என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding"

    • இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது.
    • பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் சமாதானம் அடையவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.

    கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டனர். உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    பந்தியில் தண்ணீர் பரிமாறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் திருமணம் நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 4 மாதங்களுக்கு பின்பு டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த நீலன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 27) டிரைவர்.

    அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடந்த 4 மாதத்துக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய போது மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக மாணவியின் தந்தை கலசப்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியுடன் செல்லப்பாண்டியை கைது செய்து அழைத்து வந்தனர். அந்த மாணவியை திருவண்ணாமலை அரசு காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டுள்ளார்.

    மேலும் செல்ல பாண்டியனை போக்சோ சட்டத்தில் கலசப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது.
    • ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    புனே :

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில் கம்பீரமாக ஊர்வலம் சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் சென்றனர்.

    இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர், கலெக்டர் அலுவலகத்தில் ஏதோ கூட்டு திருமண விழா நடக்கப்போவதாக நினைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் நூதன போராட்டம் செய்தது பின்னர் தான் தெரியவந்தது.

    ஊர்வலகத்தின் போது திருமண உடையில் குதிரையில் மிடுக்காக சென்றாலும், கலெக்டர் அலுவலகம் சென்றதும் அவர்களது முகத்தில் கவலை தொற்றி கொண்டது. கலெக்டரை சந்தித்த அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் தங்களுக்கு அரசே மணப்பெண்கள் பார்த்து தர வேண்டும் என்ற நூதன கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் பரஸ்கர் கூறியதாவது:-

    எங்களது ஊர்வலத்தை பார்த்து மக்கள் கேலி செய்யலாம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இதனால் திருமண வயதை அடைந்த பிறகும் இளைஞர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. பெண் சிசுக்கொலைகள் தான் இந்த பாலின வித்தியாசத்துக்கு முக்கிய காரணம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசே பொறுப்பு. கருவில் பாலினம் கண்டறியும் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்து அரசை வலியுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார்.
    • திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து மணப்பெண் பேசி இருக்கிறார்.

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதும், அவருடன் மணப்பெண் வாக்குவாதம் செய்து அழுது புரண்டு கெஞ்சுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அங்கு ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து அந்த பெண் பேசி இருக்கிறார்.

    இந்த தகவல் மணமகனின் காதுக்கு எட்டியது. இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். அடாவடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மணமகனிடம் ஒரு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டு கெஞ்சி இருக்கிறார். ஆனால் மணமகனோ அவரை ஏற்க மறுத்து ஆவேசமாக பேசுகிறார்.

    இதுதொடர்பாக விசாரித்தபோது காதலனை மணப்பெண் சந்தித்த தகவலை மணப்பெண்ணின் தோழியே மணமகனிடம் போட்டுக் கொடுத்தது தெரிய வந்தது. மணமகள் கெஞ்சும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
    • 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி பகுதியை சோ்ந்தவா் நவீன்குமாா் (வயது 22). இவா் 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் மாவட்ட சமூக நல அலுவலா் சிவகாமி, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடா்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா். 

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.
    • வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் 24 வயதான நரேஷ் குமார்.

    இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு திருவாரூரில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா வயது 21 என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சுஷ்மிதா இளங்கலை வரலாறு முடித்துவிட்டு தற்போது பி.எட் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.

    இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சுஷ்மிதா நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பஞ்சாயத்து பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ள செய்துள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.

    இதனையடுத்து சுஷ்மிதா நரேஷ் குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவா ரூருக்கு சென்றுள்ளனர்.

    அப்போது வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கூரைக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ் குமார் அழுது கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவை மீட்டுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது கொலையா அல்லது தற்கொ லையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மூன்று நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பெண்ணின் பெற்றோர் கதறி அழுததும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • மதுரையில் அக்ரி.கணேசன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • ஐடா ஸ்கட்டர் அரங்கம்-2ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரையை சேர்ந்த அக்ரி.கணேசன்-ருக்மணி கணேசன், ராஜேந்திரன்-வசந்தி, பொன்னையா ஐ.ஏ.எஸ்.,-சினேகலதா ஆகியோர்களின் சகோதரர் தேவர் என்ற ஜெய பெருமாள்-ஜெயாவின் மகன் பாலகார்த்திக்குக்கும், பழனிச்சாமி-நாகலட்சுமி மகள் சுவாதிக்கும் ராம நாதபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

    இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நாளை(12-ந்தேதி) நடக்கிறது. காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை-தூத்துக்குடி ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கம்-2ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், தொழி லதிபர்கள் மற்றும் உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். விழா ஏற்பாடுகளை இருவீட்டார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ப.சிதம்பரம் வாழ்த்தினார்.
    • திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி- தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம். மதுமிதாவிற்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழி லதிபர் சத்குரு தேவனின் மைத்துனருமாகிய பொறி யாளர் கே.மெய்யப்பனிற்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி பேலஸில் விமரிசையாக நடந்தது.

    முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    திருமணவிழாவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதாரணி, செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசின் முதன்மை செயலர்கள், அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகி கள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • எதிர்ப்பை மீறி காதலர்கள் பதிவு திருமணம்
    • மகள் வேண்டாம் என்று பெற்றோர் கூறியதால் காதல் கணவருடன் அனுப்பி வைத்த போலீசார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி தாலுகா பல்லவ–ராயன்பத்தை ஊராட்சி கொண்டையன்தெரு பகுதி–யைச் சேர்ந்தவர் சுப்பிர–மணியன் மகள் சுகன்யா (24). பி.எஸ்சி. நர்சிங் படித் துள்ள இவரும் ரோஷ்னே–சும் கடந்த 5 ஆண்டு–களாக காதலித்து வந்துள்ளனர்.இதற்கிடையே சுகன்யா–வின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்தனர். இதனால் காதல் ஜோடி முடிவெடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்து–கொண்டது. ஆனாலும் சுகன்யாவின் பெற்றோர் காதல் கணவரிடம் இருந்து பிரித்து தங்களுடன் அழைத் துச்சென்றனர்.இந்நிலையில் ரோஷ் னேஷ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தானும், சுகன்யாவும் 5 ஆண்டு–களாக காதலித்து வந்த–தா–கவும், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்ததால் பதிவு திருமணம் செய்து கொண்ட–தாகவும் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் சுகன்யாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரி–வித்து இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுகன்யாவின் பெற்றோர் எங்களுக்கு மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். 

    • திருமண வரம் அருளும் உத்வாகநாதர் கோவிலில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • திருமாங்கல்யம், ஆடைகள், மாலைகள் ஆகியவற்றை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    குத்தாலம்:

    இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் இந்து சமயத்தை சேர்ந்த ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கோவில்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமண வரம் அருளும் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் 4 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் ஜம்புகென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் தெற்கு மண்டல தலைவர் சாலைமுத்து இல்ல திருமணம் நடக்கிறது.
    • குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல முன்னாள் தலைவர் சாலைமுத்து. இவரது இல்ல திருமணம் பழங்காநத்தம்- திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை(27-ந்தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    மணமக்கள் பிரேம்குமார் என்ற சுமன்-ஜனனி ஆகியோரது திருமணத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாங்கி நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவிற்கு ஐகோர்ட்டு நீதிபதி அரு. ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். முன்னாள் தெற்கு மண்டல தலைவர் சாலைமுத்து வரவேற்று பேசுகிறார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், டாக்டர் சரவணன் மற்றும் அனைத்து கட்சி பிரமு கர்கள், முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை பழங்காநத்தம் வளர்மதி ராஜசேகர், கருப்பு துரை-தெய்வானை, ஜெயலலிதா பேரவை

    மாநிலத்துணை செயலாளர் வெற்றிவேல்-வெற்றி செல்வி, வைரமுத்து- கோவர்தனா, ரவிச்சந்திரன்-ரேவதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    • தி.மு.க. மாவட்ட பொருளாளர் இல்ல திருமண விழா நடக்கிறது.
    • இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர், கார்த்திக் ஹவுஸிங் பிரை வேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமசுந்தரபாண்டியன்- எஸ்.அன்புசெல்வி தம்பதிய ரின் மகனும், பொறியாளரு மான எஸ்.கார்த்திக் பாண்டியனுக்கும், ஸ்ரீராம் டிசைனர் அண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஏ.கணேசன்-பத்மா தம்ப தியரின் மகளும், மருத்துவரு மான ஜி.சுபாஷினிக்கும் நாளை (27-ந் தேதி) காலை 9 மணிக்கு மேல 10.30 மணிக்குள் மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத் தில் திருமணம் நடக்கிறது.

    இந்த திருமணத்தை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சரு மான பி.மூர்த்தி தலைமை யேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்து கிறார்.

    திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலா ளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், எம்.எல்.ஏ.க் கள் பூமிநாதன், ஆ.வெங்க டேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த விழாவில் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகி கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    ×