வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இந்திய குழு அமெரிக்கா செல்கிறது

இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இதுவரை 5 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இந்திய குழு அமெரிக்கா செல்கிறது
Published on

இந்தியா- அமெரிக்கா இடையில் பரிந்துரைக்கப்பட்ட இருதரப்பு வரத்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இருதரப்பு அதிகாரிகளுக்கும் அக்டோபர்- நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தத்தின் முதற்பகுதியை நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் 6ஆவது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்தியாவின் மூத்த அதிகாரிகள் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.

அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி 3 பேர் கொண்ட குழு வாஷிங்டன் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

கடந்த மாதம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு நியூயார்க் சென்றிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com