என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Government"

    • வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
    • நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,

    * கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.

    * 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.

    * வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.

    * நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    * நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.

    * கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.

    * அனுமதித்த நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

    * நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

    * திடீரென ஏற்பாடு செய்யக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர் முடிவெடுக்க அதிகாரம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
    • மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.

    தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் பதில் அளித்துள்ளார்.

    * தமிழக அரசின் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டது.

    * மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை.

    * தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரெயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை.

    * கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை.

    * கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.

    * சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கியதை முதலமைச்சர் மறைத்துவிட்டார்.

    * மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல.

    சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

    புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க 3 வார அவகாசம் வழங்கக் கோரி இருந்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,

    இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தலைமைச்செயலாளர் வழக்கு தொடர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்தது.

    பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.

    மக்களின் பணத்திற்கு அரசு அறங்காவலர்கள் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.

    வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.

    பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
    • ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கரூரில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி பலியாகினர்.

    இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை போலீசார் விதிப்பதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு, தனி நீதிபதி முன்பு விசாரணை நிலுவையில் இருந்தது. இந்த வழக்கும், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.

    அதற்கு தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இதுகுறித்து அரசு, கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து ஆலோசனை செய்து வருகிறது என்றார்.

    அப்படி என்றால் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்ற முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக இருக்காதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    "ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை எதுவும் இருக்கவில்லை. அரசியல் கட்சிகளையும் தடுக்கவில்லை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்தார்.

    மேலும், இந்த ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்று ஐகோர்ட்டில் ஏற்கனவே அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், "அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி 10 நாட்களுக்குள் அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

    அதே நேரம் தற்போது பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் அனுமதி கோரி ஏதாவது விண்ணப்பம் செய்திருந்தால் அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க இந்த உத்தரவு அரசுக்கு தடையாக இருக்காது. இந்த வழக்கு விசாரணையை வருகிற அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று கூறினார்கள்.

    • அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழை பெய்து உள்ளது.
    • சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை மாநகரில் 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான போக்குவரத்து பராமரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று (22.10.2025) காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை சராசரியாக 4.66 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 0.30 மி.மீட்டர் மழையும் பெய்து உள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் நேற்று (22.10.2025) 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 பேருக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 பேருக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 பேருக்கு இரவு உணவும் என மொத்தம் 3,96,400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 106 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும், 150 எண்ணிக்கையில் 100 எச்.பி. மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகளும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து 299 தூர்வாரும் எந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    17.10.2025 முதல் 22.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 24 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணிற்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணிற்கும் கட்டணமில்லாமல் 24 மணி நேரமும் தெரிவித்து தேவையான உதவிகளை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 16-ந் தேதி அன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக பெய்து வரும் மழையினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், கடந்த 19.10.2025 அன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு முன்னெற்பாடு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகளுக்கேற்ப சென்னை மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 68 உணவு தயாரிப்புக் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

    சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெருநகர மாநகராட்சி வாயிலாக இந்த உணவு மையங்களிலிருந்து இன்று காலை 1 லட்சத்து 46 ஆயிரத்து 950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர்வாரியத்தின் மூலம் 2149 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத்துறை செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    போதிய தளவாடங்கள் இருப்பு வைத்திருப்பதுடன், மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார வினியோகம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்யவும், மாநில அளவில் மின்சார தளவாடப்பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்ல பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

    கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின்சார கம்பங்களின் மீது விழுந்து சேதமடையும்போது, உடனடியாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

    மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர், மின்சார வாரிய அலுவலர்கள் தலைமையிலான களப்பணி குழுக்கள், தொடர்பு எண்கள் மற்றும் பணியாளர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார்நிலை உறுதி செய்ய வேண்டும்.

    பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மின்தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் டி.சிவக்குமார், இயக்குநர்கள் ஏ.செல்லக்குமார் (பகிர்மானம்), ஏ,கிருஷ்ணவேல் (இயக்கம்) மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
    • மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

    தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பி அனுப்பவோ வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசாரிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். 2 வழக்குகளும் இன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

    மசோதாவுக்கு காலக்கெடு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    தனக்கு பதவிக்காலம் இன்னும் 4 வாரங்களே இருப்பதால், அதற்கு முன்பாக இவ்வழக்கில் முடிவு தெரியும் எனவும் அவர் கூறினார்.

    • கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
    • சட்டசபையில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பி அனுப்பவோ வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டசபையில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

    கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசாரிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். 2 வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி உறுதி அளித்தார்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    • உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
    • ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த அக்.3-ந்தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் முழுமையான விசாரணை, ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    • கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை செந்தில் பாலாஜி வழங்கினார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிதியுதவி வழங்கினார். முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை அவர் வழங்கினார்.

    பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியையும் வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வழங்கினார்.

    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை:

    'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

     

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    அவர்களுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், காங்கிரஸ் எம்.பி.க்கள், விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், அசன் மவுலானா எம்.எல்.ஏ., நடிகர் எஸ்.வி.சேகர், சினிமா தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

    தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நெசவாளர் அணி செய லாளர் சிந்து ரவிச்சந்திரன், தளபதி பேரவை மாநில தலைவர் அருள்காந்த், நா.தமிழ்மணி, சேப்பாக்கம் வி.பி.மணி, தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன்,

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜா ராம், ஆர்.எஸ்.ராஜேஷ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர் மன்னன் மற்றும் முகமது இம்தியாஸ், உதயவெற்றி, நவனைய்யா, முன்னாள் கவுன்சிலர் டில்லி, ஆர்.கே.நகர் முரளிமுருகன், ஜி.பி.ராஜேந்திரன், முகப்பேர் இளஞ்செழியன்,

    காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில செயலாளர் தளபதி பாஸ்கர், அருள் பெத்தையா, நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சிவநேஸ் ராஜேஷ், மாநில மீனவர் அணி தலைவர் ஜோர்தான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகர், ஜெ.டில்லி பாபு, முத்தழகன், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், எஸ்.எச்.அலி, கராத்தே ரவி, தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் பாண்டியன், சீரணிதாஸ், சக்தி சிவகுமார், சூளை ராமலிங்கம், ஜெய்னுல் ஆப்தீன், ராதாகிருஷ்ணன், டி.எம்.தணிகாசலம், சர்க்கிள் தலைவர் ரஜினி செல்வம், அம்பத்தூர் பீர்முகமது, பெருங்குடி செந்தில்குரு, ஆர்.கே.நகர் பாஸ்கர், சூளை ஹேம்நாத்,

    தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, மயிலை பாலாஜி, மாவட்ட தலைவர் லதா சண்முகம், புயல் ராஜா மணி, கோபி, மாரியம்மன், முரளிகிருஷ்ணன், சுந்தர மூர்த்தி, நாச்சிக்குளம் சரவணன், நந்தகுமார், பாண்டியன், ரமேஷ்,

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பூக்கடை எஸ்.கே.எம்.குமார், எழும்பூர் மேற்கு பகுதி நிர்வாகி சி.நந்தா, எழும்பூர் கிழக்கு பகுதி நிர்வாகி டி.ராஜேஷ், வில்லிவாக்கம் மேற்கு பகுதி நிர்வாகி வி.எஸ்.டி.விசு, கிழக்கு பகுதி வட்ட செயலாளர்கள் சிவா, அஜித்குமார்.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் சு.ஜீவன், சுப்பிரமணியன், திருப்பூர் லோகு, மகேந்திரன், மல்லை சத்யா ஆதரவாளர்கள் செல்வபாண்டியன், ஊனை பார்த்திபன், இளவழகன், ஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., இரா.செல்வம், செல்லத்துரை, ரஜினிகாந்த்,

