என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wedding"
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகேஷ் குமார் இடம் பெற்றிருந்தார்.
- முதல் 2 போட்டிகளில் விளையாடிய அவர் திருமணத்திற்காக 3-வது போட்டியில் இருந்து விலகினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். இவர் இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டி, 7 டி20 போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

முகேஷ் குமார் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தார். முதல் 2 போட்டிகளில் விளையாடிய அவர் திருமணத்திற்காக 3-வது போட்டியில் இருந்து விலகினார்.
हल्दी की रस्म में भोजपुरी गीत पर जमकर नाचे भारतीय क्रिकेटर मुकेश कुमार और उनकी दुल्हिनियां।#MukeshKumar #Cricket pic.twitter.com/1ASjvC8dPD
— Mohd Nazim ?? (@ImNaz33) November 28, 2023
இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான திவ்யா சிங்கை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உமாபதி மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் உமாபதி (வயது 60). இவரது மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக 10 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருமண மண்டபத்தில் வைத்து விட்டு நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகள் அறைக்கு சென்று பார்த்தபோது 10 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி நகை மற்றும் பணத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு 5 லட்சம் ஆகும். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நடத்திவைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் சீர்திருத்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பிரபாகரன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா, நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டுவந்தார். தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவர் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வல்லபன், பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழங்குடியினர் மாநில தலைவர் அதியமான் நன்றி கூறினார்.
- இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியை நடைபெற்றது.
- தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
உடுமலை:
உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 இணையர்களுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் மீட்பு மற்றும் அன்னதான திட்டம் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய செயல். அதை எல்லோராலும் சிறப்பாக செயல்படுத்த முடியாத சமயங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு தேவையான சீர்வரிசைகள் வழங்கி ஒரு சிறப்பான வாழ்க்கைக்கு அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் மணவிழா காணும் 6 இணையர்களை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியும், சந்தோஷசமும் அடைகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும், தமிழ்நாடு அரசு சார்பாகவும் பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
அதே போல மணமக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று ஒற்றுமையோடும், விட்டுக் கொடுத்து சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அரசுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் திருமணத்தை நடத்தி வைத்த எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 6 மணமக்களுக்கும் தலா சீர்வரிசை ப்பொருட்களாக, திருமங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், 1 பீரோ,1 கட்டில், மெத்தை, 2 தலையணை, 1 பாய், 2 கைக்கடிகாரம், 1 மிக்சி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என மொத்தம் ரூ.30,000 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பொருளாளர் முபாரக் அலி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார்,எஸ்.கே. தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், பாபு,பிஏபி., பாசனசங்கத் தலைவர் மொடக்குப்பட்டி ரவி, உடுமலை தாசில்தார் கண்ணாமணி உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.
- மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
நெல்லை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரிய தர்ஷினி, உதவி ஆணையாளர் கவிதா செயல் அலுவலர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், பாளையங்கோட்டை பிரசன்ன விநா யகர் கோவில் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள 4 கோவில்களில் 5 ஜோடி களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
- உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
- பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பாலக்காடு :
திருமண பந்தம் என்பது...
மனித வாழ்க்கையின் புதிய அத்தியாயம்...
இதுவே....ஒருமனமாய்...உலாவந்த மனங்களை இருமனமாய் இணைய வைக்கிறது. இணை பிரியாமல் வாழையடி வாழையாய்...வாழ்க்கையை வரலாறாக மாற்றுகிறது...
ஆம்...திருமணத்தன்று...அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது வழக்கம். அம்மி மிதிப்பது என்பது ஒரு சடங்கு. மணமகன் என்பவர், மணமகளின் வலக்கால் கட்டை விரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைத்து, இந்த கல்லைப்போல் உறுதியாக மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதே இதற்கான ஐதீகம்.
சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாக திகழ்கின்றனர் என்பது ஐதீகம்...
இதில்....வசிஷ்டர் என்கிற நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்கிற கருத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி.
இந்த சடங்குகள் எல்லாம் ஐதீகம் என்கிற முறையில் நடைமுறையில் இருக்கின்றது...
ஆனால் அம்மி...அருந்ததியை தாண்டி...இருமனங்களாய்... ஓட்டிக்கொண்ட தம்பதிகளுக்கு வினோத முறையில் ஒரு சடங்கு நடந்தது.
ஆம்...புதுமண தம்பதிகள் இருவரது தலைகளையும் முட்ட வைக்கும் வினோத சடங்கு ஒன்று நடந்துள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பல்லசேனாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக, மணமக்களை வாசல்படி அருகே நிற்குமாறு கூறினர். அப்போது உறவினர் ஒருவர் சச்சின், ஜலஷா இருவரது தலையை பிடித்து முட்ட வைத்தார். இதில் வலி தாங்க முடியாமல் மணமகள் அழுதார். அதன் பின்னர் மணமக்களை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.
இவ்வாறு செய்வது புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என நம்புவதாகவும், அதனால் தான் மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புகிறோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் திருமணமான பின்னர் இதுபோன்ற வினோத சடங்கு இருப்பதாக வயதானவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது எனக்கே தெரியாது என மணமகன் சச்சின் தெரிவித்தார்.
முதன் முதலாக மணமகன் வீட்டுக்கு வரும் மணமகள் அழுதபடி வருவதால் குடும்பம் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
கேரளாவில் 98 சதவீதம் பேர் படித்தவர்கள். அப்படி இருக்க, 21-ம் நூற்றாண்டிலும் பழைய சம்பிரதாயம் தொடர்ந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
- இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 22). பட்டப் படிப்பு படித்த இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி திருநங்கை.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அடிக்கடி அவர்கள் சந்திக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது.
இதனால் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வேமுலவாடா கோவிலுக்கு சென்றனர். அங்கு வைத்து இருவரும் சாமி சன்னதியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீநிவாஸ் பிங்கி கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
ஆட்டோ டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும்.
- 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும். ஆனால் உணர்ச்சிகரமான வீடியோக்கள் அரிதாகவே காணக்கிடைக்கும். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ருத்விக் பாண்டே என்பவர் பதிவிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார். சில சமயம் அவர் தரையில் அமர்ந்து இருக்கிறார். 95 வயதிலும் தனக்கும், தன் குடும்பத்திற்காகவும் அயராது உழைக்கும் இந்த முதியவரின் வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிடுவதோடு அவருக்கு உதவி செய்யவும் முன்வந்துள்ளனர். இந்த வீடியோ 1.7 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
- அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை.
- உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.
லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவுக்கும் (22), அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20), என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
மறுநாளான மே 31-ம் தேதி புதுமண தம்பதி வீட்டிற்கு வந்தனர். அன்றிரவு தம்பதியரை மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.
உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் சடலமாகக் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், இருவரும் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
தம்பதியின் உடலில் எந்தக் காயமும் இல்லாத நிலையில் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதிய தம்பதி மாரடைப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஜோடிக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், புதிய தம்பதி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நாளில் புதிய தம்பதியினர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை.
- சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரெயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நடக்க இருந்தது.
மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்த கோரி மாவட்ட சமூக அலுவலகத்துக்கு புகார் சென்றது.
இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.
தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.