என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
    • கிருஷ்ணருக்கு விருப்பமான தலமாக விளங்குகின்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

    முதல்யுகம் மற்றும் முதல் அவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்தர்களுக்கு வழங்குகிறது. அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.

    இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள். அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.

    அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியுள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீது வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.

    வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசனைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

    இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தலமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார். பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.

    கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணா ரண்யம்' என்றும் பெயர் பெற்றது. தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும். காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது. பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள். இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.

    தென்பெண்ணை ஆற்றின் தென்கரையோரம் மேட்டுப்பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இதன் தோற்றமும் இதை உராய்ந்தாற்போல வடக்கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சியாய் இன்பம் அளிக்கிறது.

    • மயில் வடிவில் இருப்பதால் ’மயூரகிரி’ என்ற பெயரும் இம்மலைக்குக் கிட்டியது.
    • மயூரகிரி சித்தர் இங்கு சமாதி அடைந்துள்ளார்.

    கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் அமைந்துள்ள கதித்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோவில். இந்த கதித்தமலை, கைத்தமலை என்று அழைக்கப்படுகிறது. இது ஊத்துக்குளியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கர்மவினைகளை தீர்க்கும் இந்த கோவிலின் சிறப்புகள் வருமாறு:-

    கந்தன் மீது மிகுந்த பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்ட தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடன் நாரதரும், பிற தேவர்களும் செல்வது வழக்கம். அப்படி ஒருசமயம், கந்தனை தரிசிக்கச் செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தில் கந்தனுக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். மேலும், அதிக தாகம் எடுத்ததால், மிகுந்த சிரமத்துக்கு ஆளானார் அகத்தியர். தன்னை அச்சூழலில் இருந்து காக்குமாறும் முருகப் பெருமானை வேண்டினார். உடனே முருகப் பெருமான் அங்கு தோன்றி, தனது வேலை தரையில் குத்தி ஓர் ஊற்றை ஏற்படுத்தினார். அதிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்திய முனிவர் மகிழ்ச்சி அடைந்து தனது பூஜைகளை முடித்தார். தாகத்தையும் தீர்த்துக்கொண்டார்.

    முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஊற்று இன்று வரை கதித்தமலை வேலாயுதசாமி கோவிலில் வற்றாமல் நீரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து தோன்றியதால் 'ஊத்துக்குளி' என்று அப்பகுதியே அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு கோவில் கட்டப்பட்டது. கொங்குநாட்டில் குன்றுதோறும் கோவில் கொண்டுள்ள குமரனின் ஆலயங்களில் கதித்தமலை தனிச்சிறப்பு கொண்டது. வெண்ணெய் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் இவ்வூர், கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல படிகட்டுகள் மட்டுமல்லாது தார்ச்சாலை வழியும் அமைக்கப்பட்டுள்ளன.

    இக்கோவில் மலையின் மீது 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார். வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னர் இருக்கும் நிலை என்பதால், வள்ளியும் தெய்வானையும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    கதித்த என்பதற்கு எழுதல், நற்கதி பெறுதல், மிகுதல், கனமான, உயர்ந்த, கோபித்த என்று பொருள் கொள்ளலாம்.

    முருகன் தனது பெற்றோரான சிவன் –- பார்வதி தேவியிடம் கோபித்துக் கொண்டு இந்த மலைக்கு வந்ததால் இம்மலை கோபித்த மலை என்றும் கதித்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. மயில் வடிவில் இருப்பதால் 'மயூரகிரி' என்ற பெயரும் இம்மலைக்குக் கிட்டியது. மயூரகிரி சித்தர் இங்கு சமாதி அடைந்துள்ளார். மேலும் கதித்தமலை 'கதிர்த்தமலை' என்றும் சொல்லப்படுகிறது.

    கதிர்த்த என்ற சொல், 'பிரகாசித்தல், ஒளிவிடுதல்' என பொருள் தருகிறது. பொதுவாக மலைக் கோவில்களில் மலைக்கு கீழேதான் தேர் வலம் வருவது வழக்கம். ஆனால், இக்கோவிலில் மரச்சிற்பத்தால் செய்யப்பட்ட தேர், மலைமீது அமைந்துள்ள கோவிலை சுற்றி வலம் வருவது தனிச்சிறப்பு. அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார். மலையின் வடசரிவில் சிவபெருமானின் காளை வாகனத்திருவடியும், கோவிலின் தென்கிழக்கு பகுதியில் சுப்பராயர் சந்நிதி என்னும் புற்றுக்கோவிலும் உள்ளது. வள்ளி- தெய்வானை சந்நிதிக்குச் செல்லும் வழியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான பாலை மரத்தின் அடியில் சுக்குமலையான் சந்நிதி உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

    • தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
    • சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது.