    பா.ம.க. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஈகை தயாளன், குமார், சீனிவாசன், வண்ணை சத்யா, ஜி.வி.சுப்பிரமணியம், சிவகுமார், தாயுமானவன், சீனிவாசன், சரவணன், துரைராஜ், சுந்தரம், முனு சாமி, செல்வம், பூங்காநகர் ஆறுமுகம், வெங்கடேசன்,

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, ரெட்சன் அம்பிகா பதி, ராமமூர்த்தி, தனபால், ரமேஷ், அரிபாபு, ஆனந்தன், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் கரிகாலன், சுகுமார் பாபு, மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன்

    த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்க டேஷ், சக்தி வடிவேல், கோவிந்தசாமி, பத்மநாபன், ராஜம் எம்.பி.நாதன், சிவ பால், ஆர்.எஸ்.முத்து, நரேஷ், மோகன், மகேஷ் குமார், சத்யா, லோகநாதன், சஞ்சய், காந்தியம் வெங்கடேசன்,

    தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, நிர்வாகிகள் மாறன், பூங்கா ரமேஷ், ஸ்ரீநாத், பிரபு, பாலாஜி, சசிகுமார், ஜோதி லட்சுமி, அன்பு, கோவேந்தன், முருகேசன்,

    நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யனார், மாவட்ட தலைவர் வாசன், செயலாளர்கள் தீபக், விக்னேஷ் மற்றும் மணி, நாகேந்திரன், சசி குமார், தஸ்தகீர், லோகேஷ்,

    சமத்துவ மக்கள் கழக தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், காரைக்கால் மாவட்ட செயலாளர் விஜய், வண்ணாரப்பேட்டை நாடார் சங்க செயலாளர் ராஜேஷ், கடையல் நாடார் சங்கத் தலைவர் தாஸ், திசையன்விளை நாடார் உறவின் சங்க பொருளாளர் சதீஷ், சமத்துவ மக்கள் கழக செயற்குழு உறுப்பினர் சாபுதீன், வேல்முருகன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, வர்த்தக அணி பொருளாளர் ஆடிட்டர் சுந்தரபாண்டியன், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் டி.உதயகுமார், தென்சென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல்ரவி, செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கோட்டீஸ்வரராஜா, செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் டி.மாரிமுத்து, தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலமுருகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நிர்வாகிகள் சுதர்சன், லோகநாதன், சந்தோஷ், முருகபெருமாள்,

    மக்கள் தேசிய கட்சி மாநில தலைவர் சேம.நாராயணன், நிர்வாகிகள் ஆனந்த், பழனி,

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்க பெருமாள், நிர்வாகிகள் பார்த்திபன், சாந்தி முத்துராமன்,

    காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் மணிஅரசன், வசீகரன், ஜேம்ஸ், கதிரேசன், காந்தி மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஆவடி ரங்கநாதன், நிர்வாகிகள் கிருபாகரன், பிரதீப், காண்டீபன்,

    தமிழர் தந்தை பார்அட்லா சி.பா.ஆதித்தனார் வக்கீல் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் எமிலிசன், கிதியோன்கிங், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை தலைவர் இளங்கோ, தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க தலைவர் லிங்கபெருமாள்.

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் போரூர் ஆனந்தராஜ், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் தங்கமுத்து, பொதுச்செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்லதுரை, நிர்வாகிகள் ரவீந்திரநாதன், செந்தில், மாணிக்கம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நிர்வாகிகள் ரவி, பாஸ்கர், ராஜ்குமார், நாகராஜ், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார்,

    மாடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் பொன்னம் பலம், திருச்சி அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் அமல்நாதன், செயலாளர் ராஜேந்திரன், பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் சுரேஷ், நெல்லை-தூத்துக் குடி நாடார் மகமை பரிபா லன சங்க பூந்தமல்லி தொகுதி தலைவர் ராம்ராஜ் நாடார், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜிராஜன், செயலாளர் படப்பை சேவியர், காஞ்சி மாவட்ட தலைவர் ரமேஷ்,

    எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், நிர்வாகிகள் சுதந்திரதாஸ், வெள்ளைச்சாமி, ராபின்,

    பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், நிர்வாகிகள் ரெங்கசாமி, பேரின்பராஜ், சோலையப்பன், கிருஷ்ணசாமி, செல்வகுமார், லிங்கராஜா, மாரியப்பன், பொன்குமார்,

    தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், துணைத் தலைவர் காமராஜ், சத்திரிய பாசறை நிறுவன மாநில தலைவர் ஆர்.ஜி.சம்பத்குமார்,

    நாடார் மகாஜன சங்க சென்னை மண்டல தலைவர் மணலி தங்கம், நாடார் மகாஜன இளைஞரணி தலைவர் தமிழ்செல்வன், கனகராஜ், ஆறுமுகசாமி, செந்தில்குமார், கடற்கரை தங்கம், பெருமாள்,

    இந்திய நாடார்கள் பேர மைப்பு மாநில செயலாளர் மலர்மன்னன், எஸ்.டி.பன்னீர்செல்வம், வெங்க டேசன், சேரன், விஜயன், திரவியம், எட்வர்ட் ராஜா, ரவிராஜா.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலை வர் சுந்தர், பொதுச்செய லாளர் திருபுகழ், பொருளா ளர் சின்னதுரை, நிர்வாகி கள் மாணிக்கவேல், ஹரி தாஸ், ராமசாமி, சிவகுமார், தாமஸ், மாசானமுத்து, தாமஸ் சவரிமுத்து, சுரேஷ் பொன்ராஜ், ராஜதுரை, புஷ்பராஜ், முருகேசன், செந்தில்குமார்,

    சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க தலைவர் செந்தில்முருகன், செயலாளர் முத்துராம், பொருளாளர் கனிராஜ்.

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் ராஜா, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க சென்னை மண்டல தலைவர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் எட்வர்ட்,

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் கொளத் தூர் ரவி, நிர்வாகிகள் அருணாசலமூர்த்தி, குழந்தை வேல், ரமேஷ், வைரவேல்.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் சவுந்தர்முருகன், துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர் ஆ.ஆறுமுக நயினார், மத்திய சென்னை நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், ஆர்.கே.நகர் கிளை நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி, திருச்சி அனியாப்பூர் கிளை மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் ராஜா, செயலாளர் காமராஜ், பொருளாளர் சந்திரன்,

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அயன்புரம் கிளை செயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் துரைராஜ், நிர்வாகிகள் பார்வதி செல்வன், ஜஸ்டிஸ், சிவப் பிரகாசம், முத்துதுரை, நந்தகுமார், அருண் பாண்டி யன், பாலமுருகன், ஜெய் பாலாஜி, பூபேஷ், செபாஸ்டியன், சதீஷ்குமார்,

    திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ், உறுப்பினர்கள் சீனிவாசன், துரைக்கண்ணு சிவசக்தி, திருச்சி அனியாப்பூர் மன்ற அமைப்பாளர் மணலி ராஜ கோபால் மற்றும் நற்பணி மன்ற அம்பலவாணன்,

    தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வேத வள்ளி, சீனிவாசன், காஞ்சா, சாந்தி, ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ், வ.உ.சி. தமிழ்ச்சங்க தலைவர் லட்சுமி.

    தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங் காவலர் செண்பகராமன், முத்தாலம்குறிஞ்சி எழுத்தாளர் காமராசு, திரைப்பட இயக்குனர்கள் ஜெய் சாய் குமார், ராஜேஷ்குமார்,

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே அவரது சொந்த ஊரான காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், டாக்டர். பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், குமார்ராமசாமி ஆதித்தன, முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், அச்சுத ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், குமரேச ஆதித்தன், தனிகேச ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×