search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shathankulam Sakhabuddin"

    • ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனர் சாத்தான்குளம் சகாபுதீன் இல்ல திருமண விழாவில் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
    • மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த சிங்கப்பூர் தொழில் அதி பரும், ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனருமான சகாபுதீன்-லைலத்து அரசியா பானு ஆகியோரது மகன் பட்டதாரி ஹபீப் ரகுமானுக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் முகமது ஹலீம்-ஜானம்மாள் ஆகியோரது மகள் பட்டதாரி இர்ஷாத் பர் ஹானாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமண நிக்கா ஏஒன் திருமண மகால் வளாகத்தில் சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் காபத்துல்லா, மலேசியா சாத்தான்குளம் ஜமாத் தலைவர் அயூப்கான், மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திருமண நிக்கா நிகழ்ச்சியை புதுக்கோட்டை தெற்கு 2-ம் வீதி ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்தி வைத்தனர். சாத்தான்குளம் பள்ளிவாசல் தலைமை இமாம் சுலைமான் சிறப்பு துவா ஓதி மணமக்களை வாழ்த்தினார்.

    முன்னதாக ஆலிம்கள் மணமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றி மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவில் கே.நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, டாக்டர் மணிகண்டன் ஆகியோர் மணமக்களுக்கு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினர்.

    மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்கள் தொழிலதி பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை யினர், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்டிட பொறியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஆலிம் பெருமக்கள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா சிறப்பாக நடைபெற வேண்டி மணமக்களை வாழ்த்தி மணமகன் மாமா சித்தார்கோட்டை ரபி அகமது- பலிலா பேகம் குடும்பத்தினர். ராமநாதபுரம் என்.எஸ்.ஏ. குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் ஹசன் அலியார் மற்றும் குடும்பத்தினர், அல்பரிதா குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் அபுல்கலாம் குடும்பத்தினர், கீழக்கரை மெரினா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் சுல்தான் சம்சுல் கபீர் பாரதி நகர் அஜந்தா பேக்கரி எம். சுலைமான், திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனர் என்.களஞ்சியம். என்.பத்மநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் தொழில்அதிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    மணமக்கள் வீட்டார் சார் பில் சித்தார்கோட்டை ரபி அகமது, தீன் டிராவல்ஸ் உரி மையாளர் சாத்தான்குளம் உசைதீன் ஆகியோர்கள் வர வேற்றனர். ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் ஷஹ் பாஸ் முகம்மது, வஜிஹா பானு, நஜீப்முகம்மது, ஜஸ்ரா, முகம்மதுஹலீம், ஜானம்மாள், முகம்மது இர்பான், முகம்மது அலி ஜின்னா, ஜெய்த்துன்பீவி, முகம்மது கலிபுல் அமீன், அனீஸ் பாத்திமா உள்பட ஏஒன் மஹால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் செய் திருந்தனர். அனை வருக்கும் ஏஒன் மஹால் நிறுவனர் சகாபுதீன், குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

    ×