search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrangement"

    • அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
    • பல்வேறு இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒய்வு பெற்ற ஆசிரியர் களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். படித்த இளைஞர்கள் பலர் இருக்க ஒய்வு பெற்றோருக்கு வாய்ப்பு அளிப்பதா.? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதுகுறித்து கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஓய்வுபெற்ற ஆசிரி யர்களை நியமிப்பதற்கு எதிரான விமர்சனங்கள் உண்மைகளை அறியாமல் எழுப்பப்படுகின்றன. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட பல்வேறு ஆசிரியர் பணியி டங்களை நிரப்ப நிதித் துறை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    எனவே பணியிடங்களை நிரப்ப 3 முதல் 4 மாதங்கள் ஆகும். பிப்ரவரி மாதத்திற்குள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும்.

    ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதால், தற்போதுள்ள ஆசிரியர்களில் சிலர் அதிக சுமையால், தினமும் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு சென்று பாடத்திட்டத்தை முடிக்க வேண்டியுள்ளது.

    ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, இடைக்கால ஏற்பாட்டிற்குப் பிறகு அவர்களது சேவை நிறுத்தப்படும். சுமார் 340 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 67 விரிவுரையாளர்களை பணியமர்த்த கோப்பு விரைவில் வெளியிடப்படும். அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலி பணியி டங்களையும் காலக் கெடுவு டன் நிரப்புவோம். ஒரே பிரச்சனை என்னவென்றால், ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நேரம். ஆட்சேர்ப்பு விதிகளைப் பின்பற்றி, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிப்பதன் மூலம் இது வெளிப்படை த்தன்மையு டன் செய்யப்பட வேண்டும்.

    அநேகமாக இந்த கல்வி யாண்டின் இறுதிக்குள், பெரும்பாலான காலியி டங்கள் நிரப்பப்படும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை காலி இடத்தில் நியமிப்பதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வயது முதிர்ந்த பட்டதாரிகளை நியமித்தால் 3 அல்லது 4 மாதங்களுக்குப் பிறகு அத்தகைய பட்டதா ரிகளின் சேவை களை நிறுத்துவது பணி நியமனத்துக்கு தடைகளை உரு வாக்கும். ஓய்வு பெற்ற ஆசிரி யர்க ளின நியமனம் மற்றும் பணி நீக்கத்தை நிர்வ கிப்பது எங்களுக்கு எளிதானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு 300 ஆட்டோக்களில் சென்று வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டது
    • பா.ஜ.க. பொருளாளர் தொழில் அதிபர் முருகானந்தம் ஏற்பாடு

    ஆலங்குடி,

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் பாதயாத்திரை புதுக்கோட்டையில் 6-ந் தேதி நடக்கிறது. அண்ணாமலை வருகை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் வரவேற்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    மாவட்ட பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம் ஏற்பாட்டில் 300 ஆட்டோக்களில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது.

    விஜய் பேலஸ் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம், மாவட்டப் பார்வையாளர் பழ.செல்வம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், சுந்தரவடிவேலு, நேதாஜி, சரவணன், மயில் சுதாகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் புனித மண் சேகரிக்கப்பட்டது.
    • இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    விருதுநகர்

    டெல்லியில் அமிர்த வனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.க. சார்பில் என் மண் என் தேசம் என்ற இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் விருதுநகர் காமராஜர் பிறந்த இடம், தியாகி சங்கரலிங்கனார் நினைவு மண்டபம், தியாகிகள் அதிகம் வாழ்ந்த மீசலூர், எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவில், பாவாலி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைப் போரின் போது வந்து சென்றதாக தாமிரபட்டயம் உள்ள இடம் ஆகிய பகுதிகளில் இருந்து கலசத்தில் புனித மண் சேகரிக்கப்பட்டது. இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் மண் கலசம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அங்கு பா.ஜ.க.வினர் தேச ஒற்றுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் வெற்றி வேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர தலைவர் நாகராஜன், பட்டியலின தலைவர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் பெண்கள் வங்கி கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்துள்ளது
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக கூட்டுறவு வங்கியில் முன்வைப்பு தொகை செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளதாக திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நாளை(24 ஆம் தேதி) தொடங்குகின்றன.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, வீடு தேடி வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதனை முகாம் நடக்கும் நாளில் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச்செல்ல வேண்டும்.இந்த திட்டத்தில் வங்கி கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ஆண்டிமடம், அரியலூர், வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, செந்துறை ஆகிய 9 இடங்களில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் முகாம் நடத்தப்படுகிறது. முன்வைப்பு தொகை இல்லாமல் இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமோ, குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

    • மகளிர் உரிமை தொகை பெற ஜீரோ பேலன்ஸில் கூட்டுறவு வங்கிகளில் கணக்குகள் தொடங்கலாம்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

    பெரம்பலூர்,

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்க முடியும். இந்த உரிமை தொகை பெறுவதற்கான தகுதிகளை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி கொடு க்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாட்களில் கொண்டு சென்று கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கி கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க வங்கிகளை நாடி செல்கின்றனர். தற்போது வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச இருப்பு தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்று அடிப்படையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், அரும்பாவூர், செட்டிகுளம், குன்னம், இலப்பை குடிக்காடு, பாடலூர், துறைமங்கலம்,வி. களத்தூர்,வாலி கண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய 10 இடங்களில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணிகள் தொ டங்கப்பட்டுள்ளன.இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தகவலை கூட்டுற வுத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.
    • மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம் செய்யப்பட்டிருந்தன.

