என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power Shortage"

    • மணவெளி தொகுதி தமிழரசி நகரில் மின்பற்றா குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • இதையடுத்து சபாநாயகர் மின்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தமிழரசி நகரில் மின்பற்றா குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மணவெளி தொகுதி தமிழரசி நகரில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் தமிழரசி நகரில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குறைந்த மின் அழுத்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் மின்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழரசி நகரில் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய புதிய சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
    • குறைந்தது 75% சொந்தமாக மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    மின்பற்றாக்குறையை சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இன்றைய நிலையில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,646 மெகாவாட்டாகவும். அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேர மின் தேவை 18,600 ஆக இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் தெரிவித்திருக்கிறது.

    ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 23,135 மெகாவாட்டாக இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் நிலைமையை சமாளித்து விட முடியும் என்றாலும், மாலை நேர மின் தேவையை சமாளிக்க தனியாரிடமிருந்து தான் மின்சாரத்தை வாங்கியாக வேண்டும்.

    சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்றும், கோடைக்காலத்தில் மின்சாரத்தின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியிருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் அந்த அதிகாரி கூறியிருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பா.ம.க.வும் பல ஆண்டுகளாக கூறி வருகிறது.

    ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75% சொந்தமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள மின்சாரம் மத்தியத் தொகுப்பில் இருந்து பெறப்பட வேண்டும். அப்போது தான் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும்.

    ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டின் இப்போதைய மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4320 மெகாவாட் மட்டும் தான். அதிலும் இன்று காலை 2619 மெகாவாட் அளவுக்கு தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.

    வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் சுமார் 17,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5700 மெகாவாட் அளவுக்கான அனல் மின் திட்டங்களுக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால், தங்களின் சுயநலனுக்காக அப்படி ஒரு நிலை உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

    ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதேநிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது.

    எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவையும் போதிய அளவு வினியோகிப்பதில்லை.
    • காலி குடங்கள் மற்றும் நாமம் இட்ட மண்சட்டி ஏந்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டூர், ஆளக்குடி, புளியந்துறை, மகேந்திரப்பள்ளி, முதலைமேடு ஆகிய ஐந்து ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவையும் போதிய அளவு வினியோகிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஐந்து ஊராட்சி மன்ற தலைவர்களான காட்டூர் ஊராட்சி தலைவர் வடிவேல், மகேந்திரப்பள்ளி இளவரசிசிவபாலன், முதலைமேடு நெப்போலியன், அளக்குடி சாந்தினி, புளியந்துறை நேதாஜி மற்றும் அளக்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் சிவபாலன், 5 ஊராட்சி துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் கையில் காலி குடங்கள் மற்றும் நாமம் இட்ட மண்சட்டி ஏந்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக தினமும் தண்ணீர் வழங்க கோரியும், மின் தட்டுப்பாட்டை போக்க கோரியும், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாடு முழுவதும் இரவு 8.30 மணிக்கு அனைத்து மார்க்கெட்டுகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அனைத்து மாகாண முதல்-மந்திரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த தடை உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்த இஸ்லாமாபாத் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்லாமாபாத்தில் நடக்கும் திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தயாரிக்கப்படுகிறது.

    4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில் மின்சாரம் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. #PowerShortage #TNGovernment
    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இது அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று எதிர்க்கட்சியான தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு வழக்கத்தை விட 60 சதவீதம் நிலக்கரி குறைவாக வழங்குகிறது. அதே நேரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் எதிர்பாராத வகையில் மிகவும் குறைந்து விட்டது. உற்பத்தி திறன் 1.2 சதவீதமாக குறைந்து விட்டது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த 13-ந்தேதி (நேற்று முன்தினம்) 13,751 மெகாவாட்டும், நேற்று 13,924 மெகாவாட்டும் மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நாள் ஒன்றுக்கு 18,204 மெகாவாட் மின்சாரம் தேவை.



    வழக்கமாக காற்றாலை மூலம் 8,255 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார அளவு மிகவும் குறைந்து விட்டது. அதாவது 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

    அனல்மின் நிலையங்களுக்கு தினமும் 20 ரெயில் பெட்டிகள் அளவு நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 7 முதல் 8 ரெயில் பெட்டிகள் நிலக்கரி மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

    இதனால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,510 மெகாவாட்டும், நேற்று 2,875 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. அதற்கு முன் தினசரி 4,320 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இத்தகைய காரணங்களால் தான் மின் உற்பத்தி பாதிப்பால் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து உற்பத்தி நடப்பதற்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே தமிழக மின் உற்பத்திக்கு தேவையான தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை சப்ளை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    எதிர்காலத்தில் இத்தகைய மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க நிலக்கரி அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே தமிழ்நாட்டில், மின் தட்டுப்பாடுக்கான காரணம் பற்றி கேட்டதற்கு மின்துறை அமைச்சர் பி.தங்க மணி பதில் அளித்தார்.

    அதில், “கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ஆண்டு பராமரிப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் மற்றும் வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான். இது முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்பாராமல் நடந்தது. நிலைமை 3 நாளில் சீராகும் என தெரிவித்தார். #PowerShortage #TNGovernment
    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Minister #thangamani
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாளில் குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பில் இருந்து நமக்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

    கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்உற்பத்தியில் நமக்கு 3 மாதமாக மின்சாரம் தரவில்லை. ஆனாலும் நீர்மின்நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின்உற்பத்தியை வைத்து நிலைமையை சமாளித்தோம்.

    காற்றாலை மூலம் அதிகமாக மின்உற்பத்தி கிடைத்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்உற்பத்தி கணிசமாக குறைந்தது.

    மேலும் வடசென்னையில் 2 அனல் மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது 2 நாளில் சரி செய்யப்பட்டுவிடும்.



    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி நிறுத்தப்படவில்லை. ஏனென்றால் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவது உண்மைதான். ஆனாலும் நம்மிடம் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

    எனவே இப்போது மின் வெட்டு இல்லை. இதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #thangamani
    ×