என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூவாகம் விழா"

    • கூத்தாண்டவர் கோவில் முன் கூவாகம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூழ் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

    புகழ் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவார்கள்.

    அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி சாகை வார்த்தடன் தொடங்கியது. இதையொட்டி கூத்தாண்டவர் கோவில் முன் கூவாகம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூழ் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

    மேலும் சாகை வார்த்தலையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பாரத பிரசங்க முறை நிகழ்வுகள் கடந்த 8-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு உற்சவர் கூத்தாண்டவர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கூத்தாண்டவர் சுவாமிக்கு கண் திறத்தலும், அதனை தொடர்ந்து திருநங்கைள் அரவானை தங்களது கணவராக ஏற்றுக் கொண்டு திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வும் மாலை நடைபெற உள்ளது.

    அப்போது கோவில் பூசாரிகளிடம் திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொண்டு கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்து வழிபடுவர்.

    கூவாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்வார்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல், தேரோட்ட நிகழ்ச்சியில் திருநங்கைகள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகரசபை முன்னாள் தலைவர் ஜனகராஜ், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • திருநங்கைகள் என்று முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, பெயர் வைத்து அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தி னார்.
    • மாதாந்திர உதவித்தொகை‌ ரூ.1000-ல் இருந்து, ரூ.1,500 ஆக உதவி தொகை உயர்த்தி தரப்பட்டுள்ளது.

    விழுப்புரம், மே.2-

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மிஸ்கூவாகம்2023 அழகி போட்டி நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, பொன். கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர். லட்சுமணன், சிவக்குமார்,மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் சப்-கலெக்டர் சிதரா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆண்டுதோறும் மிஸ்கூவாகம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பொழுது போக்குக்காக நடைபெற வில்லை. திருநங்கைகள் திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் யாரும் மேடைக்கு வரவில்லை. இன்று நாங்கள் வந்துள்ளோம். திருநங்கை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே இயக்கம் தி.மு.க.தான். திருநங்கைகள் என்று முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, பெயர் வைத்து அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தி னார்.

    2008-ல் திருநங்கைகள் நல வாரியம் அமைத்தது தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நல வாரியம் முடங்கி விட்டது. மீண்டும் கருணாநிதி வழியில் வந்த மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு இதனை மீண்டும் புதுப்பித்து செயல்படுத்தி வருகிறது. சேப்பாக்கம் தொகுதியில் திருநங்கைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி பலர் பயனடைந்துள்ளனர். சட்டமன்றத்தில் எனது முதல் கன்னி பேச்சில் திருநங்கைகள், மாற்றுத் திற னாளிகளுக்கு கோரிக்கை களை முன்வைத்தேன். மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து, ரூ.1,500 ஆக உதவி தொகை உயர்த்தி தரப்பட்டுள்ளது.

    திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் பலரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருநங்கைகள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் எனது அலுவலகம் காத்தி ருக்கிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த ஒரே இயக்கம் தி.மு.க. தான். திருநங்கைகள் குறை களை கேட்பதற்கு எனது அலுவலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். வருங்காலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவும் திருநங்கைகள் வருவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளரும் முன்னாள் நகர சபை தலைவருமான ஜனகராஜ்,மாநில ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளரும், ஆவின் சேர்மனுமான பிடாகம் தினகரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு, நகர செயலாளர் சர்க்கரை,நகர பொருளாளர் என்ஜினீயர் இளங்கோவன், விழுப்புரம் நகர இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் மணிகண்டன்,கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சிதா னந்தம், ஒன்றிய செய லாளர்கள் வக்கீல் கல்பட்டு ராஜா, தெய்வசிகா மணி, மும்மூர்த்தி, ஜெயம் ரவி, மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் கபாலி, முன்னாள் தொண்டர் படை பாலு, கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×