    ஊட்டி,

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தை மேலும் சில நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.

    மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம், 80 ஆயிரம் மலர்களான ஊட்டி 200 வடிவம், 125வது மலர் கண்காட்சி வடிவம் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

    இது தவிர நுழைவு வாயிலில் 10 அலங்கார வளைவுகள், செல்பி ஸ்பாட்டுகள், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர்களை கொண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த மலர் அலங்காரங்களை கடந்த இரு வாரமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

    அதேசமயம் மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு வில்லியம், மேரி கோல்டு உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறையாமல் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு மாடங்களில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வாரம் இறுதி வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.

    • திருத்தளி நாதர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனுறை திருத்தளிநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த

    24-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், பிரியா விடை அம்மன், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்தனர்.

    5-ம் திருநாளான்று திருத்தளிநாதருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ெதாடர்ந்து 9-ம் நாளில் தேரோட்டம் நடந்தது. முதல் தேரில் விநாயகரும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதரும், 3-வது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் 10-ம் நாளான நேற்று இரவு கோவில் சீதளி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். வான வேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    • கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது. அழகர்கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பின்னர் அழகர்மலைக்கு திரும்பும் நாளில் இந்த கோவிலில் உற்சவ விழா நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு உப்பு, சேவல், காய்கறிகள், விைள பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    அங்குள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிசேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • கமுதி அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராம லிங்கம் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவிஅய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள் தங்கமணி, மாரிமுத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர்.

    தலைமை கழக பேச்சாளர் நல்ல சேதுபதி பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்,அவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் விநாயக மூர்த்தி, பிரதிநிதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ ஒலிபரப்பு நடந்தது.
    • மாவட்ட பா.ஜ.க தலைவர் ஏற்பாடு செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ரேடியோவில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். இதன் 100-வது பகுதியான நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் அதிகமான இடங்களில் பொதுமக்கள் கேட்கும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு பெரிய திரை மூலம் பிரதமரின் உரையை தமிழாக்கம் செய்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர்.

    மாநில கலை கலாச்சார பிரிவு செயலாளர் தாரணி ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், பவர் நாகேந்திரன், ரமேஷ்பாபு, நிகழ்ச்சி பொறுப்பாளர்- மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமவீரபாகு, 'மனதின் குரல்' ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்திரபாண்டியன், ரமேஷ் பாபு, செய்தி தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பா.ஜ.க மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் ஏற்பாட்டில் தி.மு.க மாநில மருத்துவரணி இணை அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்

    அவர்களை பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ரூ.6.01 கோடி திரும்ப செலுத்தப்பட உள்ளது.
    • பயிற்சி பெறுவதற்கான செலவுத்தொகை மாநகராட்சி நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்கு குழுத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான வெங்கடேஷ் தாக்கல் செய்தார்.

    முன்னதாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது:-

    தமிழகத்திலேயே தஞ்சை மாநகராட்சி முதல் முறையாக அனைத்து கடன்களையும் அரசுக்கு திரும்ப செலுத்தி கடனில்லா மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பெறப்பட்ட கடன் தொகைக்கு தவணை திரும்ப செலுத்தும் விதமாக 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2.72 கோடி திரும்ப செலுத்தப்பட்டது.

    நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ரூ.6.01 கோடி திரும்ப செலுத்தப்பட உள்ளது.

    பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்வதை தவிர்த்து, அரசின் முழு மானியத்துடன் பெறப்படும் திட்டங்களின் கீழ் பணியை மேற்கொள்ள முன்மொழிவுகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    அரசு வழிகாட்டு தலின்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்கு தொகை மற்றும் அரசு மானியம் சேர்த்து மாநிலத்திலேயே அதிக அளவில் 2022-23-ம் ஆண்டு ரூ.7.96 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

    வருகிற 2023-24-ம் நிதியாண்டில் ரூ.9.94 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

    நடப்பு நிதியாண்டுக்கு (2023-24) ரூ.4.41 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதில், ரூ.284.70 கோடிக்கு வரவு எதிர்பார்க்கப்பட்டு, ரூ.280.28 கோடிக்கு செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பள்ளியில் இறுதி ஆண்டு பள்ளி கல்வி முடித்துள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கான செலவுத்தொகை மாநகராட்சி நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுத விருப்பமுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்க மாநகராட்சி நிதியில் இருந்து செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழக்கரையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் ெதாடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த நகராட்சி கூட்டத்தில் மின்மயானம் அமைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், துணை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் மீரான் அலி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 18 சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சமுதாய நிர்வாகிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மயானத்தில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அறிவித்துள்ள இந்த நல்ல திட்டத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதே சமயத்தில் கீழக்கரை இந்துக்கள் மயானம் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்றும், மின் மயானத்தை அரசுக்கு சொந்தமான வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்,இ து குறித்து மாவட்டம் நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரி வித்தனர். மக்கள் தெரிவித்த கருத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிப்பதாக கீழக்கரை தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.

    ×