என் மலர்
நீங்கள் தேடியது "transgender"
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020-ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார்.
- 2021-ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
கனடாவின் தேசிய மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள டேனியல் மெக்காஹே சர்வதேச கிரிக்கெட்டில் முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் இம்மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் இவர் களமிறங்க உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020-ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார். 2021-ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
- விஜய் என்ற அனாமிக்கா தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
- தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் என்ற ஊரை சேர்ந்த பூபதி என்பவரது மகன் விஜய் என்ற அனாமிக்கா (வயது 22). திருநங்கை. இவர் பிடாகத்தில் இருந்து செஞ்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அவர் சிட்டாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அனாமிகா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனாமிகா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த விஜயதாஸ் என்பவரது மகன் பாலாஜி (23), காதர் என்ப வரது மகன் சானவாஸ் (23) ஆகியோர் காயங்களுடன் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.செஞ்சியை அடுத்த ஊரணித் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
- வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்துவந்த ஜகாத், தனது வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுத்தார். இதனை ஜியா பாவல் அறிவித்தார்.
ஆனால் தங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கோழிக்கோடு மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் குழந்தைக்கு ஜியா பாவலை தந்தை என்றும், ஜஹாத்தை தாய் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் திருநங்கை தம்பதியான ஜியா பாவல் மற்றும் ஜஹாத் ஆகிய இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்களது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்-தந்தை என்று இருப்பதற்கு பதிலாக பெற்றோர் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஆணாக அடையாளப்படுத்தி, தற்போது சமுதாயத்தில் ஆணாக வாழ்ந்து வருவதால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரை தவிர்க்குமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் தங்களை பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அதிகாரிகள் மறுத்ததாகவும் கோர்ட்டில் தம்பதியினர் தெரிவித்தனர். அதனைக்கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
ஆனால் மனுவில் சில தொழில் நுட்ட குறை பாடுகளை அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
- திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை.
ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.
ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார்.
திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று பைர்வா கூறினார்.
பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நூர் ஷெகாவத் கூறினார்.
நூர் ஷெகாவத் இப்போது திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.
- இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- கத்திமுனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜனனி, பிளசிகா. திருநங்கைகளான இருவரும் நேற்று இரவு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜீசஸ் கால்ஸ் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த போதை வாலிபர்கள் 2 பேர் பிளசிகாவை அழைத்து பேச்சுக் கொடுத்தனர்.
பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி உடனடியாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாராஜன் ஆகியோர் விரைந்து வந்தனர் மேலும் கடத்தி செல்லப்பட்ட பிளசிகாவின் செல்போன் "டவர் லொகேஷன்" மூலம் செட்டியார் அகரம் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மறைவான பகுதியில் போதை வாலிபர்களின் பிடியில் சிக்கி தவித்து வந்த பிளசிகாவை பத்திரமாகமீட்டனர்.
அப்போது போதை வாலிபர்கள் சப் - இன்ஸ்பெக்டர் மகாராஜனை சரமாரியாக தாக்கி அவரது வயிற்றில் கடித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பிளசிகாவை கடத்தியது ஆவடியை சேர்ந்த ரவுடி ஜெகன் (வயது 30) மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிந்தது. அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த ஜெகன் மற்றும் தினேஷ் இருவரும் பிளசிகாவிற்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது இதனால் மயங்கிய பிளசிகாவை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசிடம் இருந்த தப்ப முயன்ற ரவுடி ஜெகனுக்கு வலது காலில் அடிபட்டு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி முனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
- 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியாவது.-
விழுப்புரம் மாவட்ட த்தில் உள்ள 274 திருநங்கை களில் 25 திருநங்கைகள் இறப்பு, 37 திருநங்கைகள் இடம் பெயர்ந்துள்ளார்கள். மீதமுள்ள 212 திருநங்கைகள் தற்பொழுது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 2021 2022-ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் சுயதொழில் மானியமும், தலா ரூ.4 ஆயிரம் வீதம் 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியும், 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 51 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 67 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 6 திருநங்கை களுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருநங்கை களின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானி யத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதி யத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கை களாகும். எனவே, திருநங்கை கள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, நங்கையர் கூட்டமைப்பு தலைவி விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றனர்.
அங்குள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி சாலைக்கு ஓடி வந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.
அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றார். அவரை கண்டதும் வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த திருநங்கைக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- சாலையோரம் “டிப் டாப்” உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி “லிப்ட்” கேட்டார்.
- காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார்.
சென்னை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் விஷால் (18).பெங்களூரில் தங்கி விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் சென்னை வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஷால் தனது காரில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். கே.கே நகர் 80-அடி சாலையில் வந்தபோது சாலையோரம் "டிப் டாப்" உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி "லிப்ட்" கேட்டார்.
இதையடுத்து காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார். கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் திடீரென விஷால் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்த திருநங்கை காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
- ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
- சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 26 வயது திருநங்கை. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகதாம்பா சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்தார். பின்னர் வீடு திரும்ப ஒரு ஆட்டோவில் ஏறினார்.
அந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 வாலிபர்கள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் திருநங்கையின் மீது கை வைத்து தொடங்கினர்.
தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதனை தடுத்த திருநங்கையை அடித்து துன்புறுத்தினர். அதனால் திருநங்கை அழுது கூச்சலிட்டார்.
பயத்தில் அவர்கள் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தினர். அதிலிருந்து திருநங்கை இறங்கி தப்பி ஓடினார்.
இதுகுறித்து திருநங்கை அங்குள்ள திஷா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ டிரைவர் வாசுபள்ளி சீனிவாசு (வயது 33), ஹனிஷ்குமார்(26), சதீஷ்குமார் (30), மனோஜ் குமார் ( 23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
ஆனால் இந்த சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
தயவு செய்து திருநங்கைகள் இதை சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.
- மோகன்ராஜ் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார்.
- திருநங்கை ஒருவர் மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26). இவர் கடலூர் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருநங்கை ஒருவர் திடீரென்று மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் திருநங்கை பிடிப்பதற்கு முயன்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகன்ராஜிடம் நகையை பறித்தது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தைச் சேர்ந்த திருநங்கை என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, 2 பவுன் நகையை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.