என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trade talks"

    • இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
    • வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது என்றார்.

    பெர்லின்:

    இந்தியா, அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது:

    இந்தியா அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது.

    வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது.

    வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, உடனடி வர்த்தக இலக்குகளை அடைவதற்கான அழுத்தத்தால் அல்ல, நீண்டகால தொலைநோக்கு பார்வையைக் கொண்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு உரியவை.

    இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பமென நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    • இதுவரை 5 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்தியா- அமெரிக்கா இடையில் பரிந்துரைக்கப்பட்ட இருதரப்பு வரத்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இருதரப்பு அதிகாரிகளுக்கும் அக்டோபர்- நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தத்தின் முதற்பகுதியை நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் 6ஆவது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்தியாவின் மூத்த அதிகாரிகள் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.

    அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி 3 பேர் கொண்ட குழு வாஷிங்டன் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    கடந்த மாதம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு நியூயார்க் சென்றிருந்தது.

    • இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
    • இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.

    இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

    ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

    • தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி நாளை டெல்லி வருகிறார்.
    • Fast-track வர்த்தக பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெற இருக்கிறது.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், வெள்ளை மாளிகைக்கான வர்த்தக ஆலோசகர் பீடடர் நவோராவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்தியாவை வரி மகாராஜா எனக் கூறியிருந்தார்.

    இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருக்கிறேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இருதரப்பிலும் இருந்து பேச்சுவார்த்தைக்கான பணிகளி வளர்ந்து கொண்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், அது அவர்களுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் நாளை இந்தியா- அமெரிக்கா இடையிலான் Fast-Track பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதை இந்தியாவுக்கான பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலாளருமான ராஜேஷ் அகர்வால் "இந்தியா- அமெரிக்கா fast-track வர்த்த பேச்சுவார்தை நடத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.

    தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் நாளை ஒருநாள் பயணமாக வர்த்தக ஒப்பந்த ஆலோசனைக்காக இந்தியா வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

    சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகள் விதித்தன. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். அப்போது, இருவரும் வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1-ந் தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டனர். இது 90 நாட்களுக்கு நீடிக்கும். இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இப்போதும் நேற்று முன்தினம் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவினர் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், வர்த்தக மந்திரி ஸ்டீவன் மனுசின் தலைமையில் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இதையொட்டி டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது நாடு பெரிதான விதத்தில் செயல்படுகிறது” என குறிப்பிட்டார். #DonaldTrump
    சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. #China #US
    பீஜிங்:

    உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது.

    கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இரு தரப்பு வர்த்தக போரை 2019 மார்ச்-1 வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில், சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. இதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சீனாவுக்கு செல்கிறார்கள்.

    இரு நாட்டு துணை நிதி மந்திரிகளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#China #US
    ×