என் மலர்
நீங்கள் தேடியது "Trade Agreement"
- இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
- மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.
இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் கலந்துகொண்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மூலம் தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
மேலும் கம்போடியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
- ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை.
- பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது.
இந்தியா- அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் இருநாட்டு தலைவர்களும் அவரவர் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் இருநாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்டத்திற்கான 5 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா- அமெரிக்கா, இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் மிக அருகில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய தீர்மானத்திற்காக மிகப்பெரிய அளவில் வேறுபாடு இல்லை. ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் "ஒப்பந்தத்திற்கான அவசரம் காட்டமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
- இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
இந்திய பொருட்களுக்கு கடந்த மாதம் 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.
ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நேற்று (செவ்வாய்க்கிழமை) பிராடன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு டெல்லி விரைந்து இந்திய குழுவுடன் பேச்சுவராத்தை நடத்தியது.
இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
"இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிராடன் லிஞ்ச் மற்றும் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் இடையே நடந்த விவாதங்கள் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது நடைபெறவில்லை, மாறாக ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே நடந்தன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
- இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
- லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும் என தெரிவித்தார்.
இங்கிலாந்து உடனான வரி குறைப்பின் எதிரொலியால் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?
ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார் போன்ற கார்களின் விலை குறையும். பிரிட்டனை சேர்ந்த மதுபானங்கள் குறைவான விலைக்கு கிடைக்கும்.
மருந்துகள் இந்திய சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைவதால் அவற்றின் விலையும் குறையும்.
காஸ்மெடிக்ஸ் , சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றின் விலை குறையும். மருத்துவ கருவிகளின் விலையும் குறைகிறது.
பிரிட்டனில் தயாராகும் குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள் மற்றும் கார்கள் ஆகியவை இந்தியர்களுக்கு கிடைப்பது எளிதாகும். மேலும் மின்சார வாகனங்கள் மீதான வரி குறையும்.
- இந்திய நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும்.
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே முறையான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் வழிவகுக்கிறது. இதனால் இந்திய நுகர்வோருக்குத் தரமான பொருட்களை மலிவான விலையில் கிடைக்கும் என்றும், இந்தியாவில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய யோகா ஆசிரியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் மூலம் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி விசா மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு முக்கியமான தருணம் இதுவாகும்.
இந்த ஒப்பந்தம் நமது வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிணைப்பில் திறன்களை மகத்தான முறையில் அதிகரிப்பதுடன் இருதரப்பு வணிகங்களையும் வலுப்படுத்தும். இந்தியாவில் விரைவில் உங்களை வரவேற்கும் தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
- செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.
- ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அவிநாசி :
திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகத்தில் இளம் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்து வர்த்தக வாய்ப்புகளை அதிகம் ஈர்க்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர் துணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் சந்திப்பு கூட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் பேசியதாவது:- செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. இதுதொடர்பாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அதில் உலகளாவிய தேவை மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிந்து அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.
அத்திட்டத்தின் இரண்டாம் பகுதி ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறு, குறு உற்பத்தியாளர்களும் பயன் பெறுவர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் கனடா மற்றும் பிரிட்டன் நாட்டுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும்.
இதன் மூலம் வர்த்தகம் நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். அதற்கேற்ப நாம் நம்மை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்.
- ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி இரு நாடுகள் சார்பிலும் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா தரப்பில் இருந்தே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

திடீரென பேச்சுவார்த்தை நிறுத்திக் கொள்வது பற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வர இருப்பதை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே கிட்டத்தட்ட ஆறு முறைக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.
- இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டன. சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்திய பயணத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.
மேலும் 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