    மேல்மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூறையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்டது. அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    சிவபெருமானை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது. இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள். இந்த நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மனின் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.

    சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது. அது சிவ சுயம்பு உருவமானது. அப்புற்றுக்குள் கோவில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது. இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருககணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன.

    அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை. இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர். அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை. இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர். அப்போது கலியுகம் பிறந்தது.

    கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது. அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும். நம் எல்லோருக்கும் அருளும் அம்பிகை அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    • பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார்.
    • சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.

    மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் தெரிந்திருப்பதில்லை.

    பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. இந்த கபாலம் சிவனுக்கு படைக்கும் உணவை உண்டு விடுவதால் பசியால் வாடிய சிவபெருமானுக்கு பித்து பிடித்து காடு மலைகளில் சுற்றி திரிந்தார்.

    இதை பார்த்த பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார். மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது சிவபொருமானுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என மகா விஷ்ணு கூறியதுடன் சாப விமோசனத்திற்கான வழியையும் கூறுகிறார்.

    இதன்படி பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். பார்வதி தேவி திருமண வயதை அடைந்திருந்த நேரத்தில் காடுமலைகளில் சுற்றி திரியும் சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.

    சிவபெருமான் வந்து இருப்பதை அறிந்து கொள்ளும் பார்வதி தேவி மறுநாள் நடக்கும் மயான கொள்ளையில் சிவனுக்கு படைக்க சுவையான உணவை கொண்டு வருகிறார். கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்மன் கபாலம் உண்டு விடுகிறது. உணவை எடுக்க சிவபெருமானின் கரத்தில் இருந்துவிடுபட்டு கீழே இறங்கும் பிரம்மன் கபாலத்தை பார்வதி தேவி விஸ்வரூபம் எடுத்து தனது காலால் பூமியில் மிதித்து ஆட்கொள்கின்றார்.

    இதன் பிறகு சிவபெருமானுக்கு சாப விமோசனம் ஏற்படுகிறது. கோபத்தினால் அக்னி பிழம்பாக மாறும் பார்வதி தேவி இங்குள்ள அக்னி குளத்தில் குளித்ததாக புராணம் கூறுகிறது. இதன் பிறகும் தனியாத பார்வதி தேவியின் கோபத்தை தணிக்க தேவர்கள் ஒன்றுகூடி தேர் திருவிழா நடத்தினர். இதில் தேவர்களே தேரின் பாகங்களாக இருப்பதாக விழா எடுக்கின்றனர். இந்த விழாவே இன்றுவரை மேல்மலையனூரில் மாசி திருவிழாவாக நடந்து வருகிறது.

    • சூரவேல் குருமூர்த்தி, சுகிர்தன்பவன், கந்தசாமி, ஆறுமுகவேலன்,
    • பெண்குழந்தைகளுக்கான பெயர்கள்.

    ஆண்குழந்தைகளுக்கான பெயர்கள்:

    சக்திபாலன், சரவணன், சுப்ரமண்யன், குருபரன், கார்த்திகேயன், சுவாமிநாதன், தண்டபாணி, குகஅமுதன், பாலசுப்ரமணியம், நிமலன், உதயகுமாரன், பரமகுரு, உமைபாலன், தமிழ்ச்செல்வன், சுதாகரன், சற்குணசீலன், சந்திரமுகன், அமரேசன், மயூரவாஹனன், செந்தில்குமார், தணிகைவேலன், குகானந்தன், பழனிநாதன், தேவசேனாபதி, தீஷிதன் சிவகுமார், ரத்னதீபன், லோகநாதன், தீனரீசன், சண்முகலிங்கம், குமரகுரு, முத்துக்குமரன், அழகப்பன், தமிழ்வேல், மருதமலை, சுசிகரன், குமரன், தயாகரன், ஞானவேல், சிவகார்த்திக், குஞ்சரிமணாளன், முருகவேல், குணாதரன், அமுதன், செங்கதிர்ச்செல்வன், பவன்கந்தன், திருமுகம், கதிர்காமன், வெற்றிவேல், ஸ்கந்தகுரு. பாலமுருகன், மனோதீதன், சிஷிவாகனன், இந்திரமுருகன். செவ்வேல், மயில்வீரா, குருநாதன், பழனிச்சாமி, திருச்செந்தில், சங்கர்குமார், சூரவேல் குருமூர்த்தி, சுகிர்தன்பவன், கந்தசாமி, ஆறுமுகவேலன், வைரவேல், அன்பழகன், முத்தப்பன், சரவணபவன், செல்வவேல், கிரிசலன், குலிசாயுதன், அழகன், தண்ணீர்மலயன்.

