என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " India"

    • ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.
    • வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும், ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    • டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக முன்னேறி வரும் ஆசிய நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர்களில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறிய போதிலும், இந்தத் தொடரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. இந்த நிலையில், வருகிற ஜூன் மாத வாக்கில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

     


    தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகள் மோதும் ஒற்றை டெஸ்ட் போட்டி ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி வர நடைபெறுகிறது. இந்தப் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி ஜூன் 14-ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 17-ஆம் தேதி லக்னோவிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூன் 20-ஆம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 

    • இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ரோஸ்டன் சேஸ் 40 ரன்னிலும், ஷாய் ஹோப் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 27 ரன்னில் அவுட்டானார்.

    5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோமேன் பாவல் (34 ரன்), ஜேசன் ஹோல்டர் (37 ரன்) சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 76 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், அரையிறுதியில் நுழைந்துள்ள இந்திய அணி, வரும் 5-ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி நடத்தியுள்ள கொடூரமான மற்றும் ஆணவம் நிறைந்த தாக்குதல்கள் உலக அமைதிக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும்.
    • இந்தியா உடனடியாக இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், ஒரு நாட்டின் தலைவரை இலக்கு வைத்த தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்

    அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா சையது அலி கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது இந்த மறைவிற்கு இந்திய சமூக ஜனநாயகக் கட்சி நெல்லை முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    "ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி நடத்தியுள்ள கொடூரமான மற்றும் ஆணவம் நிறைந்த தாக்குதல்கள் உலக அமைதிக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த நவீன ஈரானின் அரசியல் மற்றும் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஈரான் நாட்டின் உயர் தலைவரான ஆயத்துல்லா சையது அலி கொமேனி அவர்களின் மறைவை நினைவுகூரும் இவ்வேளையில், ஈரான் நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஒரு குடியரசு நாட்டின் உயர் தலைவரை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய கொலை முயற்சிகள் சர்வதேச அரசியலில் எக்காலத்திலும் ஏற்புடையதல்ல. எந்த வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் மேற்கு ஆசியாவின் பிராந்திய அமைதியைக் குலைப்பதோடு, ஒரு நாட்டின் இறையாண்மை, எல்லை மரியாதை மற்றும் சர்வதேச சட்ட விதிகளை அப்பட்டமாக மீறும் ஆபத்தான செயலாகும். இவை மனிதாபிமானத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

    குறிப்பாக, இத்தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் – குறிப்பாக பிஞ்சுப் பள்ளிச் சிறுமிகள் உட்பட குழந்தைகள் – மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளின் உயிரிழப்பு போர் மற்றும் மோதல்களின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்தும் மிகப் பெரிய சாட்சியாகும். இத்தகைய மனித உரிமை மீறல்கள் மனிதகுலத்திற்கே அவமானம்.

    பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ள ஈரான் நாட்டு மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் பொறுப்புடன் தலையிட்டு, போர் வன்முறையைத் தடுத்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பரஸ்பர மரியாதை, அப்பாவி உயிர்களைப் பாதுகாத்தல் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.

    ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா உடனடியாக இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், ஒரு நாட்டின் தலைவரை இலக்கு வைத்த தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

    • உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.
    • இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.

    இருப்பினும், உள்நாட்டு நிலக்கரியின் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டன் நிலக்கரியை இந்திய மின்உற்பத்தி ஆலைகள் பயன்படுத்தின.

    ஆனால், நடப்பாண்டில் இதில் 1 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத 2 மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது. 30 சதவீத நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படுகிறது.

    பொதுத்துறை நிறுவனமான கோல் இண்டியா மற்றும் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளன.

    மேலும், நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் அருகே புதிதாக நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக நிலக்கரி வர்த்தகர் ராஜீவ் ராம்நாராயணன் என்பவர் தெரிவித்தார்.

    இந்த காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    • வரும் 1-ந் தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
    • இரு அணிகளும் தற்போது 2 புள்ளிகளை பெற்றுள்ளன.

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

    வரும் 1-ம் தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    ஒருவேளை இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தற்போது 2 புள்ளிகளை பெற்றுள்ளன.

    போட்டி ரத்தானால், தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் ரன் ரேட்டில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இருப்பினும் கொல்கத்தாவில் போட்டி நடைபெறும் நாளில் மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இந்திய தரப்பில் கவூர், பிரதிகா ராவல் அரை சதம் விளாசினர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 78 ரன்கள் குவித்தது. மந்தனா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிகா ராவல் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 52 ரன்கள் இருக்கும் போது தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11, தீப்தி சர்மா 1, அமன்ஜோத் கவுர் 13 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் கவூர் - ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா 19 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காஷ்வி கௌதம் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கவூர் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 54 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருகிறது.
    • ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் உரையில் குறுக்கிட்டனர்

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    நேற்று 100 நிமிடங்களுக்கு மேல் ஆற்றிய யூனியன் உரையில், மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் போரை அவர் நிறுத்தியாக தெரிவித்தார்.

    "நான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில், எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்... இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதலும் அடங்கும், அது ஒருவேளை அணு ஆயுதப் போராகக்கூட மாறியிருக்கக்கூடும். எனது தலையீடு மட்டும் இல்லையென்றால், 3.5 கோடி (35 மில்லியன்) மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.' என தெரிவித்தார்.  


    100வது முறை...

    கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தியா-பாகிஸ்தான் போரை தான்தான் முடிவுக்கு கொண்டுவந்ததாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். தற்போது வரை சுமார் 100 முறை இதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்தியா தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, கம்போடியா - தாய்லாந்து, கொசோவோ -செர்பியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோப்பியா, ஆர்மீனியா - அஜர்பைஜான், காங்கோ - ருவாண்டா, மற்றும் காசா போர் ஆகியவற்றையும் நிறுத்தியதாக கூறினார். தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

    ஒரு கட்டத்தில், சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் உரையில் குறுக்கிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர், 'இது வேடிக்கையாக இல்லையா? இவர்கள் நோயுற்ற (மனநிலை பாதிக்கப்பட்ட) மனிதர்கள்' என்று கூறினார்

    • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும்.
    • பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள்

    இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் பிரதமரின் உயிரை காப்பாற்றினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    அமெரிக்காவில் மாநில ஒன்றிய உரையின் போது பேசிய அமெரிக்க டிரம்ப், "அதிபராக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும்.

    போரை நிறுத்த நான் ஈடுபடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்.

    போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார்.

    எனது நிர்வாகம் 9-வது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், அன்றைய தினத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், உயிருடன் உள்ள அல்லது இறந்த ஒவ்வொரு பணயக்கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்து வருகிறோம்.

    உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களுக்கு நாங்கள் பெருமையுடன் பாதுகாப்பை மீட்டெடுத்து வருகிறோம். எனது வரிவிதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தீர்த்து வைக்கப்பட்டு அமைதி நிலவுகிறது" என்று தெரிவித்தார். 

    • சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.

    சென்னை:

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரது தந்தை கான்சந்த் சிங் உடல்நலக் குறைவால் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ரிங்கு சிங் அவசரமாக சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

    இந்நிலையில், சென்னையில் நடைபெற உள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அரையிறுதிப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார்.
    • இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த தொடர்ந்து போராடுகிறது.

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சி உள்ள 2 ஆட்டங்களிலும் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் பலவீனங்களை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பட்டியலிட்டார்.

    முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் 11-க்குள் வர வேண்டும் என்றால், திலக் வர்மாவுக்கு இடம் கிடைக்காது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார். அப்படி ஒரு ஷாட்டை விளையாடிய பிறகு அவர் களத்தில் இருக்க தகுதியற்றவராக இருந்தார்.

    விராட் கோலி போன்ற ஒரு ரன் இலக்கு துரத்தும் ஒரு வீரர் இல்லாதது அணியில் பெரிய ஓட்டையை தெளிவாக காட்டுகிறது. அவர் இல்லாமல் இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த தொடர்ந்து போராடுகிறது. இதனால் அனைத்து அணிகளும் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்கு ரன்களை இலக்குகளாக நிர்ணயிக்கும் என்றார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது.
    • அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சி உள்ள 2 ஆட்டங்களிலும் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணி 3 விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. இத்தொடரில் லீக் சுற்றுக்கு பிறகு இந்தியா முதல் வலுவான அணியை சந்தித்தது. ஆனால் அதில் இந்திய வீரர்கள் உண்மையில் சிறப்பாக விளையாடவில்லை. இருந்த போதிலும் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணி 3 பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

    சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் போராடுகிறார்கள். அதை சரிசெய்ய வேண்டும். நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வகையில் பேட்டிங் வரிசையை மறு சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும். திலக் வர்மா போன்றவர்கள், கொஞ்சம் சிரமப்பட்டு வருவதால் அவர்களது வரிசையை மாற்ற வேண்டும்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தை குறைத்து பந்து வீசியபோது இந்திய வீரர்கள் சிரமப் பட்டனர். இதில் அதிகம் சிரமப்பட்டவர் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான். எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்ற காண வேண்டும்.

    அதிக பேட்ஸ்மேன்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக இந்தியா தனது பந்துவீச்சுத் தாக்குதலை வலுப்படுத்த வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவை சேர்த்திருந்தால் முடிவு மாறி இருக்கலாம். அவர் விளையாடியிருந்தால், இந்தியா ஒரு முக்கியமான நேரத்தில் டேவிட் மில்லரை வெளியேற்றியிருக்கலாம். எனவே இந்த 3 பகுதிகளில் சிறப்பாக பணியாற்றினால் இறுதிச் சுற்றுகளுக்குள் நுழைந்து பட்டத்தை வெல்ல முடியும்.

    இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.

    ×