search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்த்து"

    • மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
    • பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

     

    பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம்  பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
    • திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.

    திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 ஓட்டுகளும் கிடைத்தன.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவிற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவின் வெளிப்பாடாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

    கழகத்தின் வேட்பாளராக களமிறங்கி இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள அண்ணன்

    அன்னியூர் சிவா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.

    சட்டமன்ற உறுப்பினராக அவரது மக்கள் பணி சிறக்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார்.
    • சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி ஒருவர்.

    இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    அந்த வகையில்பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது, மற்ற அரசியல் தலைவர்களை விடவும் பிரதமர் மோடி தனித்து நிற்பதை காட்டுகிறது.

    இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆர்ஜேடியின் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன், NCP தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்கள்.

    பிரதமர் மோடி, கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார். 10 கோடி பாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    எக்ஸ் தளத்தில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளார்.

    • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
    • உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்தி ஜடேஜாவை வாழ்த்தி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது

    ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். உங்களின் ஸ்டைலான ஸ்ட்ரோக் ஆட்டம், ஸ்பின் மற்றும் சிறப்பான பீல்டிங்கை கிரிக்கெட் பிரியர்கள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக சிறப்பாக டி20 போட்டிகளில் விளையாடியதற்கு நன்றி. உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.


    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

    "போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.

    இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.


    14CNI0260602024: தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளைய பெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது.

    இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடறிந்த தலைவராக உயர்ந்த பெரியவர் எல்.இளையபெருமாள் அரசியல் வாழ்க்கை என்பது, காலத்தாலும், களத்தாலும் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதாகும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1967 வரை 3 முறை தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் இளையபெருமாள் அரசியல் அடையாளங்கள்.


    அவர் தலைமையிலான அகில இந்தியத் தீண்டாமை ஆணையத்தின் பரிந்துரையின் பலனாகவே, தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உருவானது என்பதே அவரது அரசியல் லட்சியத்தின் உன்னதத்திற்கும், விழுமியத்திற்கும் வெளிப்படையான வரலாற்றுச் சான்று.

    பெரியவர் இளையபெருமாள், 1980-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமையும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். கலைஞருடன் மிகுந்த நெருக்கமும், நட்புறவும் கொண்டிருந்தவர். 1998-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் வழங்கினார்கள். "சலிப்பேறாத சமூகத் தொண்டர்" என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.

    இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 18.4.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன்.

    பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், "இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் வெளியிடுவது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நிகழ்வாகும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
    • ரசிகர்கள் காமெண்ட்கள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

    சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவர்கள் ஹீரோவாகத் தான் நடிப்பார்கள். ஆனால் இதற்கு இணையாக தற்போது வரை த்ரிஷா ஹீரோயின் ஆகவே நடித்து வருகிறார்.

    அதிலும் விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.


    நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்த லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் மூலம் இவரோட கெமிஸ்ட்ரி 20 வருடங்களாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் த்ரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    " அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். த்ரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.


    இந்த பதிவிற்கு விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் "The most special wish for Thalapathy GOALS" என்று காமெண்ட்கள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யுவன் சங்கர் ராஜா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GOAT விஜய்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரபுதேவா, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் அன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவின் தளபதியாக இருந்து அரசியல் கட்சித் தலைவராக பரிணமித்துள்ள நடிகர் விஜய்  இன்று [ஜூன் 22] தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் ஆகியோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யின் 68 வது படமான GOAT படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபுவும், நடிகரும் மக்கள் நீதி மைய்யத் தலைவர் கமல் ஹாசனும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    GOAT படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GOAT விஜய்' என்று தனது சமூக வளைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது வாழ்த்து செய்தியில், எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு மிகவும் மேஜிக்கலாக அமைந்தது. வாய்ப்புக்கும் கோட் பட செட்டில் உங்களுடன் ஏற்பட்ட நியாபங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

    இசையமைப்பாளர் அனிருத் தனது வாழ்த்து செய்தியில், 'என் அன்பு விஜய் சாருக்கு வாழ்த்துகள், இந்த வருடமும் உங்களுக்கு சிறந்ததாக அமையும், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஒன் அண்ட் ஒன்லி தளபதி விஜய் சார். லவ் யூ' என வாழ்த்து தெரிவித்துளளார். விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கிய பிரபுதேவா, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் அன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீயும் தனது வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.

     

    இதுதவிர GOAT பட கதாநாயகி மீனாட்சி சவுத்திரி, நடிகை லைலா ஆகோயோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் ரீரிலீஸ் செயப்பட்டன. மேலும் GOAT படத்ததின் கிளிம்ஸ் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நேற்று நள்ளிரவு வெளியிட்டது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு GOAT படத்தில் இடமபெற்றுள்ள சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
    • குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

    கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

    கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.

    தொடர்ந்து, தனது 9வது மாதத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், அமலாபால் கடந்த 11ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

    தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அமலா பால் மற்றும் குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதுதொடர்பான வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தான், ""It's a boy" !! Meet our little miracle, "ILAI" ?? born on 11.06.2024" என பதிவிட்டுள்ளார்.

    இந்த நற்செய்தியை அறிந்த ரசிகர்கள் அமலா பால் தம்பதிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

    • சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.
    • அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

     உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருங்குடி மக்களால் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை பக்ரீத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை மக்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மாலத்தீவின் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

     

    குறிப்பாக மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை வெளியேற்றினார். சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது. இலங்கை உட்பட அண்டை நாடுகளை சீனாவின் பக்கம் செல்லாமல் தன் கைவசம் வைத்துக்கொள்ள ஆரம்பம் முதலே இந்தியா மெனக்கிட்டு வருகிறது. எனவே மாலத்தீவுடன் இணக்கத்தை ஏற்படுத்துவது இந்தியாவுக்கு இன்றியமையாததாகிறது.

     

    இதற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில் முய்சு கலந்துகொண்டார். இந்த நிலையில்தான் மோடியின் இந்த பக்ரீத் வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, தியாகத்தாலும் சகோதரதத்துவதாலும் இந்த திருநாள் உருவானது. ஒரு இணக்கமாக உறவை கட்டமைப்பதற்கும் சகோதரத்துவமும் தியாகமும் இன்றியமையாததாகும் என்று தெரிவித்துள்ளார். 

    • முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பக்ரீத் இது.
    • 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன்.

    உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பக்ரீத் இது. தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது.

     

    அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் காஸா போர் நிறுத்தத்துக்கு அதிபர் ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத்  தொடங்கியுள்ள நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது.

    3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த பக்ரீத் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.
    • சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    ×