    பெண்குழந்தைகளுக்கான பெயர்கள்:

    கார்த்திகா, கார்த்திகாயினி, கிருத்திகா, பழனியம்மாள், விசாகா, சண்முகப்பிரியா, சண்முகி, சரவணப் பிரியா, தமிழ்ச்செல்வி, வெற்றிச்செல்வி, முருகம்மாள், வேலம்மாள், வேலாயி, ஜெயந்தி, செண்பகம், செண்பகப் பிரியா, மருதம்மாள், மருதாயி, வள்ளி, தெய்வானை.சக்திதாரா, எழில் வெண்பா, மயிலினி, விசாலினி, நித்ரா, மகிழ்வதனா, எழில் நேத்ரா, சென்னியம்மாள், அமராவதி, கந்தம்மாள், இனியா, கந்தாயி, சோலையம்மாள், தங்கமயில், சண்முகலட்சுமி, வெண்பா, செந்தூரதேவி, இளமயிலி, கந்தவி, தணிகைவேதா.

    • அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
    • அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.

    மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

    அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.

    அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.  

    • கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    • சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த கரடியை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது திடீரென வனப்பகுதி விட்டு வெளியேறிய கரடி ஒன்று தேசிய நெடுஞ்சாலையை கடந்து சாலையோரம் சுற்றி கொண்டிருந்தது.

    திடீரென கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த கரடியை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    கரடி நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.
    • திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.

    வெற்றிவேலாயுதசுவாமி கோவிலுக்குப் பின்புறம் மேற்கே சற்றுத்தள்ளி தனிக் கோவிலாக வள்ளி-தெய்வானை கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை போருக்கு சென்று வதம் செய்த பிறகு தனிமையில் இருந்தார்.

    அவரை மணம் முடிக்க விரும்பிய வள்ளி- தெய்வானை இருவரும் இம்மலைக்கு வந்து, முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரன் மகளாகத் தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இது திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.

    எனவே இங்கு திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.

    • அகத்தியருக்கு, சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • பல்வேறு சிறப்புகள் அடங்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு, சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் அடங்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் மகர தோர வாயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நந்தி பகவான் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.

    இதில் யாழ்ப்பாண பரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, குருகுல நிர்வாகி வேதரத்தினம், கேடிலியப்பன், கோவிலின் செயல் அலுவலர் ஜெயக்குமார், உபயதாரர் சுப்பையா பிள்ளை குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் வரலாற்று ஐதீக விழா வருகிற 18-ந் தேதியும், தேரோட்டம் 28-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.
    • வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 20 ஓவர் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

    இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.

    வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    • மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தின் ரெட் ஹில்ஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் என்பவர் இறைச்சி மற்றும் அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கோரினார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்தப் பிரச்சனையில் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 மீட்டருக்குள் இறைச்சி மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    பக்தர்களின் உணர்வுகள், அமைதி, தூய்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மனதில் கொண்டு வழிகாட்டுதல்களை வகுக்குமாறு நகராட்சி மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

    இறைச்சி விற்பனை மையங்களைத் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கான விதியைச் சேர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த செயல்முறையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • 'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என அந்த நபர் முரண்டு பிடித்தார்
    • இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தங்க கலசத்தை சேதப்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என முரண்டு பிடித்து அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    குடிபோதையில் இருந்த நபரை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பதி போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றது.

    பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் வசிக்கும் குட்டாடி திருப்பதி என தெரியவந்தது.

    ×