஜவுளி பூங்காவை பெற இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக ஜவுளி பூங்காவை தமிழகம் பெற்றுள்ளது.

    விவசாயத்துக்கு அடுத்தபடியாக 4 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறைமுகமாகவும் ஜவுளித்துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜவுளிக்கான நூலை உருவாக்குவது, ஆடையாக உருவாக்குவது, வடிவமைப்பது, ஏற்றுமதி செய்வது என ஜவுளித்துறை பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்கின்றன. அதுவும் வெவ்வேறு இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே இடத்தில் கொண்டு வரும்போது ஆடையை உருவாக்குவதற்கான செலவு வெகுவாகக் குறையும். அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

    இதனை கருத்தில் கொண்டுதான் இதுபோன்ற பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 7 பூங்காக்கள் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி முதலீடுகளை பெறமுடியும். இதுதவிர 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஜவுளி பூங்கா அமைய இருப்பது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

    அதேபோன்று, இந்த ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியையும், என்னையும் அழைப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.
    • விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், "பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத் தொடங்கியவுடன் விலை குறையும். அதேசமயம் கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது பெரிய வித்தியாசம் இல்லை. உருளைக்கிழக்கு மற்றும் வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது" என்றார்.

    • நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
    • இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் கடலை பருப்பு முதன்மையானது.

    மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல், நுகர்வோருக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் மத்திய அரசின் முயற்சியாக 'பாரத் தால்' (Bharat Dal) என்ற பெயரில் மானிய விலையில் கடலை பருப்பை, ஒரு கிலோ பாக்கெட் ரூ.60க்கும், 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ.55 எனும் விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.

    தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (NAFED) சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பருப்பு தற்போது டெல்லி-தேசிய தலைநகர சாலையில் (National Capital Road) விற்கப்படுகிறது.

    இது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF), கேந்திரிய பந்தர் மற்றும் மதர் டெய்ரியின் 'சஃபல்' ஆகிய சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும்.

    இந்த நடவடிக்கையானது, உயர்ந்து வரும் விலைவாசியினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசாங்கத்திடம் உள்ள பருப்பு வகைகளின் கையிருப்பிலிருந்து நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

    NAFED மற்றும் டெல்லி-NCRல் உள்ள அதன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும், NCCF, கேந்திரிய பந்தர் மற்றும் சஃபல் ஆகியவற்றின் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் கடலை பருப்பு கொள்முதல் செய்து, பேக்கேஜிங் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

    இந்த ஏற்பாட்டின் கீழ், கடலை பருப்பு, மாநில அரசுகளுக்கு அவர்களின் நலத்திட்டங்கள், காவல்துறை, சிறைகள் மற்றும் அவர்களின் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்கவும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் கடலை பருப்பு முதன்மையானது. இதை நாடு முழுவதும் பல வடிவங்களில் மக்கள் சாப்பிடுகின்றனர். ஊற வைத்தும், வறுத்தும் பல வகைகளில் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்பில் மிக முக்கியமான பொருளாகவும் இது உபயோகிக்கப்படுகிறது.

    கடலை பருப்பில் மனித உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்த சோகை மற்றும் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தவும், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும், மன ஆரோக்கியத்திற்கும் தேவையான நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி, செலினியம், பீட்டா கரோட்டின் மற்றும் கோலின் ஆகியவை அதிகளவில் நிறைந்திருப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×