என் மலர்
நீங்கள் தேடியது "shooting"
- போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை
- அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.
இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.
படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார். இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, துப்பாக்கி சூடு சம்பவம் நமது சிறந்த தேசிய காவல்படை வீரர்கள் மீதான கொடூரமான தாக்குதல் ஆகும். தாக்குதல் நடத்திய நபர் ஒரு மிருகம். அவர் காயமடைந்திருந்தாலும் அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். இது ஒரு தீய, வெறுப்பு மற்றும் பயங்கரவாத செயல். முந்தைய ஜோபைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களை சரியாக ஆய்வு செய்யவில்லை என்றார்.
இதற்கிடையே வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
- முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார்.
- ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.
இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.
படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார். இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன.
- தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்வெண்கலம் வென்றார்.
கெய்ரோ:
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன. இதில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் (26), நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார்.
போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார்.
அவர் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவின் பான் ஹியோஜின் முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் 2-வது இடமும் பிடித்தனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3வது இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார். இதற்கு முன் அஞ்சும் மோடுகில் (2018), மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.
- தேஜ்பால் சிங் (26) தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி வந்தார்.
- இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் இளம்கபடி வீரர் நேற்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று லூதியாணாவில் உள்ள ஜக்ரான் நகரில், தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வந்த கபடி வீரரான தேஜ்பால் சிங் (26) சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் கூறினர்.
இந்த சம்பவம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பழைய பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை.
- உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார்
கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
தர்ஷன் சிங் சாஹ்சி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழிலதிபராக உயர்ந்தார்.
உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார். இது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. தனது நிறுவனத்தில் ஏராளமான பஞ்சாபிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.
- வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்தது.
- பின் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குயிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. அங்கு ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்தது. பின் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
"டூரிஸ்ட் ஃபேமிலி" படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்டபோதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக, வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, "லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி" படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறது.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்க்ஷன் பணிகள் படக்குழு துவங்கவுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
- இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் வெறும் கண் கண்ணாடியுடன் 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்றார்.
- இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது. இணையத்தில் யூசுப்பின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், துருக்கி வீரர் யூசுப் டிகெக், இஸ்தான்புல்லில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர்கள் அணியும் எந்த வித உபகரணங்களும் அணியாமல் அசால்டாக குறி பார்த்து சுட்டு உலகம் முழுக்க வைரலான யூசுப், இந்தப் போட்டியிலும் அதே போல் பங்கேற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
- டல்லாஸ் மாகாணத்தில் எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்தார்.
- பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.
வாஷிங்டன்:
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.
நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.
இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹூஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது.
- கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டார்.
- இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பெற்றார்.
இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி இன்று (செப்டம்பர் 29) இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச்சூடு, கொலைகள் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல், அச்சத்தை பரப்புதல், வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தினரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் இனி அந்நாட்டில் பிஷ்னோய் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நிதிகளை முடக்கவும் கனடா அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது.
முன்னதாக, கனடாவின் சர்ரேயில் உள்ள பாலிவுட் பிரபலம் கபில் ஷர்மாவின் கஃபே மீது இரண்டு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கும்பலின் தலைவன் லாரான்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் இருந்தபடி தனது கும்பலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
- பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறியாளர் அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மகிபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (30 வயது)
அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் கடந்த செப்டம்பர் 3 அன்று அவரது அமெரிக்க அறை நண்பருடன் ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாண்டா கிளாரா காவல் துறை (SCPD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , காலை 6:08 மணியளவில் ஒரு வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு 911 என்ற எண்ணில் அழைப்பு வந்தது.
சந்தேக நபர் வீட்டில் ஒரு பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக அழைப்பாளர் கூறினார். SCPD அதிகாரிகள் வந்து சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவர் இனவெறியால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிஜாமுதீன், தான் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்ட பதிவில், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
மேலும், பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டு கொலை முயற்சி நடந்ததாகவும், அநீதிக்கு எதிராகப் போராடியதால் குடியிருப்பை விட்டு வெளியேற்றப்படுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் உதவி கோரியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






