என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coal imports"

    • உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.
    • இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.

    இருப்பினும், உள்நாட்டு நிலக்கரியின் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டன் நிலக்கரியை இந்திய மின்உற்பத்தி ஆலைகள் பயன்படுத்தின.

    ஆனால், நடப்பாண்டில் இதில் 1 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத 2 மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது. 30 சதவீத நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படுகிறது.

    பொதுத்துறை நிறுவனமான கோல் இண்டியா மற்றும் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளன.

    மேலும், நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் அருகே புதிதாக நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக நிலக்கரி வர்த்தகர் ராஜீவ் ராம்நாராயணன் என்பவர் தெரிவித்தார்.

    இந்த காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Minister #thangamani
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாளில் குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பில் இருந்து நமக்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

    கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்உற்பத்தியில் நமக்கு 3 மாதமாக மின்சாரம் தரவில்லை. ஆனாலும் நீர்மின்நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின்உற்பத்தியை வைத்து நிலைமையை சமாளித்தோம்.

    காற்றாலை மூலம் அதிகமாக மின்உற்பத்தி கிடைத்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்உற்பத்தி கணிசமாக குறைந்தது.

    மேலும் வடசென்னையில் 2 அனல் மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது 2 நாளில் சரி செய்யப்பட்டுவிடும்.



    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி நிறுத்தப்படவில்லை. ஏனென்றால் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவது உண்மைதான். ஆனாலும் நம்மிடம் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

    எனவே இப்போது மின் வெட்டு இல்லை. இதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #thangamani
    ×