search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Newlyweds"

    • கொடூர கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
    • திருமண வீட்டில் நடந்த கொலை சம்பவம் கிராம மக்களிடையே பரவியது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மெயூன்பூர் மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ். இவர் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தம்பி சோனு (வயது21)வுக்கும், சோனி (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிவ்வீர் யாதவ் சொந்த கிராமத்துக்கு வந்து இருந்தார். திருமணத்தில் ஏராளமான உறவினர்களும் பங்கேற்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டதுடன் இந்த திருமண விழா விமரிசையாக நடந்தது.

    சில உறவினர்கள் திருமண வீட்டில் தங்கி இருந்தனர். நேற்று இரவு அனைவரும் தூங்கிகொண்டு இருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் சிவ்வீர் யாதவ் எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ஆவேசத்துடன் தூங்கி கொண்டிருந்தவர்களை வெட்டினார். மேலும் அவர்கள் தலையையும் துண்டித்தார்.

    இந்த கொடூர கொலை வெறி தாக்குதலில் அவரது சகோதரர்கள் புல்லான் (25) புதுமணத் தம்பதியான சோனு-சோனி மற்றும் மைத்துனர் சவுரப்(23) நண்பர் தீபக் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி டோலி(24) அத்தை சுஷ்மா (35) ஆகியோருக்கும் கோடாரி வெட்டு விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில் 5 பேரை கொன்ற சிவ்வீர் யாதவ் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த கொடூர கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. அவர் பயன்படுத்தியது அனுமதி இல்லாத துப்பாக்கி ஆகும்.

    திருமண வீட்டில் புதுமணத்தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பரவியது. இதையடுத்து அவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பிணமாக கிடந்தவர்கள் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதார்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் என்னும் பாடலை பாடினார்.
    • கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    விழாவிற்கு சங்கதலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

    மாவட்ட அவை இணைப்பொருளாளர் சாய்செந்தில், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் நீலகண்டன், மாவட்டத் தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    3 ஜோடிகளுக்கு திருமணத்தை மாவட்ட ஆளுனர் டாக்டர் சேது சுப்பிரமணியன், தாசில்தார் சுகுமார், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    லயன்ஸ் சங்கத்தினர் அனைவரும் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி மண மக்களை வாழ்த்தி நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்னும் திரைப்பட பாடல் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

    கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் மற்றும் பலர் வரவேற்றனர்.

    • பொதுமக்கள் பாராட்டு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் வினோத்குமார் (வயது 30) இவருக்ககும் லேகாஸ்ரீ என்பவருக்கும் நேற்று காலையில் பள்ளிகொண்டாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிகுந்த இளைஞரான புது மாப்பிள்ளை வினோத்குமார் தனது திருமணத்தின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார். அதன்படி தான் வசிக்கும் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.

    நேற்று திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் வினோத்குமார்-லேகா ஸ்ரீ ஆகியோர் அவர்கள் வசிக்கும் விநாயகபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றியகுழு துணை தலைவர் அருண்முரளி, கே. வி.குப்பம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.சீதாராமன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார், கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    மரக்கன்றுகளை நட்ட புதுமண தம்பதிகளை அப்பகுதி பொதுமக்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் வெகுவாக பாராட்டினர்.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுைர கோவில்களில் புதுமண தம்பதிகள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
    • இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும்.

    மதுரை

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும்.

    ஆடி மாதத்தில் 18-ந் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும். இதை செய்வதால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி ஆடிப்பெருக்கான இன்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலிகள் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

    மதுரையில் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமான புதுமணத்தம்பதிகள் வந்திருந்தனர். அவர்கள் பொற்றாமரைகுளத்தில் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர். இதே போல் முத்தீஸ்வரர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் புதுமண தம்பதிகள் வழிபட்டனர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு வைகை ஆற்றில் வழக்கமாக ஏராளமானோர் திரள்வது உண்டு.

    ஆனால் தற்போது மழை காரணமாக வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றில் ஆடிப்பெருக்கு பூஜை நடத்த போலீசார் தடை விதித்ததோடு தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.

    மதுரையில் திருமணமான பெண்கள் பலர் வீடுகளில் வழிபட்டு தாலி பிரித்து புதியதை அணிந்து கொண்டனர்.

    • கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
    • புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. சிறந்த பரிகார தலமாகவும் உள்ளது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குளித்து திதி, தர்ப்பணம் மற்றும் திருமண தோஷம் நீக்கும் பரிகாரங்கள் செய்து வருகிறார்கள்.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும். மேலும் ஆடி பிறப்பு மற்றும் ஆடி 18 நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அம்மாபேட்டை, பவானி, ஈரோடு மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் குளிக்கும் இடத்தில் உள்ள படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதனால் கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொடுமுடி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பக்தர்கள் குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ×