என் மலர்
நீங்கள் தேடியது "Mayiladuthurai"
- இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு சொந்த மான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக அரசு க்கு பதிவு செய்து வழங்கப்பட்டளது. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, முஸ்லிம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரைத்த ளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடு க்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன.பல்லாயிரக்க ணக்கா னோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம், கிராம மக்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தவள்ளி ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கனி, உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார்.
- புதுப்பட்டினம், பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி, ஜூலை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர புதுப்பட்டினம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இறால் நோய் எதிர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார். டாக்டர் பொன்னுசாமி, டாக்டர் உதயகுமார் கலந்துகொண்டு மழைக்காலங்களில் இறால் குட்டைகளில் நோய் வராமல் இருப்பதற்கு தடுக்கும் வழிமுறைகள்,நோய் எதிர்ப்பு மேலாண்மை, தீவனம் இடுதல் குறித்த தொழில்நுட்பம்,நோய் கட்டுப்படுத்துதல், உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான ஆலோசனை உள்ளிட்ட கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. புதுப்பட்டினம், தாண்டவன்குளம், தற்காஸ்,பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
- இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் புழுக்காப்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்குடங்கள் எடுத்தும், திரளான பக்தர்கள் அலகு காவடி, பறவை காவடி எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியாக விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலை அடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர் . கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வீதி உலா வந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அழைக்கப்பட்டு இருந்த தீகுண்டத்தில் பிரதான பக்தர்கள் தீமைகளை நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன்.
- சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர்லலிதா முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர்பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சீர்காழி நகராட்சியில் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உட்புற நோயாளிகளுடன் தங்குவோர் கட்டிடம் கட்டிமுடிக்கப் பெற்றுள்ளதையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் கசடு கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் ரூ.260 லட்சத்தில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள கட்டிடத்தினையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் எரிவாயு தகன மேடையும், மேலும் நகராட்சி உரகிடங்கில் ரூ.147.20 லட்சம் மதிப்பீட்டில் உயிரிய செயலாக்கு முறை அமைக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தினையும், சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட மணக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமையவுள்ள பஸ் நிலைய இடத்தினையும், தருமபுரம் சாலை ராஜன்தோட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தேன்.
முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு சேய்தேன். நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்ஆய்வின்போது ராஜகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர்செல்வராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், சீர்காழி நகராட்சி ஆணையர்ராஜகோபாலன், நகராட்சி மண்டல செய ற்பொறியாளர்பார்த்திபன், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர்சம்பத், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர்சனல்குமார் ஆகியோர் இருந்தனர்.
- இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பதவி பொதுப் போட்டி முன்னுரிமையற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ண ப்பங்கள் 30.6.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
கொரோனா பெருந்தோற்று காரணமாகக் அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி 13.9.2021 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும் தாழ்த்த ப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேற்காணும் தகுதியுடை யவர்கள் தங்களின் விண்ண ப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2-வது தளம், செந்தில்பைப் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டி ப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.
- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை–ப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.
குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பரமசிவம், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி மற்றும் நாகராஜன் வளமைய ஜெயசங்கர் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திரளான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வேப்பகுளம் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி (30).இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.
நேற்று மாலை ராஜபாண்டிக்கும், கோடீஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ராஜபாண்டி கோடீஸ்வரியை அடித்து கீழே தள்ளி உள்ளார் அப்போது தலையில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இந்த கொலை சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கோடீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ராஜபாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் மங்கநல்லூரில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
இதேபோல் கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு லோடு ஆட்டோவில் தங்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற வேன் இரவு 10.30 மணி அளவில் மங்கநல்லூர்-கோமல் சாலையில் உள்ள அனந்தநல்லூர் என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கந்தமங்கலத்தை சேர்ந்த விநாயகராஜா (வயது 45), சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த அருள்தாஸ் (38), தனபால் (55) ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் பலியான 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 3 பேர் பலியான சம்பவத்தால் மங்கநல்லூர் கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் கிளியனூரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 55). இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் ஏஜெண்டாக இருந்து வந்தார். முகமது ரபீக் பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் வாங்கியிருந்ததால் பாதிக்கப்பட்ட சிலர் அவரை அடிக்கடி சிறைபிடித்து அவரிடம் கொடுத்த பணத்தை பெற்று செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கிளியனூரை சேர்ந்த நடராஜன் என்பவருடன் முகமது ரபீக் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த 3 நபர்கள் பஸ்சில் இருந்த முகமது ரபீக்கை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் இதுபற்றி முகமது ரபீக்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாயமான முகமது ரபீக்கை அவரது குடும்பத்தினர் பல இடங்களில தேடியும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதற்கிடையே மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் ஒரு ஆண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த குடும்பத்தினர் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலை பார்வையிட்டபோது அது முகமது ரபீக் உடல் என்பது தெரியவந்தது. எனவே அவரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து மயிலாடுதுறை- மணல்மேடு சாலையோரம் உள்ள கடுவங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முகமது ரபீக்கிடம் வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
டிராவல்ஸ் ஏஜெண்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி மயிலாடுதுறையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
திருவாரூரில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள்.
காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தது. இதைதொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.
காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து உள்ளனர். உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
அதன்படி மயிலாடுதுறையில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகின்றார்.
மயிலாடுதுறைக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் ஆகியோர் நேரில் சென்று பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மயிலாடுதுறை சின்னக்கடைத்தெரு இடத்தை பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது முதல்- அமைச்சர் பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதை மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வரும் பாதை, திரும்பி செல்லும் பாதை, கார்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி உள்ள நகராட்சி மருத்துவமனை வளாக திடல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும், பாதுகாப்பு காரணங்களையொட்டி போலீசார் பணிபுரிய வேண்டிய இடங்கள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள், மாற்றம் செய்யப்பட வேண்டிய போக்குவரத்து வழித்தடங்கள், திடீர் மழை பெய்தால் பொதுமக்கள் சிரமப்படாமல் அமரும் வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #Edappadipalanisamy
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48).
இவர் கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரேகாவுக்கும் மேல பாதியைச் சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் அறிவழகனுக்கு தெரியவந்தது.
இதனால் அவர் மனைவி ரேகாவை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அறிவழகன் செம்பனார்கோவிலுக்கு வந்தார். வழக்கம் போல் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் தகராறு செய்தார்.
தொடர்ந்து கணவர் அறிவழகன் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்து வந்ததால் ரேகா ஆத்திரமடைந்தார். இதனால் கள்ளக்காதலன் ராஜசேகரை சந்தித்து கணவர் அறிவழகனை கொல்ல திட்டம் தீட்டினார். அதற்கு ராஜசேகரும் உடன் பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அறிவழகன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி ரேகாவிடம் அவரது கள்ளக்காதல் குறித்து தரக்குறைவாக திட்டினார். பின்னர் சிறிது நேரம் பேசிய அறிவழகன் அப்படியே தூங்கி விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேகா, அறிவழகனை கொல்ல முடிவு செய்து கள்ளக்காதலன் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கு வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அறிவழகனை ராஜசேகரும், ரேகாவும் தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.
இருவரும் மாரடைப்பால் அறிவழகன் இறந்ததாக கூறி உறவினர்களை நம்பவைத்து விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி ரேகா, அறிவழகன் தூங்கும் போது மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் உறவினர்கள் இன்று காலை அறிவழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் ரேகா பேச்சில் சந்தேகம் அடைந்தனர். இதனால் அறிவழகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரேகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கணவர் அறிவழகனை கொலை செய்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.