என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "India"
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
சான்டியாகோ:
10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி, கடந்த முறை (2022) 4-வது இடம் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனி, பெல்ஜியம், கனடா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவுடன் மோதுகிறது. அதிகபட்சமாக 2013-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் நோக்குடன் பிரீத்தி தலைமையில் களம் இறங்குகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசிய ஜூனியர் கோப்பையை வென்று இருக்கும் இந்திய அணி, கனடாவுக்கு எதிரான முந்தைய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருப்பதால் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் பிரீத்தி கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் இந்த போட்டியில் மிகுந்த உறுதியுடனும், கவனத்துடனும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த போட்டிக்காக நாங்கள் தீவிரமாக தயாராகி இருக்கிறோம். அதனை களத்தில் செயல்திறனாக மாற்றுவதில் ஆர்வமாக உள்ளோம். தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக நாங்கள் ஆடுவது இந்த போட்டி தொடரில் உத்வேகத்தை உருவாக்க நல்ல வாய்ப்பாகும்' என்றார்.
இந்திய பயிற்சியாளர் துஷர் கண்டேகர் கூறுகையில், 'உலகக் கோப்பை போட்டிக்காக எங்களது வீராங்கனைகள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளனர். சவாலை எதிர்கொள்ள மனதளவிலும் நன்றாக தயாராகி உள்ளனர். ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்கிறோம். வெற்றியோடு தொடங்குவதை எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.
இந்திய அணி வருமாறு:- குஷ்பூ, மாதுரி கின்டோ, நீலம், பிரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி, மஹிமா டேட், மஞ்சு கோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பனோ, சுஜாதா குஜூர், ருதுஜா பிசல், சாக்ஷி ராணா, மும்தாஸ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா தோப்போ, சுனிலிதா தோப்போ.
இந்திய அணிக்குரிய இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
- ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
- ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.
இரு அணிகளிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். திலக் வர்மா சிறப்பாக ஆடி 31 ரன்களை குவித்தார்.
போட்டி முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன.
- இந்த தொடரின் முதல் இரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கவுகாத்தி:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
- இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் காண்கின்றனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்குகின்றனர்.
- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும்.
- பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும்.
திருப்பூர்:
புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும். அந்த கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும். 5 மாநில சட்டமன்ற தேர்தல் வந்த உடன் இந்தியா கூட்டணியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை.
5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா 3 மாநிலங்களை கைப்பற்றும். ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது தெரியாது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று அவர்களால் சொல்ல முடியாது.
பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்திலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா. கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியை தவிர நல்ல தலைவரை இந்தியா கூட்டணி மற்றும் எந்த கட்சியாலும் காட்ட முடியாது. தமிழகத்தில் யார் பிரதமர் என்று வாக்கு கேட்பார்கள் என்பதும் கேள்விக்குறிதான். இதுவே பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்க காரணமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
- பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.
இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.
இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியதாவது:-
உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது.
உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை.
ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.
நான் ஆடுகளம் அருகில் செல்வதில்லை. ஏனென்றால் நீங்கள் பந்து வீசும் போதுதான் அது எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எளிமையாக வைத்திருப்பது நல்லது. உங்களை நிதானமாக வைத்திருங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
- இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. 209 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொர்ந்து, திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சூர்யகுமார் 80 ரன்களை குவித்து அவுட்டானார்.
18 ஓவர் முடிவில், ரங்கு சிங்- அசார் பட்டேல் ஜோடி களத்தில் இருந்தது. இதில், ரங்கு சிங் 21 ரன்களும், அசார் பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர். ரவி பிஷ்னோய் ரன் அவுட் ஆனார்.
போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் மற்றும் ஜாசன், சியான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.
- ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
- இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் இங்லிஸ் 110 ரன்களை குவித்தார். இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
- பந்துவீச்சில் அர்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். இவர் தவிர ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்று உள்ளனர்.
- கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
- 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டராக ஜொலித்தவருமான கபில் தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் மனமுடைந்து விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்தது.
இன்றைய கிரிக்கெட் வீரர்கள், மன்னிக்கவும் அவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். விளையாடும் முறை மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ளாததை கற்றுக் கொள்வோம்.
ஒருநாள் போட்டியில் நான் ஒருமுறை பந்து வீசவில்லை. இதை நினைவில் வைத்து இருந்தால் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க மாட்டேன்.
நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இளைஞர்கள் நம்மை விட சிறந்தவர்கள். அவர்களை வழி நடத்த எங்களுக்கு அனுபவம் உள்ளது. அவர்களை சிறப்பாக வழிநடத்த இயலும்.
பள்ளி நாட்களில் இங்கு விளையாடும் போதெல்லாம் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இருக்கிறது. இதனால் சென்னை எனக்கு பிடித்த கிரிக்கெட் மைதானமாகும்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.
கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது. கபில் தேவ், டோனி வரிசையில் ரோகித்சர்மாவால் இணைய முடியவில்லை.
அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை இழந்தது. உலக கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கபில் தேவ், டோனிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.